தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆடுகளம்

கவிதா. நோர்வே
சாண்டில்யன் கதை நாயகியாக!
வெள்ளைக்குதிரை நாயகனிடன்!
பறிகொடுக்கும் கன்னியாக..!
சீதையாக, கண்ணகியாக!
இதிகாசங்களின் நாயகியாக!
நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை.!
பாவம் என்று விட்டுவிடுவேன்!
ராமனும், கோவலனும்!
இவர்கள்!
என்னிடம் மாட்டியிருந்தால்!
புராணங்கள் மாறியிருக்கும்!
நீ நினைக்கிறாயா!
நான் பதுமையென்று!
புதுமையும் பதுமையம்!
எம் விரல் நுனியில்தான்!
எந்த விரல் நீட்டுவதென்று!
நானே தீர்மானிக்கிறேன்!
நாணி ஆடவும்!
நாண் ஏற்றவும் கூட!
என் சுட்டுவிரல் போதும்.!
சுடுகுழல் தூக்குதற்கும் கூட !
செக்குமாடாய் பின் முற்றத்தில்!
போட்ட வட்டங்கள் எல்லாம்!
இன்று நாம் கடந்து வந்த!
பாதைகளாகவும்!
சில கவிதைகளின் காரணங்களாகவும்!
மாறிப்போன பின்!
அறுத்தெறிய ஏதுமில்லை என்னிடம்!
ஒற்றைக் கயிற்றைத் தவிர..!
அதன் அவசியம் கூட எனக்கில்லை!
நான் பெண்;;!
ஆணை விரும்புபவள்!
நீயும் விரும்பு!
இன்னும் எதுவும் அறியாதவள் என்று,!
நினைத்தால்...!
விதியிடம் இனி உன்னைக் காக்கப் பழகு!
வலியாம்!
பெண் மொழியாம் என்று!
உன் உதடு வளைத்துப்!
என்னை அஃறிணையாக!
நீ பார்த்தாலும்!
ஆண் பெண் என்ற!
ஆடுகளத்தில்!
மனு என்றே பார்க்கிறேன்!
நான் உன்னையும் என்னையும். !
முக்காடு போட்டு!
என் முகம் தொலைத்த நாள்!
போனது போகட்டும்!
என் கவிதைகளும் முகவரியாகட்டும்!
யாரும் தூக்கிப்போட்ட!
”ஒருநாள்” தினம் ஏந்தும்!
பிச்சைக்காரியில்லை நான்!
நேற்றும், நொடிப்பொழுதும்!
எதிர்காலங்களும் ஆளத்தெரிந்த!
இராஜகுமாரி.!
எதற்கு பின்னும் முன்னும்!
இழுபாடு!
என் தோளோடு நட!
நாலு பேர்கள்!
நாலுவிதமாய் பேசுவார்கள்.!
உதவாத மனிர்களுக்காக!
அடங்கிப்போகவோ!
ஆராய்ந்து பார்க்கவோ!
எனது நேரங்களுக்கு இனி!
நேரமில்லை.!
பாரதி பெண் நானில்லை!
படைத்த பிரம்மனும் கூட!
வரையறுக்க முடியா என்னை!
சிந்தனை உளிகொண்டு!
அறிவு விரல்களால்!
என் விழியின் ஒளியில்!
என்னை நானே செதுக்கி!
நிமிர்ந்து நிற்கும்!
எனது பார்வையில்!
பெண்!
நான்.!
- கவிதா நோர்வே

நட்பு

பரம்பை கோபி, தமிழ்நாடு
அன்பே!!
நான், நம் நட்பே!
புனிதம் என நினைத்தேன்!
அதை புனித மற்றது!
என எண்ணிவிட்டாய்!!
நான்!
ஒவ்வொரு நாளும் பாசத்தை!
மிகுதி படுத்தினேன் - நீயோ!
அந்த பாசத்தை!
குறைத்துக் கொண்டாய் - ஆனால்!
நீ என் மேல்!
உண்மையான அன்பு!
வைத்து உள்ளாயா..... என்று!
தெரியவில்லை - ஆனால்!
நான் வைத்த அன்பு!
உண்மை அது நிரந்தரமானது!
அன்பே!!
ஒன்று மட்டும் உண்மை!
நீ என்னை நெருங்கி வந்தாலும்!
விலகிச் சென்றாலும்!
பாதிப்பு தன்னுடையது தான்!
அன்பே!!
ஏன் என்றால்

தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்

அத்திவெட்டி ஜோதிபாரதி
வெள்ளையைப் பார்த்து!
வெளிரிப் போனது!
தன் நிறம் மறந்து!
மஞ்சளைப் பார்த்து!
மறைத்துக் கொண்டது -தன்!
மகிமையை!
கறுப்பைப் பார்த்து!
கவிழ்ந்து விட்டது!
கடைச் சரக்காகி!
சாயம் வெளுத்துக்கொண்டு!
மகிழ்ந்திருந்தது!
தன்னையே மாற்றிக் கொண்டு!
சமூகப் பண்பாடு மறந்த!
மாந்தளிர்...!!
!
அத்திவெட்டி ஜோதிபாரதி

