தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அவ‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
பூமித்தாயின்!
முந்தானை பிடித்துச்!
சுற்றிச்சுற்றி விளையாடும்!
நிலவுக்குழந்தையின்!
தேய்பிறை முகங்களின்!
மற்றுமொறு பாதியை!
தூரிகையின்றி காற்றிலே!
வரைகிறாள்!
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே...!
அப்போது,!
காற்றிலே படபடக்கும்!
கண்ணாடிக்கூந்தலோடு!
அளவளாவி மகிழும்!
நீலத்தாவணியும்,!
கொலுசினிசைக்கேற்ப!
நர்த்தனமாடும் பாவாடைப்பூக்களுமாய்!
அவளின் ஈடில்லா அழகில்!
பொறாமை கொண்ட‌!
பிறை நிலவானது!
தோல்வி முகங்காட்டமறுத்து!
இருளுக்குள் புதையுண்டதே!
தேய்பிறைக்கு அடுத்து வரும்!
அமாவாசை ஆகும்...!
-ராம்ப்ரசாத், லண்டன்

மனிதக்.. தொட்டால்.. அந்த சாதிக்குருவியும்

வித்யாசாகர்
மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்.. தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..!
01.!
மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்!
------------------------------------------------------------------------!
கோவில் உடைப்பு!
மசூதி எரிப்பு!
பாதிரியார் மரணம்!
புத்தப் பிச்சுகள் போராட்டம்!
சாமி சிலை திருட்டு!
அட்சைய திருதியை, ஆடிவெள்ளி அதிசய சலுகை!
சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம்!
சிலுவைக்குப் பின்னே சிலுமிசம்!
கோவிலில் கற்பழிப்பு !
என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..!
எதற்கு இதலாம்..?!
மனிதரைக் கொன்று!
மனிதத்தை அழித்து!
பிறகங்கே!
மார்தட்ட மதமெதற்கு?!
சற்று திரும்பிப் பாருங்கள்!
இதலாம்!
கடந்து கல்லிற்கு முன் ஏற்றிய!
கற்பூரத்தையும்!
குற்றத்தின் கணக்கில்!
எழுதிக் கொண்டிருப்பார் - அங்கே!
கடவுள் இருந்திருந்தால்..!
உண்மையில்!
கடவுள்.. பேய்..!
இரண்டையுமே இல்லையென்று!
அறியுங்கள்;!
இல்லையென்று அறிவதற்கே!
இருக்கென்று நம்புகிறோம்..!
இருக்கென்று முடுக்கிய வேதம்!
இறுதியில் சொல்வதும் அதைத்தான்!
இதுமட்டுமில்லை என்பதை!
எல்லாம் ஒன்றென்பதை!
நீயும் நானும் ஒன்றென்பதை!
வேறில்லை வாழ்க்கை என்பதை!
வேறில்லாததை அறிகையில் அறியும்!
எல்லாம் ஒன்றாகயிருப்பதை..!
அந்த ஒன்றாக இருப்பதை அறியவே!
ஒன்றியிருக்கும் மனசு வேண்டும்!
ஒன்றும் மனது ஓடாதிருக்கவே!
பயமறுந்த தெளிவு வேண்டும்!
வேண்டுவதை வேண்டிப் பெறுவதையே!
மதங்கள் கற்றுத்தர முன்வந்தன!
முன்வந்ததன் பின்சென்றவரில் சிலர்தான்!
முற்றிலும் பிசகானார்!
முதலுக்குக் காரணம் முதலை அறிவதாகவே!
இருந்தது!
கடைசியில் -!
எல்லாம் கடந்து நிற்கிறோம்!
