ஒரு நீதி நியாயம் கேட்கிறது - ஆனந்தன்

Photo by Shyam on Unsplash

உலகிற்கு வெளிச்சம் தரும் !
காரணத்தால் மட்டும் !
சூரியனின் வாதம் கேட்டு !
சந்திரனை தண்டித்தல் நியாயமே ? !
பூமிக்கும் மேகத்திற்கும் !
நடக்கும் சண்டையில் !
மழையைத் தண்டித்தல் நியாயமே ? !
பூவின் வாதம் கேட்டு !
தேன் திருடுவதாய் !
வண்டை தண்டித்தால் !
மகரந்த சேர்கை ஏது ? !
உள்ளம் திருடியதாய் !
காதலர்களைத் தண்டித்தால் !
காதல் தான் ஏது ? !
விதை திருடியதாய் !
நிலத்தை தண்டித்தால் !
மண்ணில் மரங்கள்தான் ஏது ? !
மழைத்துளிகளைத் திருடுவதாய் !
கடலைத் தண்டித்தால் !
விலை உயர்ந்த முத்துக்கள் ஏது ? !
வாயைத் திறந்து !
உலகத்தைக் காட்ட !
வெண்ணை திருடும் !
மாயக் கண்ணனல்ல நான் ! !
கொடை வள்ளல் கர்ணனின் !
புண்ணியத்தையும் திருட !
பரந்தாமனல்ல நான் ! !
ஏவல் மட்டும் அல்ல !
இடமும், பொருளும் !
அறியாது பேசும் !
பேச்சாளன் நான் ! !
நியாயம் பேசும் இடத்தில் !
மெனமாய் நிற்கும் !
நிராயுதபானி நான் ! !
என் நியாயத்தையும் !
ஒரு முறை கேளுங்கள் !
முடிவுகள் எடுக்கப்படும் முன்னர்
ஆனந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.