வலை

பனசை நடராஜன், சிங்கப்பூர்
காலம்... !
நம் வாழ்க்கை வழியெங்கும் !
கணக்கிலடங்கா வலைகளை !
விரித்து வைத்துக் !
காத்திருக்கும்...! !
!
கொள்ளை நோய், !
வெள்ளம், புயலென !
எல்லா வலைகளும் !
எதிர்பாராத இடங்களில்..! !
!
முன்னறிந்தும், எதிர்கொண்டும் !
நுண்ணறிவால் தப்பினால்.. !
!
புத்தி !
தடுமாறச் செய்யும்.. !
இன்னொரு !
தந்திரவலை வீசும்.. !
நமக்குள்ளே சண்டையிட்டும், !
நச்சுப் 'புகைப்' பிடித்தும், !
மது குடித்தும் மடியச் செய்யும்! !
!
தவிர்த்தும், தாண்டியும், !
அறுத்தும், அகற்றியும் !
அகப்படாமல் ஓடுகிறோம்...! !
ஒவ்வொரு நாளும்..! !
!
உயிர் வாழ்தலுக்காக..!!! !
-பனசை நடராஜன், சிங்கப்பூர்

தொலைந்து போன சாவி

புதியமாதவி, மும்பை
புதியமாதவி, மும்பை.!
எல்லா இடங்களிலும்!
தேடிப் பார்த்துவிட்டேன்.!
இத்தனைக் காலமும்!
பாதுகாத்துவைத்திருந்த!
சாவிக்கொத்தை.!
எந்தப் பூட்டுக்கு!
எந்தச் சாவி?!
சொல்லவில்லை யாரும்!
சோதிக்கவில்லை நானும்.!
சாவிக்கொத்தை!
இடுப்பில் சொருகிக்கொண்டு!
இருப்பதே பழகிப்போனதால்!
அச்சமாக இருக்கிறது!
சாவிகள் இல்லாத!
இடுப்பைச் சுமந்து கொண்டு!
திறந்தவெளியில் !
எப்போதும் போல!
எழுந்து நடமாட.!
யார் தந்தார்கள்!
என்னிடம் இந்தச் சாவிக்கொத்தை?!
எப்போதாவது!
எந்தப் பூட்டையாவது!
என்னிடமிருந்த !
எந்தச் சாவியாவது!
திறந்திருக்கிறதா?!
யோசித்துப் பார்க்கிறேன்.!
அம்மா,!
அம்மாவின் அம்மா,!
அவளுக்கு அம்மா,!
அம்மம்மா..!
இவர்களுடன் சேர்ந்து கொண்டது!
புதிதாகத் திருமணமாகி!
புக்ககம் வந்தப்பின்!
மாமியார் கொடுத்தச் சாவிகளும்.!
ஒவ்வொரு சாவிகளையும்!
பத்திரமாக வளையத்தில் கோத்து!
அலங்காரமான!
விலையுயர்ந்த வெள்ளிச்சாவிக்கொத்தில்!
தொங்கவிட்டு!
பாதுகாத்துவந்த !
எங்கள் தலைமுறையின் சாவிக்கொத்து!
காணவில்லை..!
தொலைத்துவிட்டேன்.!
இனி,!
எதைக்கொடுப்பேன்!
என் மகளுக்கும்!
வரப்போகும் மருமகளுக்கும்!!
எப்படியும்!
அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்!
தொலைந்து போன சாவிக்கொத்தை அல்ல!
சாவிகள் இல்லாமல்!
பூட்டுகளை உடைக்கும்!
புதிய வித்தைகளை

ஒரு வண்ணத்துப் பூச்சியின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு அழகிய தேசத்துக்!
குருதி வண்ணக்!
கதவு திறந்து - பெரும் சோகத்துடன்!
கொட்டும் மழைதனிலே!
இத் தேசத்தின்!
இறுதி மனிதனாக நீ!
கதிகலங்கப் போவதைப்!
பார்த்திருந்தேன் !!
இது!
பசும் மலைகள் போர்த்திய!
வனாந்தரமல்ல!
முன்னொரு காலத்தில்!
குடிமக்கள் கூடிக்!
குதூகலித்ததோர் அழகிய தேசம் !!
எவ்வாறெனினுமின்றிங்கு!
புலியின் வேட்டைக்கும்,!
சிங்கத்தினுறுமலுக்கும் - நரிகளின்!
ஊளைகளுக்கும் தடையேதுமில்லை ;!
கட்டுப்பாடு, தடைகளெல்லாம்!
மனிதத்தோடு வாழும்!
மனிதர்களுக்கே...!!
என்ன தேசமிது!
சீரழிந்து போய்...!!
என்னழகில் மயங்கிச்!
செட்டை பிடிக்கத் துரத்தியலையும்!
சிறார் எவருமில்லாமல்!
என்ன வாழ்க்கையிது!
சீரழிந்து போய்...!!
எனக்கே கேட்காமல் !
சத்தமின்றி!
மெல்லப் பாடுகின்றேன்!
எனதான பாடலை !!
காற்று - என் பாடலை!
அதன் காதுகளுக்கு!
மெல்லக் கொண்டு போகுமெனின்,!
நாளையென்!
செட்டைக்கண்களில்!
குத்தப்பட்டு,!
என்னுடலும் உலரக்கூடும்!
இம் முட்கம்பிகளில் !!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

