தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அம்மா !உன் நினைவுகள்

தமிழ் ராஜா
அம்மா !உன் நினைவுகள் உன் நினைவுகள் படாத ஒரு!
பொருளை வீட்டில் என்னால்!
காட்ட முடியாது அம்மா!!
நீ கட்டிய சேலை என்!
தலையணையாக மாறியது.!
நீ என் கையைப் பிடித்து!
கற்றுத் தந்த மொழிகள்!
இன்று கவிதைப் படைக்கிறது!
நீ முதன்முதலில் வாங்கிய!
உப்புக்கான டப்பாவைப்!
பார்க்கையில் உன் கைகளின்!
சுவை இன்றும் நாவில் நிற்கிறது!
நீ சொல்லித் தந்தபடி நான்!
விதைத்த கத்திரி இன்று!
நம் வீட்டுக் குழம்பில்!
கமகமக்கிறது.!
இப்படி வீட்டில் நீ கட்டிய!
பந்தலில் வளர்ந்த அவரக்காய்!
மல்லிப் பூ.!
வளருமா? என்று நினைத்த வாழைமரம்!
என எல்லாவற்றையும் நம்!
வீட்டிற்கு வருபவர்களிடம் நான்!
காட்டுகிறேன்.!
உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்!
இதோ என் அம்மாவென்று!
உன் புகைப்படத்தைக் காட்ட!
வைத்துச் சென்று விட்டாயே!!
அம்மா !!
-தமிழ் ராஜா

ஞானம் கலைந்த இரவு

சித்தாந்தன்
யசோதரையுடனான கடைசியிரவில்!
தியானத்தின் ஆழ்நிலையில்!
ஊறிக்கிடந்த புத்தரை!
அரூப நடன தேவதைகள் இழுத்துச்சென்றன!
சூழவும் விருட்சங்கள் வளர்ந்திருந்த!
இன்பச் சோலையுள்!
நகக்கணுக்கள் வழியே நுழைந்த!
மோகக்கனிகளை உண்டு அவர் பசியாறினார்!
பிறகு!
தேவதைகள் யசோதரையின் படுக்கையில்!
அவரைக் கடாசி வீசிவிட்டுப் போயின!
காலை விடிந்தும் ஞான உறக்கத்திலிருந்து!
கலையாதவரை!
தனது தலை மயிர்களினால் மூடி!
மார்போடணைத்து முத்தமிட்டாள் யசோதரை!
புத்தரின் ஞானம் சிதறுண்டு!
யசோதரையின் கன்னங்களில் முத்தமிட்ட!
அவரின் ஞான வெளியில்!
தேவதைகளின் அந்தரங்கங்கள் பூத்து விரிந்தன!
அவர் படுக்கையிலிருந்து இறங்கி!
தேவதைகளின் உலகை!
தேடி அலையத் தொடங்கினார்!
!
-சித்தாந்தன்

இல்லாள்

கணபதி
நீலாம்பிகையே!
நினைவில் நிற்பவளே!
நீ பாடிய நீலாம்பரி இராகத்தில்!
நீயேயல்லவா நிரந்தரமாய்!
நித்திரை கொண்டாய்.!
நான‌ல்ல‌வோ!
நாளும் உனை நினைத்து!
நெஞ்ச‌ம் ஏங்க‌!
முகாரி இராக‌த்தை!
ம‌ன‌த்தில் இசைத்து!
ம‌ய‌ங்குகிறேன்!
ம‌ன‌ம் க‌ல‌ங்குகிறேன்.!
புல் நுனிப்ப‌னிபோல்!
விழுவ‌துபோல் விழாதிருக்கும்!
விழியோர‌க் க‌ண்ணீர்துளிக‌ள்!
வ‌ரும் வ‌ழி அறிந்திருந்தும்!
வ‌ழி த‌வ‌றி நிக்குத‌டி.!
உன் நீங்கா நினைவுக‌ளில்!
நெஞ்ச‌ம் க‌ரைந்துமே உருகுத‌டி.!
நாளும் இமை ஓர‌ம்!
ஈர‌ம் காணுத‌டி.!
உற‌ங்காத‌போது உன் நினைவு!
உற‌ங்கும்போது விழித்திருக்கும் என் க‌ன‌வு.!
புற‌ங்காடு போனாலும்!
இற‌ங்காது உன் ஏக்க‌ம்.!
பாதி கொடுத்த‌வ‌ன் ஈச‌னென்றால்!
முழுதும் கொடுத்த‌ நான்!
பெரும் பித்த‌ன‌ல்லோ

