தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கலக்காதே அம்மா

s.உமா
கலக்காதே அம்மா!
கள்ளிப்பாலை..!
வயிறு சுமக்காத!
பாரத்தை!
நெஞ்சு சுமக்க!
'தாயாக' தவித்திருப்போர்!
தவமிருக்க!
தானாக வந்ததனால்!
எனதருமை!
தெரியாது போய்விட்டதோ!
என் தாயே?!
கலக்காதே அம்மா!
கள்ளிப்பாலை..!
ஆணாகப் பிறந்திருந்தால்!
அழித்திருக்க மாட்டாய் தான்!
என்றாலும்!
சேயாக எனையிங்கீன்ற நீ!
பெண்தானே? ஆணல்லவே?!
நாளை உன் மகனுக்கோர் இணை!
பெண்தானே? ஆணல்லவே?!
கலக்காதே அம்மா!
கள்ளிப்பாலை!
தினம்!
குடித்து குடித்து!
உனை!
அடித்து அடித்து!
எனைத் தந்த!
என் தந்தை!
ஆணல்ல அம்மா!
அறிந்து கொள்...!
உனை பொருளாக்கி!
உதைத்து!
உணர்வழித்து!
என் உயிரழிக்க முற்பட்ட!
வஞ்சகன்!
ஆணல்ல!
அவனுக்கு மகளாக!
எனக்கும் ஆசையில்லை!
ஆனாலும்!
கலக்காதே அம்மா!
கள்ளிப்பாலை!
எனையோர்!
அரசு தொட்டிலில்!
விட்டு விடு...!
எனைபோல்!
அக்னி குஞ்சுகள்!
ஓர் நாள் நெருப்பாகும்!
வெந்து வீழுமம்மா!
வீணர் ஆணாதிக்கம்..!
வீட்டில் பெண்ணை!
அடிமைப் படுத்தும்!
மூடர் பரம்பரை!
மண்ணில் சாய!
வேர் பொசுக்கி!
வெற்றிக் கொள்வோமம்மா...!
அதுவரை!
கலக்காதே அம்மா!
கள்ளிப்பலை!
எனையோர்!
குப்பைத்தொட்டியிலாவது!
எறிந்து விடு!
கலக்காதே!
அம்!
ஆ.........!
-உமா

அழைப்பிதழ்

ஆ.மணவழகன்
************ !
என் கையெழுத்தைப் பார்த்ததும் !
கண்டுபிடித்து விடுவாயோ ! !
சிறுமூளையின் ஏதோ ஒர் அறையில் !
சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச் !
சிறகடிக்கச் செய்வாயோ ! !
பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்துப் !
பரிச்சயம் ஆன அந்த நாள் முதல்.... !
படிக்கட்டில் அமர்ந்து பாடங்களையே !
படிப்பதாய் பாவணைகள் செய்த அந்த நாள் முதல்...! !
'எனக்காக இதைச் செய்யக் கூடாதா?' !
ஏக்கமாய்க் நீ கேட்ட அந்த நாள் முதல்... !
அந்த மழை நாளில்... !
கல்லூரிப் பருவத்தின் கடைசி நேரத்தில்... !
'இன்றாவது சொல்லிவிட மாட்டாயா?’ !
என்ற எதிர்ப்பார்ப்புடன்... !
எதார்த்தமாய்க் கைகுலுக்கி.. !
என்றும் போல் புன்னகைத்துப் பிரிந்த, !
அந்த கடைசி நிமிடம் வரை... !
அத்துனையும் உன் நினைவிற்கு வருமோ ! !
உனக்கான விழா அழைப்பிதழை !
அஞ்சல் செய்து விட்டு, !
உன் இருக்கையை வெறித்தபடி நான்...! !
யார் கண்டது? !
இந்நேரம் உன் இருப்பிடம் கூட !
இடம் மாறி இருக்கலாம்

