தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

புள்ளியளவில் விபத்து.. ஜன்னலுக்கு

அக்மல் ஜஹான்
வெளியே..!
01.!
புள்ளியளவில் விபத்து..!
--------------------------------!
ஒரு புள்ளியில் தொடங்குகிறது!
விபத்து...!
சிறகு பூட்டுவதான!
அலங்கரிப்புக்கள்..!
விற்பனை பொருளாகிறது!
ஏதோ ஒன்று..!
நிறம் பூசிய சுவர்!
பேரங்களில் அரைபடும் வாக்குறுதி..!
விலைபோகும் இதயம்..!
அலங்கார வார்த்தைகளால் சமைகிறதென்!
பல்லக்கு..!
ஒற்றை சிறகோடு!
ஓரமாய் உட்கார்ந்திருக்கிறது!
இதயம்!
பிடிக்கவில்லை என்ற !
பிடிமானங்களை!
உரைக்க முடியாதபடி..!
சுமக்க முடியாத கனவுகளில்!
அதிர்கிறது!
அந்தப்புரம்..!
நான் தூங்க விரும்பிய தொட்டில்!
இதுவல்லவென்பதை எப்படியுரைப்பேன்..??!
ஒரு பூவிரிவதைப்போல்!
பேசாமல் பெய்யும் மழைபோல்!
ஓசைகளற்றுப்போகும் மொழிகளை!
என்குருவி குந்தி!
கொத்திஎறியும் கனவுகள்!
இப்படித்தான் தொலையுமோ... ??!
02.!
ஜன்னலுக்கு வெளியே..!
-----------------------------!
ஜன்னலுக்கு வெளியேதான்!
உலகம்...!
ஆனாலும்!
மலைகளுக்கும்!
பள்ளத்தக்குகளுக்கும் அப்பால்!
தவறிப்போன கைக்குட்டையை!
தேடுகிறேன்

மௌனத்தை மறுக்கும் நட்சத்திரம்

நவஜோதி ஜோகரட்னம்
எண்ணற்ற சதிகளினால்!
புனையப்பட்டது வாழ்க்கை!
பிரியங்கள் சுழன்று!
பரவசமடைந்த இடங்கள்…!
வெளிகள்… காடுகள்… ஏகலும்!
அத்துமீறி நுழைந்த!
கறுப்பு அங்கிகளின் கால்சுவடுகள்…!
பூக்களால்!
மண் வாசம் தொட்டு!
நாதத்தில் மிதந்து!
நடனமாடிய கிராமங்கள்…!
மரணபயத்தோடும் உயிராவலோடும்!
பறக்கின்றது இதயங்கள்!
முட்கள் மாலை கோர்த்து!
கடுகதி ஆயுளோடு பற்றி எரிகிறது…!
கடைசி ஒற்றையடிப் பாதையிலும்!
உயிர் தின்னும் காண்டாமிருகங்கள்…!
பதறும் உறவுகளை!
புகைகக்கி!
விதவிதமாய் ருசி பார்க்கிறது!
மாய்ந்து மணற்திட்டியில் செத்து!
கொத்துத் கொத்தாய்ப் பிணங்கள்!
ஊன உடல்களும்!
கட்குழிகளும்!
ஊற்றெடுக்கும் செந்திரவமும்!
எஞ்சிக் கிடந்து என்!
உள்ளத்தைக் கிழித்து!
நஞ்சாக்கி!
நெஞ்சையெல்லாம் எரிக்கிறது!
என் இனம்!
மயான நெருப்பாகி!
அவியாமல்!
நிலைகொண்டெரிவதை!
நிறுத்தத்தவறிய!
மனிதநேயமற்ற உலகே!
உன் மௌனத்தை!
செம்புள்ளிபோல்!
எஞ்சியிருக்கும் நட்சத்திரமும்!
ஏற்க மறுக்கிறது!
24.4.2009

