தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஒரு கணப் பொழுதில்

எம்.ரிஷான் ஷெரீப்
இக்கணம்!
எங்கேனும் ஒரு மூலையில்!
ஏதேனுமொரு எரிநட்சத்திரம்!
சமுத்திரத்தில் வீழ்ந்து!
சங்கமமாகியிருக்கலாம் ! !
இக்கணம்!
ஒரு பூ உதிர்ந்திருக்கலாம் , !
ஒரு பூ மலர்ந்திருக்கலாம் , !
எறும்பூரக் கற்குழிந்த கணம்!
இதுவாகக் கூட இருக்கலாம் ! !
இக்கணம்!
ஏதோவோர் எல்லையில்!
மலையொன்று மண்மேடாகியிருக்கலாம்,!
மரமொன்று வேருடன் !
வீழ்ந்திருக்கலாம் ! !
இக்கணம்!
இதழ் விரிக்கும் - எனதிந்தக்!
கவிதையைப் போல!
யாரேனும் ஒரு தாய்க்கு!
ஒரு அழகிய இளங் கவிதை பிறந்து!
'அம்மா' என்றழுதிருக்கலாம் ! !
இக்கணம்!
எங்கேனுமொரு மூச்சு!
நின்று போயிருக்கலாம் , !
எங்கேனுமொரு மூக்கு!
புதுக் காற்றை சுவாசித்திருக்கலாம் ! !
புயலடித்து ஓய்ந்த கணம், !
பூகம்பம் வெடித்த கணம், !
முதல் தூறல் விழுந்த கணம், !
மழை நின்று போன கணமென!
ஒரு கணத்தில்!
எல்லாமும் நிகழ்ந்திருக்கலாம் ! !
அந்நியனின் ஆக்கிரமிப்பில்!
வதைப்பட்டு, !
வாழ்விழந்து, !
அனாதையாகி , அகதியாகி, !
தாயொருத்தி பிள்ளையிழந்து, !
தாரமொருத்தி விதவையாகி!
விம்மியழும் ஒரு சொட்டுக்!
கண்ணீர்த்துளி நிலத்தில் வீழ்ந்த!
கணமாகவும் இது இருக்கலாம் ! !
ஏழு வானங்களையும்!
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன!
ஒரு ஷஹீதின் உயிருக்கு!
வானவர்களும் அழகிய தேவதைகளும்!
மணம் நிறைந்த!
மரணமின்றிய வாழ்வுக்கு!
கதவு திறந்த கணம்!
இதுவாகக் கூட இருக்கலாம் ! !
-எம்.ரிஷான் ஷெரீப், !
மாவனல்லை, !
இலங்கை.!
* ஷஹீத் - யுத்த களத்தில் மரணமடையும் வீரன்

