தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தெளிந்த நல்நீரும் காற்றும்

தமிழ் யாளி
தெளிந்த நல்நீரும் காற்றும்!
------------------------------------!
நாகரீகச் சேறு வழுக்கி!
நவீனப் பள்ளத்தாக்கில்!
விழுந்து மரணத்தோடு!
போராடும் மனிதனுக்கு!
அவசரத்தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
கூவ நீருக்கும்!
குழாய் நீருக்கும்!
தற்சமயம் நிறபேதம்!
மட்டும் தான்!
இனி குடிமட்டுமல்ல!
குடிநீரும் குடியைக்!
கெடுக்கும்!
கந்தகமும்!
கரியமிலமும் காற்றோடு!
கலப்புமணம்!
புரிந்ததால்!
சுத்தக்காற்று!
வார்த்தையில் மட்டும்!
இனி காச நோயினும்!
காற்று நோய்!
கொடியது!
நிக்கோடினால்!
தேய்பிறையான!
நுரையீரலுக்ககும்!
ஒளிச்சேர்க்கைக்கும்!
கூட திறனிழந்த!
இளந்தளிர்களுக்கும்!
அவசியத் தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
-------------------!
எழுதியது ...!
பள்ளித்தோழன்!
கு.கண்ணன்!
( தீயனைப்புத்துறை காவலர் )

சீம்பால்

நம்பி
ஏனுங்க அப்பா !
வெல்லக்கட்டி வச்சிருக்கேன் !
கடும்பு குடிக்கனும் !
செவல எப்போ கன்னு போடும்? !
!
மூனு நாளு ஆவுமடா !
நாய் வரமா பாத்துக்கடா !
ஆச்சி வரச்சொன்னாக !
சேதி கேட்டுட்டு வந்துடறேன் !
!
எல நாவைய்யா... !
பெரிய பாப்பா வருதுடா !
சீம்பாலுக்கு சப்பு கொட்டும் !
பேரப்பயலும் ஆசப்படுவான் !
செவலய ஓட்டியாந்து !
தொழுவத்துல கட்டிபுடு !
!
ஈயெறும்பு அண்டாம !
வெல்லம் காத்திருக்கு. !
-- நம்பி

தான் .. மாற்றான் தோட்டத்து காந்த

வி. பிச்சுமணி
தான் (Ego).. மாற்றான் தோட்டத்து காந்த மல்லிகை!
01.!
தான் !
-----------!
உன்னை மாற்றிகொள் எனும் சொல்!
உனது தான் விழிக்க செய்துவிட்டது!
நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு!
உன் மனதில் வெறுப்பு மண்டியது!
விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது!
உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள்!
சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள்!
வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது!
தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன!
எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய்!
எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய்!
சூரியனின் அண்மையினால் நிலவே!
புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய்!
இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம்!
நாளைய வெற்றி நான் அடையலாம்!
பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும்!
யார்வந்து முதலில் பேசுவதென்பது!
அலை நின்றபின் நீந்த கரையில் காத்திருக்கிறது!
நமது நட்பு உதிர்ந்த மலர்களா!
உடைந்த கிளைகளா காலத்தின் கையில்!
02.!
மாற்றான் தோட்டத்து காந்த மல்லிகை!
---------------------------------------------------------!
தொடர்வண்டியில் எதிர் இருக்கை!
பெண்ணின்அப்பழுக்கற்ற பழுப்பு நிற கண்கள்!
மது உண்ட மந்தி போல் மயங்கிபோக வைக்க!
ஏற்றி சீவிய முன்தலையில் நீளம் குறைந்த மயிர்கள் நின்று ஆடிகொண்டிருந்தன!
பின்தலையில் இருக்கை கட்டிய சின்ன குதிரை வால் கொஞ்சம் உயரமாயிருக்க!
சிவந்த நெற்றியில் வைத்த குங்குமம் நீண்ட பயணத்தில் கலைந்து இருந்தாலும்!
புருவங்களில் இடையே சிவப்பு ஒட்டுபொட்டு உதித்து கொண்டேயிருந்தது!
முகத்திறகேற்ற அளவான மூக்கில் சின்ன வெள்ளை மூக்குத்தி!
அடுக்கு முக்கோண கம்மல் அதற்கு மேல் பாந்தமாய்சின்ன சிகப்பு கம்மல்!
நீல வண்ண புட்டா வைத்த சேலை அவளை சுற்றி வளர்ந்திருந்தது!
சட்டை எப்போ இருந்த பெருங்காய பாத்திரம் போல்!
அவளுடைய ஒரு பையன் ஒரு பொன்னும் செய்த குறும்புகளை!
பொய் கோபம் காட்டி அடக்கிய போது ஒர் அழகு மின்னல் ஓடியது!
குளிர் பானத்தில் குளித்த போதும் மேல் உதடைவிட கீழ் உதடு இளம் ரோஜா வண்ணத்தில்பளபளப்பாய் காய்ந்து மின்னின!
நடுவில் அவள் வைத்த ஒரு விரல் இருபக்கமும் இதழ்கள் சமம் என பறைசாற்றியது!
அவள் வயிற்றில் ஆடிய தாலியில் இருந்த கருமணிகள்!
தமிழமகள் இல்லை என்று சொன்னாலும் அவள் பேச்சு செந்தமிழாள் என்றுரைத்து!
புறவழிச்சாலையில் செல்லும் மகிழ்உந்து போல் மெல்லிதாக சிரிப்பு!
ஏறி அமர்ந்ததிலிருந்து அவளையே நோக்கிய உணர்வில் கண்களை திருப்ப எத்தனித்து தோற்று போனேன்!
என்பார்வைகள் அவளிடம் செல்லாத காசாய் திரும்பவந்தன!
அவள் முந்தி பிறந்திருக்கலாம் நானாவது பிந்தி பிறந்திருக்கலாம்!
திருமணங்களுக்கு முன் சந்திக்க வைத்திருக்கலாம்!
இப்படி காலம் கடந்தபின் வந்த தேவதை நான் வாழும் ஊரில் இறங்க!
என்றாவது அவளை ச்ந்திக்கும் சந்தோஷம் மனதில் என்னுடன் இறங்கி வந்தது

