தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பெரு விருட்சமாய்

ப்ரியன்
* பெரு விருட்சமாய் *!
என்!
வாழ்வில் பெருவிருட்சமாய்!
எழுந்து நிற்கிறாய் நீ;!
தினம் தினம்!
பூத்து பூத்து!
கால் வேர்களைப்!
பூஜித்தப்படி நான்!!
*!
உனை திட்டிவிடும்!
கணங்களில் - உன்!
விழியோரம் சேரும்!
இரு துளிகளின்!
வெப்பத்தில்!
எரிந்துவிட துணிகிறேன் நான்!!
*!
எதையெதையோ!
கவிதையாக்கும் எனக்கு!
உன்னின் வெட்கத்தை!
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்!
அறிவு எட்டவில்லை இன்னமும்!!
*!
இப்போதுதான் அவிந்த மலராய்!
எப்போதும் முகம் வைக்க!
எப்படி இயலுகிறது உன்னால்?!
முடிந்தால்!
அவ்ரகசியத்தை கொஞ்சம்!
என் வீட்டுதோட்ட மலர்களுக்கும்!
சொல்லித் தாயேன்!!
*!
எனை பூவாக்கி வடிக்கொள்ளேன்!
புதுமலராய் பூத்திருப்பேன்!
எப்போதும்!!
உந்தன் வாசத்தில் - வசத்தில்!!
*!
கடற்கரையிலிருந்து!
எழுந்து வந்துவிட்டாலும்!
அங்கேயே அருகருகில் அமர்ந்து!
பேசிக்கொண்டே இருக்கின்றன!
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த!
நம் தடங்கள்!!
- ப்ரியன்

ஆண்டவனுக்கு எச்சரிக்கை

சின்னு (சிவப்பிரகாசம்)
ஒத்தைக் கல் நட்டி!
ஒரு பொட்டுச் சந்தனமிட்டு!
உண்டு மீந்த பணியாரத்தை!
கற்றாழையில் படையலிட்டு!
ஒட்டியாணம் போன்று!
அவரைக்கொடி அணிவித்து!
முழு நிலவொளியில்!
வெங்கக் கல் பளபளக்க!
விளையாட்டு சிறுசுகள்!
ஆக்கிவைத்த கடவுளை!
துச்சமென்று ஒதுக்கி!
வானையும் மண்ணையும் மறைத்து!
வளர்ந்த கட்டிடத்தில்!
கடவுளை அடைத்து!
பன்னீரில் குளிப்பாட்டி!
பல்லக்கில் ஏற்றி!
ஆண்டுக்கு ஒருமுறை!
அவன்படைத்த உலகை காட்டும்!
கனவான்களே!
எத்திசை நோக்கி!
உம் கரம் நீட்டினால்!
அத்திரு கடவுள் உம்மை நோக்குவன்!
எனச் சொல்லும் பெரியோர்களே!
உருவமுள்ளது கடவுள் ஆகுமா!
என வாதிடும் ஆன்றோர்களே!
பாலகரின் படிதளுக்கு!
தன் தாள் படியாது!
பல்லக்கில் அவன் பவனி வந்தால் ,!
பிள்ளை வடிவம் கொண்டு!
பலகரோடு பழக!
உருக்கொண்டு அவன் வர தவிர்த்தால்!
ஆண்டவனே ஆனாலும்!
ஆண்டாண்டு காலமாய்!
எமை ஆண்டவனே ஆனாலும்!
அவன் எம் குலப் பகைவன்

காதல் வரலாறு

தென்றல்.இரா.சம்பத்
உலகின் !
எந்தக் காதலிலும்!
கர்வப்பட ஏமில்ல...!
ஆண் பெண்ண ஏமாற்றுவ..!
பெண் ஆண அலயவிடுவ..!
அதனால்!
அவளோ,அவனோ !
உயிரவிடுவ!
இதானே வரலாறு...!
கடந்த காலத்தின் காதல்!
தோல்வியில் வண்டிருக்கலாம்!
அல்ல!
கண்ணீரால் கரந்திருக்கலாம்!
இதானே வரலாறு...!
இப்போ!
இருபாலுக்கும்!
காதலின் நாகரீகம்!
கனிசமாய் மாறியிருக்கிற!
காமம் ஒரு!
கவர்ச்சிப் பொருளாய்!
புகுந்திருக்கிற..!
காதலச்சொன்ன !
கருவிழிக்குள் இப்போ!
காமமும் !
கலந் கிடக்கிற!
கடந்த காலத்தில்!
இதயத்தில் சுமந்!
அழுதவருண்டு..!
இப்போ வயிற்றில் சுமந்!
அழிப்பவரே உண்டு !!
அழுபவரும் உண்டு !!
காதலின் நாகரீகம் !
புதியதாய் இருக்கலாம்!
ஆனால் வரலாறு ஒன்றுதான்...!
!
-தென்றல்.இரா.சம்பத் ஈரோடு-2