பெண்ணினமே கேளீர்

வைரபாரதி
வரதட்சனை !
வில்லை வளைக்கும்!
வலு கொண்ட!
சீதைகளே!
கொண்டவன்!
பிழைகளை!
தண்டிக்க உரைக்கும்!
கலியுக பவத் கீதைகளே!
பெண்ணினமே கேளீர் - இலக்கண!
மெல்லினமே கேளீர்!
புண்ணியமே உங்கள் தோற்றம்!
பொய்மையில்லை அக்தே திண்ணம்!!
நீங்கள் பாறயை !
துளைத்தெழும் !
வேரென!
துணிவு கொள்க!
பாலெனும்!
உளங்கொண்டு !
கனிவெனும்!
கருனை காண்க!
விண்ணுக்கும்!
மண்ணுக்கும்!
பரந்ததோர்!
பாலமிடுக....!
தையல் சொல் கேளேல்!
என்பதை !
திறுத்தம் செய்க !
மையல் கொள்ளும்!
ஆண்களிடம்!
கவனம் கொள்க!
விரலுடுதுதும்!
மோதிரபோலின்றி - கை!
விரல்கள் தொழும்!
சேலையில் !
நிலைத்திடுங்கள்!
புத்துலகை படைத்திட!
எண்ணுவதை விட!
இத்துலகை திருத்திட!
வழி காணுங்கள்!
இருண்ட வீட்டின் குடும்ப விளக்கு நீங்கள்!
வறண்ட பாலையின் !
துளி மழை நீங்கள்!
உங்கள் !
புன்னகையில் தான் - இப்!
பூமி பூப்பூக்கிறது!
உங்கள் !
கண்ணீரில்தான்!
இங்கே வேர்கின்றது!
மதுபானக் கடைகளை!
மலர் வனமாய்!
மாற்றுங்கள்!
இருள் சூழ்ந்த !
இல்லங்களில்!
புது சுடரேற்றுங்கள்!
தன்னுள்!
முத்து இருப்பதை!
உணராத!
சிப்பி போலில்லாமல்!
தவ பூமிக்கு!
பொன் சுடராய்!
ஒளிருங்கள்!
'நெகிழாத சட்டங்களை !
நெகிழ்த்திடுங்கள்!
அரசியலில்!
புதுமலர்ச்சியை!
புகுத்திடுங்கள்!
கல்வியில்!
புதியதோர்!
விகாரம் செய்யுங்கள்!
கருதரிக்கா பெண்டிரே!
சுவீகாரம் கொள்ளுங்கள்!
மாணவப் பருவத்திலே!
ஆணவம் அகற்றுங்கள்!
வேண்டாத!
ஆசைகளை அகற்றுங்கள்!
இமை நனைக்கும்!
இன்னல்களோ!
இதயம் துளைக்கும்!
துன்பங்களோ!
இனி!
எது வந்தாலும்!
உங்கள்!
உள்ளத்திலிருந்து!
அச்சம் தவீர்

நிலை

முஹம்மட் மஜிஸ்
வண்ணத்துப்பூச்சிகள்!
பறக்கும் அழகையும் !
இறக்கைகளின்!
ஓவியத்தையும்!
அதன்-சுதந்திரத்தையும்!
நான்!
இரசிக்க மறந்ததில்லை!
இறக்கைகள்-பிய்த்து!
குருதி கசிந்த அதன்!
வலியை நான்!
உணராதபோதும்!
ஒரு கணத்தின்!
இடைவெளியில்!
அதன் - காருண்யம்!
பற்றி நான் !
சிந்திக்கத்தவறியதுமில்லை!
சந்தேகமற்ற!
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்!
நான்!
ஆனா போதும்!
ஒரு நாளேனும்!
தலையிட முடிவதில்லை!
என் மகனின்!
விளையாட்டில்

நெசவு

தேனம்மை லெக்ஷ்மணன்
துணி கசகசத்தது!
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்!
எச்சத்துடன்., கவிச்சியுடன்..!
இலைதின்று!
கூடோடு கிடந்தவற்றை!
கூண்டோடு அனுப்பி!
இழைகளை நீவி!
வாரி வாரி சீராக்கி!
சாயக்கஷாயத்தில் தோய்த்து..!
கசவுகளும் .,!
கசடுகளும் நீக்கி!
தறியடித்து ஜரிகை சேர்த்து!
பட்டு சார்த்தும் போதோ!
பட்டு போர்த்தும் போதோ!
பட்டின் உடல் நெளி நெளியாய்..!
உப்புக் கண்டமாகவோ!
கருவாடாகவோ!
பட்டு(டாய்)ப்போன புழுக்களோடு

