அரசியல் - சாந்தி

Photo by Jr Korpa on Unsplash

நடைபாதையில் தடங்களாய் கிடக்கும் !
சிறுபாறையை ஒதுக்கிப்போட !
யோசித்து ஒதுங்கினேன்... !
ஆளின்றி வழிந்தோடும் தெருக்குழாயை !
மூடத்தோன்றாமல் கண்மூடி !
கடந்து சென்றேன்... !
பாதையை கடக்க குருடனொருவன் !
உதவி கேட்கையில் !
அவசரமாய் உதறித்தவிர்த்தேன் !
சுமைதாங்காது உதவிக்காய் எதிர்பார்த்து !
ஏங்கி நின்ற பெரியவர்கண்டு !
எள்ளி நகையாடினேன்... !
எனைப்பார்த்து !
சரியாகத்தான் சொன்னான் !
ஜோசியக்காரன்..!! !
பின்னாளில் !
பொதுசேவையில் ஈடுபட்டு !
மக்களுக்கு சேவை செய்ய தேவைப்படும் !
லட்சணங்கள் அனைத்தும் !
கச்சிதமாய் பொருந்துவதாய்..!!! !
-சாந்தி
சாந்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.