தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மழை ஓய்ந்த நேரம்

இ.இசாக்
இ.இசாக் !
முள்மரம் !
முத்துச் சிதறல்கள் !
மழைத் துளி !
!
மழை பெய்த காலை !
வாசல் முழுக்க !
ஈசல் இறகு !
!
அடைமழை !
தெருவில் !
குப்பைகளின் ஊர்வலம் !
!
கொட்டும் மழை !
குடையில் நான் !
மகிழ்ச்சியாய் ஆடுகள் !
!
மழைக்காலம் !
நினைவில் !
பழைய கூரைவீடு !
!
தொடர்மழைக் காலம் !
குப்பைகளுக்கும் குடைகள் !
காளான்கள் !
!
பக்கங்கள்: 80 !
விலை : ரூ 30 (தமிழகத்தில்) !
வெளியீடு !
சாரல் !
189, அபிபுல்லா சாலை !
தியாகராயர் நகர் !
சென்னை 600 017. !
தமிழ் நாடு

திரும்பிப் போகும் அணில்

சிதம்பரம் நித்யபாரதி
இன்று அவளுக்கு!
அணில் மேல் கோபம்!!
மாடியின் ஜன்னல் மூடாத!
என் மேல் கோபம்!!
கொஞ்சம் இடம் கொடுத்தாலும்!
குளியலறையில்!
பஞ்சு நார் எனக் குவித்துக்!
கூடு கட்டும்! !
சுத்தம் செய்ய முதுகு ஒடிகிறதாம்.!
எனக்கோ- !
ராமர் கோட்டு முதுகை வருடிட ஆசை!!
கற்பனையாய்!
வாலில் முத்தமும் உண்டு!!
அவ்வப்பொழுது!
கண்ணாமூச்௪¢ காட்டி ஓடிவிடும் அதற்கு!
இன்று ஜன்னல் திறக்காது!!
அரைகுறைக் கூடு கலைந்திருக்கும்!
என உள்ளுணர்ந்த துயரத்தில்!
தோட்டத்தில் அது சுற்றிடுமா?!
குறுகுறுக்கும் மனத்துடன்!
மூடிய ஜன்னலின் உட்புறம் நான்.!
- சிதம்பரம் நித்யபாரதி

வாய்ப்பாடு

தணிகை அரசு
கடுகைக் கதையாக்கி !
நிழலை நிஐமாக்கி !
ஊதிப் பெரிதாக்கி !
உறவைக் கெடுத்த உத்தமர்களே ! !
முகமலரச் சிரித்துவிட்டு !
முள்ளால் சொல் செய்து !
முதுகில் குத்திய !
முன்னாள் தோழர்களே ! !
நாவுக்கு நரம்பும் !
வாந்திக்கு வரம்பும் !
நெஞ்சுக்கு ஈரமும் !
கோழைக்கு வீரமும் !
இல்லை என்று நினைவூட்டி !
ஈடற்ற நன்மை செய்தீர். !
என் பேனா செதுக்கிய பேரழகியோ !
எங்கு போனாள் என்றே தெரியவில்லை. !
தானே வந்தாள் !
ஒரு நாள் அருகில் !
தவித்தாள் தாங்கினேன் !
அழுதாள் தேற்றினேன் !
நானோ இன்று !
நிற்கிறேன் தெருவில் !
விழித்துக்கொள்வீர் ! !
வாழ்வில் நம்பிக்கெட்டோர்க்கு !
வாய்ப்பாடு நான்

