தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ரகசியமானது இயற்க்கை

றஞ்சினி
குத்தும் குளிருக்குள் தோற்றுப்போன சூரியன்!
பழிங்குகளா தொங்கும் பனித்துகள்கள்!
கரையோரம் உறைந்து கிடக்கும் கடலின் ரகசியம்!
உணவுக்காக மனிதர்களிடம்!
உறவாகிப்போன பறவைகள்!
மூச்சுத்திணறும் குளிருக்குள்ளும்!
திமிராக கண்சிமிட்டுகிறது இயற்கை!
எல்லாத்திற்குள்ளுமாக எங்கேயோ!
தொலைந்துபோன நான்!
சேர்ந்து நடக்க நீயில்லா பொழுதுகள்!
குத்தும் குளிரைவிடக் கொடுமையானது!
-- றஞ்ஜினி

விடியலை நேரம் உணர்த்தினாலும்

நளாயினி
விடியலை !
நேரம் உணர்த்தினாலும் !
பனிதூறும் காலத்தில் !
சூரியன் வருவதில்லை. !
வழமையான !
உடல் நிறையை விட !
ஆறு ஏழு கிலோவால் !
என் நிறை உடை வடிவில் !
என்னைத் துரத்தும். !
தொட்டிலுக்குள் !
பார்த்தால் !
எட்டு மாத செல்ல மகள் !
கையால் முகம் போர்த்து !
பஞ்சுக்குஞ்சாய் !
துயிலும் அழகு. !
வெளியில் இறங்கும் போது !
நற நற என !
ஏன் காலடியில் உடையும் !
பனிக்கண்ணாடித்துண்டங்கள் போல் !
என் மனசு !
கால்கள் நடுவீதியில் !
நடக்கும் போது !
பூப்பூவாய் தேங்காய்ப்பூ !
பனித் து£வல்கள். !
தொட்டுப்பார்த்தால் !
வாய் நீர் வடித்துக்கொண்டே !
தள்ளுவண்டிக்குள் !
உறங்கும் குழந்தையின் !
கன்னத்தின் மென்மை. !
சிரித்து நின்ற !
மரங்கள் எல்லாம் !
என் உணர்வைப்போல் !
மரத்துத்தான் கிடக்கிறது !
விழியை மறைக்கும் !
உப்பு நீரைப்போல் !
மரங்களின் கிளை இலைகளை !
மறைக்கும் பனித்துளிகள் !
யாரும் ஆறதல் கூறிவிட்டால் !
உடைந்து விழுந்து !
கன்னக்கதுப்பை !
ஈரமாக்க துடிக்கும் !
உவர்ப்பு நீரைப்போல் !
மரக்கிளைகளிலும் !
கட்டிட கூரைகளிலும் !
தொங்கும் !
பனிக்கண்டாடிக் !
கூர்முனைகள். !
ஊசியாய் !
குளிர் என்னைத்தாக்க !
போரில் கண்முன்னே !
தாயை இழந்த !
குழந்தையின் !
படபடப்புப்போல் !
என் உடல் மெல்ல !
நடுங்கும். !
!
மெல்ல அணைத்து !
ஓசையின்றி முத்தமிட்டு !
காப்பக காறியிடம் !
குழந்தையை !
கொடுத்துவிட்டு !
உணவு விடுதியில் !
வேலையில் மூழ்கிற போது !
நெருப்பு !
கொதி எண்ணெய் !
எல்லாமே என் உடல் மேல் பட்ட !
வேதனை. !
இறைச்சி மீன் வெட்டும் !
கூரிய கத்தி கொண்டு !
என் உடலை யாரோ அறுப்பது !
போன்ற உணர்வு !
பீறும் இரத்தமாய் !
என் உணர்வுகள் எல்லாம் !
என்னை கொன்று தின்னும். !
ஓஓ ரணப்படும் என் மனசு. !
சொல்லமுடியாத துயரம் !
என்னை அப்பும். !
ஓ என் செல்ல மகள் !
என்னைத்தேடுவாளோ? !
உடலில் உள்ள !
உரோமம் எல்லாம் சேர்ந்து !
ஒருவித சிலிர்ப்பைத்தந்து !
விழிவழியே உப்பு நீரை வரவழைக்கும்

