தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விஜயபாரதி கவிதைகள் 25-11-07

அ. விஜயபாரதி
1. உடன்பிறப்பு!
மருத்துவச்சிகளால்!
அறுத்தெறிய முடிவதில்லை!
உடன் பிறந்த!
சாதியின் தொப்புள்க்கொடியை!
!
2. அஃறிணை தேவதைகள்!
பூவிதழ் நெய்த இருக்கைகளில்!
செந்தேன் சிந்தும் விருந்து!
வானவில் தைத்த சிறகுகளில்!
வானில் துய்க்கும் புணர்ச்சி - இவை!
யாவுமடங்கிய வாழ்க்கை!
எட்டுப்பகலுக்குத் தான் என்றாலும்!
பட்டினிச் சாவுகளில்லை!
பட்டாம்பூச்சிகளிடம்!
!
3. முதல் பயணத்தில்…!
துண்டுச்சீட்டு கிழித்து!
மை கசியும் பேனாவில் பெயரெழுதி!
வயிற்றில் இறுக்கிய நூலின்!
வலியைச் சுமந்தபடி!
விரல்களிலிருந்து விடுதலையான!
பட்டாம்பூச்சி பற்றிய!
பால்ய நினைவுகள் பறந்துகொண்டிருந்தன!
என் விமானத்திற்கு மேலே!
!
4. சாவிக்கொத்து!
நகரத்து வீடுகளின்!
சாவிக்கொத்துகள் சொல்லும்!
திருடர்களின் பலம்!
!
5. நிழல்!
நின்றுகொண்டிருக்கும்!
பேருந்திற்கடியில்!
ஓய்வெடுக்கிறது!
ஓடிக் களைத்த!
நாய்!
!
6.அழுக்கு!
வீடு சென்று!
விடுமுறை கழித்து!
கல்லூரி திரும்பிய!
சில நாட்களுக்குள்ளாக!
அழுக்கேறிவிடுகிறது!
அம்மா வெளுத்த!
உடைகளோடு ‘உள்ளமும்’

தமிழ் மண்ணே வாழ்க

இனியஹாஜி, தோஹா - கத்தார்
தமிழ் மண்ணே வாழ்க!!
தமிழ ரெல்லாம் வாழ்க!!!
தமிழும் நாமும் வேறல்ல..!
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!! !
தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..!
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. !
அன்பு செய்தால் அடங்குவோம்!!
வம்பு செய்தால் அடக்குவோம்!!!
தெம்பு எமக்கு இருக்குடா..!
தம்பியை நினைச்சு பாரடா...!!! !
ஒன்றே இறை.. ஒன்றே மறை...!
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!!
எல்லா மொழியும் நம் மொழிதான்...!
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்... !
யாதும் ஊரே... யாவரும் கேளிர்...!
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...! !
மனிதம் போற்றுவோம் - அதில்!
புனிதம் காட்டுவோம்!!
இரத்தல் இழிவுடா - தம்பி!
உழைத்தால் உயர்வுடா...! !
உண்மை பேசுடா - அதில்!
நன்மை இருக்குடா...!
வாய்மை வெல்லவே - நீ!
வாழ்ந்து காட்டடா...! !
பெண்மை போற்றடா - அவர் நம்!
அன்னையர் அல்லவா!!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்!
இணைய வேண்டுமல்லவா...! !
ஆசை அடக்கவே - கொஞ்சம்!
அறிவைக் கூட்டடா!!
வேஷம் கட்டிய - வீணோரை!
விரட்டி ஓட்டடா...!! !
உலகம் முழுவதும்!
வாழும் நம் உறவுகள்...!
வானம்பாடி போல்!
விரிக்கட்டும் நம் சிறகுகள்

