ஆழியின் சிரிப்பு - தேவஅபிரா

Photo by Ryan Grice on Unsplash

பெருவிசும்பின் தொன்மையின்கீழ் !
மரத்தூரிகைகள் உலையும் காற்றில் !
மரணத்தின் கேள்வியை விட !
மரணித்தவர்களின் கேள்விகள் வலுக்கின்றன... !
கையறு நிலையின் காலம் !
அதோ என் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. !
இவ்வெளியோ மண்ணோ எனதல்ல. !
நான் உங்களைக் கேட்க விரும்புவதெல்லாம்: !
என் கால் நனைத்த என்கடலின் மண்துகள்கள் !
தட்டிப்பிரிந்த அக்கடைசி நாளில் !
கடல் என்னைப்பார்த்துச் சிரித்ததா? !
ஐப்பசி 2002 !
-தேவஅபிரா puvanendran@home.nl !
**** !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன
தேவஅபிரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.