மனக் கிலேசம்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
நித்திரையில் நான்!
நாலுமுறை எழுந்திருப்பேன்.!
பல்துலக்கிக் குளித்திட!
பலமணி நேரம்!
தலை துவட்ட!
தலை முழுகிப் போகும்.!
காலையுணவு ருசிக்காது!
காலை வாரிவிடும்.!
இஸ்திரிகை செய்யாஆடை!
இன்றுமட்டும் என்றுசொல்லும்.!
சைக்கிள் சாவியைத்தேடி!
சலிப்புத் தட்டிவிடும்.!
கடிகாரத்தைப் பார்த்தால்!
கதிகலங்கிவிடும்.!
வேகமாகச்சென்று பின்னர்!
விழிபிதுங்கி நிற்பேன்.!
எரிபொருள் தீர்ந்தது!
என்மூளைக் கெட்டாது.!
எப்படியோ சமாளித்து!
எட்டிப்பிடிப்பேன் கந்தோரை.!
வரவுப்பதிவேடு மட்டும்!
வரிசையாயுள்ள புத்தகங்கள்மேல்!
வலியச்சென் றமர்ந்ததுபோல்!
வாவென்று கையசைக்கும்.!
சிவப்புக்கோடு எச்சரிக்கும்!
இன்றும்நீ 'லேட்' தானென்று.!
முந்தநாள் சம்பவங்கள்!
முழுவதையும் ஏப்பமிட்டதுபோல்!
முகாமையாளர் வீற்றிருப்பார்!
முகாரி என்மனதில்தான்

எங்கள் வீடு

s.உமா
ஆண் பிரசவித்த !
பெண் இவள்.!
ஆண்டாண்டு காலமாய்!
இவளின் ஆளுமைக்கு!
அஸ்த்திவாரமிட்டார்!
ஆழமாய்... !
ஒவ்வொரு கல்லாய் வைத்து!
கொஞ்சம் கொஞ்சமாய்!
முன்னேறி!
நிமிர்ந்து நிக்க வைத்தார்!
கண்டார் கண்படும்!
கொள்ளை அழகாய்... !
பிறகு!
கட்டிக்கொடுத்துவிட்டார்!
எங்களுக்கு... !
எங்கள்!
குடும்ப விஷயம்!
வெளி கேட்காமலும்!
குளிரும் மழையும்!
உள் தெரியாமலும்!
எங்களை!
ஒன்றாக்கி !
அணைத்துச் செல்கிறாள்!
இவள்!
இன்று !
எங்கள் கொண்டாட்டங்கள்!
துயரங்கள்!
எல்லாம் !
இவள் மடியில் !
எங்கள் பரம்பரைகள்!
இவள்!
காலடியில்

கல்லறையற்ற பிணங்கள்

மாலியன்
“ சோழக்காற்றில் சுழண்டது மேகம் - !
மேல் வானிலிருந்து கீழாயும், கீழிருந்து மேலாயும் !
என் நெஞ்சைப்போல் எம் வரலாற்றுப் பாதைகளைப் !
புரட்டியபடி! !
எம் சமுதாய முன்னேற்றப் நோக்கில் (இன்றைய) !
வரலாற்று சுவடுகள் பதித்ததெல்லாம் பூச்சியங்களே; - !
இலக்குகள் இன்றி இயக்கங்கள் முண்டியடித்து !
சண்டைகள் போட்டன தமக்குள்ளே: !
அண்ணனைக் கொன்ற தம்பி, !
தம்பியைக் கொன்ற அண்ணன் !
என்று தம் கட்டுக்கோப்புகளை மெச்சிய வண்ணம் !
யார் தம் மக்களை அடக்கியாள்பவரென்று; !
பல்லாங்குளியாட்டத்தில் வென்றவரிருக்க !
தோற்றவர் பல்லக்குத் தேடி பகைவரையும் அடைந்தனர்! !
மனிதம் இங்கு வாய், மூக்கு, கண், காதுகளுடன் !
பிணங்களின் மத்தியில் கல்லறையில் இல்லாத பிணங்களாய் !
உயிர்ப்பின் அர்த்தங்களைப் புதைத்தபடி! ” !
!
3-1992

காலம் கடந்து போச்சு.. நட்பு அரசியல்

தீபா திருமுர்த்தி
01.!
காலம் கடந்து போச்சு !
----------------------------!
ஆடிப் பட்டம் !
தேடி விதைப்போம் !
மணல் மேடு பார்த்து !
மடி ஏந்தி வந்து !
பணங்கொட்டை !
குருத்து கண்டு !
கிழங்காகுமுன் !
யாரும் அறியாது !
கொட்டை பிடுங்கி !
வெட்டி தின்போம் !
குச்சி செருகி !
ஐஸ் கிரீமாய் !
காட்டி கொடுத்துவிடும் !
பல் விழுந்த கத்தி !
காலங்காலமாய் கரும்பு வெட்டி !
கடன் தீர்த்ததால் !
கை ஓங்கி வரும் !
அப்பாவின் தொப்பைக்குள் !
விரல் விட்டால் !
சிரித்துப் போகும் !
களத்துமேடே !
சின்னதாய் அப்பாவும்! !
கார்த்திகை ஆனால் !
கிழங்கு பிடுங்கி !
சுள்ளி பொறுக்கித் தீமூட்டுவோம் !
குதூகலத்தில் !
மறந்தே போய்விடும் !
அண்ணனின் 'மெஸ்பில்லும்' !
'ஹாஸ்டல் பீசும்' !
இந்த வருடம் !
மாசியில் வந்திறங்கும் !
அண்ணனுக்கு காத்திருந்து !
சேரித்தே போனது !
வெத்தள வள்ளியும்! !
ஆயா உடனான உரையாடலில் !
திரும்பிப் பார்க்கிறேன்.... !
பங்குணியில் இருந்து !
பனங்கிழங்கை !
வயிற்றுப் பிள்ளைக் காரியாய் !
'ஆசைக்கு ஒன்று கூட தின்னவில்லை'! !
02.!
நட்பு அரசியல்...! !
------------------------!
அசுத்தமாகிக் கிடக்கிறது !
நட்புவெளி! !
ஓசோனை முந்திக் கொண்டும் !
கிழிந்து படலாம் !
நட்புப் படலம்! !
சுவாசக் கோளாறுகாலால் !
இப்போதே !
இறக்கவும் நேரிடலாம் !
எவரேனும் மூச்சு திணறி! !
வலுவிழந்து வருகின்றன !
'தோல்விகளையும் !
சுமக்கவிருந்த தோள்கள்! !
இருபத்தோராம் நூற்றாண்டு !
அகராதியில் !
அதிகமாய் இடம் பெறுகின்றன !
அபத்த சொற்கள்! !
கூடி கூடி நடக்கும் !
தண்ணிறைவு ஆலோசனைக் கூட்டங்களில் !
தள்ளி வைக்கவும் தவறுவதில்லை !
துணை முதல்வரை! !
எழுத்துப் பூர்வ !
உடன்படிக்கையில் !
ஒப்பந்தமிட மறுத்து !
ஓடைகள் மீதே !
கையெழுதாகிறது !
அந்தரங்கச் சட்டங்கள்... !
நம்பிக்கை இல்லா தீர்மாணங்கலாய்! !
எப்படி புரிந்துக்கொள்வது.... !
உலகம் !
தட்டை இல்லையே

போ வெளியே புத்தனின் “புத்தா”

தமிழ்ப்பொடியன்
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான்!
கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம்.!
எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே!
எங்களின் கைகளை மெளனித்துள்ளோம்.!
எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”.!
நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”.!
நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்”!
காலங்கள் மாறும் அது விதி.!
கவலைகள் தீரும் அதுவும் விதி.!
“எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ!
“அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!!!
“எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ!
“அது” முழைத்த இடத்தில் நிற்பதையும் மறந்துவிடாதே...!!!!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
ஈழத்தமிழனின் கல்வி எனும் மூலதனம்!
அது கருக்கொண்டு கிடப்பது பல்கலைக்கழகத்தில்...!
அழிக்க நினைக்கிறாய் அடியோடு சிதைக்க வருகிறாய்...!
துப்பாக்கி முனைகளின் கூர்மையும் அறிவோம்!
எழுதுகோல்களின் வலிமையும் அறிவோம்.!
அடக்குமுறை உன்னை அனுப்பியவனுக்கும் புதிதல்ல...!
அதை எதிர்த்து நிற்பது எங்களுக்கும் புதிதல்ல...!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
நாங்கள் என்னடா கேட்டோம் உன்னை?!
உன் வீட்டில் விருந்தா? இல்லை உன் சம்பளத்தில் பங்கா?!
என் இரத்தம் ,என் உறவு, என் தம்பி, என் அண்ணன்!
எத்தனை பேரை சதைக்குவியலாய் கூட்டி அள்ளி !
குழிதோண்டிப்புதைத்தோம்..!
என் பள்ளித்தோழர்கள் பலர் படங்களாய் மட்டுமே சுவர்களில்...!
அவர்களை நினைப்பது தவறென்றால்!
அவர்களுக்காய் ஆயிரமாயிரமாய் ”தீபங்கள்” எரியும்.!
தீபங்கள் ஏற்றுவது தவறென்றால் அவர்களுகாய் !
நினைவு தூபிகள் எழுப்புவோம்.!
அதையும் நீ இடித்தால் அவர்களுகாய் “ஆலயங்கள்” கட்டுவோம்.!
நாசமறுப்பானே உன் “வெசாக்” பண்டிகையில் குழப்பம் செய்யவில்லையே .....!
எதற்காக உனக்கு எங்கள் “கார்த்திகை நாளில்” கடுப்பு?!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
என்னை கேட்காமல் என் படலை திறந்தது தப்பு!
படலை திறந்ததும் இல்லாமல் என் முற்றத்துக்கு வந்தது தப்பு!
திறந்த வீட்டுக்குள் “ஏதோ” நுழைவது போல வந்த நீ!
என்மேல் கை வைத்தது பெரிய தப்பு!
கை வைத்ததும் இல்லாமல் “ சட்டம்” பேசுவது அதை விட பெரிய தப்பு!
இதையெல்லாம் விட உன் ”கைகளில் இருப்பது” மன்னிக்கமுடியாத தப்பு.!
உன் கைகளில் உள்ள இரும்புக் கட்டைக்கு தெரியும் !
எங்களின் நெஞ்சுறுதி..!
ஏனெனில் நேற்று அவை எங்களிடம் இருந்தவை!
இன்று உங்களிடம் இருக்கிறது !
நாளை அவை எவனோ ஒருவனின் கைகளில்...!
இது பகவத் கீதையில் சொன்னது.!
அதே பகவதீதையில் தான் இதையும் சொன்னார்கள்..!
”அதர்மம் தலை தூக்கி ஆடும் போது அதை அழிக்க தர்மம் !
மீண்டும் அவதாரம் எடுக்கும்.....”!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
என் கைகளை வேண்டுமானால் உன்னால் விலங்கிட முடியும்.!
என் கால்களை வேண்டுமானால் உன்னால் கட்டி வைக்க முடியும்.!
என் கண்களை வேண்டுமானால் உன்னால் குருடாக்க முடியும்.!
என் உணர்வுகளை என்ன செய்வாய்? !
என் எண்ணங்களை என்ன செய்வாய்?!
என் கனவுகளை என்ன செய்வாய்?!
என் இலட்சியங்களினை என்ன செய்வாய்?!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
குண்டு மழையிலும் குருதிச்சகதியிலும் வாழ்ந்தவர் நாங்கள்!
ஆயிரம் ஆயிரமாய் மரணங்களினை கண்டவர் நாங்கள்!
பட்டிணியிருந்து பசியால் மெலிந்தவர் நாங்கள்!
எத்தனை இடர் வரினும் எழுதுகோல்களை கைவிடாதவர் நாங்கள்!
எங்களின் இன்னொரு கை சும்மாதான் கிடக்கிறது இப்போது....!
அதில் என்ன தரப்போகிறாய் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்.!
கார்த்திகை செடிகளை எல்லாம் வேரோடு புடுங்கி எறிந்து !
கொக்கரிக்கும் கோதாரி விழுவானே....!!!!
அதன் “கிழங்குகள்” எல்லாம் மண்ணில் !
விதைகளாய் கிடப்பதை மறந்துவிடாதே...!
நில்..!
வெளியே புத்தனின் “புத்தா”

புகைக்குப் பின்

அய்யா.புவன்
அடிமை போல ஆனேன் உன்னால்!
ஒவ்வொரு முறையும்...!
பிரிய முடியவில்லை உன்னை...!
நீ என்னை அணு அணுவாக!
கொல்வது தெரிந்தும்...பிரிய முடியாமல்!
வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும்!
துணையாய் இருந்து கொண்டு...!
இதயத்தையும்...சுவாசப் பையையும்!
ரணமாக்கினாய்...இப்பொழுது உன்னை!
பிரிய தயாராக!
இருக்கிறேன்...முடியவில்லை!
மறக்க!!
உனை சுவாசிக்கும் நேரங்களில் உலகையே!
மறந்த நாட்கள் அதிகம்...!
போய் வா! நாளை சந்திப்போம்!...!
இவ்வாறாக நாட்களை கடத்தி!
கொண்டு! ஏக்கத்துடன் உனை நினைத்து!!
காதலைப் பிரிந்த போது கூட!
இந்த வலி தெரியவில்லை....!
உணர்கிறேன்! உனைப் பிரிந்த சில நிமிடங்களிலே!!
இரு நிலைகளும் ஒன்று தான்!!
ஒன்றை இழந்தால் தான்!
மற்றொன்று!
கிடைக்குமாம்..!
எதை இழந்து எதை கிடைக்க!!
அய்யா.புவன்

கனவு நிலை உரைத்தல்

இரவி
இரவி!
ஆரம்ப பிடிமானம்!
குறைந்துதான் போய்விட்டது!
காலியான!
தேநீர்கொப்பையைக்!
கீழ்வைக்கையில்!!
•!
தாகத்தைப்!
புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்!
தண்ணீரளவுக்கு.!
•!
எத்தனையோ!
பேனா திறப்புகள் மூடப்படுவதுண்டு!
எழுதலற்று.!
•!
எந்தப்புள்ளியில்!
தொடங்கி முடித்து வைக்கப்பட்டிருக்குமோ!
தெரியவில்லை!
இந்தக் கோலம்.!
•!
ஆந்திரா வரை சென்றழியும்!
புழுதி படிந்த லாரியில்!
என் பெயர்.!
•!
தென்னையும் பனையும்!
கள் சுரந்து எதிர்க்கிறது!
காந்தியை