மனவெடிப்பிலுன் தடம்பதித்து

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு பெருவெளிப் போர்க்களத்தை!
மனதுள் பரப்பிச்!
சென்றதுன் வருகை !
மீளவும் மீளவும்!
சுடுகாடாய்ப் புகை கசிய!
வெடித்துச் சிதறுகிறது மனம் !!
!
அமைதி,அந்தஸ்து,!
அத்தனை நிம்மதியும்!
வாய்க்கப் பெற்றவன் நானென!
இறுமாந்து நின்றவேளை!
சலனமற்ற தூறலென!
சப்தங்களை விழுங்கி,விழுங்கி!
நீ வந்துநின்றாய் !
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...!
நானேதுமறியேன் !!
!
வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்!
மௌனத்தை மொழியாக்கிப்!
பார்த்தபடி நின்றாயதில்!
சலனத்தையோ,சிவப்பையோ!
நான் காணவில்லை !!
!
கேள்விகளை மட்டுமே!
வார்த்தைகளாக்கியுன்னிடம்!
வருகையின் மூலத்தை - நான்!
வினவிச் சோர்ந்தவேளையிலும்!
என் நெஞ்சப்பரப்பில்!
ஆழத்தடம் பதித்து,!
மௌனத்தை மொழியாக்கி!
ஓர் தென்றல் போல!
நீ விலகிச்சென்றாய் !!
!
உனது கருவிழிகள்!
பயணிக்கும் திசையில்!
மட்டுமே வாழ்ந்திடப்!
பலர் காத்து நிற்கையில்...!
!
எந்தக் கோலத்துக்கும்!
வசப்படாப் புள்ளியொன்றிடம்!
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?!
எந்தத்திசை நோக்கியும்!
முடிவுறாப் பாதையொன்றில்!
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?!
!
உன் வாசனை நிறுத்திச்சென்று!
சிலபொழுது கடந்தவேளை,!
தீயிடம் என் பெயரை - நீ!
உச்சரித்து மாண்டதாக!
வேதனை மிகும் செய்தியொன்று!
காற்றோடு வந்தது !!
!
ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை!
மனதில் ஓயாமல் அலையடிக்கச்!
செய்ததுன்னிறப்பு !
மீளவும் மீளவும்!
வசந்தங்களேதுமற்றவொரு!
மயானத்து வனாந்தரமாய்!
வெடித்துச் சிதறியும்!
துடித்துக்கொண்டே!
ஏனின்னும் இருக்கிறதுன்!
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

காணவில்லை

வேல் கண்ணன்
நீயும் நானும்!
நம்மிடையே நிகழ்ந்த நிகழ்வொன்றில்!
ஐந்து தலை நாகமொன்று!
நிரம்பிக்கொண்டது இடை....வெளியை.!
உன்னுடையது என்று நானும்!
என்னுடையது என்று நீயும்!
தனித்தனியே விலகிக்கொண்டோம்!
நான் விட்டு சென்ற ஆளுமையையும்!
நீ தெளித்து சென்ற அலட்சியத்தையும்!
விழுங்கி செழித்தது!
மாறிமாறி பழிச்சொன்ன சொற்கள்!
உற்சாககபானமானது!
ஒரு பின்மாலையில் !
நகர பற்களிலிருந்து பிதுங்கி ஒரு சேர!
வந்தபோது அறையில் நிரம்பி தளும்பிய!
ஆலகால விஷத்தில் மூழ்கிபோனோம்.!
சில நாட்களாகவே!
நாமிருவரையும் காணவில்லை

வசந்தகால தளிர்கள்

ஒளியவன்
கொடுப்பதுமின்றி!
எடுப்பதுமின்றி!
புரிதலில் ஊறிய!
பேச்சுக்கள்!
உனக்குமெனக்குமான!
உள்ள வாசல்கள்.!
தொடுகையின் நேரத்தில்!
சலனமற்ற உனது விரல்கள்!
வசந்த காலப் பொழுதின்!
புதிய தளிர்களாய்!
என்னுள்.!
உன் வேர்கள்!
உனக்கான இடத்திலேயே!
இருப்பதும் உன்!
இலைகள் எனக்கான!
இடத்தில் நிழல்!
தருவதுமே நட்பின் சாட்சி.!
நாளை துவங்கும்!
எனது நெடுந்தூரப்!
பயணத்தில் நமது!
பிரிவைக் கடக்கவல்ல!
துடுப்பைப் பரிமாறிச்!
சென்று கொண்டிருக்கிறாய்!
'எனக்கெதிரான திசையில்!'

