வயது வந்தாலென்ன - நவஜோதி ஜோகரட்னம்

Photo by Tengyart on Unsplash

வயது வந்தாலென்ன!
கடகடத்துச் சிரிப்பேன்!
இளமையை முழுமையாய்!
வாழ்ந்திட்ட!
மகிழ்ச்சியில்!
நரைகள் தோன்றும்!
நித்திரை அதிகம்!
அசையும் வாசனையில்;!
தலையசைத்த கனவுகள்!
முடிச்சுக்களாய் அவிந்து!
மெதுவாக எட்டிப் பார்க்கும்!
எத்தனை சந்தோஷங்கள்!!
இன்ப வேளைகள்!
காதல் - கருணை – துக்கமும்தான்!
நினைவில் ஆழ்ந்து – கண்!
குமிழ்களை உடைக்கும்!
உண்மை அன்போ!
எத்தனை அழகைக் காட்டும்!!
ஒரு மனிதனின் சிலுவை!
என்னைச் சுமந்து வரும்!
அந்த வியாகுலங்களில்!
இனிமையில்!
காதலில்!
எனது முகங்கள் மாறி மாறி வரும்!
எனக்குள்!
முன்னும் பின்னும்!
உண்மையும் பொய்யும்!
கவிதையில் படிந்து!
கலவையாகித் தேயும்!
வரிசையாக வந்து போகும்!
வழமையான நினைவுகளில்!
வயது வந்தாலென்ன!
வாய்விட்டுச் சிரிப்பேன்!
மலைகளின் மேலால்!
மிதக்கின்ற வானத்தில்!
அத்தனைகோடி!
நட்சத்திரங்களினூடாக!
அந்த முகம்!
என்னைப் பார்த்து!
சிரிக்கின்ற வேளையெல்லாம்…
நவஜோதி ஜோகரட்னம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.