இன்னும் பயந்து நிற்கிறோம்!
கொடுமை; பேயிக்கு மட்டுமல்ல!
சாமிக்கும் பயம்!
சாமிக்கு முன் பேசும்!
ஆசாமிக்கும் பயம்,!
அவன் சொல்வதைக் கேட்டு!
கேட்டவருக்கெல்லாம்!
பயம்..!
இருட்டை!
உருவகப் படுதிக்கொண்டவன்!
பேயென்று பயந்தான்,!
வெளிச்சத்தை அறிவோடு காணாதவன்!
சாமிக்கு பயந்தான்,!
பயம் தான்!
மூடதனத்தின் மூலதனம்!
பயம் தான்!
அறிவை முடக்கும்உணர்ச்சி!
பேய் படம்!
எடுத்தவர்களையும்!
சாமி படம் எடுத்தவர்களையும்!
ஆராய்ந்துப்பார்த்தால்!
அந்தச் சாமிக்குமுன்!
பாதிக்கும்மேல்!
பலர் தண்டனைக்குரியவர்களே..!
சாமி என்பது!
நமது!
வணங்களில் இருக்கும் நம்பிக்கை!
நம்பிக்கை மட்டுமே..!
நம்பி நம்பி நாம்!
வெளிக்கொண்டுவரும்!
நமக்குள்ளிருக்கும் சக்தியது சாமி..!
நம்புவதற்கு நல்லதைத் தேடி!
நல்லதென நம்பி!
நன்மைக்கென!
நாமேப் போட்டுக்கொண்ட பாதைதான்!
ஆன்மிகம்,!
அளவோடு வகுத்துக்கொண்ட!
அறிவு அது,!
அது கடந்து!
அது கடந்து!
என நீளும் இயற்கையின்!
எல்லையில்லா ஆனந்தம்!
திறன்!
வெளி!
ஒரு சுகம்!
எனதில்லை!
நானில்லை என்று சரணடைவதில் ஒரு சுகம்,!
வெளியை!
உள்ளிருந்துக் கண்டு!
வெளியே இருக்கும் வெளியை!
உள்ளிருந்தே அசைக்கும் பயிற்சிக்கு!
துணையாக்கிக் கொண்ட பாடம்தான்!
ஆன்மிகம்!
கல்லை நம்பிக்!
கும்பிட்டாலும்!
கல் சாமியாகும்;!
சாமியாக இருக்கும் அனைத்தின்முன்னும்!
அது ஒரு!
சாட்சியாகும் படிப்பினை, அவ்வளவுதான் சாமி..!
அதற்கென!
அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு!
அனைத்தையும்!
படித்துக்கொண்டுப் போனால்!
அறிவு!
அது நாம் அனைத்துமாய் இருக்கும்!
ஒரே மூலத்தின் சாட்சி என்றுக்!
காட்டும்!
முடுச்சிகள் அவிழ்ந்து!
மனம் கூடி!
மேல் பரப்பப்பட்ட நம்பிக்கைகளை அகற்றிவிட்டு!
நிர்வாணம் பூண்ட எண்ணத்துள்!
நீயும் நானும் ஒன்றெனப் புரியும்..!
ஒன்றென!
எல்லாம் அறியவே!
எல்லாம் ஒன்றென்றுப் புரியவே!
எதன் மீதும் கோபமின்றி!
எதுவாகப் பிறந்தோமோ!
அதுவாகப் போனால் –!
அறம் தேடித் போனால்!
போகலாம்!
மாறிப்போகலாம்!
நமக்கான உலகமும் இனிவரும் செய்திகளும்..!
!
02.!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..!
----------------------------------------------------------------------!
துருப்பிடித்த சாதி – அது!
திருத்திடாத நீதி,!
துண்டுத் துண்டாகி - இன்று!
உயிர்களை குடிக்கிறது சாதி..!
தலைமுறையில் பாதி – அது !
கொன்று கொன்று விழுவதேது நீதி ?!
காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று!
கடும் விசமாய் பரவுகிறது சாதி..!
கருப்பு வெள்ளையில்லா !
ஒரே சிவப்பு ரத்தம், அது சிந்திச் சிந்தி!
நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழேனில்!
சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ?!
ச்சீ.. கேட்கவே வெட்கம்!
செங்கல் வேகலாம், சாதியில் மனிதர் வேகலாமா?!
செந்நீர் வகைக்குப் பிரியலாம் !
மனிதர் மேல் கீழாய் பிரியலாமா ?!
சுத்தும் பூமிக்கு; யார் மேல் ? யார் கீழ்? !
புயலோ பூகம்பமோ வந்தால்!
சாவதற்கு’ பெரியார் யார்? சிறியார் யார்?!
பிணம். அத்தனையும் ஒரே பிணம்.,!
சுடுகாட்டில் எரிப்பதற்கும் நடுக்காட்டில் புதைப்பதற்கும்!
பழக்கங்கள் வேறாகலாம், புதைக்கும் எரிக்கும்!
மனிதர்களுக்கு அதே இரண்டு கால்கள் கைகளெனில்!
வகைக்குப் பிரித்த சாதியெங்கே உயர்ந்தும் தாழ்ந்தும்போனது ?!
மனிதரை மிஞ்சிய தெய்வமில்லை !
எனும்போது' யாருக்கு உரிமையிங்கே !
சாதியினால் கொல்வதற்கும், சாதிப் பேர் சொல்லி !
வென்றதாய் எண்ணுவதற்கும் ?!
மலமள்ளியவன் படித்த மருத்துவத்தில் !
ஒரு உயிர் பிழைத்தால், மருத்துவன் சாமி;!
படித்தவன் புத்தி பரத்தையின்பின் போனால்!
அது அறிவிற்குக் கேடு; !
அடிப்பதும்' அணைப்பதும்' வெல்வதும்' தோற்பதும்' !
வாழ்வதும்' சாவதும்' மனிதர்களே மனதால் மனிதத்தால்!
திறமையால் தீர்மாணிக்கப்படட்டும்; !
பிறப்பால் எவரையும் இழுக்கென்று பழித்தல் தீது..,!
உருகும் மனசு' இளகும் நெஞ்சு'!
சாதிநெருப்பள்ளி வைக்கும் தலை – நாம்!
வயிறுதள்ளிப் பெற்றதும் வாயைக்கட்டி வளர்த்ததுமெனில்!
சாதிக்கினியிடும் நெருப்பெங்கே சடுதியிலிடுவீர்..!
!
03.!
அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..!
------------------------------------------------------------------------------!
ஒரு ரோசாவும் இன்னொரு ரோசாவும்!
ஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்று தொட்டு!
விலகி மீண்டும் தொட்டுக்கொண்டது!
தொடுகையில் ஏதோ முனகிக்கொண்டது!
என்ன முனகலென்று –!
அதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன்!
ஐயோ மனிதனென்று அலறி பயந்து!
இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி!
இதழ்கள் சுருங்கி வாடி தலைகவிழ்ந்து!
பட்டென உதிர்ந்து தரையில் துண்டாக விழுந்தது..!
எனக்கு உயிர் அதிர்ந்ததொரு பயம்!
ஐயோ ரோசா உதிர்ந்தேப் போனதே!
செத்துமடிந்ததே ரோசாக்களிரண்டும்!
அத்தனைக் கொடியவனா நான் ?!
அவ்வளவு பயமா என்னிடம் ?!
என்னிடமா அல்லது எம்மிடமா ?!
ஆம் அந்த ரோசா இந்த மொத்த மனிதர்களைக்!
கண்டுதான் பயந்திருக்கும்,!
மொத்த மனிதர்களின் பிரதிநிதியாக என்னைக் கண்டிருக்குமோ (?)!
அப்போ இந்த மனிதர்களென்ன!
அத்தனைக் கொடியவர்களா ?!
ரோசா காம்பருந்துத் துண்டாக விழுந்ததே!
என்ன நினைத்து விழுந்திருக்கும்?!
