ஆயுத பூசை - விடிவெள்ளி

Photo by Tengyart on Unsplash

? !
-------------------- !
அதிர்ச்சியாகத்தான்!
இருந்தது!!
இருக்காதா பின்னே,!
பகத்சிங் பிறந்த நாளன்று!
அரசு விடுமுறை! !
எப்படி சாத்தியம் இது?!
அவனென்ன,!
காந்தியா?!
கதராடை உடுத்தி,!
மக்களின்!
கோவணம் உருவ!!
வெள்ளைக்காரன்,!
கால் நக்கி!
மெடல் வாங்க! !
என்னதான் நடந்தது,!
நடந்தபடியே யோசித்த போது!
ஞாபகம் வந்தது,!
நேற்று!
ஆட்டோக்கார காம்ரேடு!
கடலை பொரி கொடுத்தாரே!!
அடடே!!
ஆயுத பூசை! !
என்ன பொருத்தம்? !
தூக்கிய!
துப்பாக்கியை மட்டுமல்ல,!
தன்!
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,!
வாரிசுகளிடம்!
வழங்கியவனின்!
பிறந்தநாளில்!
வாழத்துடிக்கிறோம்!
வற்றாத,!
அவன் நினைவுகளைப் போல!!
இன்னும்,!
தெரிந்து சிலரும்!
தெரியாமல் பலரும்!
கொண்டாடுகிறார்கள்!
ஆயுத பூசை! !
யாருக்கான ஆயுதம்!
யாருக்கான பூசை? !
சும்மாவே இருந்து,!
சோறு தின்று,!
தொந்தி வளர்ப்பவனுக்கு!
திரிசூலம் ஆயுதமென்றால், !
ஊரையே வெளிச்சமாக்க,!
உயிரைப் பணயம் வைத்து!
உயரக் கம்பங்களில்!
ஏறும் எமக்கு!
செருப்புதான் ஆயுதம்! !
கண நேரம்!
கடந்து செல்லும் முன்!
மூக்கைப் பிடிக்கச் செய்யும்!
உன்!
மலச்சாக்கடையில்,!
மூச்சடக்கி,!
மூழ்கி எழும் எமக்கு!
மலவாளிதான் ஆயுதம்! !
உன் நுகர்வு வெறியின்!
எச்சங்களால்,!
உன் மனதைப் போலவே!
குப்பை கூளமாகிப் போன!
சாலைகளை!
பெருக்கித் தள்ளும்!
எமக்கு,!
துடைப்பமே ஆயுதம்! !
அனைவரும்!
இந்து என்றாய்,!
செய்யும் தொழிலே!
தெய்வம் என்றாய், !
சேர்த்து வைத்துக்!
கொண்டாடு பார்க்கலாம்,!
உன் நவராத்திரிக் கொலுவில்,!
செருப்பையும்,!
மலவாளியையும்,!
துடைப்பத்தையும்,!
திரிசூலத்தின்!
மூன்று முனைகளாய்!
நினைத்து
விடிவெள்ளி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.