கோடை விடுமுறை.. முதல் கோணல்

இ.பு.ஞானப்பிரகாசன்
கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்.. முதல் கோணல்!
01.!
கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்!
-------------------------------------------------!
துரத்தி வர!
வாண்டுகள் இல்லாமல்!
வண்ணம் இழந்து திரிகின்றன!
பட்டாம்பூச்சிகள்...!
பறித்துச் சூடிக் கொள்ளும்!
பாவாடைத் தோழிகளைக் காணாமல்!
வாடித் தொங்குகின்றன!
நந்தியாவட்டையும் செம்பருத்தியும்...!
பாட்டும் கூத்தும்!
ஆட்டமும் அமர்க்களமுமாய்!
அவர்களுடன் கழித்த நாட்களை!
அசைபோட்டபடி நின்றிருக்கிறது!
காற்று இறங்கிய!
பள்ளிப் பேருந்து...!
பொன்னாய்க் காய்ந்த!
இலைகளைக் கூட உதிர்க்காமல்!
ஆயிரம் ஆயிரம் இலைக் கண்களால்!
பார்வைக்கு எட்டிய தொலைவு வரை!
விழி வைத்துக் காத்திருக்கிறது!
எல்லோரையும் விடப் பெரிதான!
வாத மரம்...!
விடுமுறையில் ஒருவேளை!
அவர்கள்!
வேடந்தாங்கல் வரக்கூடும் என்று!
அங்கே போக!
வழி விசாரித்துக் கொண்டிருக்கின்றன!
கிளிகளும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும்...!
பள்ளி திறக்கும்!
நாள்!
கிழமை!
எதுவும் தெரியாத!
பள்ளிக்கூடங்களின் தோட்டத்து உயிர்களுக்கு!
இப்படித்தான் கழிகிறது!
ஒவ்வொரு விடுமுறைக் காலமும்!
என்பதை!
யார் எடுத்துச் சொல்வது!
விடுமுறைக்குப் பின்!
பள்ளி செல்ல அழும்!
குழந்தைகளுக்கு...?!
02.!
முதல் கோணல்!
-----------------------!
ஒரு பொய்...?!
ஒரு போலியான வாக்குறுதி...?!
சில ஆயிரம் ரூபாய் கையூட்டு...?!
பல ஆயிரங்களில் ஊழல்...?!
இவை எதுவும் இல்லை!
பிடிக்காத நிறத்திலான துண்டை!
அரசியலுக்காக!
அணியத் தொடங்கியதில்!
ஆரம்பமானது!
என்!
பொதுவாழ்வின் பொய்மை

மணிகண்டன் கவிதைகள்

வா.மணிகண்டன்
இன்று !
புதிதாய் பிறந்தேன். !
சொல்லி !
இறந்துகொண்டிருக்கிறேன். !
ஒவ்வொரு நாளும். !
2 !
சொற்களற்ற !
மொழியொன்றில் !
கவிதை வேண்டும். !
என் !
அம்மாவுக்கு பரிசாக. !
வா.மணிகண்டன்

வாழ்க்கை எதார்த்தம்

ராசை நேத்திரன்
ஒரு முறை தோல்வியின் !
வலி உயிரின் வேரை !
பிடுங்கிவிட்டு திரும்பும் !
போது தோல்வியோடு !
வலியும் மனப்பாடமாகி !
போவதில் ஆச்சரியமில்லை !
இரவை தோற்று பகல் !
அழிவதில் !
மழை தோற்று வெயில் !
அழிவதில் !
இரைச்சல் தோற்று மௌனம்!
அழிவதில் !
கனவுகள் தோற்று வாழ்க்கை!
அழிவதில் !
பிணி தோற்று உடல் !
அழிவதில் !
முதுமை தோற்று அழகு !
அழிவதில் !
துன்பம் தோற்று இன்பம் !
அழிவதில் !
உலகமயமாக்கல் தோற்று விவசாயம் !
அழிவதில் !
அரசியல் தோற்று மக்கள்ஆட்சி!
அழிவதில்.. !
வறுமை தோற்று ஆசை !
அழிவதில்!
ஆணவம் தோற்று புகழ் !
அழிவதில் !
வறட்சி தோற்று பசுமை !
அழிவதில் !
ஏதோ ஒன்று அழிந்து ஆக்கம் !
பெறுகிற இயற்கை நியதில் !
கிடைக்க வேண்டும் என்பது !
தோற்று கிடைப்பதை ஏற்பதில் !
வாழ்கை எதார்தமாகிறது

