தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பார்வையற்றவர்கள்.. உலக மொழிகளின்

இரா.இரவி
மூலம் தமிழ்மொழி!
01.!
பார்வையற்றவர்கள்!
----------------------!
புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்!
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்!
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு!
சாரனை வாழ்க்கை உங்களுக்கு!
சராசரி மனிதர்கள் நாங்கள்!
சரித்திர மனிதர்கள் நீங்கள்!
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு!
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு!
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்!
கோடியில் ஒருவர் நீங்கள்!
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்!
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்!
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்!
இருட்டே வாழ்க்கை என்ற போதும்!
ஒளி ஏற்றுபவர் நீங்கள்!
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள!
எங்களுக்கு!
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்!
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்!
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்!
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு!
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.!
!
02.!
உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி!
------------------------------------------- !
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி!
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி!
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி!
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி!
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி!
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி!
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி!
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி!
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி!
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி!
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி!
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி!
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி!
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி!
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி!
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி!
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி!
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி!
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி!
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி!
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி!
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி!
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி!
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி!
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி!
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி!
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி!
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி!
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி!
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி!
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி!
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி!
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி!
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி!
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி!
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி!
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி!
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி!
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி!
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி!
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி!
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி

முடி இழந்த மன்னர்கள்

துரை.ந.உ
சிறுகச் சிறுகச் சேர்த்து!
சிறகு பொத்தி பாதுகாத்து!
உணர்வுகளால் கட்டிக்காத்து!
உருவாக்கிய உலகிலிருந்து!
உபயோகமில்லாப் பொருளாக!
உறவுகளால் உதறப்பட்டு!
வீதியில் விதியை நொந்து!
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி!
போகும்திசை தெரியாமல்!
போகிறர்கள் அந்த!
போக்கத்தப் பெரியவர்கள்!
-அன்புடன் துரை!
''கனவு மெய்ப்பட வேண்டும்''

பைத்தியமாய்

விஷ்ணு
*என் கனவு....*!
என் இரவுகளை!
நீ சிறை பிடித்ததால்!
என் கனவுகள்!
களவாடப்பட்டு விட்டன !!!...!
விடுதலைக்கு!
இன்றும் என்விழிகள்!
சாட்சி கூண்டில் ...!
*என் ஆசைகள் ...*!
அழகாய் இருக்கிறதடி!
உன் வாசல் கோலங்கள்...!
புள்ளிகளாய் நீயும்!
என் ஆசைகளை!
வைப்பதாலோ !!!...!
நசுங்கித்தான் போனதடி!
அதுவும்!
உன் வீட்டு நாய்குட்டி!
முதல் பால்காரன் வரை!
பாதங்கள் பட்டு !!!..!
*என் நினைவுகள் ....*!
மறந்துவிடு!
எனச்சொல்லி!
நீ எறிந்த கல்லில்!
உடைந்து விட்டது ...!
கண்ணாடியாய் !!!...!
ஓராயிரம்!
உன் பிம்பங்கள்!
உடைந்த துண்டுகளில்!
உட்கார்ந்து கொண்டு!
இன்றும்!
கீறுகின்றன...!
என் இதயத்தை !!!...!
*என் சிரிப்பு ...*!
அதை எடுத்து நீயும்!
வீதியில் எறிந்ததால்!
எனை பார்த்தாலே!
அள்ளி தருகிறார்கள்!
அனைவரும் எனக்கு...!
என்ன செய்ய ...!
நானும் தெரிகிறேனே!
பைத்தியமாய் !!!...!
அவர்களுக்கும் ...!
!
அன்புடன்!
விஷ்ணு

நாட்டியம்

வினோத்குமார் கோபால்
சிவந்த பாதங்களின் சுவறேறி!
படர்ந்து சுற்றிய சலங்கையின்!
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்!
ஒவ்வொன்றாய் கவி பாடும்!
நின் நாட்டியப் பாதங்கள்!
பூமி யெனும் வீணையை!
சிவந்துச் சிவந்து மீட்டுவதால்!