இரவு மிருகம்

சுகிர்தாராணி
பருவப்பெண்ணின் பசலையைப் போல!
கவிழத் தொடங்கியிருந்தது இருள்.!
கதவடைத்துவிட்டு!
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்!
தனியாக அமர்ந்திருந்தேன்!
இப்போதுதான் தினமும் விரும்பாத!
அதன் வருகை நிகழ்ந்தது.!
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே!
என்னை உருவி எடுத்துவிட்டு!
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.!
நான் திகைக்க நினைக்கையில்!
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே!
படித்து முடித்திருந்தேன்!
என் கண்களின் ஒளிக்கற்றைகள்!
முன்னறையில் உறங்குபவனின்!
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன!
கோப்பை நிறைய வழியும் மதுவோடு!
என்னுடல் மூழ்கி மிதந்தது!
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை!
சன்னமாய் சொல்லியவாறு!
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்தவேளை!
பறவைகளின் சிறகோசை கேட்டதும்!
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு!
ஓடிவிட்டது இரவு மிருகம்!
-சுகிர்தாராணி (காலச்சுவடு, இதழ் 47 மே-ஜீன் 2003)

காருண்யனின் 2 கவிதைகள்

காருண்யன்
சுமை !
!
வாழ்க்கை !
அப்படியொன்றும் !
சுமக்க முடியாததென்றில்லை !
அடியும் கண்டலும் !
ரணமும் வலியும் !
இருக்குந்தான், !
ஆனாலும் சுமக்கலாம். !
அதுதான் !
சுமக்கிறோமே? !
ஆயுள். !
!
அடியில் ரணத்தில் !
அலைச்சலில் ஆதரவில் !
தவிப்பில் தாகத்தில் !
காமத்தில் போகத்தில் !
வம்பில் வாழ்த்தில் !
பழியில் பந்தாவில் !
சராசரி மனுஷன் ஆயுளில் !
மூன்றில் இரண்டைக் கரைத்தாயிற்று !
உள்ள சொச்சத்தையாவது !
பயனாக்க வேணுமென்றால் !
கொஞ்சம் வாசிப்பதையும் !
எழுதிக் குழப்புவதையும் தவிர !
வேறு என்னதான் !
செய்வதென்றுதெரியவில்லை

ஒரு நீதி நியாயம் கேட்கிறது

ஆனந்தன்
உலகிற்கு வெளிச்சம் தரும் !
காரணத்தால் மட்டும் !
சூரியனின் வாதம் கேட்டு !
சந்திரனை தண்டித்தல் நியாயமே ? !
பூமிக்கும் மேகத்திற்கும் !
நடக்கும் சண்டையில் !
மழையைத் தண்டித்தல் நியாயமே ? !
பூவின் வாதம் கேட்டு !
தேன் திருடுவதாய் !
வண்டை தண்டித்தால் !
மகரந்த சேர்கை ஏது ? !
உள்ளம் திருடியதாய் !
காதலர்களைத் தண்டித்தால் !
காதல் தான் ஏது ? !
விதை திருடியதாய் !
நிலத்தை தண்டித்தால் !
மண்ணில் மரங்கள்தான் ஏது ? !
மழைத்துளிகளைத் திருடுவதாய் !
கடலைத் தண்டித்தால் !
விலை உயர்ந்த முத்துக்கள் ஏது ? !
வாயைத் திறந்து !
உலகத்தைக் காட்ட !
வெண்ணை திருடும் !
மாயக் கண்ணனல்ல நான் ! !
கொடை வள்ளல் கர்ணனின் !
புண்ணியத்தையும் திருட !
பரந்தாமனல்ல நான் ! !
ஏவல் மட்டும் அல்ல !
இடமும், பொருளும் !
அறியாது பேசும் !
பேச்சாளன் நான் ! !
நியாயம் பேசும் இடத்தில் !
மெனமாய் நிற்கும் !
நிராயுதபானி நான் ! !
என் நியாயத்தையும் !
ஒரு முறை கேளுங்கள் !
முடிவுகள் எடுக்கப்படும் முன்னர்