அழுதிருக்குமோ ?!
துடித்திருக்குமோ ?!
ஐயோ திருடன் என்று அதிர்ந்திருக்குமோ ?!
பேராசைக் காரன் மனிதனென்று பயந்திருக்குமோ ?!
கொலைகாரன் என்று..?!
கற்பழிப்பேன் என்று அந்தக் காதலன் ரோசா!
காதலிக்குச் சொல்ல!
காதலி ரோசா பயத்தில் உதிர்ந்து!
அதைக்கண்ட காதலன் ரோசாவும்!
உதிர்ந்துப் போயிருக்குமோ ?!
அல்லது சாதி சொல்லி இருவரையும் பிரித்துவிடுவேனென்று!
அஞ்சிப் போயிருக்குமோ ?!
என்ன நினைத்து உதிர்ந்ததோ ரோசா, பாவம்!
உதிர்ந்தேப் போனதே இரண்டும்..!
இனி ரோசாவைப் பார்க்காது விட்டு விடுவோமா ?!
அல்லது மனிதர்களை விட்டு விலகியிருப்போமா ?!
யோசித்துக்கொண்டே இருந்தேன்!
இரண்டு சிட்டுக்குருவிகள் தூர நின்று!
என்னையும் தரையிலிருந்த ரோசாக்களையும் கண்டு!
கதறி கதறி அழுதது!
என்ன என்று சைகையில் கேட்டேன்!
அங்கே பார் மலருக்கடியில் இரு வண்டுகள்!
பாவம் இறந்துக் கிடக்கிறது என்றது..!
ஆமாம் வண்டைக் கொன்றது யாரென்றுப் பார்கிறேன்!
தூரத்திலிருந்து இரண்டுப் பிணங்களை!
ஒன்றன்பின் ஒன்றாகத் தூக்கி வருகிறார்கள்!
சாவுமேலச் சத்தம் காதைப் பிய்க்கிறது..!
விசில் பறக்கிறது..!
முன்னும் பின்னுமாய் நான்கைந்துப் பேர் குடித்துவிட்டு!
தன்னைமறந்து ஆடுகிறார்கள்..!
வானவேடிக்கை சொர்ர்ரென்று பறந்து விண்ணில்!
பாய்கிறது..!
மரணம் மரணமென்று ஒரே சப்தம்!
கொலை!
தற்கொலை!
இதுதான்!
இதுதான்!
இதுதான் கதி மனிதனுக்கு என்கிறது ஒரு குரல்!
நான் பதறி ஓடி என்னாச்சு!
என்னாச்சு!
யார் இவர்கள் என்றேன்!
அதோ அது ஒரு பெண், யாரோ!
பெரிய சாதி பையனைக் காதலித்ததாள்!
அதான் கொன்றுவிட்டார்கள் என்றார்’ கூட்டத்தில் ஒருவர்!
பின்னே வருவது யாரென்றேன்!
அதுவா., அது ஒரு ஆண்; அவனுடைய காதலியை!
யாரோ கொன்றுவிட்டார்களாம்!
அதான் விஷம் குடித்துவிட்டான் என்றார் இன்னொருவர்!
எட்டி நான் ரோசாவைப் பார்த்தேன்!
ரோசாக்கள் ரொம்ப வாடியிருந்தது!
சாவுமேள சத்தம் மிக சோராகக் கேட்டது!
விசில் அடித்து அடித்து எல்லோரும் ஆடினார்கள்!
மூலைக்கு மூலை டமால் டுமீல் என்று!
வெடிசப்தம்..!
முன்னேவும் பின்னேவும் அப்பாக்கள்!
அழுதார்கள்..!
அம்மாக்கள் மாறி மாறி!
மார்பிலடித்துக் கொண்டார்கள்!
சிட்டுக்குருவிகள் எம்பி வானத்தில் பறந்து!
எங்கோ கண்காணாத தூரத்துள் போய்!
மறைந்துபோனது,!
ரோசாக்கள் எதற்காக இறந்ததோ தெரியவில்லை!
கேள்விகள் எனக்குள்ளே!
பலவாக வெடிக்க..,!
பதில்களை விட்டு!
பல்லாண்டுகாலம் தூரத்தில் வந்துக்கொண்டிருந்தது!
அந்தப் பிணங்கள்!
பிணங்களுக்கு வழிவிட்டுவிட்டு!
நான் ரோசாக்களிடம் பேசச் சென்றுவிட்டேன்..!
ரோசாக்கள் இப்போதென்னை!
தெரிந்துக்கொண்டிருக்கும்