பயணம்

கனிகை
பேரூந்திற்காக நின்றேன்;!
வந்தது;!
ஏறிக்கொண்டேன்;!
சனநெரிசல்;!
திக்குமுக்காட்டம்;!
இடம் தந்தாய்;!
சிநேகமானாய்;!
என் பொதிகள் அழுத்தின;!
நீ சுமந்தாய்;!
நெருக்கமானேன்;!
உண்ணக் கடலை தந்தாய்;!
வாங்கிக் கொண்டேன்;!
யாவருடனும் உரையாடினாய்;!
மௌனித்தாய்;!
உதவினாய்;!
சிந்தை வயப்பட்டாய்;!
வாழ்வு சொன்னாய்;!
பரபரப்பானாய்;!
அடிக்கடி பார்த்தாய்;!
கேள்விக் கண்ணானேன்;!
இறங்கி நடந்தாய்;!
மறிக்கத்தோன்றவில்லை;!
நான் இறங்கவுமில்லை;!
யாவரும் இரங்கினர்;!
நான் வெற்றிருக்கை பார்த்தேன்.!
கனிகை

பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி

இளங்கோ -கவிதைக்காரன் டைரி
என்னும் குற்றச்சாட்டோடு புலம்ப நேரிடலாம்..!
01.!
பெரு மழைக்கு அல்ல...!!
-----------------------------!
உள்ளங்கை பொதிக்குள்..!
பத்திரமாய் உறங்கும் குழைந்தைகளின்!
செவிகள் சேகரிக்கின்றன..!
தூரத்து கரைகளில்..!
வெடித்து அடங்கும் குண்டுகளின்!
சப்தங்களை..!
உயிர்களைத் துளையிட்டு!
புதையும் துப்பாக்கி ரவைகளை!
பிடுங்கி எரியும் வல்லமை!
இனி எந்த விரல்கள் பெறுமோ!
அறியோம்..!
நம்பிக்கையோடு தாங்கி சுமக்கிறோம்..!
பூமிக்கு வருகைத் தந்திருக்கும்!
ஒவ்வொரு ராஜக்குமாரியையும்..!
மௌனமாய் விழி உருட்டி..!
கருகிய மரங்களின் இலைகளை உள்வாங்கி!
பதியும் ராஜக்குமாரன்களையும்...!
வேலிகளுக்கு வெளியே..!
பூத்துவிடுதல் குறித்து..!
ராணுவ பூட்சுகளின் கால்மிதி!
சகதிகளுக்கு கீழே...!
ஆழத்தில்..!
புதையுண்டு கிடக்கின்றன விதைகள்..!
அவற்றுக்கு உரமாய் ஆகிப் போயினர்!
என் சகோதர சகோதரிகள்..!
நாங்கள் காத்திருப்பது!
பெரு மழைக்கு அல்ல..!
சிறு தூறலுக்கு..!!
!
02.!
தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு!
புலம்ப நேரிடலாம்..!
-----------------------------------------------------------!
புதையும் கனவின் ஈரச் சகதிக்குள்..!
கால்களை மீட்டுக்கொள்வதான!
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கியது!
ஒரு காட்சி..!
வண்ணங்களைத் தேடி அலையும்!
வேட்டை எனவும்..!
அசைவுகளின் பதிவுகளை சுரண்டிப் பார்க்கும்!
ஆவல் எனவும்..!
வழித் தவறுதலுக்குரிய!
காரணங்களை பக்கவாட்டு மரங்களில்!
கிறுக்கி வைக்கிறது..!
தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு!
புலம்ப நேரிடலாம்..!
படுக்கையிலிருந்து அலறியோ மருண்டோ!
விழிக்கும் கணத்தில்..!
இவைகளைத் திட்டமிட்டு!
வாழ்வின் நொடிப்பொழுதுகளில் என்னிடம்!
அனுப்பி வைக்கும் தருணங்களைக்!
கைது செய்துவிடப் போவதாக!
அனுமதி கேட்டு அரசாங்க வரிசைகளில்...!
நிற்பதற்கான தீர்மானத்தோடு..!
கழிவறைக் கண்ணாடி முன் நின்றபடி..!
பற்களை பரிசோதித்து..!
பற்பசை பிதுக்கியபோது..!
கால்களை மீட்டுக்கொள்வதான!
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கும்!
ஒரு காட்சி..!
கண்ணாடியின் பாதரசக் குழம்பென!
வழிந்து...உருகி...!
சட்டென ஆவியாகி மறைந்தது

மயிலிறகாய் ஒரு காதல் நூலிலிருந்து

நிலாரசிகன்
1. தவிர்த்தலுக்கென்றே!
ஒரு பார்வை வைத்திருக்கிறாய்!
நீ.!
தவிப்பதற்கென்றே ஒரு!
இதயம் வைத்திருக்கிறேன்!
நான்.!
!
2. பரிணாம வளர்ச்சியில்!
பெண்ணிற்கு பின்!
தேவதை என்பதற்கு!
நீ!
ஒருத்தியே சாட்சி.!
- நிலாரசிகன்.!
!
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்

வித்தியாசங்கள்

ராம்ப்ரசாத், சென்னை
இமைகள் மூட விரியும்!
கனவுத்திரைகளில் அரங்கேரும்!
தேவதை உன்!
நினைவுகளில்,!
மயிலது விரிக்கிறது!
தோகையை அதுபோல்!
மேனகை நீ!
விரிக்கிறாய் உனது!
கூந்தலை...!
உன் விரல் ஸ்பரிசம்!
பட்ட ஒரே காரணத்தால்!
நான் எங்கு சென்றாலும்!
என்னுடனே ப‌ய‌ணிக்கும்!
இந்த புத்தகத்தின்‌!
ஏதோவொரு ப‌க்க‌த்தில்!
நிர‌ந்த‌ர‌மாய் த‌ங்கிவிட்ட‌!
இந்த‌ ம‌யிலிற‌கிற்க்கும்,!
வ‌ருண‌ன் க‌ண்விழித்துவிட்டான்!
என‌ பொய்யுரைக்கும்!
தோகையாய் விரியும்!
உன் க‌ருமேக‌க்கூந்த‌லுக்கும்!
வித்தியாச‌ங்க‌ள் ஒன்றே ஒன்றுதான்!
என்றே உர‌த்துக்கூறுவேன்..!
என்ன‌வென்று கேட்போருக்கு!
ப‌திலுரைப்பேன் முன்ன‌து!
ம‌யிலுடைய‌து,!
பின்ன‌து என்ன‌வ‌ளுடைய‌து!
என்றே

ஒரு

மாதுமை
ஒரு திருமணத்தில்!
ஆரம்பமானது!
உன்னுடனான என் உறவு.!
ஒரு (தலை)தீபாவளி!
ஒரு கிறிஸ்மஸ்!
ஒரு புதுவருடம்!
ஒரு பொங்கல்!
ஒரு “என்” பிறந்தநாள்!
ஒரு “உன்” பிறந்தநாள்!
ஒரு திருமண நாள்!
என்றாக எல்லாம்!
ஒற்றையாக!
பரிசளித்த நீ!
ஒரு விவாகரத்தையும்!
தந்துவிட்டு!
சென்று கொண்டிருக்கிறாய்.!
மீண்டும்!
ஒரு திருமணத்தில்!
ஆரம்பமாக இருக்கிறது!
என்னுடனான என் உறவும்!
உன்னுடனான உன் உறவும் !!!!
!
ஆக்கம்: மாதுமை

கடவுளை பார்த்திடில்

சின்னு (சிவப்பிரகாசம்)
எங்கே நம் கடவுள் !
என் உள்ளக் குமுரல்கள் அவன் கேட்டிட வேண்டும்!
ஆண்டவனே உனக்கு ஆண்டவன் என்று பெயர் வந்தது!
ஆண்டாண்டு காலமை எமை!
ஆண்டவர்கள் செய்த தந்திரத்தில்!
நீ கை தேர்த்ததலோ !
எமை பிரித் ஆண்டான் ஆங்கிலேயன்!!
நீ உலகை! - மதம் என்ற பெயரில்!
பிரித்து தான் ஆழுகிறாய்!
மதச்!
சண்டை இல்லா விட்டால் உனை!
மதிக்க ஆளில்லை!!
மதங்களே இல்லாவிட்டால் !
உனக்கு இங்கு வேலை இல்லை!!
படைத்தவனே !!
நீ உனை புகழ வேண்டும் என்றா!
உயிர்களை படைத்தாய்!!
நாங்கள் !
மடிந்து கொள்வதற்கா!
மதங்களை படைததாய்!!
இந்த மண்ணில்!
விழும் குருதி!
உன்மனத்தை!
ஈரமாக்கவில்லையா!
தொடுப்பவன்!
நீ என்று ஆனபின்!
அம்புகளுக்கு!
ஏன் தண்டனை!!
!
-சிவப்பிரகாசம்!
---------------------------------!
கணம் கண்ட நாள் கொண்டு!
தினம் நினைக்கும் என் உள்ளம்!
திகில் கொண்டு உற்று பார்த்தது!
உனை அல்ல !, உனை என்னும்!
என் உள்ளத்தை

உயிரிடம் ஒரு சந்தேகம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
இந்த மத்தாப்புக்கு !
ஏன் !
இத்தனை மகிழ்ச்சி? !
ஓ... !
சுடர் நெருப்பை !
தொட்டிருக்கிறது. !
கத்தி !
ஏன் !
பூப்பூவாய் பூரிப்புகளோடு !
பொறிகளை னவுகிறது? !
ஓ... !
உரசல் என்கிற !
உறவில் மகிழ்ந்தா? !
மின் விளக்குகள் !
ஏன் !
வெளிச்ச அலைகளை அள்ளி !
விசுகிறது? !
ஓ... !
நேர்மின் !
எதிர்மின் முனைகள் !
டங்ஸ்டன் இழையில் !
சந்தித்துக் கொண்டனவா? !
எல்லாம் சரிதான். !
நான் !
காதலோடு !
உன் !
மனதைத் தொட்ட !
சிலிர்ப்புகளோடுதானே !
சிரிக்கிறாய். !
-பட்டுக்கோட்டை தமிழ்மதி !
(சிங்கப்பூர்)