தாயாயிருந்தாள்.. அகதியாயும்

சங்கைத்தீபன்
தாயாயிருந்தாள்.. தாயாயிருந்தாள்.. அகதியாயும்!
01.!
தாயாயிருந்தாள் !
---------------------!
(எட்டு வருடம்கழித்து என்னைவிரும்பாத அவளுடன்தொலைபேசியில் உயிர்த்தபோது இது வெறும் சொற்கள்அல்ல உணர்வு)!
என்னில் தொலைந்து!
என்னைத் தொலைத்தவள்!
தொலைதூர நேரத்தில்!
தொலை பேசினோம்!
தூரத்தே அவளிருக்க!
பக்கத்தே நானிருந்து!
வேரைப்பிடுங்கிக்கொண்டு!
திறக்கிறது புத்தகம்!
பக்குவப்பட்ட அந்தச்!
சந்தனத்தின் வாயில்!
கரைந்துகொண்டுருந்தது!
என்னுடனும் தன் பிள்ளையினுடனுமான பேச்சு!
நெற்றியில் குங்குமம்!
உயிர்த்துக்கொண்டிருக்கிறது மூச்சு!
தொட்டிலில் மழலைக்குயில்!
கூவிப்பழக- நான்!
வண்டிலில் நடைபழகிக்கொண்டிருந்தேன்!
பிள்ளை பற்றிச் சொல்லிக்கொண்டு!
என்னைச் சொல்லச் சொன்னாள்!
பிள்ளையின் கவனம் பார்த்து!
என்னையும் கவனித்தாள்!
மழலைச் சத்தம் கேட்டுக்கொண்டு!
என்னைக் கதை கேட்டாள்!
சிலநொடி என்னைவிட்டு!
பிள்ளையைப் பிடித்தாள்!
சிலநொடி பிள்ளையைவிட்டு!
என்னைப் பிடித்தாள்!
புறக்கண்ணால் பிள்ளைபார்த்து!
அகக்கண்ணால் என்னைப்பார்த்து!
அவள்!
தாயின் அக்கறை கொண்ட!
சக்கரைப் பொழுதுகளில்!
பேச்சைநிறுத்தியது பேசி!
நான் அவளுக்குச்சொல்வேன்!
உன் மூத்தமகனுக்கு வயசு ஐந்து!
உன் கடைசிமகனுக்குக்கு வயசு இருபத்தைந்து.!
!
02.!
அகதியாயும் அனாதையாயும்...!
-------------------------------------!
வானத்தின் கீழிருந்தேன்!
மழைகள் கிடைத்தது!
மேகத்தின் கீழ்!
விழுந்தன குண்டுகள்!
ஊர் மரத்தின் கீழிருந்தேன்!
கறுப்புநிழல் நிம்மதி!
இந்தமரத்தில்!
பறவைகள் எச்சம்!
போதிமரமும் அப்படியே!
கிரீடம் கிடைத்தது!
சிலுவையின் கீழ்!
தலையில் முள்ளு!
பட்டம் கிடைத்தது!
தரப்பாளின் கீள்!
அகதி!
பட்டியல் கிடைத்தது!
அகதியின் கீழ்!
அனாதை.!
சங்கைத்தீபன்!
29.3.09

மழை சோவென பெய்து

வி. பிச்சுமணி
மழை சோவென பெய்து !
ஓய்ந்து இருந்தது !
மழைத்துளிகள் கூரையின் !
விளிம்பில் முத்துக்களாய் !
கோர்த்து நிற்கின்றன !
மழை அடித்து !
காற்று தூயிமைஆயிற்று !
தெரு வெளிச்சம் !
தூக்கலாக இருந்தது !
தூரத்தில் லெவல் கிராசிங்!
மூடும் ஒலி தெளிவாய் கேட்டது !
முன் இரவு அமைதியாய் !
தொடங்கியது !
அரைஇறுதி கணக்கு !
பார்க்க தோன்றியது !
மனவான நீலத்தில்!
இளம் இருள் கவ்வியது!
மறதியாய் அசையா !
வெண் மேகங்கள் !
நற்செயல்களாய்!
நட்சத்திரங்கள் !
துர்செயல்களாய் !
இருள்கவ்விய கீழ்வானம்!
வெளிச்சம் மட்டும் !
வாழ்க்கை இல்லை!
-வி. பிச்சுமணி

