உதவிக்கு வருவீர்களா ? - புஸ்பா கிறிஸ்ரி

Photo by Sajad Nori on Unsplash

என்றும்மை !
உதவி கேட்டு நிற்போர்க்கு !
இதோ வருகிறேன் என்றே கூறிவிட்டு, !
இருந்த இடம் தொ¤யாமல், !
ஓடி ஒளித்துவிடும் !
உத்தம மனிதர்களே!... !
உம்மை நாடி உதவி கேட்பவர் யார்? !
எண்ணிப் பாருங்களே ! !
அவர் யாருமில்லை உம் சோதரர்களே ! !
ஓடி ஒளிக்க வேண்டாம் !
உதவிட முன் வாருங்கள் !
இன்றைய நீங்கள் செய்யும் இவ்வுதவி !
நாளை உங்களையும் !
உங்கள் சந்ததியையும் வாழவைக்கும் !
வரப்பிரசாதமாகி நின்று, காத்திருக்கும் !
என்னும் உயர் எண்ணம்தனை !
எண்ணித் தினம் மனதில் கொண்டால், !
உள் மனத்து, உண்மை நினைவுடன் !
ஓடி ஓடி உதவிடவே !
உள்மனம் தான் ஆசைப்படுமே ! !
நாடி நரம்பெல்லாம், நலிந்திங்கு கிடக்கையில் !
ஆடித்திரிந்த, நல்ல நாட்களில் !
ஓடித் திரிந்து நீர் செய்த உதவிகள் !
தேடிவந்திங்கு, நம் துயர் துடைத்து விடும் !
மறவாதீர், மகிழ்வுடன் உதவிடுவீர்
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.