தெய்வமனம் அமைந்திடுமோ

கரு. திருவரசு
~ கரு. திருவரசு ~!
பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற!
பான்மையிலோர் காவியமும் பதுமையென இருக்கின்ற!
சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன் அவையெல்லாம்!
சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே!
!
தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும்!
தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்!
திடுமெனநீ அழும்போது தேனிசையும் கற்றிடலாம்!
சிறுதுயிலில் நின்முகப்பூ செய்நடிப்புத் திறம்வருமோ!!
!
சிந்தியமு துண்பதிலே சிறப்பீகைப் பெருங்குணமும்!
தந்தைக்கும் சடைநாய்க்கும் தரும்முத்தச் சமத்துவமும்!
உந்தியுந்தி முயல்வதிலே ஊக்கத்தின் உயர்வடிவும்!
உணர்ந்திடலாம்! உலகிலினி உன்பருவம் கிடைத்திடுமோ!!
!
கரித்துண்டால் கீறுவதில் கன்னியர்செய் கோலங்களும்!
பிரித்துவைத்து நூல்படிக்கும் பேரழகில் இலக்கியமும்!
சிரித்தழுது விழுந்தெழுந்து திரிவதிலே செயல்திறமும்!
தேர்ந்தாலு முனக்கிருக்கும் தெய்வமனம் அமைந்திடுமோ

விரைவில் விடுதலை

வே.மணிகண்டன்
சிற்றுந்தும் பேருந்தும் சீருடையில் புறப்பட்டன!
சின்ன சின்னப் பட்டாம் பூச்சி மாணவமாணவிகளை ஏற்ற!
பள்ளிக்கு குதூகலத்துடன் புறப்பட்டது விபரம் புரியாத விடலைகள்!
குழந்தைகள் அணிவகுத்து நின்றனர்!
கடக்குள் நிற்கும் குட்டிகுட்டிப் படகைப்போல!
பேருந்துக்குள் சிறகொடிந்த சின்னப்பறவைகளாக சிறார்கள்!
பள்ளியைப் நெருங்குகிறது டீசல் பறவை!
படிக்கும் எண்ணத்தில் புறப்பட்ட மொட்டுக்கள்!
ஆல்பர்ட் ஐன்சிடின் குண்டுகளால்!
மத்தாப்பூ பூவாகத் தூக்கிவீசப்பட்டனர்!
மகவைப்பெற்றத் தாய்கள் மரண ஓலமிட்டார்கள்!
மன்னிக்கமுடியதா குற்றமென்று மறு நாள்!
உலக நாட்டுத்தலைவர்கள் ஒப்பாரி வைத்தனர்!
காலங்கள் உருண்டோடுகின்றன கலவரங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை!
இந்த வெடிகுண்டுகளிடமிருந்து உலகம்!
விடுதலையடையும் விரைவில்!
அன்புடன்!
நிலா