இன்னும் கலையாமல் ! ! ! ! கொஞ்சம்¢

வேதா மஹாலஷ்மி
இன்னும் கலையாமல் கொஞ்சம் !
- வேதா மஹாலஷ்மி !
படிகளில் பார்க்காமல் !
பார்த்ததில் கொஞ்சம், !
உன் பரவசத்தை !
பார்த்தும், பார்க்காததில் கொஞ்சம்... !
மனசோடு மனசாகப் !
பேசியதில் கொஞ்சம், !
மவுனமாய் மருகியே !
பேசாததில் கொஞ்சம்... !
இளம் மாலையில் இன்பத்தில் !
இணையாய் நடந்ததில் கொஞ்சம், !
துளிர் காலையில் துன்பத்தில் !
துணையாய் கிடந்ததில் கொஞ்சம்.. !
கலைய வைத்து நானும் !
கலைந்ததில் கொஞ்சம், !
காத்திருக்கும் என் கனவுகள் !
கலையாததில் கொஞ்சம், !
உன் அன்பைத் தேடி !
அலைந்ததில் கொஞ்சம் !
அருகாமை தேடி !
அலையாததில் கொஞ்சம், !
ஊசி முனையில் !
உன் உள்ளத்தில் நுழைந்ததில் கொஞ்சம், !
உயிரோடு உறைந்தும் உன் கருணை !
உருகி வழியாததில் கொஞ்சம், !
புதிதாய் உன்னைக் கவிதை !
புனைந்ததில் கொஞ்சம், !
புதிரான உன் புன்னகையை மட்டும் !
புனையாததில் கொஞ்சம், !
மூச்சுத்திணற உன் முத்தத்தில் !
நனைந்ததில் கொஞ்சம், !
உன் இளமையின் யுத்தத்தின் சத்தத்தில் !
நனையாததில் கொஞ்சம், !
ஈருடல் ஓருயிராக !
இணைந்ததில் கொஞ்சம், !
இன்னமும் முழுவதும் !
இணையாததில் கொஞ்சம், !
கவிதைக் கள் உண்டு !
மலர்ந்ததில் கொஞ்சம், !
கள் கொண்ட பூக்கள் !
மலராததில் கொஞ்சம், !
அத்தனையும் உனக்காய் !
அணைத்ததில் கொஞ்சம், !
தித்திக்கும் தீண்டல்கள் !
இன்னும் அணையாததில் கொஞ்சம், !
இனிமையும் என் இளமையும் !
தீர்ந்ததில் கொஞ்சம், !
தனிமையும் உன் தாகமும் !
தீர்க்காததில் கொஞ்சம், !
உன் வசியத்தோடு !
வாழ்ந்ததில் கொஞ்சம், !
வாசத்தோடு வாழாததில் கொஞ்சம், !
நினைவுகள் நெஞ்சில் !
நிறைந்ததில் கொஞ்சம் !
உன்னால் இன்னமும் !
நான் நிறையாததில் கொஞ்சம் !
பசி போக்கும் உன் பசலை !
குறைந்ததில் கொஞ்சம் !
பருவத்தால் என் பருவம் !
குறையாததில் கொஞ்சம் !
இப்படியே... !
கொஞ்சலும் கெஞ்சலுமாய் !
துள்ளலும் துடிக்கலுமாய் !
பார்த்துப் பார்த்துக் கட்டிய கூட்டை !
பட்டென்று கலைத்துவிட்ட !
உன் பண்பாட்டு மொழிகளால் !
பாராமுகங்களால் !
உள்ளம் உடைந்ததில் கொஞ்சம், !
உடையாததில் கொஞ்சமுமாய் !
எனக்கும் உனக்கும் சேர்த்து... !
கொஞ்சம் கொஞ்சமாய் !
இறுதிவரை, !
காதலித்துக் காத்திருப்பேன் !
கண்களில் கனவுகளோடு - அழகான !
நம் நினைவுகளோடு!!!! !
veda

விடியல் உன் கையில்

லலிதாசுந்தர்
இரவின் மடியில் சாய்ந்து கொண்டு!
விடியலுக்காக காத்திருப்பதை விட!
இரவின் கைபிடித்து நடைபயணம் - செய்துபார்!
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம் !
விரித்து காத்திருக்கும்!
உழைப்பென்னும் உளி கொண்டு !
செதுக்கிபார் - உன் மனதை!
உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்!
உன் வெற்றி தேவதை!
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என!
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்பதை விட!
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்!
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்!
நிற்க வாய்ப்பு கேட்கும்!
கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்!
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை!
கடலில் கலக்கும் வரை !
மனிதா!
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார் !
உன் இலட்சிய பாதையில்!
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்!
நிலக்கரி பிரித்த வைரமாய்.!
!
- லலிதாசுந்தர்

தோழமைக்கு வலிமையெது?

