பத்தினி ஓதும்.. அவனும் எனக்கு - வே .பத்மாவதி

Photo by FLY:D on Unsplash

பத்தினி ஓதும் வேதம்.. அவனும் எனக்கு சொந்தம்!
01.!
பத்தினி ஓதும் வேதம்!
---------------------------- !
காற்றில் கவிபாடும்!
குழலை விரித்து!
உனக்கு கம்பளி போட சொன்னாய்!
நித்தம் நித்தம்!
நிலவு தவழும் மேனியென!
நீந்தி போகும் விண்மீன்கள்!
எத்தனை எத்தனை ..!
என் யௌவன தாள்கள் எல்லாம்!
பலரின் மோகன!
எழுத்துக்களால் கிறுக்கப்பட்டு!
மூலையில் எறியப்பட்டபோது!
வருந்தினேன்!
என்றோ மூலையில் அமர்ந்ததற்காக .....!
யாருக்குத் தெரியும்!
என் உடன் பிறப்போடு!
உதிரம் கலந்திருக்கலாம்!
என் அன்னைக்கும் தெரியாது!
தந்தையின் ரெத்தம்!
எதுவென்று!
என் இளமை பிராயத்தில்!
எனக்கு பால் ஊட்ட!
என் தாய்!
சொல்லிகொடுத்த!
அதே சூத்திரம் தான்!
அவள் முதுமை பிராயத்தில்!
பால் ஊற்றவும்!
பின்பற்றுகிறேன்!
இரண்டாம் ஜாமத்தில்!
மட்டுமே பிழைப்பு!
நடத்தும் எனக்கு!
இன்னும் புரியவில்லை!
பத்தினிகள் ஓதும்!
தலையணை மந்திரம் ...!
02.!
அவனும் எனக்கு சொந்தம்!
-----------------------------!
நான் அவனை பெற்றெடுக்கவில்லை!
நான் அவன் சகோதரியும் இல்லை!
அவனுக்கு நான் அத்தை மகளும் இல்லை!
அவன் கைபிடிக்கும் மாமன் மகளும் இல்லை!
அவன் மடிசேரும் மனைவி என்றும் நிச்சயிக்கப்படவில்லை!
எந்த வினாடியும் அவனை பற்றி நினைத்ததில்லை!
எந்த ஊரிலும் அவனை பார்த்ததில்லை!
கனவில் கூட சந்திக்க விழையவில்லை!
அவன் பெயர் கூட எனக்கு தெரியவில்லை!
எனினும் நாங்கள் சொந்தமானோம் ..!
அந்த மருத்துவமனியில்!
மனிதநேய ஊசி வழியாக!
என் ரெத்தம் அவன் உடலில் சென்ற பொது
வே .பத்மாவதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.