ஒரு விண்ணப்பம்

வேல் கண்ணன்
தெய்வமொன்று நேரில் வந்து !
'வரமொன்று தருகிறேன்' என்றது.!
நம்புங்கள், தமிழில் தான் பேசியது. !
வியப்பான வினாவுடன் பார்த்தேன்.!
புரிகிறது, இருப்பதே என்னிடம் ஒன்று தான் !
ஒன்றுக்கு மேல் கேட்டு விட்டால்?!
சரிதான். கொடுத்தே நொந்து போயிருக்கும் போல.!
வரம் பலிக்க வேண்டுமென்றால் !
எனக்கொன்று செய்யவேண்டும் ... !
அது தானே பார்த்தேன்.... !
நான் நான்கு கோப்பையை தருகிறேன் !
ஒன்றில் தூயபாலை நிரப்பவேண்டும்!
நிரப்பினேன்.!
அடுத்ததில் தூயமது.....!
இடைமறித்தேன்; நிரப்பினேன்.!
உற்று என்னை கவனித்தபடி !
மூன்றாவதில் மனித ரத்தம்...!
நொடியில் நிரப்பினேன். !
நான் மனித ரத்தம் கேட்பது !
உனக்கு அதிர்ச்சியை தரவில்லையா ... ?!
'இல்லை. பழக்கப்பட்டுவிட்டது. !
புத்தனின் பெயராலேயே இங்கு ரத்தம் குடிக்கப்பட்டது. !
பிறகென்ன ... !
நொடியில் நிரப்பிய காரணமும் அதுதான்'!
தெய்வம் மெளனமானது. !
நான்காம் கோப்பையை காட்டி !
தூய மழைநீர் ... என்றபடியே மறைந்தது. !
தூக்கி வாரிப்போட்டது எனக்கு.!
பித்தேறி வெற்று கோப்பையுடன் அலைகிறேன் !
உங்களிடம் இருந்தால் தாருங்கள் ...!
தருபவர்களே வரத்தையும் எடுத்துக்கொள்ளலாம் !
தருவீர்களா ... ?

நான் பெண்

கிறிஷ்ரா விஸ்ரறிஷ்
நான் பெண், எனது கத்தலைக் கேளுங்கள்;!
நாங்கள் தொகையில் அதிகம், கவனிக்காமல் இருப்பதற்கு;!
என்னை இடையூறு செய்யமுடியாதபடிக்கு, எனக்கு அறிவு அதிகம்;!
முன்பு கேட்டவையெல்லாம் நான் அடியில் இருந்தபோது;!
என்னை மீண்டும் அடியில் அமுக்க எவராலும் முடியாது.!
ஆம்! நான் அறிவானவள்;!
ஆனால் இந்த அறிவு வலிகளில் இருந்து பிறந்தது;!
ஆம், நான் விலை கொடுத்தேன்;!
ஆனால் பார், எவ்வளவை வென்றுவிட்டேன் என்பதை;!
நான் பலம் கொண்டுள்ளேன், என்னை வெற்றிகொள்ள முடியாது நான் பெண்!!
நீங்கள் என்னை வளைக்கலாம், ஆனால் என்னை ஒருபோதும் முறிக்கமுடியாது;!
அது என்னை மேலும் திடமாக்குகிறது, எனது குறிக்கோளை அடைவதற்கு.!
நான் இன்னும் பலமடைவேன்;!
நான் ஆரம்பநிலையில் இல்லை!
எனது நம்பிக்கையை நீங்கள் பலப்படுத்தியுள்ளீர்கள்!
நான் பெண், நான் வளர்வதைப் பாருங்கள்;!
நான் விரல்நுனியில் நிற்பதைப் பாருங்கள்;!
எனது கைகளை வாஞ்சையோடு பூமிமேல் விரிக்கிறேன்.!
ஆனால் நான் இன்னும் சிறிய கருத்தான்;!
நான் போவதற்கு இன்னும் நீண்ட.... நீண்ட.... பாதைகள் உள்ளன.!
!
இந்திய பெண்கள் விடுதலை இயக்கப்பாடல் ஒன்று.!
ஜெர்மனுக்கு : CHRISTA WICHTERICH !
ஜெர்மன்மொழியிலிருந்து தமிழில் : றஞ்சினி