இதயங்கள் தேவை

எம்.ரிஷான் ஷெரீப்
பூத்திருந்த பூவொன்று!
செடிவிட்டுக் கழன்று!
புல் மீது விழுந்தென்னெஞ்சில்!
தீப்பற்ற வைத்தது !!
கூட்டிலிருந்து!
காகம் கொத்திச்!
சொண்டகன்று!
நிலம் வீழ்ந்தென்!
கரண்டிப் பால் நக்கிப்!
பின்னிறந்த அணில்குஞ்சு!
என்னிதயத்தில்!
அமிலமள்ளிப் பூசியது !!
பாதை கடக்கமுயன்று!
கண்முன்னே கணப்பொழுதில்!
மோதுண்டு மரணித்த தாயும்!
குருதிக்கோடுகளைச்!
சிரசில் ஏந்தி,!
லேசான புன்னகையை!
முகத்தில் கொண்டு!
பெற்றவளின் !
கரத்திலிருந்திறந்த!
கைக்குழந்தையும்!
என்னுள்ளத்தைச்!
சிலுவையிலறைந்தனர் !!
நம்பவைத்து நயவஞ்சகனாகிய !
நண்பனும்,!
உரிமையெடுத்து உருக்குலைத்த !
உறவினரும்!
என்மனதைக் கழற்றியெடுத்துக்!
கூர்ஈட்டி குத்திக்!
கொடூரவதை செய்தனர் !!
புராணக்கதைகளில் போல!
படைத்தவன் முன் தோன்றி!
வரம் தரக்கேட்பானெனின்,!
செத்துப்பிழைக்க-எனக்குப் பல!
இதயங்கள் வேண்டுமென்பேன்...!
இல்லையெனில்-உடம்புக்குப்!
பாரமெனினும்,!
எதையும் தாங்கும்!
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!!
!
- எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

அகதி மடி

கருணாகரன்
வெளியற்ற வெளியில்!
ஊற்றிய தீயில்!
தலையசைக்க முடியாமற் திணறும் காற்று!
ஒடுங்கியது!
இந்தக் குடியிருப்பில்!
புழுதித் தெருவில்!
படுத்துறங்க முடியாமல் அலையும் !
நாயின் மடியில்!
திண்ணையில்!
விட்டுச் சென்ற வழிப்போக்கனின்!
துயரம் !
அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!
யாரையும் நெருங்க விடாமல்.!
துடைத்தளிக்க முடியா !
ஞாபகத்தோடு!
தாத்தாவின் கைத்தடி !
தனியே நடந்து சென்றது!
வெளியம்பலக் கோவில் முற்றத்தில்!
விளையாடும் குழந்தைகளிடம்.!
ஒரு சொட்டு நீரில்லாத !
அகதி முற்றம்!
இவ்வெளி கடந்து !
இத்திசை கடந்து!
சடைக்கிறது ஜெயமோகனின்!
டார்த்தீனியமாய்.!
ஆப்கான் மலைச்சரிவுகள்!
பெரும் பள்ளமாகின!
அகதிப்போக்கரின்!
துயர் நிறை சுமை கூடி.!
பார்த்தேன் !
சிதறியோடும் குர்திஸியையும்!
பற்றியெரியும் தீயில்!
கருகும் ஈராக்கியையும்!
தலையில் காஸாவை !
தூக்கியபடி !
போகும் வழியும் நிற்குமிடமும் !
தெரியாமற் தடுமாறும்!
பலஸ்தீனியையும்!
தெருவான என்முற்றத்தில்!
துக்கமொழுக!
மட்டக்களப்பின் பெரு வாவிகளில்!
நிறைந்தது பெரிய காக்காவின் கூக்குரல்!
நிலவை ஊடுருவி!
பெரிய தம்பிரான் பாடுகிறார்!
தன் துயர் குத்தும் வலி!
பொறுக்காமல் வெடித்த சொற்கொண்டு!
வன்னியிலும்!
புத்தளத்திலும்!
அனற்காற்றடித்து!
ஊற்றிய தீயில்!
வெளியான வெளியில்!
படுத்துறங்க முடியா நாயின் மடியில்!
ஆற்றவியலாப் புண்ணென!
சாம்பல் பூத்துக்கிடக்குமென்!
அகதி மடி

உதவிக்கு வருவீர்களா ?

