தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அற்புதத்தைக் காட்டு

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மன சாட்சியே நீ யொருதரம் நல்லவனாய் மாறு !
கேவலமான செயல் தனை நன்மையாய் மாற்று !!
இப்புவியில் உன் பிறப்பின் தூய்மையைக் காட்டு .!
மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திப் பாரு !!
கன்னீயரை மிதித்து நிதம் மகிழ்வு கண்டு !
நேயமில்லா படுபாவி !உள்ளங் கொண்டு ,!
வாழுகின்ற காளையர் தம்மை !வாட்டு !
நொந்தழும் பெண்களுக்கு கருணை காட்டு !!
வெளிநாடுக்கு படித்தவரை அனுப்பி விட்டு .!
கொள்ளையருக்கு நாட்டில் இடமிட்டு !
உருமாறும் கொடுமைகளுக்கு அழிவை யூட்டு!
உலகெங்கும் இருளுக்கு ஒளியைக் கூட்டு !!
கண்ணீர்விட்டு கவலைப்பட்டு இந்த மண்ணில் !
வேதனைப் பட்டு வாழுகின்ற அப்பாவி மக்கள் !
நிம்மதி பெற்று உன்னாலே !ஆறுதல் பெற்று!
மகிழ்ச்சியாய் மூச்சிவிடவுன் அற்புதத்தைக் காட்டு !!

மிதக்கும் கனவுகள்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மனசு!
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்!
துடிக்கும்..!
கற்பனைகள்!
என் உள்ளத்தின் உணர்வுகளாய்!
பிம்பம் சேர்க்கும்...!
சுவாசத்தின்!
ஏக்கப் பெரு மூச்சு!
என் கவலைக்கு தீ மூட்டும்!
பிள்ளைப் பேறு நேரம்!
தாய் மடிக்கு வரும் சின்ன ஊற்று!
இதயத்துக்கு குளிர்ச்சியைச் சேர்க்கும்..!
சிசுவின் கதறல்களுக்கு பால்!
கொடுக்க!
என் நெஞ்சுச் சூட்டில் முகம் பதிய!
சின்னக் கரங்கள் விளையாடும்.!
பாசம் சுரந்து!
தாய்மையின் உணர்வுகளில்!
என் மன விழிகள்..!!!
ஆத்மாக்களின்!
பரிதாப அவலங்கள்!
காணாமல் போக!
சிசுக்களின் பிறப்புக்களில்!
இதயம் மகிழும்...!
இல்லற வாழ்விலே!
இணைந்து போக!
கனவுகள் மிதக்க!
என் தமிழைப் போல்!
எழுத்துக்கள் கவிதையாகும்!
கலையுலகில்

வெளிச்சத்துக்கு வந்து விடு

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
நீ!
வெளிச்சத்தின்!
விலாசத்தை!
விசாரிக்கிறாய்!
பிறரிடம்!
அது உன்!
விழி வாசல்களில்!
உட்கார்ந்திருப்பதை!
உணராமல்!
சமூக விலங்குகளுக்கு!
சத்தியம் செய்து கொடுத்தாய்!
சத்தியம் எது!
என்று உணராமல்!
இப்போது!
உன்!
உடல் காட்டுக்குள்!
உணர்ச்சித் தீ!
அடிக்கடி!
பற்றிக் கொள்ள!
நீ!
அவதிப்படுகிறாய்!
வெளியுலகத்திற்கு!
நீ தூய்மையானவள் தான்!
இருந்தாலும்!
உள்ளத் தூய்மைக்கு!
உணர்ச்சித் தூரிகை!
உரசி உரசி!
அடிக்கடி!
வண்ணம் தீட்டுகிறதே!
உணர்துக் கொள்!
இன்னும் உன்!
உணர்ச்சிக் கலை!
உறங்கவில்லை என்று!
இங்கே!
ஒரு சோலைவனம்!
உனக்காக காத்திருக்க!
நீ ஏன் இன்னும்!
பாலைவனத்துக்கு!
பல்லைக் காட்டுகிறாய்!
போலி வாழ்க்கைக்கு!
கட்டிய தாலியை!
கழற்றி எறி!
உனக்காக ஏற!
இன்னும் ஒரு தாலி!
இங்கே காத்திருக்கிறது!
உன்!
உணர்ச்சித் தொட்டாக்களே!
ஒரு நாள்!
சமூக விலங்குகளை!
சுட்டு வீழ்த்தும்!
அதற்கு முன்னே!
கழற்றி!
எரிந்து விட்டு!
நீயே வந்து விடு!
இருட்டுக்குள் நீ!
குருட்டுக் கண்!
கண்டது போதும்!
இனி!
வெளிச்சத்துக்கு வந்து விடு......!