தேடலில்லா கவிதை போல்

இளங்கோ
காலந்தவறி அசைந்தாடி வரும் !
ஓசி பஸ்சும் !
சளைக்காது !
மூசிவீசும் குளிர்க்காற்றும் !
நெஞ்சினிலுள் இறங்கும் !
கோபக் கவளங்களாய் !
வெறுப்பும் சலிப்பும் !
குழைத்தெறியும்பொழுதில் !
என்றேனும் ஒருகால் !
உருகாதோ உறைபனி !
மதுவருந்தி !
மயங்கும் வெள்ளியிரவுகளில் !
பலவீனங்களுடன் !
மனிதர்களை நேசிக்க !
நெஞ்சு கிஞ்சிக்கும் !
பாடப் புத்தகங்களின் !
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும் !
நான் !
மாந்தர்களைப் படித்தல் !
நடவாதென !
நினைவு ததும்பிச் சிரிக்கும் !
சுரங்கப் பாதையில் !
வகுப்புகளுக்காய் !
நடக்கையில் !
தென்படும் பெண்களெல்லாம் !
தேவதைகளாக மிதக்கின்றனர் !
அறிவும் தெளிவும் !
தெறித்துச் சிதற !
அவர்கள் பேசுகையிலும் !
ஆண்களுண்டாக்கும் !
காயங்களே !
பேச்சிடைப் பொருளாகின்றன !
முற்போக்குகளின் !
பிரதிநிதியாய் !
சமரசங்களற்று !
அலையும் இளைஞன், !
பட்டத்துடன் !
முகவரியற்றுப் போவது !
நாளைய விந்தை !
அவ்வவ்போது கற்றல் !
வன்முறையாய் !
சிந்தனையடுக்குகளை !
சிதைத்துப்போக !
நெருங்குகிறது பரீட்சை !
தேடலில்லா !
கவிதை போல் !
காலத்தை !
அசட்டை செய்து !
நகர்கிறது வாழ்வு. !
!
*OC Transpo : Ottawa - Carleton Transportation

தமிழா! இன்றும் நீ அகதியா

வேதா. இலங்காதிலகம்
உன்னைக் காப்போர் யார்?!

தமிழா! தமிழா! உன் தலையெழுத்தென்ன!!
தாய் நாட்டிலும் ஒரு அகதி நிலை.!
தங்கும் இடமெங்கும் நீ அகதியன்றோ!!
தரத்தில் நீயொன்றும் அகதியில்லையே!.!
உலகில் உன் திறமையை நிரூபித்துள்ளாய்!!
கலகம் அடக்கும் வகை தெரியவில்லை.!
வெளிநாட்டிலும் உன் வேகத்தைக் காட்டுகிறாய்.!!
வெகு சாதுரியமாய் உன் காய்களை நகர்த்துகிறாய்.!
கம்பியூட்டரில் பிற நாட்டிற்கு ஆலோசகராகிறாய்!!
கட்டிட வேலையில் அதை வாங்கி விற்கிறாய்!!
கழுவும் வேலையிலிணைந்து கம்பெனி நிறுவுகிறாய்!!
கடின உழைப்பில இலக்கம் ஒன்றாகிறாய்!!
கலைகளில் உலக தரம் எடுக்கிறாய்!!
கருமமே கண்ணாக தாயகத்திற்கும் உதவுகிறாய்!!
கண்ணியமற்ற அரசால் பிறநாட்டு; ஆதரவு!
கறுப்பாகத் தெரிகிறது, கவலை பெருகுகிறது.!
கவசகுண்டலமாய் நல்ல கடின உழைப்பு!
கைவசம் உள்ளது வெளிநாட்டுத் தமிழரிடம்.!
கருணை மனதாளரான கர்ணமனத் தமிழரே!!
கடவுளராக இன்று தமிழரைக் காப்போர்.!

உலகின்றி நீர்

ஜி.எஸ்.தயாளன்
பேய் மழையின் விரல்பிடித்து!
ஊரோரம் ஓடும் நதி!
ஊர்ப் பார்க்கும் வெறி கொண்டு கிளம்புகிறது!
ஊழிக் காற்றின் ஓசையில்!
ஊருக்குள் பாய்கிறது வெள்ளம்!
எதிர்கொள்ள எதுவுமின்றி!
மனிதர்கள் கைப்பிசைந்தோம்!
காற்றுப் புகும் இடங்களெல்லாம்!
வெள்ளம் பெருகுகிறது!
பெருவிரல் கணுக்கால் முட்டளவு மார்பு!
கழுத்தென வளரும் ஆலகால விஷநீர்!
பிரிக்கும் மதில்கள் இணைக்கும் சாலைகள்!
அனைத்துமழித்து பெருக்கெடுக்கிறது வெள்ளம்!
மரண ஓலத்தோடு ஓலம் மோதி மின்னல்!
மழை பூமி தொடும் தேவையற்று!
தன்னைப் பெய்து பெய்து கொண்டாடுகிறது!
வரத்து அதிகரிக்க உயர்கிறது வெள்ளம்!
வெள்ளம் பெருவெள்ளம்!
மொட்டை மாடிகளுக்கும் மேலே!
ஓடியாடி நெழிகின்றன பாம்புகள்!
சற்றே நேரத்தில்!
மலைகளும் மூழ்கிச் சாகும்!
கடல் கொள்கிறது!
கடல் காவு கொள்கிறது!
நீர் வானம் இடையே காற்று!
உலகின்றி அமைகிறது நீர்