மன்னார் அமுதன்
பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி!
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு!
வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்!
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா!
!
ஊனன் கண்ட கனவு மெய்க்க!
உடலை வருத்தி உழைத்தோம்!
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை!
உதறுகையில் திகைத்தோம்!
!
பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா!
வாழ்க்கையென்று நினைத்தோம்!
பாசத்தோடு அரவணைத்து - உன்!
வேசங்களை மறைத்தோம்!
!
கருத் துரைக்க அழைத்திடுவாய்!
மறுத் துரைத்த தில்லை!
மறந்து போன நாட்களுண்டு; மனம்!
மரத்துப் போன தில்லை!
!
ஆசுகவி உரைத் வர்கள்!
கொண்ட தில்லை பட்டம்!
ஆறுகவி புனையு முன்னே!
உரைக்கிறாய் நீ சட்டம்!
!
தோழமைக்கு நல்ல சான்று!
கொடுப்ப தில்லை உயிரை!
தோழனுக்கு தோழனாக!
வாழ்வதே எம் வலிமை

அக்கா எனும்

ஜான் பீ. பெனடிக்ட்
அன்னை அவளின் கவனமோ!
அடுத்த பிள்ளை பெறுவதிலே!
அக்கா அவளின் ஆர்வமோ!
அன்புத் தம்பி தங்கை வளர்ப்பினிலே!
மூத்தவளாய் அவள் பிறந்ததாலே!
முதுகிலே சுமப்பாள் இளையவனை(ளை)!
மூக்கைப் பொத்திக் கொள்ளாமலே!
மூத்தரம் மலம் அள்ளுவாளே!
தான் படிக்காவிட்டாலும்!
தன் தம்பி தங்கை படிக்க விளைவாள்!
தான் உண்ணாவிட்டாலும்!
தன் தம்பி தங்கை உண்ண வைப்பாள்!
கல்யாணம் நடக்கும்வரை!
கற்பினைக் காத்திடுவாள்!
கணவன் கை பிடித்து!
கரு சுமந்து தாயாவாள்!
கணவரின் தம்பியை!
கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள்!
கண்கலங்கும் தன் தம்பியை!
கை தூக்கிவிட தவறமாட்டாள்!
பட்டணத்தில் குடியேறி!
பாங்காய்க் குடும்பம் நடத்திடுவாள்!
படிக்கப் பட்டணம் வரும்!
பாசத் தம்பிக்கு இடம் கொடுப்பாள்!
தனக்கே போதாத சம்பளமெனினும்!
தன் தம்பிக்கும் பகிர்ந்தளிப்பாள்!
தவழ்ந்திடும் தன் பிள்ளைக்குத்!
தாய் மாமனைக் காவல் வைப்பாள்!
பணி நிமித்தம் தம்பி பாரின் செல்லும்போது!
பாசத்துடன் அனுப்பி வைப்பாள்!
பெண்ணொருத்தியை தம்பி மணக்கும்போது!
பெரும் மன நிறைவு கண்டிடுவாள்!
தன் குடும்பப் பணியினிலே!
தனிக்கவனம் செலுத்திடுவாள்!
தம்பி போல் தன் பிள்ளைகள் வளர!
தவமாய்த் தவம் கிடப்பாள்!
அத்தனையும் அன்னை செய்திருந்தால்!
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்!
அத்தனையும் அக்கா செய்திடுவதால்!
அவளையே தெய்வம் என்றிடுவேன்!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்