அதிகாலை கண்விழிப்பில்

ராம்ப்ரசாத், சென்னை
நீல வானத்தில்!
இமை, குடை விரித்து,!
இரவு உறங்க சென்ற!
இனிய காலையில்,!
கண்விழித்தேன் கண்மணி!
உன் நினைவுகளுடன் ...!
ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும்!
நொடிப் பொழுதுகளில் மறைத்து வைத்து!
சலனமின்றி சீராய் பயணிக்கும்!
காலத்தின் வழித்தடத்தில்!
என் காதலுக்கும் சிறிதளவேனும்!
இடம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்!
இன்றைய பொழுதை துவக்க!
ஆயத்தமாகிறேன் ...!
ஆச்சர்யமோ அதிர்ச்சியோ!
எதுவாக இருந்தாலும்!
ஆண்டவன் விட்ட வழி என்று!
கடந்து போவதும்!
அடுத்து வருவதை எதிர்கொள்வதுமே!
நிதர்சனம் என்றானபிறகு!
அதிகாலை கண்விழிப்புகளில்!
அவ்வளவாக சுவாரஸ்யம்!
கூடியதாக தோன்றவில்லைதான் ......!

அட்சராப்பியாசம்!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அப்பா தோளில் அமர்ந்தபடி!
அவர் தலையை!
இறுகப்பிடித்துக் கொண்டு!
நான்!
பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன்!!
உயிரெழுத்து மெய்யெழுத்து!
மட்டுமே எழுத்தாணியால் எழுதப்பட்ட!
மஞ்சள் தடவிய!
பனை ஓலைச் சுவடி!
அப்பா கையில்..!
சென்ற வாரம்தான்!
என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்!
வாழையிலையில் நெல் பரப்பி!
மாணவர்கள் ஆசிரியர்கள் சூழ!
ஸ்ரீநிவாச ஐயர்!
என் விரல் பிடித்து!
'அ' எழுத!
என் கவனம் எதிரில்!
பித்தளைத் தாம்பாளத்தில்!
பொட்டுக் கடலை - நாட்டுச்சர்க்கரைக்!
கலவையில் இருந்தது!!
ஒரு வாரம் முழுவதும்!
மனம் வீட்டில் இருக்க!
உடம்பு மட்டும்!
பள்ளிக்கூடம் போய் வந்தது!
பதினோரு மணிக்கு!
சிறுநீர் கழிக்க அனுமதித்த நேரத்தில்!
நான் வீட்டில்

முத்துமழை!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
உன்னிடம் சொல்ல நினைத்து!
நான் சொல்லாத ஒன்று!
கணந்தோறும்!
மனத்தில் உறுத்தி உறுத்தி!
நெடுநாட்கள்!
புதைந்தே கிடந்ததால்!
ஒன்று ஆயிரமாகி!
சிறகுகள் முளைத்து!
பூமி கிழித்து மேலே வந்த விதைகள் போல்!
என்னை மையப்படுத்தி!
மனப்பிரந்தியம் முழுவதும்!
சுற்றிச்சுற்றி அலைகின்றன!
காலூன்ற நிலம் தேடும்!
தவிப்பிலான என்முன்!
உன் வலிய கரம்!
என் மென்கரத்தை யாசித்துப்பெற!
நீ முத்தமிடுகிறாய்!
அப்போது என்னுள் பறந்த !
முத்துகள் எல்லாம் சிறகிழந்து!
மழையாய்ப் பொழிந்து!
நம்மை ஆசீர்வதிக்கின்றன!
முத்துமழை!
தொடர் முத்தமழைக்கான!
இனிய சமிக்ஞை போல்...!

விளக்கு

வித்யாசாகர்
உள்ளே !
ஒரு விளக்கு எரிவது !
தெரிகிறது..!
இப்போதெல்லாம் !
அந்த விளக்கு இங்குமங்குமாய் !
அசைகிறது!
சட்டென !
அணைந்துவிடுமோ !
என்றொரு பயம்கூடஎனக்கு !
பயத்தை அகற்றி !
இங்கொன்றுமாய் !
அங்கொன்றுமாய் வந்து சில கைகள் !
விளக்கை மூடிக்கொள்கின்றன !
மூடிய கைகளின் அன்பில்!
அணையாது எரிகிறது !
அந்த விளக்கு!
அது எரியும்!
எரியும் !
யாரும் கல்லெறிந்து விடாதவரை!
அது எரியும்..!
அதற்குப் பெயர் நான்

சிரிப்பு

வித்யாசாகர்
பாவம்!
புண்ணியம்!
ச்ச ச்ச ஒரு மண்ணுமில்லை,!
இந்த நொடி கிடைக்குமா!
கொஞ்சம் சிரித்துக்கொள்ளலாமென்று!
ஏங்கும் பொழுதுகளைத் தேடிவையுங்கள்..!
யாருக்கும் !
வலிக்காமல் சிரிக்க முடியுமா !
சிரித்துக்கொள்ளுங்கள்..!
மரணத்தை மிட்டாயாக்கிக் கொள்ளும் !
சிரிப்பு தான்!
வாழ்வின் பரிசு!
சிரிப்பை பரிசளியுங்கள்!
சிரிப்பு புரிவதற்கே !
வயது நூறைக் கேட்கும் பணநோய் வேண்டாம் !
அந்த நோய் !
மிக கொடிது !
பணம் பெரிய விசம்..!
பணமென்பது காலணியைப் போல !
வாசலில் கிடக்கட்டும் !
அவசியமெனில் அணிந்துக் கொள்வோம்!
அதை யாரும் எடுத்துவைத்துக்கொள்ள !
மாட்டார்கள்!
முட்டாள்கள் பதுக்கிவைக்கலாம் !
பதுக்கிக் கொள்ளட்டும் !
அவர்களை விட்டுவிடுங்கள் !
அவர்கள் சிரிப்பால் சபிக்கப் பட்டவர்களாக !
இருக்கலாம்!
நீங்கள் சிரித்துக்கொண்டேயிருங்கள் !
இருப்போரை சிரிக்கவையுங்கள்..!
சிரிப்புதான் !
பிறப்பின் பரிசு..!

உயிர் விளக்கு!

வித்யாசாகர்
மரணத்தை தொடும் !
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?!
அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள் !
எத்தனை முகத்தை !
நினைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறீர்கள் ?!
செய்த நல்லதும் கெட்டதுமெல்லாம்!
பயமுறுத்தும் தருணத்தைவிட!
அந்நேரத்தில் !
உயிர்த்திருப்பது அப்படியொரு கொடிது!
நிறையப்பேரைப் போல !
நானுமப்படி !
சில சமயங்களில் !
உயிர்த்துக் கிடக்கிறேன் !
அப்போது வலி' அப்படி வலிக்கிறது !
பயம்' ஓடும் ரத்தமெல்லாம் பரவுகிறது !
வலிக்க வலிக்க !
உடன் இருப்போரை நினைப்பேன் - அது!
இன்னும் வலிக்கும் !
ச்ச என்ன இது வலியென்றுப் !
பிடுங்கி ஓரமெறிந்துவிட்டு !
உடனிருப்போருக்காய் அமர்ந்துக் கொள்கிறேன் !
இப்படி நான் பிடுங்கி பிடுங்கிப் போட்ட !
எனது வலிக்குள் இன்னும் !
ஆயிரம் உயிர் விளக்குகள் எரியும்!
ஒரேயொரு எனது !
இருளும் பொழுதிற்குள் !
ஆயிரம் விடியல்கள் விடியும் !
விடியலில் எரியும் விளக்கொன்று !
அதன்பின் எனக்காகவும்தான் !
எரிந்துப் போகட்டுமே போ..!

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

வித்யாசாகர்
ஒன்று சேர்!
ஏனென்று கேள்!
எட்டி சட்டைப்பிடி!
இல்லை - மனிதரென்று தன்னைச்!
சொல்லிக் கொள்வதையேனும்!
நிறுத்து;!
தன் கண்முன்!
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு!
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -!
அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து!
நம்மை மனிதரென்று சொல்ல!
நாக்கூசவில்லையோ???!
கண்முன் படம் படமாய்!
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து!
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த!
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?!
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???!
மூடி இருந்த கண்கள்!
இன்று திறந்தேனும் இருப்பது நன்று!
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்!
அவிழ்த்து விடு உறவே;!
என் தாயைக் கொன்ற!
என் மகனை கருவறுத்த!
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற!
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு!
கோபத்தை - அங்கே கடைசித் தமிழனொருவன்!
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;!
ஒருவரைக் கொன்றதால்!
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்!
பலரைக் கொன்றவனை!
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை!
ஏனென்று தட்டிகேள்;!
தமிழன் எனில்!
தண்ணீர் தெளித்து விடப் பட்டவனா?!
கேள்வி கேட்க யாருமற்றவனா?!
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???!
இல்லையென்று பறைசாற்று;!
தெருவில் செல்கையில் ஒருவன்!
இடித்துச் சென்றாலே கோபம் வரும்!
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து!
படம் பிடித்து!
எள்ளிநகைத்து!
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?!
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???!
என்ன செய்தோம் நாம்?!
இனி என்ன செய்வோம் நாம்?!
வாய்மூடி காணொளி பார்த்து!
போஸ்டர் ஒட்டி!
செய்தியில் பேசி!
கூட்டம்போட்டு!
கண்ணீர்விட்டழுது!
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி!
காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை!
கோழையென்று எழுதிக் கொள்வோமா?!
இறந்தவரையெல்லாம்!
நஞ்சு எரித்து சுட்டவன்!
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்!
ஒரு தீக்குரல் கொடுத்து -!
தன் இருப்பினை ஒற்றுமையை!
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?!
போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை!
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்!
தோலுரிக்க வேண்டாமா?!
உரிப்போம்!
இனி உரிப்போமென சூளுரைப்போம்;!
தமிழர் பற்றிய ஒரு அசட்டை!
அவன் உயிரின் கடைசிப்!
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்!
தீப்பந்தமேந்தி -!
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்!
மீதெறிவோம்;!
கையுடைந்து!
காலுடைந்து!
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று!
அலறிய மக்களின் காணொளிகளை!
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்;!
நடந்தது தவறு!
இத்தனை அப்பாவி மக்களைக்!
கொன்றது பெருங்குற்றம்!
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு!
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்!
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்;!
இத்தனை வருடம்!
மறைமுகமாய் அழித்தான்,!
இன்று வெளிப்படையாய் கொன்றான்!
நாளை ?!
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்!
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்!
குத்துவோம்;!
அவன் நாடு!
அவன் ஆட்சி!
எதுவாகவேனும் இருந்துப் போகட்டும், அங்கே!
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்!
ஒன்று சேர்;!
ஏனென்று கேள்;!
எட்டி அவன் சட்டைப் பிடி;!
எழுந்து நாலு அரை விடு;!
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்;!
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;!
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா!
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி