தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இயற்கை

இ.இசாக்
காலை வேலைக்கு போகவேண்டும்!
என்ன செய்ய!
மழைக்கால இரவு!
!
மழை ஓய்ந்த நேரம்!
மரத்தடியில்!
மீண்டும் மழை!!
!
சமாதிக்கு மட்டுமல்ல!
மலர்வளையம்!
பூக்களுக்கும்.!
!
யாருமற்ற பாலைவனம்!
தன்னந்தனியாக!
ஒற்றைமரம்!!
!
மிகச்சிறந்த ஓவியத்தை!
மிஞ்சிய அழகு!
குழந்தையின் கிறுக்கல்

இளைஞனுக்கு

s.உமா
இளமையின் பாதையில்!
முதல் அடி !
வாழ்க்கையின் !
முதற்படி!
புதிதாய் பூத்த மலர் நீ!
வாசத்தை வானம்!
முழுதும் பரவவிடு..!
காலத்தை வீணாக!
கழிக்காதே!
கடன் வாங்கமுடியாதது அது...!
இலட்சியங்களை !
கூட்டு!
திறமைகளை !
பெறுக்கு...!
உன் காலடியில்!
கிடக்கிறது!
எதிர் காலம்!
மிதித்துவிடாதே!
நீயே அழிவாய்!
எடுத்தணைத்துக்கொள் !
நீயே வெற்றிபெருவாய்... !
மன இருளை !
அகற்றி விடு!
வெளிச்சமாகும்!
உன் இலட்சியப்பாதை...!
இளமையை !
அசைப்போடுவதே!
முதுமை!
இளமை மட்டுமே!
வாழ்வு...!
புரிந்து கொள்!
புரிய வை...!
பழமைகளை ஜீரணித்து!
புதிய விழிப்பு கொள்...!
புதிதாய் பார் !
புதிதாய் யோசி!
உன் பதிலுக்காக!
காத்துக்கிடக்கின்றன!
பலப் புதிர்கள்...!
கட்டிய சோற்றையும்!
சொல்லிய சொல்லையும் !
மீறி நட... !
உணர்வு கொள்!
உணர்ச்சி கொள்!
இன்பம் கொள்!
துன்பம் தேடு...!
தோல்விகள்!
உன்!
முயற்சியின்!
உழைப்பின்!
வெளிப்பாடுகள்...!
சோம்பலின்!
முரண்பாடுகள்...!
நாளைய உன்!
வெற்றிக்கான!
ஏணிப்படிகள்

பெற்றேனே துன்பம் பெரிது

அகரம் அமுதா
காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்!
சாதப் பொழுதுகளில் சீரழிந்(து) -ஊமையாய்!
இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ!
என்போல் உழந்தார் இடர்?!
தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்!
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்!
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்!
என்றனுக் கிந்தநிலை ஏன்?!
அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்!
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்!
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்!
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!!
அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி!
என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி!
ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை!
நாட்டிலே காணா நடப்பு!!
வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்!
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்!
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்!
பெற்றேனே துன்பம் பெரிது!!
அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்!
தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்!
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்!
கெடுத்தான் அருகில் கிடந்து!!
தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்!
ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற!
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!!
தாய்வழிப் பாட்டனைத் தான்!!
அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க!
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே!
கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்!
முற்பிறப்பில் செய்தவினை யோ?!
!
-அகரம்.அமுதா!
----------------------------------------!
ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!!
செய்தி-!
(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)

காதல் கொடை.. மார்கழி காதலி..மாதிரி

வி. பிச்சுமணி
கள்!
01.!
காதல் கொடை!
---------------------!
என் காதலை!
உன் பாதங்களில்!
சமர்ப்பிக்கிறேன்!
ஏற்றுகொள்வதும்!
ஏற்றுக்கொளளாததும்!
உன் இதயத்தின் முடிவில்!
மிஞ்சினால்!
மிதியடியாக பயன்படுத்து!
பிஞ்சி போனால்!
உன்னை சீண்டுபவரை சாத்தும்!
உன்பாதத்துடன் பழகி பழகி!
பரதன் மதிக்கும்!
இராமனின் பாதஅணிகளாக மாறி!
உன் மனது ஆளும் நேரம்!
மழை வரும்!
சிரமேற்கொண்டால்!
என் காதல் (கொ) குடையாகும்!
02.!
மார்கழி காதலி!
-----------------------!
மார்கழி பனி நீ வெளியே வரும்வரை!
உன் வீட்டு வாசலில் காத்திருந்து!
உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் !
வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு!
மார்கழி பனி வெட்கி தலை கவிழும் !
நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு!
கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை!
கலைத்து விடுவான் !
நீ உன் வாசலில் இட்ட கோலம்!
பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும் !
நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக!
சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில்!
அழகாக அமர்ந்து அருள் வழங்கிறார் !
நேற்று வைத்த சாணி பிள்ளையார்!
தட்டப்பட்டு காய்கிறார் வெயிலில்!
அவரை ஆற்றில் விடும் காணும் பொங்கலை!
எதிர்நோக்கி பொருநை ஆறும்!
உன் பாதம் தொட காத்திருக்கிறது !
03.!
மாதிரிகள்!
----------------!
அண்ணன் மாதிரி என்றும் !
தங்கை மாதிரி என்றும் !
அபத்த மாதிரிகள் !
வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு !
மாமனார் அப்பா மாதிரி !
மாமியார் அம்மா மாதிரி !
மருமகன் மகன் மாதிரி !
மருமகள் மகள் மாதிரி !
ஒரு போதும் மாதிரிகள் அசலாவதில்லை !
மாய மான் என தெரிந்தும் !
சீதைகளுக்காக ராமர்கள் !
அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு !
துரத்தும் நாடகம் நடந்து கொண்டே இருக்கிறது !
கங்குகள் மீது படிந்த சாம்பலை !
கைகள் அறியும் !
அலுத்துவிட்ட காட்சிகள் என்றாலும் !
அலுக்காமல் அரங்கேறுகின்றன !
உண்மை முகம் காட்டும் போது !
உறவு பனிகள் உதிர்ந்து விடுகின்றன