இடைவெளி

தென்றல்.இரா.சம்பத்
1.!
சகியே.........!
நானாக நானிருந்து!
நாட்கள் பலவாகிவிட்டது!
உனக்கான காத்திருப்பில்!
நாழிகள் நகர்கிறது!
சில காலமாய்.......!
இப்போதெல்லாம்!
அழைக்காமலேயே!
அடிக்கடி எடுத்துப்பார்க்கிறேன்!
என் கைபேசியை!
உன்னிடமிருந்து!
அழைப்பு வந்துவிட்டதோவென்று!
குறைந்தபட்சம் குறுந்தகவலாவது !
வராதாவென்று...!
மொத்தமாய் மாறிப்போனேன்!
சுத்தமாய் மாற்றிப்போனாய்!
என் வலிகளை அறிய!
நீயில்லை இங்கே!
உன் நிலைமையை தெரிய!
நானில்லை அங்கே!
சகியே!
இது பிரிவா....!
இல்லை இடைவெளியா.....!
பயமாயிருக்கிறது எனக்கு!
உனக்கு........?!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2

ஆன்மீகம்

கிளியனூர் இஸ்மத் துபாய்
இரண்டு என்பதை!
ஓன்றெனக் கூறுவது!
ஏகத்துவம்!
தன்னையும்!
படைத்தவனையும்!
தன்னிலிருந்து!
வேறுபடுத்தி மாறுபடுவது!
துவைதம்!
இவர்களால் மட்டும்!
இறைவனுக்கு!
இணைவைக்க முடியும்!
தன்னிலே சர்வத்தையும்!
அல்லது!
சர்வத்தில் தன்னையும்!
காண்பதே அத்துவைதம்!
அத்துவைத அறிவு!
இல்லையெனில்!
ஆண்டவனை!
தரிசிக்க முடியாது!
இதை சொல்வதற்கு!
உருவத்தில் வேஷங்களோ!
உடையில் காட்சிகளோ!
தேவையில்லை!
அப்படி சொல்பவர்கள்!
ஞானியோ!
அவர்கள் சொல்வது!
ஞானமோ அல்ல!
ஆன்மீகத்திற்கு ஆடையென்பது!
எளிமையான எண்ணமும்!
தெளிந்தமனமும்!
அறிந்துக்கொள்ளும் ஆர்வமும்!
விளக்கமான அறிவும்!
இருந்தாலே!
ஞானமும் சமாதானமும்!
நம்மிலே விளையும்…

கடலுக்கு.. செங்கொடியின்.. அணையா

வித்யாசாகர்
கடலுக்கு அப்பால் பூக்கும், அந்த வெள்ளைமலர்கள்.. செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது அஹிம்சையின் பெருநெருப்பு .. அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!!
01.!
கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!
------------------------------------------------------!
கண்ணிரண்டை விற்றுவிட்டு!
கண்ணாடியை வாங்குறோம்,!
விளக்கை அணைத்துவிட்டு!
வெளிச்சத்தை தேடுறோம்;!
நாலும் தெரிந்தவர்கள்!
தனியாளா நிக்கிறோம்,!
சொந்தபந்தம் இல்லாம!
செத்த பிணமா அலையுறோம்;!
நல்ல நாலு ஏதுமில்லை!
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை!
கல்யாண நாளைக் கூட!
தொலைபேசியில் தீர்க்கிறோம்;!
இயக்கிவிட்ட எந்திரமா!
இரவு பகல் உழைக்கையில!
வியர்வையில் சரித்திரத்தை!
காய காய எழுதுறோம்;!
காற்று போல மண்ணு போல!
மனசெல்லாம் ஆசை ஆசை,!
ஆசைப் பட்ட அத்தனையையும்!
அற்ப பணத்துக்கே விற்கிறோம்;!
பணமென்னும் காகிதம் தான்!
விதியை கூட மாத்துதே,!
வீடுமனை பல இருந்தும்!
மனசு ஒத்தையாவே வாடுதே;!
சின்ன சின்ன கனவுகளும்!
சேர்த்துவைத்த நினைவுகளும்!
மனதில் மரணமாவே கனக்குமோ!
பெரும் தீயாக எரிக்குமோ;!
கல்லறையில் கூட நாளை!
வெறும் புல்லாக முளைக்குமோ?!
காற்றாட நகர்ந்து நகர்ந்து - நாம்!
வாழாததை பேசுமோ...(?)!
காட்டாற்று வெள்ளத்தில்!
கரையும் புள்ளியாய் போகுமோ,!
காலத்தின் நகர்தலில் -!
எங்களின் நிறத்தை வெள்ளையாகவே தீட்டுமோ!!!!!
!
02.!
செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது அஹிம்சையின் பெருநெருப்பு !
----------------------------------------------------------------!
உள்ளெரிந்த நெருப்பில்!
ஒரு துளி போர்த்தி வெந்தவளே,!
உனை நெருப்பாக்கி சுடப் போயி!
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..!
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்!
தீ மையிட்டுக் கொண்டவளே,!
தீ'மையில் உன் விதியெழுதி - எம்!
பொய்முகத்தை உடச்சியேடி..!
விடுதலை விடுதலைன்னு!
வெப்பம்தெறிக்க கத்துனியா?!
அதை கேட்காத காதெல்லாம்!
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..!
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா!
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,!
நீ நெருப்போட புரண்டபோதே!
தமிழன் வரலாறே கருகுச்சேடி...!
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்!
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -!
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்!
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..!
இப்படி கெட்ட பேரு வாங்கிவர!
மரணம் தான் சொல்லுச்சாடி ?!
இந்த சின்னவயசு கனவுகளை!
வரலாற்றில் எரிச்சியேடி..!
இனி கத்தியழ யாரிருக்கா !
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?!
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா!
நீயெல்லாம் எரிந்துப்போனா?!
உன்னொருத்தியோட நிருத்திக்கடி!
வேண்டாமே இனி ஓரிழப்பு!
போராட்ட குணத்திற்கு -!
தற்கொலைதான் பேரிழப்பு;!
நீ விட்ட உயிரு மீட்டிடாத!
கண்ணீர் - மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி!
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ!
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!!
!
03.!
அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!!
-------------------------------------------------------------!
திறக்காத கதவின்!
மனத் தோன்றல்களாகவே!
சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும்!
லட்சியங்களும் நம்பிக்கையும்..!
வீழும் மனிதர்களின்!
ஏழ்மை குறித்தோ அவர்களின்!
பசி பற்றியோ!
பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே!
வீழ்த்துகிறது - நம்!
சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை;!
தெருவில் கிடப்பவர்!
யாரென்றாலும் விடுத்து!
அவர் மனிதர் என்பதை மட்டுமேனும்!
கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல்!
நாம் இழக்கும் ஓர் -!
உயர் உணர்வாகி வருகிறதே தவறில்லையா?!
ஓடுடைத்து உலகைப்பார்க்கும்!
பறவையின் உயரம் தாண்டியே!
காத்துக்கிடக்கிறது நமக்கான வெற்றிகளும்!
வாழ்வின் வசந்தமும் என்பதை!
இளைய சமதாயம் -!
முற்றிலும் உணர்வதென்பது நம்!
எதிர்காலக் கனவுகளின் பலமில்லையா??!
சொடுக்கி முடிக்கும் அத்தனை!
சாதனைகளையும்!
சூழ்ச்சுமமுடைத்து!
விரல்நுனியில் நிறுத்தும்!
கொம்பன்களின் துணிவுக்கு!
வாய்ப்பென்னும் வாசல் திறக்க!
முயற்சியென்னும் சாவிகளெல்லாம் அதோ!
வானில் குவிந்த நட்சத்திரங்களாய்!
கைக்கெட்டியே கிடப்பதை அகல விரிந்த கண்களே!
பார்த்தும் முயற்சித்தும் வென்றும் விடுகின்றன' என்பதை!
ஏன் நீயும் நானும் -!
சரிசமமாய் உணர்வதில்லை???!
வெளியில் காட்டாத திறன்!
இறுகி இராத மனோதிடம்!
எடுத்தாய்ந்துக்கொள்ள இயலாத் தெளிவு!
இயல்பாய் இருந்திடாத உண்மை நிலை!
எடுத்தாண்டிடா முயற்சி!
இரும்பெனக் கொள்ளாத நம்பிக்கை!
இருப்பதில் நகர்ந்து வெல்லும் உத்தி!
அல்லது உறுதியென நீளும் -!
பொத்தான்களில்லாத சட்டைதான் நம்மை!
உலகின் பார்வையில் வெற்றியணியா நிர்வாண!
மனிதர்களெனக் காட்டிவிடுகிறது..,!
உயிரணையும் கடைசி தருணத்தில்!
காற்றுமறைத்த கைகளென நம்பி!
அந்த ஒவ்வொரு பொத்தான்களையும்!
வாழ்வென்னும்!
சட்டைக்கென!
நம்பிக்கையோடு கட்டிவருவோம்;!
மெல்ல மெல்ல நகர்ந்து நாளை!
உச்சி ஏறி நிற்கையில்!
வெற்றியோ அல்லது!
அதை போதிப்பதற்கான அனுபவ அறிவோ!
நம் உயிர்பையில் நிறைந்து!
பெயருக்குப் பின் விழுந்துக் கிடக்கையில்!
கண்ணடைக்குமந்த!
கடைசிநாளில் -!
வெளிச்சமான உலகில் கலக்கும்!
அணையா ஜோதியாய்!
சுடர்விட்டு எரியட்டும் நம் உயிர்விளக்கு,!
விளக்குகளின் ஒளிவெண்மையில்!
ஜொளிக்கட்டும் இப்போதைய கருத்த மனிதம்