இதுவும் முத்தம்தான்

புதியமாதவி, மும்பை
==================== !
!
சத்தமில்லாமல் !
முத்தமிடும் காதல் !
நமக்கு !
சாத்தியப்படவில்லைதான்.. !
போர்முனையின் !
இருட்டைக் கிழித்து !
இன்னும் !
ஒலிக்கின்றது !
உன் !
சண்டைக்குரல்!! !
வெடிகுண்டுகளின் !
படுக்கையில் !
விழுந்துகிடக்கின்றேன் !
உன் விழிகளின் !
தேடலில் !
என் மொழிகளின் !
தோல்வி !
உன் உயிர்க்கிழித்து !
நீ கொடுத்த !
முத்தம் !
ரத்தம் சிந்தும் !
உதடுகளில் !
எழுதியது !
போராளிகள் !
தோற்பதில்லை. !
........ !
!
அன்புடன், !
புதியமாதவி

எண்ணங்களின் பயணத்தில்

இப்னு ஹம்துன்
போவதும் வருவதும்!
பொதுவாய் மரபு!
ஆவதும் அழிவதும்!
அன்றாட இயல்பு.!
எண்ணங்களின் பயணத்தில்!
இயங்குகின்ற மனது.!
வண்ண வண்ண கனவுகளே!
வாழ்க்கைக்கு விருந்து.!
ஆசையில் வருவதெல்லாம்!
அடுத்தவர் 'இடம்' தான்!
ஓசையறும் சிந்தனையில்!
உலகமும் மடம் தான்.!
பிறப்பதும், பின்னொரு நாள்!
இறப்பதும்; இடையிலே!
சிறப்புகள் தேடித்தேடி!
செல்வதுவும் பயணந்தான்.!
எல்லாப் பக்கத்திலும்!
இருக்கலாம் பாதைகள்!
வல்லோன் வகுத்தாற்போல்!
வாய்ப்பதுவே வழிப்பாதை.!
வாய்த்ததொரு வாகனத்தில்!
வழியெங்கும் கோரிக்கை!
வாட்டமின்றி சென்றாலே!
வாழ்க்கை கேளிக்கை.!
கயிறுகளாய் பாசபந்தம்;!
கட்டப்பட்ட கைகால்கள்.!
வயிறுக்காய் நகர்ந்தாலும்!
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.!
'நிலை'யில்லாக் காலம் தான்!
நதியாகப் பாய்ந்து வரும்!
விலையில்லா நேரத்தை!
விதியென்று தள்ளாதீர்.!
தாகத்தை அதிகரிக்கும்!
தண்ணீரும் இதுவே தான்!
ஏகதேச அறிவுரையோ!
'எல்லாம் கடந்து போகும்'.!
காற்றெங்கும் இறக்கைகள்!
கைகளாய் பரிணமிக்கும்!
ஆற்றலுள்ள மனிதருக்கு!
அனைத்துமே பக்கந்தான்.!
!
-இப்னு ஹம்துன்!
---------------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

வரமா, சாபமா?

