தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிங்கம் கண்ட சிங்கப்பூர்

சுதர்மன்
மன்னன் பரமேசுவரன் !
சிங்கம் கண்ட சிங்கப்பூர் !
கவிஆக்கம்: சுதர்மன் !
மன்னன் பரமேசுவரன் சிங்கம் கண்ட !
சீரிளம் தீவுநாடுதான் இந்த சிங்கப்பூர் !
“ராப்பிள்ஸ்” எனும் பிரிட்டிஷ் குடிமகன் !
இதை உலகின் கடல்வழி அணைக் கலனாக்கினார்! !
காடும் சேறும் கலந்தசதுப்பு நிலமாகவும் !
கரடு முரடான புல்லும் புதராகவும் !
மான் மறைகளின் மேச்சல் நிலமாகவும் !
மீன்பிடிப்போர் தங்குமிடமாகவும் காட்சிதந்த இத்தீவை !
இன்று:- நல்லவர்கள் தலைமையில் நானிலமாகவும் !
நாப்பது லட்சம் நான்கின மக்களும் !
கல்வியும் கலையும் கற்றுணர்ந்து வாழ்ந்திட !
பொன்னான ஒரு பூமியை பெற்றிருக்கிறோம் !
இனபேதமில்லாத இனிய கொள்கையுடைய நாடாகவும் !
மதபேதமில்லாத மனித நல்லிண்க்க தேசமாகவும் !
ஏற்ற தாழ்வில்லாத இனியபண்புள்ள உலகமாகவும் !
போராட்ட மில்லாத புதுமை நாடாகவும் மாற்றியுள்ளோம் !
இதிலும் பெருமைகொள்ள இல்லையொரு நாடு !
இல்லையென்ற சொல்லுக்கு இலக்கணம் தேடும் நாடு !
பன்னாட்டவரும் பணிபுரிந்து பாராட்டும் இன்நாடு !
அக்கபக்க நாடுகளும் அகமகிழும் பொன்னாடு !
உன்னால் முடியும்தம்பி நீ உயர்ந்திட பாடுபாடு !
உன்தன்மான கல்வியேடு என்னாடும் போற்றிடும் !
குறுக்குவழி ஏதுமில்லை நீ கோடீசுவராவதற்கு !
உறங்காத சிங்கப்பூரில் உழைப்பிற்கே முதலிடம் !
கவிஆக்கம்: சுதர்மன் !
006567829683

ஏதேன் சீதனம்

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன் !
'வாழ்க்கை'ப்பட்டு வந்த.. !
எல்லோருக்கும் போலத்தான் !
எனக்கும் வழங்கப்பட்டது !
ஏதேன் சீதனம். !
கதறியழுதவர் தம்மின் !
கண்ணீரினூடே தெரிந்தன !
இருப்பின் நியாயமும்.. !
இறப்பின் அநியாயமும். !
என்றாலும்... !
இம்'மை' அநியாயம் !
மறு'மை' க்கு நியாயமோ..? !
இமைக்க மறந்த ஒரு கணத்தில் !
இன்னொரு(வர்) தோளுக்கு !
இறங்கிப்போயிருந்தன !
சுமைகளும்; சொந்தங்களும் !
சொல்லிக்கொள்ளாமலேயே.. !
ஆள் மாற்றி, தோள் மாற்றி !
அனுப்பி வைத்தனர் !
'நிலையத்'துக்கு. !
எண்ணங்கள்; !
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி !
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல் !
சமாதி வழிப்பயணம். !
!
வழியனுப்ப வந்தவர்களில் !
கனவுக்குமரிகளைத்தான் காணோம் !
அடைந்து விட்டவை !
சாதனைத்திருமதிகளாய்.. !
அடையாதவைகளோ !
ஏக்கக் கன்னிகளாய்.. !
குடும்பங்கள்-பொறுப்புக்கள் !
கூட்டாளிகள்-தொழில்கள் !
கடமைகள் உடமைகள் எல்லாமே !
கழற்றி விடப்பட்டிருந்த !
கால் செருப்புக்களோடு! !
தன் தேகக்கூடு தவிர !
தெரிந்துவைத்திராத ஆன்மா !
நன்மை தீமைகளின் !
நீதிநிலை அறிக்கையை !
வழியெங்கிலும் !
யோசித்தப்படி.. !
ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க.. !
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது !
நாளை நிரப்பப்படுமோ?....! !
!
--------------------------!
(குறிப்பு: !
ஏதேன் !
என்பது அந்த ஆதி சுவர்க்கத் !
தோட்டம் தான்- பைபிள் மரபில் !
ஈடன் என்பது !
தமிழில் ஏதேன் ஆனது.) !
-- !
H.FAKHRUDEEN- (இப்னு ஹம்துன்)