மறைத்ததும்

செண்பக ஜெகதீசன்
பாஞ்சாலி உடலுக்கு !
சேலை கொடுத்தான் !
கண்ணன், !
பார்த்தன் வில்லுக்கு !
வேலை கொடுத்தான்…! !
அங்கே- !
மறைத்துக் காக்கப்பட்டது !
மானம், !
இங்கே- !
திறந்து காட்டப்பட்டது !
வீரம்…!!

வயது வந்தாலென்ன

நவஜோதி ஜோகரட்னம்
வயது வந்தாலென்ன!
கடகடத்துச் சிரிப்பேன்!
இளமையை முழுமையாய்!
வாழ்ந்திட்ட!
மகிழ்ச்சியில்!
நரைகள் தோன்றும்!
நித்திரை அதிகம்!
அசையும் வாசனையில்;!
தலையசைத்த கனவுகள்!
முடிச்சுக்களாய் அவிந்து!
மெதுவாக எட்டிப் பார்க்கும்!
எத்தனை சந்தோஷங்கள்!!
இன்ப வேளைகள்!
காதல் - கருணை – துக்கமும்தான்!
நினைவில் ஆழ்ந்து – கண்!
குமிழ்களை உடைக்கும்!
உண்மை அன்போ!
எத்தனை அழகைக் காட்டும்!!
ஒரு மனிதனின் சிலுவை!
என்னைச் சுமந்து வரும்!
அந்த வியாகுலங்களில்!
இனிமையில்!
காதலில்!
எனது முகங்கள் மாறி மாறி வரும்!
எனக்குள்!
முன்னும் பின்னும்!
உண்மையும் பொய்யும்!
கவிதையில் படிந்து!
கலவையாகித் தேயும்!
வரிசையாக வந்து போகும்!
வழமையான நினைவுகளில்!
வயது வந்தாலென்ன!
வாய்விட்டுச் சிரிப்பேன்!
மலைகளின் மேலால்!
மிதக்கின்ற வானத்தில்!
அத்தனைகோடி!
நட்சத்திரங்களினூடாக!
அந்த முகம்!
என்னைப் பார்த்து!
சிரிக்கின்ற வேளையெல்லாம்…

காதலர் தினத்தை கசக்கியவள்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
ஏய் பெண்ணே !!
காதலர் தினமாமே ... என்ன!
கண்களை மூடுகின்றாய் ?!
காதல் நெஞ்சத்தை வெறும்!
காசுக்கு விற்றவள்!
காண்பாயா உண்மைக் காதல் நெஞ்சின்!
காயத்தை ஊனக் கண்களால் ....!
பாதையால்!
பயணம் போனவனைப்!
பாய்ந்து ... பாய்ந்து!
பார்வையால் தாக்கிப் பின்!
பொசுக்கித் தூக்கி!
வீசியெறிந்தவளே.. எப்படி அறிவாயடி?!
காதலர் தினத்தின்!
கண்ணியத்தை நீ .....!
ஊமைராகத்தில் உள்ளத்தில்!
உணர்ச்சி கூட்டியொரு கானம் இசைத்து!
உன்னிதயத்தில்!
உட்கார்ந்திருந்தவனை!
உதைத்ததும் பின் வதைத்ததும்!
உனைப்போன்ற வஞ்சிகளின் வழக்கமாகலாம்!
உலகத்தின் மூலையிலே!
உனக்காகத் தன்னை இருட்டினில் புதைத்தவன்....!
உணர்வாயா அவன் வலியை ......!
காதலர் தினமாமே.....!
காகிதப் பூவே!
காண்பதெப்படி வாசத்தை உன்னிடம் ?!
கடந்து விட்டது காலமென்றாலும்!
காளையரை வாழ விட இன்றாவது!
சங்கற்பம் பூண்டு விடு

நான் எங்ஙனம்

லலிதாசுந்தர்
என் உடல்செல்கள் அனைத்தும்!
இயக்கமின்றி துருபிடித்துவிட்டது!
உன் பார்வைமின்சாரம் பாயந்ததால்!
நெருப்பை தீண்டினால் சுடுமென்ற!
தொடுவுணர்வு இழந்து கைகள்தொடுகின்றன!
நீ என்னருகேயின்றி!
காதல் என்பது நோயில்லை!
காதல் என்பது தவமில்லை!
காதல் என்பது ஞானம்!
அதுவே அனைத்தும்!
தென்றலின் காதலின்றி மழையில்லை!
சிப்பியின் காதலின்றி முத்தில்லை!
கரையின் காதலின்றி கடலில்லை!
இயற்கையே இங்ஙனமெனில்!
நான் எங்ஙனம்!
நீ என்னருகிலின்றி.........!
- லலிதாசுந்தர்