மல்வத்து ஓயாவில் நீராடல்

பொலிகையூர் சு. க சிந்துதாசன்
தொடர்கிறது!
-------------------------------------------!
மரணத்திலிருந்து மீண்டவர்களுக்காக!
மல்வத்து ஓயாவில்!
புனித நீராடலுக்கு ஏற்பாடு!
நீண்டோடும் அவ்வாற்றை!
முட்கம்பி வேலிகளால் கூறுபோட்டு!
குளிப்பொழுங்கு நடக்கிறது!
இந்த ஆறு என்றும்!
சனத்திரளை!
இம்மாதிரிக் கண்டிராது!
கோடையாற்றில்!
நீர் வற்றென்றாலும்!
வேறு வழியின்றிப் பற்பலருமதை!
நாடத்தான் செய்தனர்!
புனித நீராடல்!
தொடர்ந்தபடியிருக்க!
ஆற்றின் நடையோடு!
சேறு… சகதி…!
மலம்… எனக் கலந்து!
நீரின் நிலை மாறிற்று!
இரத்தக் கறைபடிந்த!
எனது ஆடைகள்!
இன்னும் கழற்றப்படவுமில்லை!
துவைக்கப்படவுமில்லை.!
ஆற்றை வெறித்தபடி பார்த்த!
நானும்!
என்போன்றோரும்!
திரும்பி நடக்கிறோம்!
மல்வத்து ஓயாவில்!
நீராடல் தொடர்கிறது

துடிக்கின்றது.. என்னவள்.. பெறுமதி

கமல்ராஜ்
துடிக்கின்றது என் காதல்.. என்னவள் எங்கே..? பெறுமதியற்றவன் காதலன்!
01.!
துடிக்கின்றது என் காதல்!
-------------------------------!
வாடாத மலராக !
வயதுக்கு வந்த இதழே..! !
வாலிபம் துள்ளுதடி-எனக்குள் !
ஏதேதோ பண்ணுதடி.... !
வார்த்தைகளை உச்சரிக்க !
நாக்குத் துடித்தாலும் !
பார்வையிலே நான் மயங்கி !
புதுமையாய்ப் பார்க்கின்றேன், !
பாவாடைத் தேருன்னை. !
யாரென்று அறியாமல் !
யாசித்தாலும் !
உன்னைத்தான் நேசிக்கின்றேன். !
அட்சயப் பாத்திரமாய் !
குறையாத உன் புன்னகையில் !
புதையுண்ட காதலை !
சம்மத நீரூற்றி !
வேரோடு விழுதாக !
விருட்சமாய் வளர்த்து விடு. !
விழிகளுக்குள் விதைகளை !
பார்த்தவுடன் விதைத்து விட்டேன். !
உரமாக உன் பதிலை !
உயிராகக் கேட்கின்றேன். !
உள்ளவரை நேசிப்பேன் !
உயிராக சுவாசிப்பேன், !
சம்மதம் தந்து விட்டால் !
உனக்காக உயிர் வாழ்வேன்.!
!
02.!
என்னவள் எங்கே..?!
-----------------------------!
முகம் வாடி வருகிறது தென்றல் !
அவள் முகம் காணாது...... !
முற்றத்துக் கோலம் சிதைந்து !
எறும்புகள் விருந்துண்ணையிலே !
புள்ளிவைத்த சித்திரம் !
சிறைவைக்கப் பட்டதுவா? !
திசை மாறிய தென்றல் !
அவள் !
சடைகளை தீண்டாமல் !
சடையின் வாசம் !
சலனப் படுமே!
சாமத்தியம் அறியாமல். !
தூது செல்லும் தென்றலில் !
எத்தனை தூசிக்கள்.... !
தூசிக்கள் வடிவிலும் !
அலைகின்றது துன்பங்கள். !
காத்திருக்கும் பொழுதெல்லாம் !
கற்பனையோ அவள் மீது, !
தனிமையில் மட்டும் !
கண்ணீர்தான் என்னோடு. !
காதலில் தோற்றவன் !
முழுமனிதன். !
வெற்றிகள் கண்டவன் !
அனுபவம் குறைந்தவன். !
கம்பிகள் இல்லாத சிறை வாசம் !
காதலில் மட்டும் !
அனுபவம் தன் புத்தியைத் தட்டும். !
அறியாத காதலுக்கு !
அனுபவமே வெற்றி. !
அவளைக் காணாத போது மட்டுமே !
உணர்கின்றது புத்தி.!
!
03.!
பெறுமதியற்றவன் காதலன்!
-------------------------------!
இதயத்துள் மெத்தையிட்டு !
உயிரினுள் நிழல் பிடித்து !
உனக்காக காத்திருந்தேன். !
நீயோ.....! !
துணையோடு இணையாக !
என்னருகில் வந்துநின்றாய். !
கண்களில் மழையடிக்க !
கால்கள் தானாய் உதறிக்கொள்ள !
கன்னத்தில் கைகள் வந்து !
கதையேதோ பேசுதடி...!
எண் திசையும் எப்படித்தான் !
என் கதை பரவியதோ..? !
தேவதாஸ் பட்டியலில் !
தேடாமல் ஒரு வாய்ப்பு !
தேடி என்னை வருகின்றது.... !
புன்னகையாய் நீ வந்து !
புயலாகச் சென்றாய் !
புழுதியெல்லாம் என்னில் குவிந்து !
தடம்மாறிப் போனேன் !
தெருவோரச் சிலையாக !
வெப்பம் தாங்கும் கள்ளிச் செடியாய் !
நீயின்றி வாழ்கின்றேன். !
வெண்மை முகிழுக்குள் !
காரிருளாய் இணைகின்றேன். !
கவலைகளை மறைத்து !
மழையாக கண்ணீர் சிந்த. !
துண்டாய் உடைத்த மனதை !
தேடி எடுப்பது எங்கே..? !
தெருவோர நாய்களெல்லாம் !
ஒன்றுசேர்ந்தது அங்கே. !
எத்தனை கேள்விகள் என்னிடம் !
உன் பெயரைக் கேட்டு !
இராணுவ இரகசியமாய் !
பூட்டி வைத்தேன் கனவோடு சேர்த்து. !
பெறுமதி இல்லாத சதங்களாய் !
எங்கோ அலைந்து திரிகின்றேன், !
நிழலைப் பிரிந்து !
நினைவோடு வாழ்கின்றேன்