நாடு கடந்த தமிழீழ அரசு

ப. கரிகாலன்
வகையறுந்த நம்முறவுகள் நசுக்கப்படும் போது!
உலகம் எம்மை வேடிக்கை பார்த்தது-ஏனெனில்!
நமக்கொன்று ஓரசலில்லை !
முட்கம்பி வேலிகளும் முள்ளிவாய்க்கால்களும்!
எம்முரிமைகளை தட்டி பறித்தன-ஏனெனில்!
தட்டி கேட்டோர் நசுக்கப்பட்டனர் !
சின்னாபின்னமான உடல்களும்!
சிதறிய தேசமும் எம்மை அச்சுறுத்த!
போவதில்லை--ஏனெனில்!
அவை அழியாத கொடூர வடுக்கள் !
நம்மினத்தின் அழிவில் -குளிர்காயும்!
சிங்கள தேசத்தின் எக்காளம்!
ஒரு நீர்மேல் குமிழிதான்-ஏனெனில்!
தமிழினம் ஒன்றிணைந்து விட்டது !
நாடு நாடாய் அகதி வாழ்க்கை!
தேவைதானா எம்மினத்திற்கு இன்னும்!
நம் தலைவன் ஊட்டி வள்ர்த்த தமிழீத்தீ!
உலகெங்கும் பரவிட!
அவன் காட்டிய வழியில் சென்று - நாம்!
தமிழீழ அரசொன்று அமைத்திடுவோம்

பழைய புத்தகம்

தர்ணம் ரியாஷ்
உருதுக்கவிதை. கவிஞர் தர்ணம் ரியாஷ் (Tarannum Riyaz) !
பழைய புத்தகம் !
=============== !
புதிய ஓளி !
புரியாதச் சுவை !
அறிமுகமில்லாத அறிமுகம் !
இன்னும் தெரியவில்லை !
நீ யாரென்று! !
ஆனாலும்- !
உன் இனிய நினைவுகள் மட்டும் !
பழையப் புத்தகத்தின் வாசனையைப் போல !
என் உள்ளத்தில். !
உறவுகள் தொடரட்டும் !
====================== !
நண்பர்களின் சந்திப்பு தொடரட்டும் !
தொலைபேசியிலாவது தொடரட்டும் !
இன்று மறந்தால்.. !
நாட்கள் மாதங்களாகும் !
மாதங்கள் ஆண்டுகளாகும் !
ஆண்டுகள் கடந்து !
தொலைபேசி அழைத்தால்.... !
தொலைபேசியின் எண்கள் மாறியிருக்கலாம் !
தொலைபேசியே இல்லாமல் போயிருக்கலாம் !
ஏன் அவனும் கூடத்தான். !
மொழிபெயர்ப்பு : புதியமாதவி

காகிதங்களில் சொற்பமாய் குறிக்கப்பட்

தேனு
ட பிரிவு..!
------------------------------------------------------!
யாருமற்று தனிமையில் காற்று!
பெருமழையென பொழிந்து கொண்டிருந்தது..!
நுண்ணிய இசை நிறைந்த அறையில்!
பருகிய நெடி மீதமான!
நான்கைந்து தேநீர்க் கோப்பைகள்!
மேசை மீது கிடத்தப்பட்டிருந்தன..!
ஒரு உறவின் இணக்கம் பதிவுற்ற!
காகிதங்களில்!
பதிந்திருந்த எழுத்துக்களை அழித்து!
பிணைப்பெனும் நிறமற்ற நீர்!
வெறுமையாய் வழிந்து கொண்டிருந்தது..!
தனிமையின் விளிம்பில் கிடக்கும்!
வெற்றுக்காகிதங்களைக் கிழித்தெறியும்!
காற்றைப் பெருமழையென!
பொழிந்து கொண்டிருந்தது மின்விசிறி