நீயும் நானும்.. சந்தா்ப்ப பிராணிகள்

கல்முனையான்
01.!
நீயும் நானும்!
----------------------!
அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்!
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்!
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்!
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !!
சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே!
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்!
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட!
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…!
அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்!
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்!
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு!
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.!
இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்!
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை!
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்!
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”!
நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க!
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க!
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்!
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்!
பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்!
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்!
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று!
மலராகி மணம் வீசுகின்றது என்று!
பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று!
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை!
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்!
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்!
முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்!
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே!
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே!
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?!
02.!
சந்தா்ப்ப பிராணிகள்!
--------------------------------!
ஈர வலயத்து அட்டைகளின் மறு பிறப்பாய்!
நன்மையை உறிஞ்சி விட்டு நாதியின்றி தவிர்க்கவிடும்!
மனிதன் என்ற பெயரிலுள்ள இரண்டு கால்!
பூச்சிகளாய் செத்தைகளில் பதுங்குகின்ற மானிடம்!
பச்சை இரத்தத்தின் சிவப்பு நிறத்தினிலே காகிதப்!
படகு விட்டு தோராட்டம் பார்க்கின்ற பாசாங்க!
மனிதா்களின் ஈரமற்ற இதய இடுக்குகளின் ஓரத்திலே!
இன்னும் இருக்கிறது சந்தர்ப்பவாதம் என்ற சாக்கடை வடிகான்கள்!
சுவாசிக்கும் ஒட்சிசனின் ஓரப்பார்வையிலே ஒடுங்கி!
நாசி நீரில் கால் கழுவி வெளியேறும் காபனீரொட்சைட்டிலே!
ஈரத் தலையை வீரத்தோடு உலா்த்தி எட்டிப் பார்க்கும்!
எட்டப்பக் கூட்டத்தின் ஏழாம் சாமத்து சாத்தான்கள்!
எண்ணெய் வடியும் தலையினிலே மண்னை அள்ளி!
மலர்க் கோலம் போடும் மானம் கெட்ட மங்கையரின்!
அற்கஹோல் பார்வைக்காய் அரை வயிறு சாப்பிட்டு!
அலைகின்ற ஆந்தைக் கூட்டத்தி்ன் முகவரிகள்!
தார்போட்ட றோட்டினிலே யார் வீட்டில் குழப்பம் என்று!
தூர் போட்டு மேய்கின்ற வெள்ளாட்டுக் கூட்டத்தில்!
தள்ளாத வயதினிலும் துள்ளாத கால்கலுடன்!
தூங்காமல் விழித்திருக்கும் பெருசுகளின் விழிகள்

