தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆசிரியர் போற்றுதும்

அகரம் அமுதா
அஞ்சில் எமைவளைத்து!
அமுதனைய கல்வியினை!
நெஞ்சில் நிறைக்கின்ற!
நேர்த்தியெலாம் கற்றவரே!!
பேசரிய மாண்பெல்லாம்!
பிள்ளைகள் எமைச்சேர!
ஆசிரிய பணிசெய்யும்!
அன்பின் தெய்வங்காள்!!
பொற்போடு எமைநடத்திப்!
புகழ்மணக்கும் கல்வியினைக்!
கற்போடு கற்பிக்கும்!
கடமையிற் பெரியோரே!!
குன்றளவு கொடுத்தாலும்!
குறையாத செல்வத்தை!
இன்றளவும் எமக்களித்து!
இன்புறும் வள்ளல்காள்!!
ஈன்றோரின் மேலாக!
எம்நெஞ்சில் நிறைபவரே!!
சான்றோராய் எமைமாற்றும்!
சாதனைகள் புரிபவரே!!
எச்செல்வம் அளித்தாலும்!
எச்சமின்றித் தீர்வதுண்டு!
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்!
விளிவின்றி வளருமன்றோ!!
அன்னையே தெய்வமென்றும்!
அன்பே தெய்வமென்றும்!
கன்னின்றோர் தெய்வமென்றும்!
கதைகள்பல உண்டெனினும்!
பள்ளிக் கூடமெனும்!
பண்பட்ட கோயிலின்!
உள்ளே எழுந்தருளும்!
உயர்தெய்வம் நீங்களன்றோ!!
தாய்சொல்ல முதன்முதலிற்!
சேய்பேசும் அம்மொழியே!
தாய்மொழியாம் என்றெவரும்!
சாற்றும் மொழியினையும்!
சேய்நாங்கள் தப்பின்றிச்!
செப்புதற்குக் கருத்துடனே!
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற!
அன்னையரும் நீங்களன்றோ!!
தரிசை சீர்செய்து!
தக்கபடி ஏர்நடத்தி!
வரிசை பிடித்துவிதை!
வார்த்திடுவர் வேளாலர்!
அறிவு நீர்பாய்ச்சி!
அகந்தைக் களையகற்றி!
செறிவுடையோ ராய்எம்மைச்!
செய்உழவர் நீங்களன்றோ!!
சிலையின் இறுதிநிலை!
சீர்மிகு கண்திறப்பாம்…!
விளையும் பயிரெமக்கோ!
விழிதிறப்பே முதல்நிலையாம்...!
எண்ணோடு எழுத்தென்னும்!
இருகண்கள் திறக்கின்ற!
திண்ணிய பணிசெய்யும்!
சிற்பியரும் நீங்களன்றோ!!
அன்றாடம் எமைநாடி!
அறிவு புகட்டுமுமை!
இன்றிந்நாள் எம்நெஞ்சில்!
இருத்திப் புகழ்கின்றோம்!!
வாழ்நாள் முழுவதையும்!
மாணவர் எமக்களித்து!
வீழ்நாள் இலாக்கல்வி!
விளைக்கும்நீர் வாழியவே