அந்த அழகான சூழலில்

அய்யா.புவன்
மயிலிறகு புத்தகமாய்...!
உன் வீட்டு வாசல்!
கோவிலாய்...!
விடியல் மட்டும் நீளமாய்...!
வெள்ளி கிழமை சாயந்திரம் சந்தோஷமாய்!
திங்கள் கிழமை காலை கடமையாய்...!
இப்படியே காலம் காலமாய்!
பிடித்தது உன்னை மட்டும் அல்ல!
அந்த அழகான சூழலில் நீ!
இருந்ததால் மட்டுமே...!
!
-அய்யா. புவன்

நினைவுகள்

சின்னபாரதி
கவி ஆக்கம்: சின்னபாரதி!
மனத்தாயின் மழலைகள்!
எல்லை தாண்டி பிரவேசிக்கும்!
அடக்கமாகவும்!
அத்துமீறியும்!
மனம் குரங்கல்ல!
மனம் ஒரு காற்று!
தென்றலாகவும்!
புயலாகவும்!
வாயுமண்டலம் தாண்டியும்!
வாழும்!
நினைவுகள் படிவுகளை!
மனத்தாயிடமிட்டே! முடிகின்றன!
சில!
மென்மையாகவும்!
சில!
அழுத்தமாகவும்!
இவை!
காலந்தாண்டியும் காட்டும்!
கண்ணாடி போல!
நொடிக்கு நூறாய் வந்தவைகளில்!
வாழ்ந்துமிருக்கிறேன்!
இறந்துமிருக்கிறேன்.!
கவி ஆக்கம்: சின்னபாரதி

இவர்கள் புனிதர்கள்

த.சு.மணியம்
தத்துவம் பத்துமே சொத்தெனக் கூறிடும்!
வித்தகம் பெற்றவர் புத்தகம் வாங்கிட!
உத்தரம் போட்டவர் பத்து நாள் என்றவர்!
சத்திரம் போவென வக்கிரம் பேசுறார்.!
வட்டியும் வாங்குறார் வங்கியில் போடுறார்!
கிட்டிடும் நகையினைக் கிண்டியே தாழ்க்கிறார்!
சட்டியும் பானையும் அடுப்பிலே வைத்திரார்!
தட்டியும் கேட்டபோது விரதமும் என்கிறார்.!
வேட்டியும் சால்வையும் வெள்ளையாய் போடுறார்!
பாட்டியின் சொத்திலும் பாதியைக் கேட்கிறார்!
நீட்டியும் அகட்டியும் பரம்பரை பேசுறார்!
நீட்டிடின் பணமதை குப்பையும் அள்ளுவார்.!
குங்குமப் பொட்டுடன் கோயிலும் நாடுவார்!
சங்குகள் ஊதியே சாதமும் வாங்குவார்!
கும்பிடும் சாமிக்கே நாமமும் போடுவார் !
உண்டியல் போட்டதை நாளிலும் கண்டிரார்.!
படித்தவர் போலவே பாவமும் காட்டுவார்!
எடுத்தவர் பிந்தினால் எரிமலை ஆகுறார்!
முடித்தவர் என்பதால் முற்பணம் கேட்கிறார்!
வடித்தவர் வார்த்தைகள் தியாகிபோல் காட்டுறார்.!
ஊரது போய்வர உண்மையில் விரும்புறார்!
பேரெது கொடுத்தது பட்டியல் கண்டிரார்!
சீரெது சிறப்பெது செய்திகள் அனுப்புறார்!
ஈதொரு பயத்தினால் போவதை வெறுக்கிறார்.!
!
-த.சு.மணியம்!
இலண்டன்

யாருக்கு.. பிறப்பிடம்…

செண்பக ஜெகதீசன்
01.!
யாருக்கு!
------------!
உண்டியலில் காசு போட்டு !
ஒருவன் !
கண்டதெல்லாம் கேட்டு !
கடவுளுக்குக் கொடுக்கிறான் !
இடைஞ்சல், !
இடையில் புகுந்து !
ஒருவன் !
கிடைப்பதைச் சுருட்டிடவே !
கிளப்புகிறான் உண்டியலை, !
கண்டுபிடிக்கக் கிளம்புகிறார் !
சிலர்- !
காவலர் என்ற பெயரில், !
காரணம் யார் என்பதைக் !
கண்டுபிடிக்க !
சிண்டுபிடிச் சண்டை, !
உண்டு இதில் ஒற்றுமை- !
ஒட்டு மொத்தமாய் !
இவர் !
வேண்டுதல் எல்லாம் !
கடவுளிடம்தான்…! !
கடவுளின் கருணை !
யாருக்கு… !
கடவுளே..கடவுளே…! !
!
02.!
பிறப்பிடம்…!
---------------!
குயில் பாடுவது உன்னைக் !
கூப்பிட அல்ல, !
கூண்டில் இல்லாத !
குதூகலம்தான்…! !
சுதந்திரம் எப்போதும் !
சுதந்திரக் கலைகளின் !
பிறப்பிடம்தான்…!!
முத்தெடுக்கத்தான்…!
மூழ்கினால் !
முத்தெடுக்க வேண்டும் !
கடலிலே, !
கிளிஞ்சல் ஓடுகளைக் !
கிண்டி எடுக்கவேண்டாம்- !
கிடைக்கும் அவை !
கரையியிலே…!!
!
-செண்பக ஜெகதீசன்…