காலம்

காசிகணேசன் ரங்கநாதன்
காலம் !
1. !
பிரபஞ்சங்களின்.. !
உலகங்களின்.. !
இயக்கங்களின்.. !
தாய். !
!
2. !
கள்ளுண்டு மயங்கிக் கிடந்தேன், !
காலம் கடந்து சென்றது... !
கண்விழித்த போதெல்லாம், !
காலம் கடித்துத் தின்றது. !
காலம் கடித்த காயங்கள், !
வடுக்களாய் உடலெங்கும்... !
வடுக்களை எண்ணி.. எண்ணி.. !
காலம் கணக்கிட்டுக் கடந்தேன். !
இன்னும் வராத காயங்களில், !
பூத்த மலர்கள் காலைப் பனித்துளி சூரிய உதயம் !
மாலையின் நிழல்கள் என, !
உலகம் கடந்து சென்றது... !
ஈரம் காயாத உணர்வுகளில் !
இன்னும் விடியாத பொழுதுகள், !
வெளிச்சம் தேடும் வேட்கை என, !
வாழ்க்கை நகா¢ந்து சென்றது. !
!
3. !
இந்த இடத்திலேயே !
நின்று போனது என் வாழ்வு. !
பலகோடி யுகங்களுக்கு முன்பும் !
இப்படியே... !
கல்லாய்.. சிலையாய்.. மரமாய்.. !
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு !
நகராமல் நின்றிருந்தது என் வாழ்வு. !
நீடித்த ஆயுளோடு. !
முடியவே இல்லை என் பயணம் !
நின்றபடி.. நடந்தபடி.. பறந்தபடி.. !
என்றும் முடிந்ததே இல்லை !
எனது பயணம். !
இதுவரையிலும் என்னைத் தொட்டதும் !
தொடா¢ந்ததும் எதுவும் இல்லை !
என் கனவுகளைத் தவிர. !
!
4. !
என் !
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் !
காலத்தின் பக்கங்களையே புரட்டுகிறேன். !
என் !
எழுந்து, நிமிர்ந்து அசையும் !
ஒவ்வொரு அசைவிலும் !
காலத்தின் அசைவுகள். !
என் ஆற்றல் செலவழிப்புகளிலெல்லாம் !
காலத்தின் மின்சாரம் செலவழிய, !
காலத்தைப்பற்றி எழுதும்போது மட்டும் !
ஏனோ, !
காலம் நின்றுபோகிறது. !
!
5. !
!
உலகம் முழுவதும் !
காலம், !
பொடிபோல், நுண்துகள் போல் பரவியிருக்க, !
காணும் பொருள் அனைத்தின்மீதும் !
போர்வைபோல் மூடியிருக்க, !
ஏதைத் தொட்டாலும் காலத்தையே தொடுகிறேன், !
என்று எண்ணத் தோன்றுகிறது. !
!
6. !
காலத்தைக் கேட்டேன். !
காலமே.. காலமே.. !
காலமற்ற வெளியுண்டோ ? !
காலம் சொன்னது. !
காலனுக்கு வாழ்க்கைப்பட்டுக் !
காலமுண்ணும் மானுடா, !
காலமற்ற வெளியெலாம் !
காலமே படைத்தது. !
!
-- காசிகணேசன் ரங்கநாதன்

பேய் மழை

எம்.ரிஷான் ஷெரீப்
பேய் மழை ...!!
சட்டென்று வந்த மழை!
சடசடத்துப் பெய்த மழை !!
வற்றிஇவாடி வதங்கி!
வசந்தமிழந்த காலங்களில்!
வாராதிருந்த மழை!
வரவேற்றும் தூறாதிருந்த மழை !!
இப்போது வந்திங்கு!
இடைவிடாது பெய்யும் மழை ;!
இடிமின்னலைக் கூட்டி வந்து - பல!
இதயங்களை நிறுத்தும் மழை !!
கோழிஇகுஞ்சையெல்லாம்!
கொத்தோடு நனைத்த மழை ;!
கொட்ட வந்த தேளைக்கூட!
கொல்லாமல் விட்ட மழை !!
மின்சாரக்கம்பியையெல்லாம் நிலத்தில்!
மிதக்க விட்ட மழை - அதனை!
மிதித்த உயிர்களையெல்லாம்!
மேலோகம் சேர்த்த மழை !!
தொற்று நோயையெல்லாம் - தன்!
தோளில் தூக்கி வந்த மழை !
வற்றிய உடலோடு போய்!
வைத்தியரை வாழவிட்ட மழை !!
மரங்களை முறித்துப்போட்டு!
மண்சரித்து வந்த மழை - பெரு!
விருட்சங்களை விழவைத்து!
வீடழித்துப் பெருத்த மழை !!
அகதியென்ற காரணத்தால்!
சொந்தமிழந்து சொத்திழந்து!
சுகமிழந்து சுவடிழந்து!
சுயமிழந்து வந்த இடத்தில்!
கட்டிய கூடாரத்தினுள்ளும் வெள்ளமாய்க்!
கைவீசி வந்த மழை !
காற்றனுப்பிக் காற்றனுப்பிக் கூரை!
களவாடிப்போன மழை !!
பாதையோரங்களில் !
படுத்துக் குமுறியவரை!
பதறவைத்த மழை ;!
விதியை நொந்தவாறே!
விம்மிக்கிடந்தவரை!
விரட்டியடித்த மழை !!
சட்டென்று வந்துள்ள மழை !
சடசடத்துப் பெய்யும் பேய் மழை...!!
-எம்.ரிஷான் ஷெரீப்!
மாவனல்லை!
இலங்கை