ஆயுத பூசை

விடிவெள்ளி
? !
-------------------- !
அதிர்ச்சியாகத்தான்!
இருந்தது!!
இருக்காதா பின்னே,!
பகத்சிங் பிறந்த நாளன்று!
அரசு விடுமுறை! !
எப்படி சாத்தியம் இது?!
அவனென்ன,!
காந்தியா?!
கதராடை உடுத்தி,!
மக்களின்!
கோவணம் உருவ!!
வெள்ளைக்காரன்,!
கால் நக்கி!
மெடல் வாங்க! !
என்னதான் நடந்தது,!
நடந்தபடியே யோசித்த போது!
ஞாபகம் வந்தது,!
நேற்று!
ஆட்டோக்கார காம்ரேடு!
கடலை பொரி கொடுத்தாரே!!
அடடே!!
ஆயுத பூசை! !
என்ன பொருத்தம்? !
தூக்கிய!
துப்பாக்கியை மட்டுமல்ல,!
தன்!
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,!
வாரிசுகளிடம்!
வழங்கியவனின்!
பிறந்தநாளில்!
வாழத்துடிக்கிறோம்!
வற்றாத,!
அவன் நினைவுகளைப் போல!!
இன்னும்,!
தெரிந்து சிலரும்!
தெரியாமல் பலரும்!
கொண்டாடுகிறார்கள்!
ஆயுத பூசை! !
யாருக்கான ஆயுதம்!
யாருக்கான பூசை? !
சும்மாவே இருந்து,!
சோறு தின்று,!
தொந்தி வளர்ப்பவனுக்கு!
திரிசூலம் ஆயுதமென்றால், !
ஊரையே வெளிச்சமாக்க,!
உயிரைப் பணயம் வைத்து!
உயரக் கம்பங்களில்!
ஏறும் எமக்கு!
செருப்புதான் ஆயுதம்! !
கண நேரம்!
கடந்து செல்லும் முன்!
மூக்கைப் பிடிக்கச் செய்யும்!
உன்!
மலச்சாக்கடையில்,!
மூச்சடக்கி,!
மூழ்கி எழும் எமக்கு!
மலவாளிதான் ஆயுதம்! !
உன் நுகர்வு வெறியின்!
எச்சங்களால்,!
உன் மனதைப் போலவே!
குப்பை கூளமாகிப் போன!
சாலைகளை!
பெருக்கித் தள்ளும்!
எமக்கு,!
துடைப்பமே ஆயுதம்! !
அனைவரும்!
இந்து என்றாய்,!
செய்யும் தொழிலே!
தெய்வம் என்றாய், !
சேர்த்து வைத்துக்!
கொண்டாடு பார்க்கலாம்,!
உன் நவராத்திரிக் கொலுவில்,!
செருப்பையும்,!
மலவாளியையும்,!
துடைப்பத்தையும்,!
திரிசூலத்தின்!
மூன்று முனைகளாய்!
நினைத்து

முத்தம் போதும்

தியாகு
நீ வந்து சென்றதாலெயே!
தலைகுனிந்த பூக்கள்!
நிறைந்ததாய்!
மாறிய காடு!!
அன்னங்கள் எல்லாம்!
பறக்க துவங்கின!
நடக்கும் உரிமை!
உனக்கென சொல்லி!!
நகைப்பதை நிறுத்தடி!
நட்சத்திரங்கள்!
சிதறி சில விபத்துகள்!
நடக்கலாம்!
வேல் விழி காயத்துக்கு!
மருந்தில்லை எனவே!
ஆயுத ஒழிப்பை!
ஆதரிக்கலானேன்.!
மொத்தமாய் தர உன்னை!
வற்புறுத்த மாட்டேன் -ஒரு!
முத்தம் போதும்!
முகத்துடன் பிறந்த!
நோக்கம் சிறக்க!!
தியாகு

வாழ்க்கை

பாரதிமோகன்
முதல் தேதிகளில்!
கவலைகளை!
மறக்க எண்ணி..!!
ரயிலோ!
பஸ்ஸோ!
நெரிசல்களில் சிக்கி!
வேலைக்கும் வீட்டுக்குமாக!
தினசரி அல்லல்கள்..!
மாதம் பிறந்துவிட்டது!
பாலுக்கும் அரிசிக்கும்!
பாக்கி போக!
மிச்சப்பட்டிருப்பது!
விரல்கள் மட்டுமே!
தினசரி!
விடிகிறது பொழுது!
கழிகிறது நிமிஷ்ம்!
காலம் என்ற ஓட்டைப்பானையில்!
உயிர் சிந்தி!
உழைப்பைக் கொட்டி!
தொலைந்துபோகிறது!
வாழ்க்கை

மண்ணின் குழந்தைகள்

இளந்திரையன்
எப்போதும் போல் !
வாழ்க்கை இல்லை !
வாழ்க்கையின் அளவு !
புரிதல் இல்லை !
அப்போது போல் !
எல்லாமும் இல்லை !
இருந்ததும் எப்போதும் !
தொடர்ந்ததும் இல்லை !
!
எல்லோரும் போல் !
நானும் இல்லை !
இருப்புக்கான நம்பிக்கை !
எங்கும் இல்லை !
!
மனங்களின் ஆழத்தில் !
கவிந்தது போல் !
மரண பயம் - ஒரு !
மனப் பிரக்ஞை !
!
யாரைப் பார்த்தாலும் !
காற்றில் அசையும் !
நிழல்கள் போல் !
நினைவற்ற தோற்றம் !
!
புழுதித் தரையில் - கீறி !
முளைத்த புல் போல் !
கீழ் வானத்து செம்மை தேடி !
இன்றும் நான் !
!
- இளந்திரையன்