மறைந்து கிடக்கும் இசை பற்றிய காதல்

பர்ஸான்.ஏ.ஆர்
மிக மெளனமாய் உன்னை ஆராய்திருக்கிறேன்!
ஒரு கோடி மழைத்துளிகள் இணைத்து!
உன் உருவத்தினை நான் செய்த போதும்!
அதனையும் தாண்டி நீ வேறு உருவமானாய்.!
என்னைக் கட்டிப்போட்டுவிட்ட உன் வார்த்தைகளும்!
அதனை மிஞ்சிய பார்வைகளும்!
உன் மெளனமான பொழுதுகளில்!
என் உயிரினைக் குடித்துவிடுகிறது.!
காமம் ஒருசொட்டும் கலக்காத இந்த காதல்!
இன்றென்னை துரத்தித் துரத்திக் கொல்கிறது.!
என்னைவிட!
நானுன்னை நேசித்த அனைத்துப் பொழுதுகளும்!
வெறிச்சோடி தூர்ந்து போய்க்கிடக்கிறது.!
நீ இன்றென்னைப் பார்ககவுமில்லை,!
மன்னிக்கவும்!
உன்னைப்பார்க்க என்னால் இயலவில்லை.!
ஏதேதோ கேட்டாய் இன்றென் முன்!
பிதற்றல்கள் நிறைந்த என் பதில்களும்!
உன் கண் பார்க்காத என் பார்வையும்!
உனக்கு அச்சத்தினை தந்திருக்கும்.!
உன்னிடம் பொய் சொன்ன முதல் நாளின்று.!
இன்று நீ இழந்து நிற்பவைகளை விட!
நான் இழந்து நிற்பவைகளேயதிகம்.!
உன்னைக்காண வரவே கூடாதென்கிறேன்.!
என் இரவுகளில் துணையிருக்கும்!
கடலின் மீது வழியமைத்து!
இறைச்சலடங்கிய அதன் நடுவில் நான்!
தனித்து விடப்பட வேண்டும்.!
நிறுத்தப்பட்ட கடிகாரமாய் இருந்துவிட!
என் மனம் ஆசைப்படுகிறது.!
நினைப்புக்கள் எதுவும் தேவையில்லை,!
நீயழைக்காத பொழுதின் துன்பம் இனியும் வேண்டாம்.!
இயங்க முடியவில்லை!
நிறுத்தப்பட முடியவில்லை.!
03.11.2007

