தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அரசியல்

சாந்தி
நடைபாதையில் தடங்களாய் கிடக்கும் !
சிறுபாறையை ஒதுக்கிப்போட !
யோசித்து ஒதுங்கினேன்... !
ஆளின்றி வழிந்தோடும் தெருக்குழாயை !
மூடத்தோன்றாமல் கண்மூடி !
கடந்து சென்றேன்... !
பாதையை கடக்க குருடனொருவன் !
உதவி கேட்கையில் !
அவசரமாய் உதறித்தவிர்த்தேன் !
சுமைதாங்காது உதவிக்காய் எதிர்பார்த்து !
ஏங்கி நின்ற பெரியவர்கண்டு !
எள்ளி நகையாடினேன்... !
எனைப்பார்த்து !
சரியாகத்தான் சொன்னான் !
ஜோசியக்காரன்..!! !
பின்னாளில் !
பொதுசேவையில் ஈடுபட்டு !
மக்களுக்கு சேவை செய்ய தேவைப்படும் !
லட்சணங்கள் அனைத்தும் !
கச்சிதமாய் பொருந்துவதாய்..!!! !
-சாந்தி

வெளிநாட்டுச் செய்திகள்

றஹீமா-கல்முனை
வறுமையும்!
இந்த கிடுகு குடிசையும் தான்!
மத்திய கிழக்கு மண்ணை!
நோக்கி!
என்னை!
தூர நகர்த்திட்று.... !
தோளில் பயணப்பொதிகளின்!
சுமைகளோடும்....!
மனசு பூராவும்!
எம்மாத்திரம்!
ரணங்களோடும்!
போய்வருவதாய் சொல்லி!
விடைபெறுகிறேன்..... !
அப்போதைக்கு!
யாரும் என்னை!
தடுத்து நிறுத்தவேயில்லை!!! !
குழந்தைகள்!
குதூகலிப்பிழந்து....!
கண்களைகசக்க!
வீட்டு மூலையில் இருந்து!
உம்மாவின்!
முணகல் சத்தம்!!!!
அவர் !
தலைகவிழ்ந்தபடி!
பேசாமல் நிற்க!
நான் விடைபெற்றேன்!!! !
மத்திய கிழக்கு மண்ணை நோக்கி!
என் விலாசம் நகர்த்தி....!
பணிப்பெண்ணாய்!
இப்போதைக்கு நான் !
சொல்லமுடியாத!
துயரங்களுக்கு நடுவிலும்!
புழுவாய் நெளிந்து..... !
ஊறிப்பொழிந்த!
வியர்வைகளை!
பத்திரப்படுத்தி பணமாக்கி!
என் விலாசம் நோக்கி!
நகர்த்தி !
சில வருடங்களின்!
தொலைவில்!
அவருக்குப்பிடிக்கும்!
குழந்தைகளுக்குப்பிடிக்கும்!
என!
வாங்கிக்குவித்ததை எல்லாம்!
தோள்களில் சுமந்தபடி..!
மறுபடியும்!
என்!
பிறந்த மண்ணில்!
வந்து வீழ்கிறேன்!!!! !
எம்மாத்திரம் சந்தோசம்!
எம்மாத்திரம் கனவு.... !
ஊரே மாறிப்போயிருந்தது;!
கிடுகு வேலிகள் தொலைந்து!
மதில்களில் ஒரு!
கம்பீரம் தெரிந்தது..... !
அரைகுறையாய் கிடந்த!
வீடுகள் எல்லாம்!
நாகரீகத்துக்குள்!
பக்குவப்பட்டிருந்தன.....!!! !
விரைவைக்கூட்டி நடக்கிறேன்!
வீடு வந்தது....!
முற்றத்திலேயே!
முறிந்து விழுந்தது!
என் - முகம் !!!!!!!!!!!!!!
போகும் போதிருந்ததை விடவும்!
பொத்தல் விழுந்து!
இத்து இறந்து போய்!
என் - குடில் !!! !
வயசுக்கு வந்த மகளோடு....!
வயதான!
என் - உம்மா !
விஷயம் அறியாமல்!
தேடிப்போனபோது!
அவர் !
நின்றிருந்தார் !!!!
போகும்போது நின்றிருந்தாரே!
தலைகவிழ்ந்தபடி ......!
அப்படியேதான்!
இப்போதும் நின்றிருந்தார் !
அடுத்த தெருவில் இருக்கும்!
இன்னொருத்தியின்!
முற்றத்தில்

ஏழை நீயிது மறவாதே

எசேக்கியல் காளியப்பன்
பார்த்து இரசி!
படுத்துத் தூங்கு!
பாடி எழுப்ப நினையாதே!!
கூர்த்த மதியினர்!
கோடியில் உள்ளனர்!
கூவி யழைக்க முனையாதே!!
சேர்ந்து நின்றிடு!
செய்கை யற்றிறு!!
சேதம் கண்டு கொள்ளாதே!!
ஊர்ந்து செல்பவர்!
ஊரில் பலபேர்!
உதைத்துக் கொண்டு செல்லாதே!!
எங்கே இலவசம்!
அங்கே சென்றிடு!!
எதையோ நினைத்து மறுக்காதே!!
இங்கே விதிவசம்!
இதுவே பரவசம்!
ஏழை நீ அது மறவாதே!!

பரம்பரை நோய்

நீச்சல்காரன்
விக்கலில் எகிறிக் !
குதித்த சிறு குடல் !
ஏமாற்றத்துடன் !
புரண்டு படுத்தது!
சுவாசத்துடன் உள்சென்ற !
பிராணவாயு ஓட்டியசுவறொன்றில்!
முட்டிக் கொண்டு!
பெருமூச்சாய் ஏக்கப்பட்டது!
உயிருப்பை உறுதி செய்ய!
பொறுப்பான ஒரு சுய !
சமிக்ஞைக் கருவி !
வயிற்றைவிட்டால் வேறில்லை!
வயிறு உறுமிக் !
காட்டிக்கொடுத்த பசிக்குத் !
ஆயுள் முழுதும் தீனி!
போட்டாக வேண்டும்!
இரண்டு துளைகளுக்கு !
நடுவே நடக்கும் !
பட்டினிப் போரில்!
பசி பிறந்து விடுகிறது.!
பசியோடு தொடங்கியது!
பசிக்கு இயங்கியது!
பசியால் வளர்ந்தது!
பசிக்காக மடியுது உலகு!
புத்தகத்தில் படித்து இதுவென்று !
புரிந்து கொண்டனர் -பணவான்கள்!
பரம்பரை நோய் இதுவென்று !
பழகிக் கொண்டனர் -பாட்டாளிகள்

சபிக்கப்பட்டவனின்.. விடியல்

ப.மதியழகன்
சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை.. !
01.!
சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை !
-------------------------------------மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற!
விலங்காய்ப் பயன்படுவான்!
குருதியை யாரும் கண்டதில்லையா!
அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-!
என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்!
கண்கள் மூடியே இருக்கும்!
காணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்!
வாய் இறைவனின் நாமத்தை!
மறந்தும் உச்சரிக்காது!
தப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ!
என்ற அச்சத்தில்!
காதுகள் எப்போதும்!
துரோகச் செயலின் திட்டங்களை கேட்டே!
நரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்!
வாழ்க்கை துக்கமாகும்!
மரணம் தாசியாகும்!
எப்பொழுதும் அதைத் தேடியே!
மனம் ஓடும்!
உலக இயந்திரம் அவனை!
கரும்புச் சக்கையாய்ப் பிழியும்!
பெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென!
தண்ணீரில் கலந்து குடிக்கும்!
இப்பூலகில் கொடிய வேதனையை!
அனுபவித்தவன் மரணித்தால்!
சொர்க்கத்தில் வாயிலை தெய்வம்!
வந்தா திறக்கும்!
அப்படி திறந்தால்!
அவன் கடவுளல்ல!
விழிப்புணர்வு பெற்று!
தட்டுபவனே கடவுள்!
திறப்பவன் அல்ல!
கைவிடப்பட்ட இவ்வுலகில்!
உன் மீது அறையப்படும்!
ஒவ்வொரு ஆணியும்!
உன்னை புனிதப்படுத்தும்!
உயிர்த்தெழுதல் அன்றல்ல!
இன்றும் நடைபெறலாம்!
இன்னொரு யுக புருஷன்!
அவனாகலாம்!
அவன் உங்கள் எதிரிலேயே!
நடமாடலாம். !
!
02.!
விடியல் !
-----------------!
கானக்குயிலோசை காற்றில்!
மிதந்து வருகிறது!
கதிரவன் பொன்னொளியால்!
வானம் ஜொலிக்கிறது!
மேகக்கூட்டம் தேர்போல!
ஊர்வலம் செல்கின்றன!
கடலலைகள் ஓடிவிளையாடி!
இந்த இனியநாளை வரவேற்கின்றன!
மலர்களின் மணம் வண்டுகளின்!
உறக்கத்தைக் கலைக்கிறது!
மரங்கள் தென்றலின் ஆரத்தழுவலால்!
கூச்சம் கொள்கின்றன!
குழந்தைகள் கனவுலகில் கடவுளுடன்!
விளையாடிக் களிக்கின்றன!
நதிவெள்ளம் கடலரசனைத் தேடி!
தன் பயணத்தைத் தொடர்கிறது!
மனிதர்களுக்கோ ஆயுளில் மற்றுமொரு நாள்!
காற்றோடு கரைகிறது. !
மனிதம் தொலைத்த மானுடமே... !
இரைச்சல்கள், ஒலிப்பான்களின் சத்தங்களுக்கு!
மத்தியில்!
குயில் கூவுவது காற்றலைகளிலேயே!
அமுங்கிப் போனது!
திரேதா யுக ராமனுக்குப் பிறகு!
உத்தமன் எவனும் பிறக்கவில்லையென!
நிரூபிக்க எனது முதுகில் உள்ள!
மூன்று கோடுகளே போதுமென்று!
உண்மையை உணர்த்திச் சென்றது அணில்!
ஈஸ்வரன் என்று விளிக்கப்படுபவர்கள்!
இரண்டுபேர்!
ஒருவருக்கு நந்தி வாகனம்!
இமனொருவருக்கு இந்தக் காகம்தான்!
வாகனமென்று!
மார்தட்டிக் கொண்டு அலைந்தன காக்கைகள்!
தனிமனித சுதந்திரத்துக்கு!
தன்மானக் குரல் கொடுக்கும் ஆபத்பாந்தவன்கள்!
எனது சிறகை ஒடித்து!
கூண்டில அடிமைப்படுத்துவதென்ன நியாயம்!
என மனிதர்களைச் சாபமிட்டு!
உயரப் பறந்தது, சற்று முன்பு!
கூண்டுக்குள்ளிருந்து தப்பித்த பச்சைக்கிளி!
எங்களை நகரங்களை விட்டுத்!
துரத்தியாயிற்று!
அடுத்து நாட்டை விட்டே விரட்டியடிக்க!
சட்டம் போடுவார்கள் போலிருக்கு!
என சிட்டுக்குருவிகள்!
தனது ஆதங்கத்தை பதிவு செய்துவிட்டு!
சிட்டெனப்பறந்தன!
தனக்கு உணவாவதை பண்ணைகளில் வளர்த்து!
தனக்கு உதவாததை அலட்சியப்படுத்தி அழித்து!
மனிதர்களுக்கு மட்டுமாய் இவ்வுலகை!
மாற்றப் பார்க்கிறார்கள்!
எப்பொழுது அவர்களின் மனங்கள்!
விசாலமடைகிறதோ!
அப்போது உணர்வார்கள்!
இவ்வுலகத்தை புத்துயிர்ப்புடன் இயங்கச்செய்வது!
நாங்கள்தானென்று!
பால்யத்தில் இயற்கையைக் கண்டு!
குதூகலமடைந்த மனித மனங்கள்!
பருவமடைந்து பின்னர் பகடைக்காயாக!
எங்களை உருட்டி விளையாடுவதேன்!
என புலம்பிச் சென்றன!
மனிதர்கள் இல்லாத கானகத்திற்கு!
புலம்பெயரும் நாரைகள்

கருவை சுமப்பது எப்படி?

நளாயினி
என் கருப்பையை !
எப்போதும் !
மூடிவைக்கவே !
விரும்புகிறேன். !
என் வாழ்வே !
பயங்கரமானதாகிற போது !
எப்படி? !
அகதி வாழ்வும் !
அவலப்பெயர்வும் !
பதுங்கு குளியும் !
பாய் விரித்து !
படுக்க முடியாத !
நிம்மதியற்ற !
இரவும் !
எப்போது நான் !
பாலியல் !
பலாத்காரத்திற்கு !
ஆளாவேனோ என்பதுவும் !
வசந்தமில்லா வாழ்வும் !
நம்பிக்கை சிறிது மில்லா !
பாலைவன மனதும் !
எக் கணமும் !
என் உயிர் பறிக்கப்படலாம் !
என்கின்ற உண்மைகள் !
எல்லாவற்றையும் !
மறைத்து !
எப்படி !
ஓர் உயிரை !
என் கருப்பையில் !
சுமப்பது? !
-- நளாயினி தாமரைச்செல்வன்

கார்காலம்

இரா.சி. சுந்தரமயில்
நம்மில் யாரேனும்!
ஒருவரையாவது!
அனைத்து முத்தமிடமாட்டானா!
என்று!
சூரியனின் வருகைக்காக!
தாமரைகள் காத்திருந்தபோது!
முகிலவன் வந்து!
தடுக்க முயன்றான்!
மலர்களுக்குள்!
சண்டை வருமென்று.!

யாரும் பார்க்காதவை

கவிமதி
கவிமதி !
யாரும் !
பார்க்காதவேளையில் !
மீன்கள் நீந்துவதை !
நிறுத்தியிருக்கக்கூடும் !
யாரும் !
பார்க்காத வேளையில் !
இரண்டு நிலாக்கள் !
பாதிசூரியன் !
பிளந்தவானமென்று !
எத்தனையோ மாற்றங்கள் !
இப்பிரபஞ்சத்தில் !
நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதென்பதை !
யாரும் !
பார்க்காதவேளையில் !
பார்த்தவர்கள் சொன்னாலும் !
பார்க்காதவர்கள் !
ஏற்றுக்கொள்வதேயில்லை !
யாரும் !
பார்க்காதவற்றை !
கூட்டம்கூட்டி பார்க்கவைக்கவும் !
அவசியமில்லை

உவமானமில்லாத உவமேயம்

காருண்யன்
என் அலர் அகவைகளில் ஒரு நாள் !
அந்த இங்லிஷ்படம் என்னைக் கிளர்த்தும்வரை !
எனக்கு முத்தங்கள் பற்றியோ அதன் !
வகைகள் பற்றியோ சத்தியமாய் ஒன்றுந்தெரியாது !
இங்கிலிஷ் பெண்களுக்கு எங்கேபோவது !
ஆனாலும் முத்தம் தரக்கூடிய !
அனைத்துப் பெண்களிடமும் !
தவறாது பெற்றுக்கொண்டேன் !
ஒவ்வொரிவரிடத்தும் !
வார்த்தை வயப்படுத்தமுடியாத !
ஒவ்வொரு சுவை !
தேனென்றும் கள்ளென்றும் கனியென்றும் !
சொல்லப்பட்டிருக்குத்தான் !
ஆனாலும் அது !
உவமானம் இல்லாத உவமேயம் !
அந்த மூன்று நாட்களிலும் !
ஆரோக்கியக் குறைவானவேளையிலும் !
(சம பாலாரிடமும்) !
இதழ்கள் அவ்வளவாய்ச் சுவைப்பதில்லை !
நான் முதலிரவில் ஸ்ராராமனாய் !
அவளை அணைத்து !
முத்தம் தந்தானதும் கேட்டாள்: !
பிரண்டையைக் கடிச்சமாதிரி !
என்னாங்க இது?

வானும் எனதும்.. என்னுடையது

ப.குணசுந்தரி தர்மலிங்கம்
01.!
வானும் எனதும்!
-------------------------!
நானும் எனதும்!
சுழியில் விரிந்து!
விளிம்புகளை இழக்கும் !
நீருருவாய் பேச்சு!
அவளின் !
இதுவரையிலான ஆதங்கத்திற்கு!
வடிகாலாகவும் இருக்கலாம்!
உறுத்து விழிக்கும் !
ஆங்காரத்துள் ஏமாற்றம் விரிய!
உயிர்காற்றில் !
பிசுபிசுக்கிறது தோற்றம்!
இனமறியாத!
மனத்தின் நெருடலில்!
எதிர்பார்ப்புகள் மொன்னையாக!
ஏற்பும் மறுப்பும் வெறுமையாக்குகிறது.!
திடீரென கனக்கும்!
நெஞ்சுக்கூட்டில் சமாதானமாகாமல்!
பிசைகிறது கண்டம்!
கண்முன் விளக்கமாகும் !
மண்ணுடனான உறவில்!
ஒவ்வொரு மணித் துளியிலும் !
பதிய விரும்புகிறேன்!
அதிர்வின் !
காலமும் அகலமும் கணிக்க!
கரையை அகலப்படுத்தினால்!
உள்சரிகிறது மணல்!
முகச்சுருக்கத்தில் !
அழுவதுகூட அவமானந்தான்.!
நடப்பை !
இமைக்குள் நிருத்தி!
சவமாய் கிடைக்கையில்!
முடியாததும் புரியாததும்!
மண்ணில் அழுந்த!
கைகளின் பிணைப்பை!
நெற்றியில் தாங்கி!
விண் என்ற தெரிப்பில்!
நிதானமாய் !
சுவாசிக்கிறது மனது!
பார்த்ததும்!
சுருக்கத்தைக் கண்ணீராக்குகிற !
நட்பைப் பெறவில்லை!
மயிர்க்கால்களில் ஊறும்!
உவர்க்கசிவின் எரிச்சல்!
மண்ணின் தொடர்பருந்த !
உயிர்களின் தொகையில் !
அச்சம் தருகிறது.!
உவப்பிலியாகச் சபித்தாலும்!
சுற்றியுள்ளவை!
அதனதன் செயல்களில்!
முனைப்புடன்!
வவ்வாலின் எச்சத்தை!
நினைவுறுத்துகிறது!
மண்ணேறிய வியர்வையும்!
நெடிதுயிர்ப்பும். !
02.!
என்னுடையது!
------------------------!
அதைப் பற்றிய பயம்!
இருந்தது இல்லை!
பெரிசா எனக்குப் பட்டது.!
எதையும் சொல்லக் கேக்கிறதை விட!
பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு!
சொல்லுகிற தாத்தா!
எப்பவும் நெனப்புல.!
என்னிலிருந்து!
கரைந்து போகிற !
உயிர்ப்புக்காக வருத்தப்பட்டதில்ல!
நெனச்சும் பார்த்தது இல்ல.!
புத்தகத் தூசியும்!
தட்டினாத்தான் உதிரணுங்கிற !
நெனப்ப மீறி!
ஒவ்வொரு முறையும்!
அது தானே நிகழுது.!
கிழிஞ்சது !
கிழியாதது எல்லாம்!
என் பகுதியில் பத்திரமாய்!
தாத்தாவையும்!
மிஞ்சிட்டன்னு சொல்லுகிற!
அவ பார்வை!
எனக்குள்ள அரிக்கிது.!
வயசானவங்க !
குழந்தைக்குச் சமம்!
எதிர்த்த வீட்டு லட்சுமி பாட்டி!
எப்பவும் குழந்தைதான்ற!
பாப்பம்மாவின் பூசணி வாயில்!
கைகால்களை நீட்டி !
அருவருப்பாய் நெளியும் அது.!
அனுமதியினைத் தாங்கி!
அடையாளமிடப்பட்ட பொருட்களுள் !
ஒன்றாய் அதுவும்.!
வரவை நோக்கிய இருப்பு !
முழுமை அல்ல!
இரண்டன் கலப்பே முழுமை!
அதுவா இதுவா!
எளிதில் வசப்படாத கருத்து!
எப்பொழுதாவது!
அலைக்கழிக்கிறது.!
இருப்பை அந்நியமாக்கும்!
உரு தரும் முழுமையில்!
விலகி நிற்க இயலாது!
எதன் சார்பிலும்!
யாருக்காகவும்!
இழப்பதற்குமில்லை.!
அது என்னுடையது!
ஒவ்வொரு முறையும் தானே நிகழும்