ஏதேன் சீதனம் - இப்னு ஹம்துன்

Photo by Jr Korpa on Unsplash

இப்னு ஹம்துன் !
'வாழ்க்கை'ப்பட்டு வந்த.. !
எல்லோருக்கும் போலத்தான் !
எனக்கும் வழங்கப்பட்டது !
ஏதேன் சீதனம். !
கதறியழுதவர் தம்மின் !
கண்ணீரினூடே தெரிந்தன !
இருப்பின் நியாயமும்.. !
இறப்பின் அநியாயமும். !
என்றாலும்... !
இம்'மை' அநியாயம் !
மறு'மை' க்கு நியாயமோ..? !
இமைக்க மறந்த ஒரு கணத்தில் !
இன்னொரு(வர்) தோளுக்கு !
இறங்கிப்போயிருந்தன !
சுமைகளும்; சொந்தங்களும் !
சொல்லிக்கொள்ளாமலேயே.. !
ஆள் மாற்றி, தோள் மாற்றி !
அனுப்பி வைத்தனர் !
'நிலையத்'துக்கு. !
எண்ணங்கள்; !
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி !
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல் !
சமாதி வழிப்பயணம். !
!
வழியனுப்ப வந்தவர்களில் !
கனவுக்குமரிகளைத்தான் காணோம் !
அடைந்து விட்டவை !
சாதனைத்திருமதிகளாய்.. !
அடையாதவைகளோ !
ஏக்கக் கன்னிகளாய்.. !
குடும்பங்கள்-பொறுப்புக்கள் !
கூட்டாளிகள்-தொழில்கள் !
கடமைகள் உடமைகள் எல்லாமே !
கழற்றி விடப்பட்டிருந்த !
கால் செருப்புக்களோடு! !
தன் தேகக்கூடு தவிர !
தெரிந்துவைத்திராத ஆன்மா !
நன்மை தீமைகளின் !
நீதிநிலை அறிக்கையை !
வழியெங்கிலும் !
யோசித்தப்படி.. !
ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க.. !
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது !
நாளை நிரப்பப்படுமோ?....! !
!
--------------------------!
(குறிப்பு: !
ஏதேன் !
என்பது அந்த ஆதி சுவர்க்கத் !
தோட்டம் தான்- பைபிள் மரபில் !
ஈடன் என்பது !
தமிழில் ஏதேன் ஆனது.) !
-- !
H.FAKHRUDEEN- (இப்னு ஹம்துன்)
இப்னு ஹம்துன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.