கனவுகளும் சுனாமியாய்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
இந்தோ அவுஸ்திரேலிய!
இயூரேஷியத் தகடுகள்!
திடீரென விலகித்!
திறந்து கொள்கின்றன.!
கடல் பிளந்து!
காங்கை வெளிப்பட்டு!
சரேலென மேலெழுகிறது!
சுமுத்திராவுக்குத் தெற்கே!!
பிடாங் மற்றும் பெங்ரே!
பிடரி முறிந்து கிடக்கிறது.!
பூனைபோல் பதுங்கி வந்து!
புலிபோல் பாய்கிறது புதியதோர் சுனாமி.!
பாயுடன் து£க்கியெறியப்பட்டு!
பள்ளத்தில் கிடக்கிறேன்.!
இறக்குமுன் பார்க்கிறேன்!
பிறந்தமேனியை ஒருமுறை.!
எங்கும் நீர் எங்கும் நிலம்!
எங்கும் நிசப்தம் எங்கும் பிரளயம்!
என்வீடு என்மனைவி என்மக்கள்!
எல்லாம் கடலிற் கலக்கின்றன.!
கடிகாரஒலி டிக்டிக் எனக்கேட்கிறது!
கனவுகள் மீண்டும் கலைகின்றன!!
கலண்டரைக் கவனித்துப் பார்க்கிறேன்!
காலம் டிசம்பர் இருபத்தாறைக் காட்டுகிறது.!
!
வருடம் ஒன்றாகியும்!
இருட்டுக் கொட்டிலுக்குள்!
கனவுகளாய் மிரட்டி!
நினைவூட்ட அவ்வப்போது!
வந்துபோவ தெலாம்!
அந்தச் சுனாமிதான்.!
!
-மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார்.!
இலங்கை.!
23-03-2006

பயணம்

த.சரீஷ்
என்ன இது என்ற!
இதுவரை...!
பதில் கிடைக்கப்படாத!
கேள்வியோடு!
வளமையான பயணம்!
தொடர்கிறது இன்றும்.!
தினமும் இப்படித்தான்!
நெரிசல் நிறைந்த நிலையில்!
அமைதி கலைந்த பொழுதில்!
குழப்பமான மனநிலையில்தான்!
தௌ¤வில்லாத பயணம்!
என்றும் எனக்கு.!
வாழ்க்கைபற்றி!
யாருக்குத் தெரியும்...?!
திடீரென்று இந்தக் கேள்வி!
என் காதுகளை வந்தடைகிறது..??!!!
சனநெரிசல் நிறைந்த பயணத்தில்...!
யாருடனும் அல்லாது!
தனிமையில்....!
இடைவிடாமல் ஒரே கேள்வியை!
கேட்டுக்கொண்டே...!
ஒரு ஆபிரிக்கபெண்!
தொடருந்தில் எங்களோடு.!
நான் மனசுக்குள்!
பதில் தேடிய கேள்வி...!
அவளுக்கு எப்படி புரிந்தது...?!
அவசர பயணப்பொழுதில்...!
அனைவரது மௌனத்தின் மத்தியில்!
அவளின்....!
உரத்த குரல் தொடர்கிறது.!
அப்பொழுது...!
மாறுபட்ட பலரது முகங்களை!
அவதானித்தபின்பு!
என்னால் உணரமுடிந்தது.!
அவர்கள்!
நினைத்திருப்பார்கள் போலும்!
அவள்...!
பைத்தியக்காரி என்று...!!
ஆனால் அவளோ...!
மிகத்தௌ¤வாகத்தான் இருக்கிறாள்!
இல்லையேல்...!
எப்படி அவளால் சொல்லமுடிந்திருக்கும்!
எதிர்காலம் எப்படியிருக்கும் என!
எவராலும் சொல்லமுடியாது என்று..!!!!
-த.சரீஷ்!
10.03.2006!
(பாரீஸ்)

கண்ணின் மணியாகி

வினோத்குமார் கோபால்
ஈன்றெடுத்து எனை வளர்த்து!
கண்டடைந்த சுகம் யாவும்!
என்னைப் பொருத்த மட்டில்!
ஏதுமில்லை என அறிவேன்!
எனையே நான் உணரும்!
காலம் கடக்கும் வரை!
உன்னுடனே நின் விழிதனில்!
மணியெனப் பொதித்துக் கொண்டாய்!
உறுத்தலெனும் வலி கண்டும்!
எனக்காகப் பொருத்துக் கொண்டாய்!
நீயடைந்த இடர் யாவும்!
சொல்லாமல் நானறிவேன்!
துயர் யாவும் களைந்திடவே!
பெற்ற செல்வன் பொறுப்புணர்நதேன்!
இன்று முதல் சேயாகி!
கண்மணியாய் நீ இருப்பாய்