கருவறை.. தலைமுடி

வசிகரன்.க
01.!
கருவறை.. !
-------------------!
இருவரின் கூட்டு முயற்சி ..!!
இரண்டு நிமிட உழைப்பு ..!!!
இரண்டு துளி வெண்மணி ,!
பயணிப்பதோ பலமணி .!!!!
இறுதியில் உறைவது!
சூரியன் புகா நிலவறை !!
உண்டு உறங்கும் ஓர் அறை.!!!
சுவாசிக்க ஓர் உறை.!!
சுதந்திரமாக வாழும் பாசச்சிறை.!!!
ஒன்பது மாதம் வாசிப்பதுதான் முறை ..!!!!
அதற்குமேல் வாடகை கொடுத்தாலும்!
இருக்கமுடியாது என்பது பெருங்குறை ..!!!!!
கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை..!!
விலைமதிப்பில்லா ஓர் அறை .!!!
எத்தனை சிறிய ஜான் இடம் ,!
இதற்குள் உறைவது!
எத்தனை பெரிய மானுடம் ..!!!!
!
02.!
தலைமுடி!
------------------!
உயரத்தில் இவன் குடியிருப்பு , !
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு , !
தலையில் இருக்கும் வரை !
அப்படி ஒரு கவனிப்பு , !
தவறி உணவில் விழுந்தால் !
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!!!
இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..! !
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை !
இவர்களின் கணக்கெடுப்பு ..!! !
உள்ளவரை தலைக்கு !
அழகான கரும்பொன் காப்பு ...!!! !
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன் !
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!! !
பெண்ணின் அழகுக்கு வேண்டும் !
இவன் அருள்பாலிப்பு .! !
மனமிருந்தால் கொடுக்கலாம் !
சிறப்பு பாதுகாப்பு .!! !
மணமில்லை என்பது !
இவனின் தனிச்சிறப்பு ..!!! !
இளமையில் இவன் !
நிறமோ கருப்பு .! !
நடுதர வயதில் மாற்றங்களால் !
வரும் வெளுப்பு ..!! !
இவனை வைத்து !
கொலையாளியை பிடிக்கலாம் என்பது !
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!! !
மொத்தத்தில் இவனை !
பேணிகாப்பது என்பது !
நம் பொறுப்பு .! !
இருப்பதை விட்டு !
இழந்தபின் புலம்புவது என்பது !
பொறுப்பற்ற பிழைப்பு