அந்தநாள் கதாநாயகன்

நவஜோதி ஜோகரட்னம்
நரம்புகள் புடைத்த நின்ற!
அவன் உதிரம்!
நடுங்கித் துடித்தது...!
பஞ்சடைந்துபோhன அவன் கண்கள்...!
உனக்கும் எனக்குமாக!
உலகத்தைக் காப்பாற்ற!
துப் பாக்கியைப் பிடித்த!
அவன் கரங்கள்;!
சண்டைப் பிளேனைப் பறக்கவிட்ட!
பழைய காட்சிகள்!
வீரமும் வெற்றியும்!
வதைகளும் வலிகளும் அவனிடத்தில்...!
அந்தச் செவிட்டுக் காதுகளில்...!
நினைவில் வரும் அந்த யுத்தம்…!
வரண்ட குன்றுகள்…!
பசுமைதேடி அலையும் கண்களில்!
பாலைவனம்;!
சுருக்கி வருத்துகின்ற காய்ந்த தோல்கள்…!
வரண்ட சூட்டில் மயக்குகின்ற!
தாகத்தின் கொடுமை…!
திறந்த ஊனத்துக் காயங்கள் …!
வருந்தி முனகிய தோழர்கள் …!
மரணப் பார்வைகள்…இன்னும் இன்னும்...!
இன்றும் எப்படி எம்மால் மறக்க முடியும்?...!
குறாவும் குளிரில்!
இரும்புகளைச் சுமந்த சமுத்திரம்!
உயிர்களைக் காப்பாற்ற என்றுதான்!
தொங்கிய தோணிகள்…!
பிரமாண்டமான பயங்கர ஓசை!
நெருப்பைக் கக்கி உயிர்கள் பொடியாக...!
கொடுமை!
ஹிட்லரின் கட்டளை!
கடமையில் கப்பலோட்டிகள்....!
அமைதியில் வாடிக்கையாகும்!
அவளின் அவசர சிகிச்சை...!
அவனுடன் அந்தப் போராளியுடன்!
மின் மினிப் பூச்சியாக அவள்!
இடையிடையே இரவு வேளைகளில்!
இனம்புரியாத பாலை வெளிகளில்...!
என்றுமே கேட்டிராத வெடிச்சத்தம் ஒருநாள்...!
செவிடாக்கியது ஊமையாக்கியது!
அவன் வானத்தில்; ப+வாகினான்;...!
உடலைக் கதகதப்பாக்கி!
புணர்ந்த உறவுகளால்!
குமைந்தது அவள் எண்ணங்கள்....!
இருளாகி உருகும் அவன் பிம்பத்தை!
யாரிடமும் விபரிக்கவில்லை அவள்...!
அந்த வாரிசுகள்!
நிட்சயம்!
மரியாதைக்குரியவர்கள்!
தேவைப்பட்ட போதெல்லாம்!
விழி மாற்றிஇ வழிமாற்றியவர்கள்!
திகைப்புற்;ற அந்த!
காலப்பதிவுகளில்!
குருதியில் நனைந்தவர்கள்!
அந்தக் கதாநாயகனின் கனவால்!
அவளின் மனசு கேவியது!
அடக்கப்பட்டவர்களின்!
அன்றைய விருதுகள்!
அது ஒரு மாற்றத்தின் விழுது!
அவை ஒரு நினைவா?…!
இன்னும் அவை பயணிக்கிறதா?...!
!
2.5.2009

நீயும் பெண்தானே

துர்ரத் புஷ்ரா
அழகிய ரோஜாவே,!
என்னால் உனக்கு வெட்கமா என்ன?!
இன்று உன்னை காணவில்லை......?!
நீ காதலின் மலராம்- நம்ப முடியாத சீவன்களின் கைக்கூலி......!!
ரோஜாவே,!
நீதான் மன ஆறுதல்,!
வரண்ட இதயத்துக்கு குளிர்சி அளிப்பவள்- இருந்தும்!
உன்னை ஏன் பறிக்கிறார்கள்?!
நீ பெண்களைப்போல் உரிமை போராட்டம் செய்வதில்லையா?!
உன்னை நான் காணவில்லை......??!
உன்னை பறித்தவர் யார்?!
இன்று உன்னை காணாமல் தவிக்கின்றேன்,!
என் மனம் எரிகின்றது.!
உன்னை காணும் தாகத்தால் என்னை கூட மறந்துவிட்டேன்.!
நீ விருட்சத்தில் வித்தியாசமான அழகு,!
உன்னை பறித்துவிட்டால்..,!
நீ கண்ணீர் வடித்து நலிவடைகிறாய்..!
இது அந்த பாவிகளுக்கு - கொள்ளை காரர்களுக்கு !
ஏன் தானோ புரியவில்லை?!
உன் முற்கவசங்கள் எங்கே?!
அவைகட்கும் கைக்கூலி கிடைத்து விட்டதாமோ?!
அழகிய செந்நிற ரோஜாவே,!
வடிக்கின்றேன் கண்ணீரை நானும் இங்கே!
உன்னைப்போல் ரொஜாவாய்....!
பேசாமடந்தை நீ தானடி!!
அப்பாவியும் நீதானடி!!!
நீயும் ஒரு பெண்தானே!!! !
!
-துர்ரத் புஷ்ரா!
Durrath Bushra Annes.Srilanka