அந்தி வேளை... கள்ளன்

டீன்கபூர்
1.அந்தி வேளை!
இன்றைய நாட்களில் என்னவோ என்னிலிருந்து!
குறைந்து கொண்டுபோவதைக் காண்கிறேன்.!
பெண்களின் கலகலப்பில்!
சிரிப்பில்!
நளினத்தில்!
நாணத்தில்!
புலன்களைச் செலுத்துவதில் இருந்து வந்த விருப்பம்.!
பழைய சம்பவங்கைளைக் கிளறிவிட்டு!
09.02.90 வெள்ளி மாலைக்குள்!
சாலை மணலுக்குள் செருப்பையும் மீறி!
புதையுண்டு போகும் அவள் பாதங்கள்!
நடையில் சாந்தமில்லாத வேகமுமாய்!
முன்பின் புறங்கள் சிறுமியரின் காவலுமாய்!
அவள் வந்த பாதையை மாற்றிப் போகையில்!
என்னை மனம் முழுவதும் நிறைத்திருப்பாள்!
ஒரே கருப்பையில் தரிக்காத சகோதரியாய்…….!
நீண்ட நாட்களின் பின்னும் !
ஒரு முடிவுக்கும் அவள் வரவில்லை என்பதை!
அவள் மறைவதில் இருந்த அக்கறை சொன்னது.!
பலம்பெற்ற பெண்மையை அவளுக்கே உரியதாக்கியது!
இதயத்தை நோண்டி குப்பைக்குள் வீசிய வேகம்!
பக்கத்து மரத்திலாவது தாவிக்கொள்ள!
சுதந்திரம் இல்லையா?!
காக்கை விரட்டிய குயில் குஞ்சுக்கு.!
சலனங்கைளை சகித்துக்கொள்ள முடியாத!
மென்மை இதயத்துடன் வாழ்பவன் நான்.!
வெள்ளிக் குறிப்பினை!
நண்பர்களிடம் கதைத்துத் தீர்ப்பதிலும் அர்த்தமில்லை!
ஓடிப்போய்!
அவள் காதல் கடிதங்களைப் புரட்டுவதிலும்!
அர்த்தமில்லை.!
அவள் உருவத்தைப் புதைத்திருக்கும் இதயத்திலும்!
அர்த்தமில்லை.!
எதிலும் அர்த்தமில்லை என்பதை உணரவே செய்தேன்.!
பழைய நண்பர்களின் மனங்களின் மாதிரியையும்!
அந்த ஒரு சில வினாடிக்குள்!
என் பெருமூச்சு உசுப்பிக் கொண்டுபோனது.!
எத்தனையோ வகையான கேள்விகளும்!
என் தலைக்குள்!
விடை இல்லாமல் தேங்கிக்கிடப்பதைக் காண்கிறேன்.!
நன்றி-!
செப்டம்பர் 1991 - முனைப்பு !
!
2.கள்ளன் விளையாட்டு!
என்னைச் சுற்றி வட்டம் போட்டு!
பொடியன் பொடிச்சுகளாய்!
வயதுகள் பத்தும் பன்னிரண்டும்!
கூடிக் கை கோர்த்து!
ஆள்மாறிஆள் தூரவிரட்டும் நான்.!
நிலாவென்றும் இருளென்றும்!
அலைந்து தேடிப்பிடிக்கும்!
கள்ளர்களாய் எல்லோரும்.!
“உள்ளங் குரும்பை!
உருகட்டைப் பனம் பழம்!
மானூடு தேனூடு!
அடிச்சு குடிச்சு!
அடிபட்ட கள்ளன்!
மா!
ஊ !
மர தள்ளு”!
ஒவ்வொருவரும் படுக்கையில்!
நான் தனித்து நிற்கையில்!
ஒருத்தன் கொல்லையில்!
மற்றவன் மாவில்!
அடுத்தவன் அடுக்களைக்குள்.!
ஒருத்தி ஓலைக்குள்!
ஒருத்தி உம்மாவுக்குள்!
ஒருத்தி மட்டும் என் நெஞ்சுக்குள்!
இவளையே தேடிப்பிடிப்பதில் என் கரிசனை.!
ஓதாமல் படிக்காமல்!
அன்றைய நானும்!
அன்றைய நண்பரும் கள்ளர்களாய்…….!
நன்றி!
20121992 - வீரகேசரி

ஸ்நேகிதன்

தான்யா
சபலம் நிறைந்த கூட்டத்தில்!
என்னை நெருங்கி!
பெண்கள் பற்றிப் பேசினான்!
வீடு, வாசல், படிப்பு!
அப்பா, அம்மா, காதலன் என!
எல்லோரையும் பற்றிக் கதைத்து!
நேரம் பார்த்து விடைபெற்று!
இயல்பாய் இருந்தேன்!
நேசம், காதல் போன்ற!
உணர்ச்சிகளற்று!
ஸ்நேகம் பேணிக் கை குலுக்கி!
காதலின்றிப் பிரிவது கடினமாயில்லை.!
-தான்யா!
(கணையாழி)

குழுக்களா.. கூட்டமு..நல்லறி..வெருவினார்

எசேக்கியல் காளியப்பன்
குழுக்களாய் முன்னே செல்வோம்!.. கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்..!..வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!!
01.!
குழுக்களாய் முன்னே செல்வோம்!!
---------------------------------------------!
நேரு வேலை வாய்ப்புத் திட்டம்!
கூறி அழைத்துக் கொடுத்த வேலையைச்!
சீருடன் செய்து சிறப்புடன் முடித்து!
நேரிய வழியில் நிதம்பெறும் கூலி!
சேரிடம் மதுக்கடை இலதாய், உள்ளம்!
தேரிய மக்கள் திருந்திய பேராய்!
வாரி முடித்து,அவர் வாரிசுக ளுடனே!
பூரித் திருக்கும் பூவையர் கைகளில்!
சேர்த்து மகிழும் சிறப்பினைப்!
பார்த்தெம் மனமும் பரவசம் உறுமே!!
நாட்டிலே ஆட்சி செய்வோர்!
-நலம்பல பெருகும் வண்ணம்!
கூட்டிடும் திட்டம் எல்லாம்!
-குறித்தவா றெடுத்துச் செல்ல!
நாட்டமும் மக்கள் கொள்ள!
-நன்மைகள் விலகிப் போமோ?!
கோட்டமும் மனத்து நீக்கிக்!
குழுக்களாய் முன்னே செல்வோம்?!
02.!
கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்..!!
-------------------------------------------------!
விதியென் றென்னை!
வீதியில் விட்டவன்!
கதியினை எனது !
கைகளில் எடுத்தேன்!!
களிமண் பிசைந்தேன்;!
கடவுளாய் மாற்றினேன்!!
ஒளிர்வண்ணக் கலவையை!
ஊற்றியே மினுக்கினேன்!!
விழியெலாம் திறந்து!
வியப்புடன் பார்த்தனர்!!
வழியெலாம் வைத்து!
வழிபா டெடுத்தனர்!!
படைத்தவன் என்னைப்!
பாடிட மறந்து!
படைப்பினைப் போற்றிப்!
பாடியே மகிழ்ந்தனர்!!
அலைகடல் அடைந்தே!
ஆட்டமும் நிற்கும்;!
சிலைகளாய்க் கடவுளர்!
சிறுத்துள் மறைவர்!!
கூட்டமும் மறையும்;!
கூறுகள் கலையும்!!
பாட்டினை அலைகள்!
பாடியே திரும்பும்!!
03.!
நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!!
-----------------------------------------------------!
ஏட்டினிலே இருப்பதையே எடுத்துச் சொல்லி!
எக்கேடும் கெட்டுப்போ என்றி ராமல்!
கூட்டினிலே மகிழ்ந்திடவும் குறிக்கோள் தன்னைக்!
கூடிவரும் மாணவர்க்குக் காட்டி நின்றும்,!
ஆட்டபாட்டம் இருந்தாலும் அறிவுத் தாகம்!
அமைந்தவொரு பருவத்தின் அழகை யூட்டித்!
தோட்டமிந்த உலகிதிலே மலர்கள் நீங்கள்!
தொடர்ந்துமணம் வீசுமென அனுப்பி வைக்கும்!
நாட்டமெலாம் நன்மைக்காய் நாடு யர்த்தும்,!
நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!!
வாட்டமிலா இளைஞரினம் வளர நாடும்!
வளருமென அவர்பணியை வாழ்த்து வோமே!!
04.!
வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!!
---------------------------------------------------------!
புரணிகள் தவிர்க்க வாரீர்!!
பூசலை ஒழிக்க வாரீர்!!
கரணிகள் கண்ட றிந்து !
[கரணி= மருந்து]!
காழ்ப்புகள் போக்க வாரீர்!!
பரணியும் பாட வாரீர்!;!
பாரிதில் மகிழ வாரீர்!!
தரணியை வெல்ல வாரீர்!!
தமிழையும் உயர்த்த வாரீர்!!
சிரசினில் கோபம் ஏறச்!
சிந்தனை கெட்டுப் போகும்!
உரசிடும் பொருட்கள் சூட்டை!
உதறிடப் போமோ? காந்தி!
பெருமையை மறந்து விட்டோ!
பிரிவினைக் குதவி நிற்போம்!!
விரலென அழுக விட்டால்!
விக்கினம் உடலுக் கன்றோ?!
ஒருவிரல் என்று நாட்டை!
உயர்த்தியே காட்டி அன்றே!
உருவிய வாளைக் கூட!
உறையினுள் அனுப்பக் கண்டோம்!!
வெருவினார்க்(கு) அஹிம்சை வாழ்க்கை!
வீரமாய்த் தோன்றி டாது!!
பொருதலால் அழிவே மிஞ்சும்!
புரிய ஏன் மறுக்கின் றீரோ?

திறக்கப்பட்ட கதவுகளின் வழியே

த.சரீஷ்
கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக !
திறக்கப்பட்ட !
கதவுகள் மூடப்பட்டும் !
மூடப்பட்ட கதவுகள் !
மறுபடி திறக்கப்பட்டும் !
சிலவேளைகளில் மட்டும் !
காற்று வருமென்ற !
எண்ணங்களோடுதான் !
காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...! !
எங்களின் எதிர்காலம் குறித்த !
பேச்சுக்களை விட்டால் !
நிகழ்காலம் குறித்த !
நாற்காலிகளின் கனவுகள் !
வெறும்... !
கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...! !
இதனால்தான் !
அன்போடு பேசலாமென !
அக்கறையோடு அவர்கள் !
இடைக்கிடையே வருவார்கள்...! !
வாருங்கள் !
ஊரெல்லாம் ஓடித்திரியலாமென !
அழைத்துப்போவார்கள் !
சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம் !
நெஞ்சிலே சுமந்துகொண்டு !
அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம் !
கடைசியாகக்கூட அவர்கள் !
ஒன்றிலிருந்து ஆறுதடவைகள் !
நாடுநாடாய் அழைத்துப்போனார்கள். !
இருப்பினும்... !
ஒரே ஒரு அதிருப்திதான் !
அவர்களிகன்மீது எங்களுக்கு...! !
ஆறுதடவைகள் பேசலாமென !
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள் !
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!! !
-- த.சரீஸ் !
27.01.2006 (பாரீஸ்)

கொஞ்சம் கூதல்... நிறையக் காதல்

மன்னார் அமுதன்
கூதல் என்னைக்!
கொல்கையில்!
உன் நினைவுகள்!
கொளுத்திக் !
குளிர் காய்கிறேன்!
தலையணை அணைத்து!
மெத்தையைக் கிழித்து!
உன்பெயர் புலம்பையில் -எனைப்!
பரிதாபமாய்ப் பார்க்கின்றன !
பஞ்சுகள்!
அலைபேசியில் உளறிக்கொண்டே!
நான் வரைந்த உன் பெயர்!
வெள்ளைப் படுக்கையுறையெங்கும்!
ஓவியமாய்ச் சிரிக்கிறது!
நீ விட்டுச் சென்ற !
ஒற்றைத் தலைமுடி..!
இரட்டைக் காதணி..!
கண்ணாடிப் பொட்டு..!
உடைந்த வளையல்..!
கொலுசுச் சத்தம்...!
ஈர முத்தம்..!
என எல்லாவற்றையும் !
சொல்லிவிடவா...?!
பூக்கிறாய், !
வேண்டாமென வேர்க்கிறாய்!
விட்டு விடுவென வெட்கப்படுகிறாய்... !
இத்தனைக்கும் காரணம்!
இந்த வெட்கம் தானே!
ஒவ்வொருமுறை தவம்!
கலைந் தெழுகையிலும்!
நான் வியர்த்துவடிவேன்!
நீ வெட்கப்படுவாய்!
பிறகென்ன!
மீண்டுமொரு தவம்...!
கட்டியணைக்கையில்!
வெட்டிச் சுழிப்பாய்...!
விடிந்து பார்க்கையில் (என்மேல்)!
மடிந்து கிடப்பாய்!
ஓட்டைச் சிரட்டையில் !
ஊற்றிய தண்ணீராய்...!
உனைநோக்கி ஒழுகி!
உருகி ஓடுகிறது மனம்!
இன்றோடு ஒன்பதுமாதம்!
கழியுமொரு யுகமாய்!
இன்னும் பத்து நாட்கள்!
தலைச்சனைப் பெற்றெடுக்க!
தாய்வீடு சென்ற நீ!
சேயோடு வருவாய்!
மார்பு அவனுக்கு!
மடி உனக்கு!
மீண்டும் கூதலில்!
பஞ்சணைகள் பத்திக்கொள்ளும்!
தங்கச்சி வேண்டாமா!
தலைச்சன் விளையாட

கோழி.. இன்றைய சந்தை நிலவரம்

கு.சிதம்பரம், சீனா
01.!
கோழி !
---------------!
என் குழந்தைக்கு தினம்!
ஓரிலவச முட்டையைக் கொடுத்து!
பதிலுக்கு தனது அலகால்!
எங்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறது!
சேவல் இன்றி குப்பைகளை!
தனதிறகால் அணைத்துக் கொண்டு!
முட்டையிடும் நாத்திகக் கோழி. !
02.!
இன்றைய சந்தை நிலவரம் !
---------------------------------------!
அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவின்!
இன்றைய சந்தை நிலவரத்தை பார்கின்றன. !
மலிவு விலைப் பட்டியல்:!
வெங்காய விலை கிலோ 80 ரூபாய்!
துணை வேந்தர் விலை 1 கோடி!
பல்கலைக் கழக பேராசிரியர் விலை 15!
லட்சம்!
கிராம நிர்வாகி விலை 5 லட்சம்!
பேருந்து ஓட்டுனர் விலை 2 லட்சம்!
மத்திய அமைச்சர் விலை 600 கோடி!
ஜனநாயகத்தின் விலை 1.76 லட்சம் கோடி!
விற்றப் பொருள் திரும்பப் பெறபடமாட்டாது!
இப்படிக்கு நிர்வாகம். !
இச்சி... இச்சி... இப்பழங்கள்!
எல்லாம் அழுகி நாற்றமெடுக்கின்றன!
இனி இந்தப்பக்கமே வரக்கூடாது!
சீனாவும் அமெரிக்காவும் திரும்பிசெல்கின்றன