சபிக்கப்பட்டவனின்.. விடியல் - ப.மதியழகன்

Photo by FLY:D on Unsplash

சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை.. !
01.!
சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை !
-------------------------------------மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற!
விலங்காய்ப் பயன்படுவான்!
குருதியை யாரும் கண்டதில்லையா!
அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-!
என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்!
கண்கள் மூடியே இருக்கும்!
காணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்!
வாய் இறைவனின் நாமத்தை!
மறந்தும் உச்சரிக்காது!
தப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ!
என்ற அச்சத்தில்!
காதுகள் எப்போதும்!
துரோகச் செயலின் திட்டங்களை கேட்டே!
நரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்!
வாழ்க்கை துக்கமாகும்!
மரணம் தாசியாகும்!
எப்பொழுதும் அதைத் தேடியே!
மனம் ஓடும்!
உலக இயந்திரம் அவனை!
கரும்புச் சக்கையாய்ப் பிழியும்!
பெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென!
தண்ணீரில் கலந்து குடிக்கும்!
இப்பூலகில் கொடிய வேதனையை!
அனுபவித்தவன் மரணித்தால்!
சொர்க்கத்தில் வாயிலை தெய்வம்!
வந்தா திறக்கும்!
அப்படி திறந்தால்!
அவன் கடவுளல்ல!
விழிப்புணர்வு பெற்று!
தட்டுபவனே கடவுள்!
திறப்பவன் அல்ல!
கைவிடப்பட்ட இவ்வுலகில்!
உன் மீது அறையப்படும்!
ஒவ்வொரு ஆணியும்!
உன்னை புனிதப்படுத்தும்!
உயிர்த்தெழுதல் அன்றல்ல!
இன்றும் நடைபெறலாம்!
இன்னொரு யுக புருஷன்!
அவனாகலாம்!
அவன் உங்கள் எதிரிலேயே!
நடமாடலாம். !
!
02.!
விடியல் !
-----------------!
கானக்குயிலோசை காற்றில்!
மிதந்து வருகிறது!
கதிரவன் பொன்னொளியால்!
வானம் ஜொலிக்கிறது!
மேகக்கூட்டம் தேர்போல!
ஊர்வலம் செல்கின்றன!
கடலலைகள் ஓடிவிளையாடி!
இந்த இனியநாளை வரவேற்கின்றன!
மலர்களின் மணம் வண்டுகளின்!
உறக்கத்தைக் கலைக்கிறது!
மரங்கள் தென்றலின் ஆரத்தழுவலால்!
கூச்சம் கொள்கின்றன!
குழந்தைகள் கனவுலகில் கடவுளுடன்!
விளையாடிக் களிக்கின்றன!
நதிவெள்ளம் கடலரசனைத் தேடி!
தன் பயணத்தைத் தொடர்கிறது!
மனிதர்களுக்கோ ஆயுளில் மற்றுமொரு நாள்!
காற்றோடு கரைகிறது. !
மனிதம் தொலைத்த மானுடமே... !
இரைச்சல்கள், ஒலிப்பான்களின் சத்தங்களுக்கு!
மத்தியில்!
குயில் கூவுவது காற்றலைகளிலேயே!
அமுங்கிப் போனது!
திரேதா யுக ராமனுக்குப் பிறகு!
உத்தமன் எவனும் பிறக்கவில்லையென!
நிரூபிக்க எனது முதுகில் உள்ள!
மூன்று கோடுகளே போதுமென்று!
உண்மையை உணர்த்திச் சென்றது அணில்!
ஈஸ்வரன் என்று விளிக்கப்படுபவர்கள்!
இரண்டுபேர்!
ஒருவருக்கு நந்தி வாகனம்!
இமனொருவருக்கு இந்தக் காகம்தான்!
வாகனமென்று!
மார்தட்டிக் கொண்டு அலைந்தன காக்கைகள்!
தனிமனித சுதந்திரத்துக்கு!
தன்மானக் குரல் கொடுக்கும் ஆபத்பாந்தவன்கள்!
எனது சிறகை ஒடித்து!
கூண்டில அடிமைப்படுத்துவதென்ன நியாயம்!
என மனிதர்களைச் சாபமிட்டு!
உயரப் பறந்தது, சற்று முன்பு!
கூண்டுக்குள்ளிருந்து தப்பித்த பச்சைக்கிளி!
எங்களை நகரங்களை விட்டுத்!
துரத்தியாயிற்று!
அடுத்து நாட்டை விட்டே விரட்டியடிக்க!
சட்டம் போடுவார்கள் போலிருக்கு!
என சிட்டுக்குருவிகள்!
தனது ஆதங்கத்தை பதிவு செய்துவிட்டு!
சிட்டெனப்பறந்தன!
தனக்கு உணவாவதை பண்ணைகளில் வளர்த்து!
தனக்கு உதவாததை அலட்சியப்படுத்தி அழித்து!
மனிதர்களுக்கு மட்டுமாய் இவ்வுலகை!
மாற்றப் பார்க்கிறார்கள்!
எப்பொழுது அவர்களின் மனங்கள்!
விசாலமடைகிறதோ!
அப்போது உணர்வார்கள்!
இவ்வுலகத்தை புத்துயிர்ப்புடன் இயங்கச்செய்வது!
நாங்கள்தானென்று!
பால்யத்தில் இயற்கையைக் கண்டு!
குதூகலமடைந்த மனித மனங்கள்!
பருவமடைந்து பின்னர் பகடைக்காயாக!
எங்களை உருட்டி விளையாடுவதேன்!
என புலம்பிச் சென்றன!
மனிதர்கள் இல்லாத கானகத்திற்கு!
புலம்பெயரும் நாரைகள்
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.