ஆராதனைத் தாமரை

வேதா. இலங்காதிலகம்
தாரணி மலர்களில் தாரகை.!
தண்ணெனும்; அழகு, செழுமை.!
தகுதியாம் அடக்கம், புனிதமுடை!
தாமரை மலர் தெய்வீகம்.!
தடாகச் சேற்றில் மலரும்.!
தண்ணீர்; உயரத் தானுயரும்.!
தற்காலம், ஆதி காலமாய்!
தரையிற் புகழுடை தாமரை.!
ஐந்தாயிரம் ஆண்டுப் பழையது.!
ஐங்கணை என்றும் பெயராம்.!
செந்தாமரை பெயர் கமலா.!
இளஞ்சிவப்பு மலர் பத்மா.!
நீலத் தாமரை நீலோற்பலம்.!
வெண்மைத் தாமரை புண்டரீகா.!
வெய்யோன் கண்டு மலர்ந்து!
வெய்யில் மறைய வாடும்!
ஆத்மிக வாழ்விலும் உயரிடம். !
இதயம் ஒப்புவமை தாமரைக்கு.!
இலைத்தண்டு விளக்கின் திரி. !
இலையோ உணவுத் தட்டு.!
இசைந்த உணவு கிழங்கு வேர்.!
இழைத்தனர் ஆடை நாரிலும்.!
கடவுளர் அமர்ந்த கமலாசனா.!
கடவுளர் கரங்களில் ஏந்தினர்.!
புத்தன் காலடியில் மலர்ந்தது.!
புராணக் கதைகளில் இணைந்தது.!
புத்தம், இந்து சமய அடையாளம், !
பூவின் அடிப்பாகம் பரிசுத்தம்.!
பிரிய உணவு யானைக்கு. !
பாரசீகக் கலைகளில் பாவனை. !
சரித்திரம், இலக்கியம், சமயங்கள்,!
சிற்பக்கலை கையாண்ட தாமரை.!
வேதா. இலங்காதிலகம் !
-அலைகள்.கொம்

சுவடுகள்

சூர்யா
கால்கள் பயணித்த தேசங்களும்!
களைத்தத் தேகங்களும்.!
திசைகளுக்குத் தெரிந்திருக்கலாம்!
கனத்தப் பயணங்களின் நெருக்கங்களை!
அன்னியர் உணர வாய்ப்பில்லை.!
இனி தேவையற்றவையென!
ஒரம் கண்ட நிகழ்வுகள் ஒதுங்குவதாயில்லை!
எல்லை மாற்றத்திலும்.!
கலைந்து போகும் மேகங்களின்!
விரிசலில் தடையங்கள் இருக்குமென!
தேடும் விழிகளுக்குத் தென்படலாம்!
சுவடுகளின் தொடர்ச்சி