சிலம்பூர் யுகா துபாய்
என் வீட்டுதொலைபேசியில்!
இரண்டு மணியடித்து நின்று!
இரண்டாவது!
அழைப்பு வந்தால்,!
எதிர் முனையில்!
நீயிருக்கிறாய்!
என்று அர்த்தம்.!
பிழையான எண்!
எனக்கூறி!
நான் பின் வாங்கினால்!
அருகில்!
அப்பா இருக்கிறார்!
என்று அர்த்தம்.!
இப்படி எத்தனையோ,!
எத்தனையோ.....!
விளையாட்டு!
இப்போதும் தொடருகிறது.!
ஆட்டத்தில்!
தங்கையுடன் யாரோ..!
நான்!
தொலைபேசி!
தொடுவதையே!
துறந்துவிட்டேன்!
யார் கழுத்திலோ!
நீ தாலி கட்டியதிலிருந்து!!
இந்த தொலைபேசி!
தங்கைக்காவது!
வாழ்க்கையை!
வாங்கித்தருமா,!
இல்லை!
மணமாகாத விதவையாய்!
அவளையும்!
விட்டுவிடுமா?!
!
கவசங்களும் காயப்படுத்தும்..!!
!
முட்களை!
எனக்கு!
காவலென்றுதான்!
கருதியிருந்தேன்.!
தென்றல் காதலன்!
தீண்டியதும்!
முதுகை காயப்படுத்தியபோதுதான்!
புரிந்தது!
பூக்களுக்குமட்டுமல்ல!
காதலுக்கும்!
முட்கள்!
எப்போதும்!
எதிரியே என்பது!!
!
காலம் மருந்தா, திராவகமா?!
!
எல்லா காயங்களையும்!
ஆற்றிவிடும் வல்லமை!
காலத்திற்கு உண்டாம்!!
அது ஏன் காதலி!
என் காயங்களை மட்டும்!
காலம்!
ரணமாக்கிக்கொண்டே இருக்கிறது!
உன்னை கனவனோடு!
காண்பித்து,!
காண்பித்து?!
!
நானும், நீயும், காதலும்..!!
!
என் ரணங்களையும்!
வலிகளையும்!
சுமந்து!
ரத்தம் சொட்டச்சொட்ட!
வந்து நிற்கிறேன்!
உன் வாசலில்!
நம் காதல் வேண்டி!!
காதலை!
கோமோவாக்கி!
உள்ளே நீ!
உன் குழந்தையுடன்!
விளையாடியபடி....!!
சாமர்த்தியமா, சதியா?!
!
ஒரே நேரத்தில்!
ஒரு கண்ணால் சிரிக்கவும்!
ஒரு கண்ணால் அழவும்!
உனக்கு!
சாத்தியப்படுவது எப்படி?!
இது!
சாமர்த்தியமா,!
இல்லை!
சதியா?!
இது!
நம் காதலை வளர்க்குமா,!
இல்லை!
என் உயிரை எடுக்குமா?!
!
காதல்!
நான்!
கோபமில்லாமல்!
மிகவும்!
கோபப்படுகிறேன்.!
நீ!
வார்த்தைகளில்லாத மொழியில்!
வசைபாடுகிறாய்.!
நம் காதல்!
சிரித்து நிற்கிறது!
மகளின் வடிவில்!
வலியே இல்லாமல்!!
எதார்த்தம் வலியதா இதயத்தை விட!!
!
தீயாய்!
இருந்த எனக்கு!
திரியானாய்!
நாராய்!
இருந்த என்னில்!
பூவானாய்!
அன்பாய்!
இருந்த போது!
தோழியாய்!
என் கனவுகளின்!
அதிபதி நீ!
என் கவிதைகளின்!
ராஜகுமாரி நீ!
என் ஆத்மாவிற்கு!
நீதான் ஜீவன்!
என் சொகுசுவாழ்விற்கு!
நீதான் வத்திரதாரி!
என் ஆயுள்வரை!
நீதான் காதலி!
ஆனாலும்!
என் மணமேடையில்!
விருந்தாளியாய்!
நீயும் உன் கனவனும்

பூவாய் மலரும் நாள்

வேதா. இலங்காதிலகம்
பூவாய் மலருமொரு நாள்!
பூமியில் இந்த நாள்!
பூவாசனை வீசட்டும் செயலில்.!
பூரிப்பை அள்ளித் தரட்டும்.!
புது அனுபவம் காத்திருக்கும்!
புதுச் சரித்திரம் தொடங்கலாம்.!
பூத்திடும் பல முயற்சிகள் !
பூரணத்துவம் ஆகலாம் நிதம்.!
நீவிடும் பூபாளமாய் விரியும்!
நாள் எம்மை ஆள்கிறதா!!
நாளை நாம் ஆள்கிறோமா!!
கோள்களின் வெற்றி வினையா!!
புதிய உயிர் பிறக்கும்.!
புன்னகை, புளகாங்கித நாளாகும்.!
புகழுடை உயிர் மறையும்!
புதிராகித் துயில் துறக்கும்.!
அவமானம் அள்ளி வராத !
சுயமானம் காக்கும் ஒரு!
வெகுமானம் நிறையும் நாளாகிக் !
கவலைகள் தெரியாத நாளாகட்டும்.!
அருவியென அறிவுச் சாரலான!
அரும் வாசிப்பில் மூழ்கும் !
ஒரு விவரத்திரட்டான !
பெரும் அறிவு நாளாகட்டும்.!
நுரை பொங்கி அருவருப்பூட்டி!
திரையிடும் பல வினைகளிற்கு !
இரையாகும் நாளாகவின்றி!
இரையாகாத நன் நாளாகட்டும்