புத்துருவாக்கம்.. ஒத்திகை

தீபா திருமுர்த்தி
01.!
புத்துருவாக்கம்..! !
--------------------------!
கண்களுக்கு !
விருந்து தந்த !
மரத் தாயே ! !
மன்னித்து விடு.... !
மண்ணின் மைந்தர்களை! !
வேந்தர்கள் !
உனைக் காக்க.... !
மைந்தர்களுக்கு மட்டுமேன் !
இத்தனை அங்கலாய்ப்பு? !
அவசர யுகம்! !
வாழ்ந்துவிட்டுப் போவதற்குள் !
வரும் சந்ததிகளின் !
பெருக்கம்! !
காடுகள் !
அழிக்கப் பட்டுவிட்டதால் !
அழுகிறீர்கள்! !
கவலை வேண்டாம் ! !
இன்றும் !
மனிதக் காடுகள் தான் !
மண்டிக் கிடக்கின்றனவே! !
02.!
ஒத்திகை..! !
------------------- !
அழகிய பதுமை! !
ஆம்! !
அவள் ஓர் !
அழகிய பதுமை! !
இயற்கை அழகை !
முழுவதும் !
விழுங்கிவிட்டுச் !
செயற்கை அழகில் !
தத்தளிக்கும்.... !
அவள் ஓர் !
அழகிய பதுமை! !
அவள் ஓர் !
காதல் விருந்து! !
அவனும் தான்! !
செயற்கை அழகை !
மொத்தமாய் தந்துவிட்டு !
இயற்கை அழகில் !
இணைந்திருக்கும் !
அவன் !
காதல் நோய்க்கோர் !
இலவச மருந்து! !
சந்தி செய்யும் !
அந்தி! !
பேருந்து பயணம்! !
ஒளி விழுங்கிய !
வானம் !
உமிழ்ந்துகொண்டு இருக்கிறது.... !
மின்னலை! !
இருவரயும் !
இணைக்கிறது !
சில் என வரும் !
தென்றல் காற்று! !
முடி திருத்துவதாய் !
மார்பில் !
இடிக்கிறாள்! !
சட்டை சரி செய்வதை !
அவனும் தான்! !
கதகதவென !
இதமாகிறது !
ஈரக் காற்று..... !
இதழ்களின் !
இளம் சூட்டிற்கு நிகராய் !
தலைகளின் !
உராய்வு! !
ஏனோ.... !
இதன் பின்னே !
கை கோர்த்து நடக்கிறது.... !
வழக்கமாய் !
திட்டி தீர்க்கும் !
மனம்

கனகரமேஷ் கவிதைகள் 2

கனகரமேஸ்
1. மேகத்துள் ஒட்டா நிலவு !
என் !
மனக் குளத்தில் !
விம்பமாய் வீழ்ந்தும் !
ஒட்டாத நிலவாய் !
நீ !
!
2. கடல் !
கரை தடவி !
திரை கிழித்து !
நுரை தள்ளும் !
அலை கடல் !
விரை மேவி !
புரை குலைய !
தரை தாவி !
உரை பறையும் !
-கனகரமேஸ்

இன்னுந்தான்

சி.வ.வரதராஜன்
நீங்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம்!
என்னால் மறுப்புச் சொல்லமுடியவில்லை!
நீங்கள் குத்திய மூக்கணாங்கயிற்றையும்!
அறுத்து எறிய இயலவில்லை!
எத்தனை முறைகள் என்னைத்!
திக்கற்ற காடுகளில் தவிக்கவிட்டீர்கள்!
எத்தனை தடவைகள்!
சாக்கடை நீ£¤னில் இறக்கினீர்கள்!
அப்பொழுதெல்லாம்!
நான் என் மூளையைத் தின்று பசியாறினேன்!
இரத்தத்தைக்குடித்து விடாய் தீர்த்தேன்!
என்னையே கொன்று, புதைகுழியுள் கிடத்தி!
மண்போட்டு நிமிர்ந்தேன்!
உங்கள் முகங்களுக்கு முன்!
பாசங்களுக்கு முன்!
தங்கியிருத்தல்களுக்கு முன்!
பெரும்பான்மையின் முன்!
நான் தோற்றுத்தான் போகின்றேன்!
ஆயினும்!
நான் கனவில் எழுந்து, குழித்து, முழுகி!
சோடனைகள் ஏதுமின்றி உடையணிந்து!
என் பாதையை அடையாளம் கண்டு!
செல்கின்றேன்!
அதில் சில்லென்று காற்று வீசுவதையும்!
நிலவு எறிப்பதையும்!
எப்படி உங்கள் முன் நிரூபிக்கப் போகின்றேன்.!

அந்திநேர பூபாளம்

விடிவெள்ளி
இனிமையாகத்தான்!
இருந்திருக்கும்!
எல்லாருக்கும்!
எப்போதாவது,!
சொந்த ஊருக்குச்!
செல்வதென்பது!!
ஏதோ,!
இழவு வீட்டிற்குச்!
செல்வது,!
போன்ற துயரம்!
கவ்விக் கொள்கிறது!
எனக்கு மட்டும்!!
யாரைப் பார்த்தாலும்,!
“என்ன பொழப்பு இது,!
செத்த பொழப்பு”!
என்று அலுத்துக் கொள்ளும்,!
ஊருக்குத்!
துள்ளிக் கொண்டா!
போகமுடியும்?!
கடலை விளைந்த,!
சாலையோர வயல்கள்!
எல்லாம்,!
கல்லறை போல,!
கற்கள் முளைத்து,!
காமாட்சி, மீனாட்சி!
என புதிய நகர்களைப்!
பிரசவித்திருக்கின்றன!!
கரம்பு வயல்களில்,!
கணுக்கள் வெட்டப்பட்டு,!
கழுத்து வலிக்குமளவு,!
வளர்ந்து நிற்கின்றன,!
சவுக்கு மரங்கள்!
காகித ஆலைகளுக்கென!!
நான்கைந்து வாரங்களாய்,!
தண்ணீரின்றி,!
நாசமடைந்து நிற்கிறது!
நவீனக் கரும்பு வயல்,!
நாற்பதாயிரத்தை விழுங்கிவிட்டு!!
தாய் மனத் தலைவனின்!
பால்விலை உயர்வுச்!
செய்தியைக் கூட அறியாமல்,!
துருத்திய எலும்புகளுடன்!
தேடியலைகின்றன!
காய்ந்த புற்களை,!
பால் வற்றியப் பசுக்கள்!!
ஊரே சுடுகாடு போலக்!
காட்சியளித்தாலும்,!
உள்ளூர சந்தோசம்தான்!
இன்னும் யாருமே!
தூக்கில் தொங்கவில்லை!!
கடனை வாங்கியாவது,!
கல்லைக் குடைந்து!
நீர் பார்க்கத்!
துடிக்கிறார்கள்!
எல்லாருமே!!
ஊரே நாறும்போது,!
வீடுமட்டும்!
மணக்குமா என்ன?!
கால் நூற்றாண்டாய்,!
காடு மேடெல்லாம் சுற்றிக்,!
குருவி போல் சேர்த்து,!
கடன்பட்டு வாங்கிய!
காடு முழுவதும்,!
காய்ந்து கிடக்க,!
கால் மூட்டுத்!
தேய்ந்து போய்,!
கருக்கரிவாள்களை!
எல்லாம்,!
துருப்பிடிக்க விட்டபடி,!
கனவு காணும் பெற்றோர்களே!!
அடித்துப் பிடித்துப்!
படிக்க வைத்த!
அருமை மகன்,!
அரசு வேலையோடு!
வருவானென!!
ஆயிரம் பேரில்!
ஒருவனுக்கு,!
வேலை தரவே,!
ஆறேழு வருடம்!
யோசிக்கும்!
அரசாங்க யோக்கியதை!
அவர்களுக்கெப்படித் தெரியும்.!
விவசாயி வாழ்வே!
வெறுங்கனவாகிப் போன பின்பு!
நடுமண்டியில் உறைக்கிறது!
நாட்டு நிலைமை!!
விரக்தியின் விளிம்பில்,!
வெறுபேறிப் போனவர்களாய்!
தூக்குக் கயிற்றை,!
முத்தமிட்டு,!
வீரர்களாகிறார்கள்!
விவசாயிகள்.!
அந்த,!
நல்வாய்ப்பை நல்கி!
நாடெங்கும்,!
பசுமையே இல்லாமல்!
செய்தவர்கள்!
பசுமைப் புரட்சியின்!
தந்தைமார்கள்!!
இவர்கள்,!
இளைஞர்களை!
கனவு காணச் சொல்லிவிட்டு,!
இந்திய இதயங்களின்!
கனவுகளை,!
கருவறுத்தவர்கள்!
முதுகெலும்பை!
முறித்துப் போட்டவர்கள்.!
இவர்கள்,!
பரிந்துரைத்த,!
விதைகளின் வீரியம்!
பிரதிபலிக்கிறது!
தரிசு நிலங்களில்,!
விதவிதமாய்!
முளைத்திருக்கின்றன!
களைச் செடிகள்,!
கட்சி கொடிகள் போல,!
பிடுங்குவாரின்றி!!
வயலில் அடிக்கும் போது!
வேலை செய்யாத!
பூச்சிக் கொல்லி கூட!
வஞ்சனை செய்கிறது!
விவசாயி குடிக்கும் போது!!
வெகு வேகமாய்!
அழிக்கப்படுகிறது!
விவசாயி வர்க்கம்!!
விதவிதமாய்ப்!
புள்ளி விவரங்கள்!
செத்தவர்களைப் பற்றித்தான்!!
கணக்கெடுக்க!
வக்கின்றி,!
விழி பிதுங்கிறது,!
வீணர்களின் அரசாங்கம்!!
ஒற்றை அஸ்தமனத்தில்,!
முடிந்து போவதில்லை!
விடியல்கள்!!
அழிந்து விடவில்லை!
இளைய தலைமுறை!!
எவ்வளவு!
நாளைக்குத்தான்!
மறைத்து வைப்பீர்கள்!
கருக்கரிவாள்களை!!
அவர்கள்!
தயாரில்லை!!
அறுவடையைத்!
தள்ளிப் போட

இன்னும் ஏற்றம் பெற

பா.திருமுருகன்
கவி: பா.திருமுருகன்!
சாம்பலாவதற்கு!
சலனப்படாதே!!
திரியாக இருக்கும் வரை...!
அழுதுகொண்டே இரு!
வியர்வை துளிகளை மட்டும்!
வெளியாக்கு..!
வேரில்!
மண்ணாகு..!
பூவில்!
உன் புன்னகை தெரியும்!
பசுக்களின் மீதான!
சவாரியை நிறுத்து!
பாதங்கள் வடுபட!
பாலை வனத்தில்!
பயணம் செய்..!
நாளை!
மணல்களும் நன்றி சொல்லும்!
உன்!
பாத இடுக்கில்!
பதுங்கியிருந்ததற்காக....!
!
கவி: பா.திருமுருகன்!
தொடர்புக்கு: 006598877271

காதல் பித்தம்

சிலம்பூர் யுகா துபாய்
நீ!
சிந்திய சிரிப்புகளையெல்லாம்!
சேமித்துவைத்திருந்தேன்!
இரண்டுவருடசேமிப்பை!
எடுத்துப்பார்க்கிறேன்.!
எதிலுமே!
என் பெயரில்லை!
என் பக்கத்தில் நின்றவர்களை!
பார்த்து சிரித்தது பல!
என் முன்!
நின்றவர்களுக்காய் சில!
பின்!
நின்றவர்களுக்காய் சில!
எவரையோ எண்ணியபடி!
எனை பார்த்து!
சிந்தியவை சில!
எல்லாவற்றையும்!
கழித்தபோது!
எஞ்சியவை!
எனக்காக சில!
ஏளன புன்னகைகள்!
என்!
மனக்காயங்களுக்கு-அவை!
மருந்தா,!
திராவகமா தெரியவில்லை!
ஆனாலும்!
அள்ளி அள்ளி!
பூசிக்கொள்கிறேன்.!
இதயத்தில்!
உன் பெயரையும்!
உயிரில்!
உன் முகவரியையும்!
சுமந்தபடி

மழைகளின் சங்கமம்

முத்து குமரன்
கவி ஆக்கம்: க.முத்துக்குமரன்!
நீ புன்னகைத்தால்!
என் காட்டில்!
அடை மழை!!
நீ மௌனித்தால்!
என் காட்டில்!
கோடை மழை!!
நீ சந்தித்தால்!
என் காட்டில்!
இன்ப மழை!!
நீ சிந்தித்தால்!
என் காட்டில்!
கற்பனை மழை!!
நீ கோபித்தால்!
என் காட்டில்!
வெப்ப மழை!!
நீ சபித்தால்!
என் காட்டில்!
தவ மழை!!
நீ புகழ்ந்தால்!
என் காட்டில்!
விருது மழை!!
நீ திட்டினால்!
என் காட்டில்!
விமர்சன மழை!!
நீ காதல் கொண்டால்!
என் காட்டில்!
திருமண மழை!!
கவி ஆக்கம்: க.முத்துக்குமரன்!
006581496831