தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இறுதிக் கண்ணீர்த்துளி

நவின்
இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

நீரோடை

நவின்
அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை

வரதட்சனை

கி.சார்லஸ்
நாகரீகமாய் எடுக்கும் பிச்சை.
வரதட்சனை.  

தடுமாறும் தண்டவாளங்கள்

கவிதை காதலன்
நீ தடுமாறுகிறாயோ இல்லையோ,
உன்னால் தண்டவாளங்கள்
தடுமாறி தடம் மாறுகின்றன.
விபத்துகளுக்கு
உன்னை காரணம் காட்டப்போகிறதாம்

ரயில்வேதுறை

எப்படி சாத்தியம்?

அன்புடன் நிலா
கையளவு தான்
இதயமாம் . .
அறிவியல் சொல்கிறது!
பின் எப்பபடி
சாத்தியம் ?
ஆறடி நீ
அதற்குள்

வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்

குரு
அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்..

வலுக்கட்டாயமாக
ஒரு முத்தம்...

மண்ணில் மழைத்துளி

நம் மகள்

கவிப்பித்தன்
நீதான் அழகி
என்று கர்வம்
கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க
பிறப்பாள் நம் மகள்

குழந்தை தொழிலாளி

புகழேந்தி
கண்ணீர்த்துளியின் ஈரத்தில்
நமுத்து போனது தீக்குச்சி

தேர்தல் கூட்டணி

சரவணன்
அடிக்கும் கொள்ளையில்,
ஆளுக்கு எவ்வளவு?
தேர்தல் கூட்டணி!

கொள்ளையில் மக்களுக்கும்
பங்கு...ஓட்டுக்கு காசு

நரை

பனித்துளி சங்கர்
தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம்