தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என் பாகிஸ்தான் சகோதரிக்கு!

பால்ராஜன் ராஜ்குமார்
நீ நலமாயிருக்க!
நான் நலமாயிருக்கின்றேன்!
நான் நலமாயிருக்க!
நீ நலமாயிருக்கின்றாயா?!
சீதனமாய்த்தானே கொடுத்தோம்!
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்!
பாகப்பிரிவினைனு!
சொல்லிவிட்டார்கள் பாவிகள்!
நம்முடைய பலத்தை!
அன்பைவைத்து அளப்போம்!
அணுகுண்டுகளை!
வைத்து வேண்டாமே!
நம் நாட்டின் எல்லையில்!
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்!
ஒட்டை விழுவது என்னவோ!
நம் இதயத்தில்தானே!
உன் தேசம் தண்ணீரில்!
மூழ்கியிருந்த போது!
நான் கண்ணீரில்!
மூழ்கினேன்!
உன்மேல் என் அன்பையும்!
என்மேல் உன் அன்பையும்!
சிந்துவும் பிரிக்கமுடியாது!
இந்துவும் பிரிக்கமுடியாது!
நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்!
நான் எப்படி வாழ முடியும்!
ஜெய் பாகிஸ்தான்!
ஜெய் இந்தியா

அலகு தீட்டி சுள்ளி முறித்து!

எஸ்.நளீம்
காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை!
காக்கையென்று கழித்தாயோ!
முற்றம் வந்து குறிசொல்லி!
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்!
மரக்கிளையில் அலகு தீட்டி!
சுள்ளி முறித்துப் பறக்கும்!
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ!
நான் என்ன குறைந்தவனா?!
உற்றுப் பார்க்கும் கண்கண்டு!
கூடு காத்து குழந்தை காத்து!
போராடி வாழ்பவன் நான்!
புயல்காற்றில் பேயாடி!
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக்குடும்பம்!
வீதியிலே வெட்டையிலே!
புத்தளத்துப் புழுதியிலே!
அகதியென அரவணைக்க யாருமில்லை!
கொவ்வைப்பழ வாய்விரித்து!
உம்மா என்னும் என்குஞ்சு பொன்குஞ்சு!
காற்றாடி களைப்படையும்!
களைப்படையா இறக்கையாலே!
சுழன்றாடிக் காத்திருக்கேன்!
மிருகம் நீ!
உன் நெஞ்சில் காதலில்லை கவிதையில்லை!
வாழ்வோரை வாழவிட!
ஈனஇரக்கமில்லை!
உன்னையும் கொல்லுமது!
ஒருபோதும் துப்பாக்கி துணையாகா

அழகு தின்னிப் பறவை!

எஸ்.நளீம்
விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்!
இரட்டைப் பறவைகளாய்!
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல!
அதில் மொய்க்கும்!
ஆடு போல அனைத்தையும் மேயும்!
புறாக்கள் போல!
நட்சத்திரங்களைப் பொறுக்கியுண்டு!
நிலா முட்டியில் பாலருந்தித் திரும்பும்!
ஆடுபோல் ஓரிடத்தில் குந்தி ஓய்வாய் இரை மீட்டும்!
மீண்டும் இரவு விளக்கின் மங்கிய இருளில்!
ஒதுங்கிய மாராப்பில் புகுந்து!
கோழியாய்!
எங்கனும் சீச்சிப் பொறுக்கித் தின்று!
களைப்பில் மயங்கி விழும்

ஆட்சி அவள்நெஞ் சினிலே

எசேக்கியல் காளியப்பன்
வீட்டினின் மனைவி கூட்டிய குழம்பைச்!
சூட்டுடன் அருந்திச் சுவைத்து மகிழ்ந்து!
மாட்சிமை பேசும் மனத்தினன்!
ஆட்சிசெய் யானோ அவள்நெஞ் சினிலே

புலம்பி ஆகுமோ தோழா

எசேக்கியல் காளியப்பன்
சிவந்த வானுமே!
விடியலின் முன்னே!
சிரிக்க மயங்காதே தோழா! -அது!
தவழ்ந்து வீழுமத்!
தணலின் முன்னுமே!
தன்னைக் காட்டுமே தோழா!!
புரட்சி என்பதை!
ஆயு தத்தினால்!
புரிய வைக்கவோ தோழா!--அது!
புயலின் நாசமாய்ப்!
புரட்டிப் போனபின்!
புலம்பி ஆகுமோ தோழா?!

தமது முயற்சி வென்றிடுவீர்

எசேக்கியல் காளியப்பன்
ஓடும் நதியும் சிரிப்பானால்!
உள்ளத் துள்ளே ஒடுங்கிடுமோ?!
தேடும் எதுவும் கைவந்தால்!
தேக்கம் நெஞ்சில் வந்திடுமோ?!
கூடும் நட்பை விரும்பிடுவோர்!
கொடுத்து வாழ மறுப்பாரோ?!
நாடும் உனதாய் நினைப்பாயேல்!
நலிவு செய்வோர் பொறுப்பாயோ?!
உள்ளும் புறமும் சிரித்திடுவீர்!!
உறுத்தும் கவலை மறந்திடுவீர் !!
எள்ளும் கொள்ளும் முகத்தினிலே!
எதற்கு வெடிக்க விட்டிடுவீர்!!
தள்ளும் முள்ளும் வாழ்க்கைதான்!!
தள்ளும் கோப முள்ளினையே!!
வெள்ளத் தோடே செல்லாமல்!
விலகி நீந்தக் கற்றிடுவீர்!!
எள்ளும் வாய்கள் மூடிவிடும்!!
எதிர்ப்பும் தானே ஓடிவிடும்!!
கள்ளும், கழிவி ரக்கமதும்!
கவலை கூட்டும் அழித்துவிடும்!!
வெள்ளை மனத்துக் குழந்தைகளை!
விரும்பி உம்முள் நினைத்திடுவீர்!!
தள்ளிப் போகும் தடைகளுமே!!
தமது முயற்சி வென்றிடுவீர்

ஒரு துளி விழுதே!

லதாமகன்
தெருவெங்கும் காலடித் தடங்கள்!
கதவை தட்டிவிட்டுப் போயிருக்கிறது!
மழை!
சொட்ட சொட்ட நனைந்திருக்கிறது!
காயப் போட்டிருந்த துணி!
நள்ளிரவில்!
விழித்திருக்கலாம் நான்!
ஓடுகள் கழுவும் மழையை!
ஒளிந்திருந்து பார்த்திருக்குமோ!
நிலா?!
குழந்தையை முத்தமிடும்!
தேவதை போல்!
சுவர்களில்!
முத்தமிட்டுப் போயிருக்கிறது மழை

நேசம்

கவிரோஜா
பார்த்தவுடன்
மனதிற்குள் உன்னோடு
உரையாடிக்கொண்டே..
மௌனமாய் கடந்து போகிறேன்..
ஒவ்வொரு நாளும்
உன்னை மட்டுமல்ல;
உன் மௌனத்தையும் நேசிப்பதால்..

எதிர்பார்ப்பு

கவிரோஜா
காத்திருக்கிறேன்…
குறுந்செய்தியாய் உன்னிடம்
இருந்து வருபவை எல்லாம்…
உன் குரலாக என்னோடு..
உரையாடும் என்று...

தேடுவது

செண்பக ஜெகதீசன்
வாலிபம் என்பது !
வணங்காமுடி, !
அது !
வானைப் பார்க்கிறது.. !
வயோதிகம் !
வளைந்து மண்ணைப் பார்க்கிறது- !
தொலைத்துவிட்ட இளமையைத் !
தேடிப்பார்க்கிறதோ…!!