தேர்தலில் குதியாத வேட்பாளனாக

டீன்கபூர்
நான் தேர்தலில் குதியாத வேட்பாளன்!
என் காடு தீப்பிடித்த போது!
என் வானம் அழுது அணை உடைந்தது!
கறுப்பு நிலவுக்குள்.!
என் மூக்கு சுழலும் காற்றையே சுவாசிக்க!
என் கிடுகுகள்,!
என் தகரங்கள்,!
சிறகோடு கிளம்பின.!
என் கார் புழுதியைக் கொளித்து!
சேற்றை விசிறி!
உழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை!
என் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன!
சந்தி மகிழ்ந்தது!
வாக்காளன் ஒரு வரம்பினுள்!
துப்பிய நீராகப் பாய்கிறான்!
தந்திரம் பற்றி பாடலை!
அவனுக்கு நரி கற்றுக் கொடுத்தது!
இரவுகள் குமிக்கப்பட்டு!
சக்கர தேசத்துக்குள்!
எவனும் நிமிர்ந்திட இயலா.!
ஆகாயம் தட்டும் தலையில்!
உருட்டிடும் குண்டுமணியாக என் நினைவுகள்!
ஒரு தடைக்குள் விழிக்கின்றன.!
பச்சைக்குள் பிடித்த புழுக்களையும்!
நீலத்தில் படிந்த கறைகளையும்!
சொண்டுகளால் பருகிக் கழிக்க!
தேர்தலில் குதியாத வேட்பாளனாக.!
அமைதியை ஒரு படுகுழி மரணமாய்ப் பேச!
கற்பனையிலும் எனக்குள் ஒரு அமைதி!
தேசத்தை உருவாக்க!
என் அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.!
!
- டீன்கபூர்

எல்லா மனிதர் பற்றிய குறிப்பு.. வளையம்

கருணாகரன்
1.எல்லா மனிதர் பற்றிய குறிப்பு!
பார்த்த மனிதர்களைப்பற்றி!
எந்த மனிதரிடமுமில்லை!
எல்லா மனிதர் பற்றிய குறிப்பும்!
எல்லா மனிதரிடமும் இல்லை!
எல்லா மனிதர் பற்றிய!
எல்லாமும்.!
அவரவர் வயிறும்!
அவரவர் உலகமும்!
தனித்தனி யென்றான்!
என்றோ கண்ட யாரோ ஒருத்தன்!
தனித்தனியாகவே யிருக்கிறது!
எல்லோர்க்கும் வயிறு!
அவரவர்க்கான உலகமாய்!
இன்னும் எதுவுமோவாய்!
!
2.வளையம்!
அப்படியே இருக்கட்டும்!
இந்த வெளியும் குறுகலும்!
யாரும் வரவில்லை!
இந்த அகாலத்திலும்!
பனைகளின் இடையே!
நெளியும் ஒழுங்கையில்!
இன்னும் மணந்து கொண்டேயிருக்கிறது!
தினவடங்காக் கலவரமும்!
நிகழ்ந்து கொண்டிருக்கும்!
சாவும்!
வெளியேறிச் சென்றவர்கள்!
திரும்ப முடியாத இடத்தில்!
தரித்திருக்கக் கண்டேன்!
விட்டுச் சென்ற வார்த்தைகள்!
திரும்பி வர விடவில்லை ஒருபோதும்!
யாரையும்!
அந்த வார்த்தைகளிலிருந்து!
கடக்க முடியாத பெரும் சுவர்களில்!
படர்ந்திருந்தன!
முட்செடிகள்!
- கருணாகரன்