காணாமல் போன அம்மிக்கல் !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
பெருநாள் பிறை!
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி!
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை!
பச்சை வாசனை பக்கத்தில் நான் !
நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு!
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்!
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்!
அந்த அரைத்த சம்பலுக்காய்!
உயிர் விடத் தோணும். !
அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்!
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்!
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்!
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது. !
அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை!
தண்ணீர் விட்டுக் கழுவவும்!
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்!
சின்னதாய் ஏற்பாடுகள் !
அம்மிக்கல்லின் பின்னால்!
நீள் கம்பி வைத்த!
சில் காற்று ஜன்னல் !
கருங்கல் அம்மிக்குள்!
மெல்லிய அதிர்வுடனான!
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு!
பல சமயங்களில் உணர்த்தி நின்றது. !
முன்றல் கொய்யாமரம்!
வளையங்கள் கூட்டிக்கொண்ட!
பின்னொரு கோடை நாளில்..!
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது. !
அம்மிக்கல்லும் இல்லை!
சில் காற்று ஜன்னலும் இல்லை!
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு!
ஒரு!
மின்சார மிக்ஸி…!

என்னவர்களை நோக்கியே

நடராஜா முரளிதரன், கனடா
தொடைகளுக்குள்!
அழுந்தி நெரியும்!
யோனிகளை!
அளவளாவவே!
எனது பார்வை!
தெறித்தோடுகின்றது!
முனைதள்ளி நிற்கும்!
மேடுகளையும்!
நுனிப்புல் மேய்ந்தவாறே!
மனைவியோடு!
பிள்ளையோடு!
நண்பனோடு!
பேசாத!
கனிவான வார்த்தைகள்!
அங்கு கொட்டுகின்றன!
அன்றொரு நாள்!
யேசு வாங்கிப்!
பெற்றுக்கொண்ட!
கற்களைக் கூடைகளில்!
சேகரித்துக்கொண்டு!
எறிவதற்காய்!
எல்லோரையும் நோக்கி!
குறிபார்த்தல்!
தொடருகிறது.!
வார்த்தைகளை!
இரவல் வாங்கியவனாகி!
விடக்கூடாது!
என்பதற்காய்!
வாசித்தலையே மறுத்து!
துறவறம் பூணுகின்றேன்!
ஆயினும்!
பிரபஞ்சமெங்கணும் இருந்து!
எனக்கான!
படிமங்களை வேண்டியும்!
இன்னும் அதற்கு மேலாயும்!
இரந்து வேண்டி!
இன்னுமோர் தவத்தில்!
மோனித்திருப்பதாய்!
கூறிக்கொள்ளுகின்றேன்!
எனினும்!
ஓங்கியொலிக்கும்!
மனித ஓலம்!
பெருக்கெடுத்தோடும்!
மனிதக் குருதி!
மூச்சுக் குழல்களை!
அடைத்து நிற்கும்!
பிணவாடை!
என்னை மீண்டும்!
என்னவர்களை!
நோக்கியே!
அழைத்துச் செல்கிறது