பனிப்பிரதேச பேரழகி

ரசிகன்!, பாண்டிச்சேரி
ஒரு!
வெளிர்நீல மைதானத்தின் கீழ்!
பனிக்குவியல்களை உரிமை கோர!
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!!
கொஞ்சம் எடுப்பாகவும்!
கொஞ்சம் மிடுப்பாகவும்!
வண்ணம் பூசிக்கொள்கின்றன!
அவள் அழகுகள்!!
மிதமாய்!
தூறல் விட்டுக்கொண்டே !
அங்குமிங்குமாய்!
சில புன்னகை மழைகள்...!
ஆர்குட்டையோ!
முக நூலையோ!
இன்ன பிற சமூக வலைத்தளங்களை !
கவர்ந்து விட எத்தனிக்க!
முற்றிலுமாக!
முடங்கிக்கொள்கிறாள்!
ஒரு !
குளிர் தாங்கும் மேலாடையில்!!

மாசாய்… வழியில்... நல்ல தாய்

செண்பக ஜெகதீசன்
மாசாய்…!
காசிருந்தால் ஒருபேச்சு, !
இல்லையெனில் ஒருபேச்சு, !
இந்த மனிதனுக்கு என்னாச்சு, !
இவன் கண்டுபிடித்தான் காசு. !
இது ஆகிவிட்டது !
இனத்துக்கே மாசு…!!
இந்தக் கடையில்…!
காசினி என்பது !
காலதேவன் நடத்தும் !
கள்ளுக் கடைதான், !
இங்கு !
ஓசியில் குடிக்கவும் !
காசுமிகக் குறைவாய்க் கொடுத்து !
ஆசை மிகுதியில் !
அதிகம் குடிக்கவும் !
காத்திருப்பவர்கள்தான் - !
மனிதர்கள்…! !
கற்றாலும்…!
கற்றுக்கொள்ள !
கலாசாலைகள் இல்லாமலே !
கற்றுக்கொள்கின்றன, !
காட்டு மிருகங்கள் !
அதனதன் !
கலைகளை மட்டும், !
கலைபல !
கற்கிறான் மனிதன் !
கலாசாலையில், !
ஆனாலும் !
கற்காலத்தைத்தான் !
காட்டுகிறது அவன் பண்பு…! !
கல்லாய்…!
கல்லில் வடித்த சிலையினிலே !
மனிதன் !
கடவுளைக் காட்டுகிறான், !
கடவுள் படைத்த மனிதன் !
ஏனோ !
கல்லாய் மாறிவிட்டான்…!!
வழியில்...!
வாழ்க்கை !
வழிப்போக்கன் நான், !
வழியில் பார்த்தேன் -!
காலம் என்னைக் !
கடந்து சென்றது, !
கண்ணாடியில் பார்த்தபோது !
கண்டது -!
களவாடப்பட்டது !
என் !
இளமைதான்...!!
அந்தநாள்…!
காலையில் !
கண்விழித்து எழுந்தால்தான் !
மனிதனுக்கு அது !
மறுநாள், !
அல்லது அது !
அவன் நினைவு நாள்…!!
நல்ல தாய்.!
நல்லதாய் !
நாகரீகமானதாய் !
தாகம் தீர்ப்பதாய் !
தரித்திரம் போக்குவதாய் !
சரித்திரம் படைப்பதாய் !
சாதாரணமாய் இல்லாததாய் !
வேதனை தீர்ப்பதாய் !
வெற்றியைத் தருவதாய் !
சுற்றம் சேர்ப்பதாய் !
சூழ்ச்சி அறுப்பதாய் !
வாழ்த்தி நிற்பதாய் !
வரம்பல தருவதாய் !
சிரமம் குறைப்பதாய் !
சீரெலாம் செய்வதாய் !
பாரெலாம் உயர்வதாய் !
பலனை எதிர்பாராததாய் !
உலகுக்கு உதவுவதாய் !
உயிரைத் தருவதாய் !
உள்ளவள் தாய் - !
உன்னைப் பெற்ற தாய்...!!
!
--செண்பக ஜெகதீசன்…!
()

