தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பசி

புகழேந்தி
மெல்ல நெருங்கினாள்
விரலை வருடினாள்
வெட்கத்தில் சிணுங்கினாள்
தீர்ந்தது - ஒரு வேளை பசி

கறுப்புச்சூரியன்

மணிகண்டன் மகாலிங்கம்
கண்களுக்கு புலப்படும்

"கறுப்புச்சூரியன்"...

அவள் "கறுவிழிகள்"

புத்தாண்டு

முத்து கருப்புசாமி
ஜனனமும் மரணமும்
கைகுலுக்கி
விடைபெறுகிறது...
புத்தாண்டு

கவிதை

மு. மணிமேகலை
காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...கவிதை

நிலவுக்கு வந்த கடிதங்கள்

குகன்
நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம்

பெண்ணின் காதல்

நா.சார்லஸ்
காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்

இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்

முதல் காதல் கடிதம்

கலை. குமார்
முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்....

வரதட்சணை

ரசிகவ் ஞானியார்
பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்

வல்லினம் மெல்லினம்

சா.முகம்மது அபுபக்கர்
காதலிக்கு காதலன் எழுதிய மடல்...

நான் வல்லினம்

நீ மெல்லினம்

அம்மா இடையினம்.

அப்பன்  தடை இனம்

அவலம்

திவ்ய பாலா
ஜவுளி கடை பொம்மைக்கு
சேலை கட்டும் ஆண்கள்,
ஜகத்தினில் பெண்களுக்கு
சேலை அவிழ்க்க நினைப்பதேன்?