ஆசிரியர்கள்!..சோகம்..தாய்மை

முனைவென்றி நா சுரேஷ்குமார்
ஆசிரியர்கள்!.. சோகம்.. தாய்மை!!
01.!
ஆசிரியர்கள்!!
-----------------!
வாழ்க்கைப் பயணத்தில்!
திசைகள் தெரியாமல்!
தத்தளிக்கும் குழந்தைகட்கு!
கலங்கரைவிளக்கமாய்!
உங்கள் போதனைகளே!!
பள்ளிக்குச் செல்கின்ற!
பிள்ளைகள் மனதை!
பண்படுத்துபவை!
உங்கள் போதனைகளே!!
அன்னையும் தந்தையும்!
முதலிரண்டு கடவுள்களென்றால்!
மூன்றாவது கடவுள்!
நீங்கள் தானென்று!
சொல்லி வைத்தார்கள்!
எம்முன்னோர்கள்!!
இன்னும் சொல்லப்போனால்!
மாதா பிதா!
குரு தெய்வம் என!
உங்களுக்குப் பிறகுதான்!
தெய்வம்!!
களிமண்ணுங்கூட!
பிடிப்பவர் பிடித்தால்தான்!
பிள்ளையார் ஆகுமாம்!!
உங்களின்!
அன்பான அரவணைப்பே!
பிஞ்சு உள்ளங்களை!
நெஞ்சில் உரமிக்க!
நேதாஜியாய்...!
நேர்மைத் திறங்கொண்ட!
காந்தியாய்...!
பாட்டுத்திறமிக்க!
பாரதியாய்...!
அன்புக்கே அன்னையான!
தெரசாவாய்...!
தொண்டுகள் செய்யும்!
தேசத்தலைவனாய்...!
மாற்றுகிறது!!!
மாற்றங்களை நிகழ்த்துவது!
நீங்கள்!!
உங்களை!
வணங்கி மகிழ்வதில்!
பெருமை கொள்கிறோம்!
நாங்கள்!!!
!
02.!
சோகம்!
--------------!
நேற்று நீ!
என்னுடைய காதலி!
இன்று நீ!
வேறு ஒருவனுக்கு மனைவி!
எப்போதும்!
என் நினைவினில் இருக்கும்!!
என் பெயரைப் போலவே!
உன் நினைவுகளும்...!
தயவுசெய்து!
இனி என்னை!
நேசிக்கவோ...!
என் கவிதைகளை!
வாசிக்கவோ!
செய்யாதே...!!
பச்சிளங்குழந்தை!
நீ!!
உன் பிஞ்சு உள்ளத்தால்!
தாங்கிக் கொள்ள முடியாது!!!
என் கண்களில் இருந்தும்!
என் கவிதைகளில் இருந்தும்!
வழிந்திடும் சோகத்தை...!
!
03.!
தாய்மை!!
--------------!
நீண்டதொரு சாலையில்!
மிதிவண்டியை இழுத்தபடியே!
என்னோடு!
பேசிக்கொண்டே நடந்தாய்!
நீ!!
நாமிருவரும்!
தற்காலிகமாய் பிரியவேண்டும்!
என்பதை!
குறிப்பால் உணர்த்தியது!
சாலையின் பிரிவு!!
என்னிடம் விடைபெற்றபடியே!
சாலையின் வலதுபுறமாய்!
அழுத்தினாய் நீ!
உன் மிதிவண்டியை!!
என் கண்ணைவிட்டு!
நீ மறையும்வரை!
உன்னை!
பதைபதைக்கும் உள்ளத்தோடு!
பார்த்துக் கொண்டிருந்தேன்!!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு!
உற்சாகமாய்க் கிளம்பும்!
தன் குழந்தை!
கீழே விழுந்துவிடக்கூடாது!
எனத் தவிக்கும்!
தாய் போலவே