புஸ்பா கிறிஸ்ரி
என்றும்மை !
உதவி கேட்டு நிற்போர்க்கு !
இதோ வருகிறேன் என்றே கூறிவிட்டு, !
இருந்த இடம் தொ¤யாமல், !
ஓடி ஒளித்துவிடும் !
உத்தம மனிதர்களே!... !
உம்மை நாடி உதவி கேட்பவர் யார்? !
எண்ணிப் பாருங்களே ! !
அவர் யாருமில்லை உம் சோதரர்களே ! !
ஓடி ஒளிக்க வேண்டாம் !
உதவிட முன் வாருங்கள் !
இன்றைய நீங்கள் செய்யும் இவ்வுதவி !
நாளை உங்களையும் !
உங்கள் சந்ததியையும் வாழவைக்கும் !
வரப்பிரசாதமாகி நின்று, காத்திருக்கும் !
என்னும் உயர் எண்ணம்தனை !
எண்ணித் தினம் மனதில் கொண்டால், !
உள் மனத்து, உண்மை நினைவுடன் !
ஓடி ஓடி உதவிடவே !
உள்மனம் தான் ஆசைப்படுமே ! !
நாடி நரம்பெல்லாம், நலிந்திங்கு கிடக்கையில் !
ஆடித்திரிந்த, நல்ல நாட்களில் !
ஓடித் திரிந்து நீர் செய்த உதவிகள் !
தேடிவந்திங்கு, நம் துயர் துடைத்து விடும் !
மறவாதீர், மகிழ்வுடன் உதவிடுவீர்

கிராமத்தில் நான்

தென்றல்
அப்போதெல்லாம் - என் !
கால்களுக்கு பாதணி !
தேவைப்படவில்லை முட்கள் !
என் கால் கால்களின் !
சினேகிதர்கள் !
வானம்பாடிகளுக்கும் எனக்கும் !
சின்ன சின்ன மனஸ்தாபங்கள் !
யாத்திரைக்குச் செல்லும் எறும்புகளின் !
தீனிகளை பறித்து - அவைகளுக்கு !
பகைவனுமானேன் !
கவனும் கல்லுமாய் !
பறவைகலோடு சண்டை இட்ட !
காலமது-அவைகளின் !
பிள்ளை பிடி காரன் !
என்றும் என்னக்கு ஒரு !
பெயர் உண்டு - ஆனலும் !
ஆட்டுக்குட்டிகளுக்கும் !
என்னக்கும் அப்படி ஒரு !
சினேகிதம் !
புல் வெளிகளை கண்டால் !
ஒரு குட்டித்து£க்கம் !
செய்வது என்னக்கோரு !
போழுது போக்கு !
குரங்குகலை பார்த்து !
மூக்கை சுரண்டி - அவைகளின் !
கோபத்துக்குள்ளகி !
பல மரக்கிழைகளை உடைத்த !
குற்றச் சாட்டும்- என்னிடம் !
இருக்கிறது !
தோட்டக்காரன் !
துரத்தும் போது !
முள்வேலிகளுக்கு !
இரத்த தானம் செய்த !
முதல் சிறுவனும் !
நானாகத்தான் இருக்க !
முடியும் !
தென்றல்

வாழ்க்கை

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
ஒற்றைக் கம்பியில் !
ஒருக்கணித் தமர்ந்து !
ஓரக்கண்ணால் காணும் !
ஓராயிரம் காட்சிகள். !
நீண்ட தொலைவில் !
நீள் பனையொன்று - அதன் !
நிழல் வழியே !
நிம்மதியாய் இருநாய்கள். !
ஆகாய உச்சியெட்ட !
ஆலாக்கள் இரண்டு !
அதன் பின்னே !
அழகிய கிளிகள்பல. !
வயலில் வயதான !
விவசாயிகள் பலர் !
வடிவாய்ச் செப்பனிட !
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை. !
கொங்கை குலுங்கிட !
மங்கையர் பலர் !
களை கொள்ளும் !
கண்கொள்ளாக் காட்சிகள்பல. !
சக்கரச் சவட்டுதலில் !
சில புழுக்கள் - அதைக் !
கொத்தித் தின்ன !
கொக்குகள் பல. !
வீதியால் வந்தவனை !
வேருடன் பிடுங்கி !
வயலில் விட்டெறிந்த !
விபத்து ஒன்று. !
பஸ் மிதிப்பலகையில் !
பயணம்செய்த இளைஞன் !
பரிதாபமாய் விழுந்ததை !
பார்த்துச்சிரிக்கும் இளசுகள். !
வலதுகையை உரசிக்கொண்டு !
விரைவாய்ச் செல்லும் !
பாதுகாப்பு வாகனமொன்று !
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி. !
அழகழகாய் அணிவகுத்து !
அவசரமாய் பறந்துவந்த !
வாகனங்கள் அனைத்தும் !
வந்த அரசியல்வாதிக்காய். !
இத்தனையும் பார்த்துரசித்த !
இளைய காக்கை !
மற்றக்காலை உயர்த்தியபோது !
மரணம் மின்கம்பியில்