கவிதைக்காரன்

சிவ. தினகரன்
கவிதைக்காரன்!
சொந்தமாய்!
ஏதும்!
எழுதுவதில்லை!
எதிரில் !
சுருங்கிய!
தேகத்துடன்!
வரும்!
மோர்!
கிழவியின்!
கூடையிலிருந்து!
முதல் கவிதை!
பருகிவிடுகிறான்!
ஓடும்!
ரயிலில்!
நடந்து!
வரும் !
விழியிழந்த!
பாட்டுக்காரனின்!
சட்டைப்பையிலிருந்து!
மற்றொன்று!
மருத்துவருக்கு!
காத்துக்கிடக்கும்!
இருக்கையின்!
பின்புறமிருந்து!
கிழித்துக்கொண்டு!
மருந்தை!
மறந்து!
வெளியேறுகிறான்.!
இருள்!
வீட்டின்!
கொல்லைபுற !
குழாயில்!
சொட்டும்!
இசையிலிருந்து!
யாருக்கும்!
தெரியாமல் !
எடுத்ததை!
எழுதுகிறான்!
திருடி!
எடுத்த!
மகிழ்ச்சியை!
இறகை வருடி!
கிடைத்த!
சோகத்தை !
சேர்த்து!
இனிதாய்!
முடிகிறது !
ஒரு!
தொகுப்பு.!
எல்லா!
வெளியும் !
கவி!
நிறைவதால் !
சொந்தமாய்!
ஏதும் !
எழுதுவதில்லை!
கவிதைக்காரன்.!
!
- சிவ. தினகரன்!
குன்றத்தூர்

காதலே

நிர்வாணி
என்றும் உனை நான் மறவேன்!
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை!
இரண்டாம் நாளில் நீ பேசிய!
முதல் வார்த்தை!
மூன்றாம் நாளில் .....!
எதையும் மறவேன் அன்பே!
மறக்கவும் முடியாது!
இன்னொரு காதலி கிடைக்கும்வரை

ஆழியின் சிரிப்பு

தேவஅபிரா
பெருவிசும்பின் தொன்மையின்கீழ் !
மரத்தூரிகைகள் உலையும் காற்றில் !
மரணத்தின் கேள்வியை விட !
மரணித்தவர்களின் கேள்விகள் வலுக்கின்றன... !
கையறு நிலையின் காலம் !
அதோ என் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. !
இவ்வெளியோ மண்ணோ எனதல்ல. !
நான் உங்களைக் கேட்க விரும்புவதெல்லாம்: !
என் கால் நனைத்த என்கடலின் மண்துகள்கள் !
தட்டிப்பிரிந்த அக்கடைசி நாளில் !
கடல் என்னைப்பார்த்துச் சிரித்ததா? !
ஐப்பசி 2002 !
-தேவஅபிரா puvanendran@home.nl !
**** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன

எனக்குள் நான்

எதிக்கா
எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் !
சிந்தனைகளை-மெலிதாய் !
தட்டியெழுப்பி !
என்னோடு கொஞ்சம் !
பேசமுற்பட்டபோது.. !
இறந்துபோன காலத்தின் !
நினைவுகள் மட்டும்-இன்னமும் !
இறக்காமல் !
நெஞ்சை வேகமாய் மோதிச்சென்றது !
வார்த்தைகள் மெதுவாய் அடங்க !
தர்க்கம், குதர்க்கம் !
எல்லாமே ஓய்ந்துவிட்டது !
பரிவு, இரக்கம்கூட !
கொஞ்சம் கொஞ்சமாய் !
குறைந்துவிட்டது !
பந்தம், பாசம் !
எல்லாமே போலி வேசம் !
மனம் வேதனையுடன் ஓலமிட்டது !
இதுவரையில் அணிந்திருந்த-அவர்களின் !
முகமூடிகள் எல்லாம் கிழிந்து !
உருக்குலைந்த நிலையில் !
நிஜமான முகங்கள் என்முன்னிலையில் !
தோற்றமளித்தது !
எனக்கென யாரும் இல்லை !
தொண்டைக்குழி அடைத்து-மனம் !
விம்மிக் கலங்கியது-ஆனால் என் !
சிந்தனை வெகுவேகமாய் !
அதை நிராகரித்துச் சென்றது !
”உறவு என்று எதுவும் இல்லை” !
நண்பனின் வாசகம் -நெஞ்சில் !
அடிக்கடி வந்துபோனது !
மளுங்கிப்போன பார்வை !
மெல்ல விலக !
தெளிவான பார்வைக்குள்-பல்வேறு !
விம்பங்களாய் நான் !
”இன்பம் துன்பம் எதுவந்தாலும் !
உன்னோடு நான் இருப்பேன் !
துவழாது துணிந்து நில்!” எனக்குள் இருக்கும் !
”நான்” ஏகாந்தமாய் என்னோடு !
பேசிவிட்டுச் சென்றது !
இது போதுமெனக்கு !
நெஞ்சம் கல்லாகிறது