விடியலை நேரம் உணர்த்தினாலும் - நளாயினி

Photo by engin akyurt on Unsplash

விடியலை !
நேரம் உணர்த்தினாலும் !
பனிதூறும் காலத்தில் !
சூரியன் வருவதில்லை. !
வழமையான !
உடல் நிறையை விட !
ஆறு ஏழு கிலோவால் !
என் நிறை உடை வடிவில் !
என்னைத் துரத்தும். !
தொட்டிலுக்குள் !
பார்த்தால் !
எட்டு மாத செல்ல மகள் !
கையால் முகம் போர்த்து !
பஞ்சுக்குஞ்சாய் !
துயிலும் அழகு. !
வெளியில் இறங்கும் போது !
நற நற என !
ஏன் காலடியில் உடையும் !
பனிக்கண்ணாடித்துண்டங்கள் போல் !
என் மனசு !
கால்கள் நடுவீதியில் !
நடக்கும் போது !
பூப்பூவாய் தேங்காய்ப்பூ !
பனித் து£வல்கள். !
தொட்டுப்பார்த்தால் !
வாய் நீர் வடித்துக்கொண்டே !
தள்ளுவண்டிக்குள் !
உறங்கும் குழந்தையின் !
கன்னத்தின் மென்மை. !
சிரித்து நின்ற !
மரங்கள் எல்லாம் !
என் உணர்வைப்போல் !
மரத்துத்தான் கிடக்கிறது !
விழியை மறைக்கும் !
உப்பு நீரைப்போல் !
மரங்களின் கிளை இலைகளை !
மறைக்கும் பனித்துளிகள் !
யாரும் ஆறதல் கூறிவிட்டால் !
உடைந்து விழுந்து !
கன்னக்கதுப்பை !
ஈரமாக்க துடிக்கும் !
உவர்ப்பு நீரைப்போல் !
மரக்கிளைகளிலும் !
கட்டிட கூரைகளிலும் !
தொங்கும் !
பனிக்கண்டாடிக் !
கூர்முனைகள். !
ஊசியாய் !
குளிர் என்னைத்தாக்க !
போரில் கண்முன்னே !
தாயை இழந்த !
குழந்தையின் !
படபடப்புப்போல் !
என் உடல் மெல்ல !
நடுங்கும். !
!
மெல்ல அணைத்து !
ஓசையின்றி முத்தமிட்டு !
காப்பக காறியிடம் !
குழந்தையை !
கொடுத்துவிட்டு !
உணவு விடுதியில் !
வேலையில் மூழ்கிற போது !
நெருப்பு !
கொதி எண்ணெய் !
எல்லாமே என் உடல் மேல் பட்ட !
வேதனை. !
இறைச்சி மீன் வெட்டும் !
கூரிய கத்தி கொண்டு !
என் உடலை யாரோ அறுப்பது !
போன்ற உணர்வு !
பீறும் இரத்தமாய் !
என் உணர்வுகள் எல்லாம் !
என்னை கொன்று தின்னும். !
ஓஓ ரணப்படும் என் மனசு. !
சொல்லமுடியாத துயரம் !
என்னை அப்பும். !
ஓ என் செல்ல மகள் !
என்னைத்தேடுவாளோ? !
உடலில் உள்ள !
உரோமம் எல்லாம் சேர்ந்து !
ஒருவித சிலிர்ப்பைத்தந்து !
விழிவழியே உப்பு நீரை வரவழைக்கும்
நளாயினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.