பரணிலிருந்து பேசுகிறேன்

சத்தி சக்திதாசன்
பத்திரப் படுத்தி வைத்தே விட்டார்கள்!
பாத்திரம் ! பழைய பாத்திரம் ! என்னை!
பரணின் நடுவே பாதுகாப்பாய் -- ஆம்!
பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
!
எத்தனை எத்தனை விதமான சமையலை!
எப்படியெல்லாம் என்னுள் ஆக்கி - தீயில்!
எப்போதும் வதக்கி தாம் அறுசுவை கண்டனர்!
எப்படிச் சொல்வேன் ? இப்போது நானும்!
எப்போதும் ஓய்வில் ... பழைய பாத்திரம்!
அம்மா பசிக்குது என்றே ஓடிவரும்!
அத்தனை குழந்தைகளும்!
அடியே ! சமையல் ஆச்சா என்றபடியே!
அதிகாரத்துடன் வரும் கணவனும்!
ஆர்வத்துடன் விழிகளை அலைத்து!
ஆவலாய்த் தேடுவதும் என்னையே!
அப்போது , அறிவீர்களோ.....!
இப்போது நான் பழைய பாத்திரம்!
ஆம் நான்!
பரணிலிருந்துதான் பேசுகிறேன்....!
தீயினால் சுட்டபுண் ஆறவோ என்னை!
நீரினில் தேய்த்துக் கழுவுவது என்றே நான்!
நாட்கள் பல திகைப்பதுண்டு - இன்று!
நாதியற்று பரணின் மேலிருந்து!
நானும் பாடுவது பழைய பல்லவியோ ....!
விருந்தினர் வரும் போதெல்லாம் - அவர்கள்!
வயிறு நிறைக்க பண்டங்கள் படைத்தேன்!
விருந்தினர்கள் இன்றும் வருகிறார்கள்.... ஆனால்!
நானோ .... பரணின் மேல் பழைய பாத்திரமாய்!
அம்மா பசிக்குது ... என்றே ஒரு குரல்!
அழுகையுடன் வாசலில் ஒலிக்கையில்!
அடுக்களைக்குள் நடக்க முடியாமல் நான்!
அவர்கள் நெஞ்சில் கருணை மறந்தே!
அடித்து விரட்டுவர் அப்பிச்சைக்காரனை!
அழுவேன் மனதினுள் ஏனென்றால்!
என் உணர்வுகளுக்கு மட்டும் நடக்கும்!
சக்தியுண்டு என்பதால்!
வசதி படைத்தோர் நண்பர்களாம்!
வயிறு நிறைய இணவு படைப்பார்!
வருந்திக் கொண்டே நான் தீயில்.....!
வேடிக்கை என்ன தெரியுமா? இன்று!
வேண்டாத பொருளாய் பரணிலே நான்!
ஆம் !!
நான் பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
காதில் மெதுவாகக் கேட்குதோர்!
உரையாடல்!
கண்களில் பார்வை மங்கிய!
அவ்வீட்டின் தந்தையை!
கூட்டிச் செல்கிறார்களாம்!
வயோதிபர் இல்லத்துக்கு!
மனதுக்குள் சிரித்தேன் ....!
ஆம் நான் வாய்விட்டுச்!
சிரிக்க முடியாத பாத்திரம் தானே ...!
ஆனால் ஆண்டன் படைப்பினில்!
அன்பற்ற இவர்களும் பாத்திரங்கள் தான்.....!
தம்மை வாழவைத்த தெய்வத்தை!
தயாராக வயோதிபர் இல்லத்துக்கு!
தடையின்றி அனுப்பும் இம்மனிதர்!
கேவலம்.... பழைய பாத்திரம் எனக்காவா...!
பரிதாபப் படப் போகிறார்கள்....!
ஆமாம்....!
இதுதான் வாழ்க்கை...!
அந்த வய்தானவரும் இனி!
பரணிலிருந்துதான் பேசுவார்...!
காதுகளைக் கூர்மையாக்குங்கள்!
ஏனென்றால் அவரிடமிருந்து கொட்டப்போவது!
அனுபவ முத்துக்கள்!
அறியாதோர் மூடர் அவர்கள் பெயரும்!
மனிதர் தானோ ?!
ஆமாம்!
நான் பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
!
-சத்தி சக்திதாசன்