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்

தமிழன், நோர்வே
உங்களைச் கொஞ்சம்!
உலகம் தேடும்!
முத்தமிழ் சிவப்பாகும்!
போர் மேகங்கள் சூழும்!
உங்களுக்கும் வலிகள் புரியும்!
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்!
ஆமிக்காரன் இயமன் ஆவான்!
உயிர் வெளியேறிய!
உடல்களை காகம் கொத்தும்!
விழிகளிலே குருதி கசியும்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
தொப்புள் கொடியில்!
பலமுறை தீப்பிடிக்கும்!
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?!
ஒரணியில் திரண்டு!
ஒரே முடிவு எடுப்பீர்களா?!
உங்கள் அரசியல் விளையாட்டில்!
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!!
எந்த இனத்தவனும் உங்களை!
மன்னிக்கமாட்டான்!
சொந்த இனத்தவனைக்!
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்!
வாயிலே நுழைவதெல்லாம்!
உங்கள் வயிற்றிலே செரிக்காது!
சொந்த சகோதரன்!
அங்கே பட்டினியில் சாகும்போது!
இந்த தாகம் இந்தச் சோகம்!
இந்த இன அழிப்பு!
இந்த பேர் இழப்பு!
எல்லாம் தமிழனுக்கே!
வாய்த்த தலைவிதியா?!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
குருதியில் அடிக்கடி!
நீ குளிப்பாய்!
பெற்ற பிள்ளையை!
படுக்கையில் நீ இழப்பாய்!
நித்திரையில் நிம்மதியே இருக்காது!
மரநிழலில் மனம் குமுறும்!
நரம்புகள் வெடிக்கும்!
நா வறண்டு போகும்!
பெண்களின் ஆடைகள் தூக்கி!
பேய்கள் வெறி தீர்க்கும்!
ரத்த ஆறு வழிந்தோடும்!
நடுவிலே நாய் நக்கும்!
தலையில் செல்வந்து விழும்!
தட்டிவிட்டு வலியின் வதையோலம்!
வானைப் பிளக்கும்!
கண்ணீர்த் துளிகள் கடலாகும்!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே!
பதுங்கு குழிகளில் வாழ!
உங்களால் முடியுமா?!
அகோரத்தின் உச்சத்தை!
உணர்ந்தது உண்டா?!
அழுது களைத்து மீண்டும்!
எழுந்து நின்றது உண்டா?!
உன்னைப் புதைக்கும் இடத்தில்!
உயிர் வாழப் பழகியதுண்டா?!
உலகம் எங்கும் சிதறி!
தாயைப் பிரிந்து வாழும்!
துயரத்தை அனுபவிக்க முடியுமா?!
பனிக் குளிரில் பனியோடு!
பனியாய்க் கரைந்து!
உங்களால் உறைய முடியுமா?!
சவப் பெட்டிக்குள் உறங்கி!
நாடு விட்டு நாடு போய்!
நரகத்தில் தொலையமுடியுமா?!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
பாண் துண்டோடு பருப்பு!
பகலில் வயிறு பசியாறும்!
பாதி வயிற்றோடு நெருப்பு!
இருளில் குளிர் காயும்!
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்!
சிறைச்சாலைக்கும்!
ஒரே ஒரு பொருள்தான்!
எங்கள் யாழ்ப்பாணம்!!
பாலைவனத்து ஒட்டகமாய்!
பாம்புகளுக்கு நடுவில்!
எங்கள் வாழ்க்கை ஓடும்!
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!!
தாய்மண் தேகத்தை சுவைத்து!
ஆட்டுக்கறியாக பங்கு போடும்!
நவீன மிருகஙக்ளை!
யார் வேட்டையாடுவது?!
ஆண்ட பரம்பரையின்!
அடையாளத்தை அழிக்கமுடியுமா?!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
ஆளும் கட்சிகள்!
ஆட்சி இழந்தாலும்!
அனைத்துக் கட்சிகள்!
கூட்டம் நடந்தாலும்!
தமிழகம் முழுவதும்!
கடைகள் மூடப்பட்டாலும்!
திரையுலகமும் திரண்டு!
பேரணியில் சென்றாலும்!
இலக்கியத் தோப்பினில்!
எரிமலை எழுந்தாலும்!
தனித் தனியாக நீங்கள்!
உண்ணாவிரதம் இருந்தாலும்!
எப்போதும் உங்களை!
நெஞ்சிலே சுமக்கின்றோம்!
தணியாத தாகமாய்!
விடுதலை கேட்கிறோம்!!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
உங்கள் எழுச்சியால்!
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!!
நீட்டியுள்ள நேசக்கரத்தை!
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!!
-தமிழன்!
நோர்வே

பாரதி வாழி

பாண்டூ
பாரதிபோல் பாரதனில் பார்த்ததுவும் உன்டோ ? - நம் !
பாரதத்தைப் பாட்டதனால் பாலித்தவர் உண்டோ ? !
பா-ரதத்தில் ஏறியே பவனியவன் வந்தான் - நல் !
பாரதத்தை உய்வித்திட பாடல்பல தந்தான்! !
சுதந்திரத் தேரதனில் சாரதியாய் நின்றான் - பெண்!
சமத்துவத்தை யேதனது சுவாசமெனக் கொண்டான்!!
மதவெறி கொண்டோரின் முகத்தினிலே உமிழ்ந்தான் - பொய் !
நிதம்கூறித் திரிவோரை நிந்தனைகள் புரிந்தான்! !
கந்தைக்குக் கூடகையில் காசிலாமல் கிடந்தான் - நம்!
சிந்தைக்கு சிந்துதந்து பாவரசாய் நடந்தான்! !
எந்தையர் நாடிதென எண்ணத்திலே பதித்தான் - வெறும் !
மந்தையான மக்கள்மனம் மாறிடவகை உரைத்தான்! !
மேலிவன் கீழிவனென மனிதருள் உண்டோ? - இம்!
மடமைதனைப் போக்கிநல் மாண்பினை வளர்த்தான்!!
ஆழ்கடலும் மலைகளுமே அரும்தோழர் என்பான் - சிற் !
அறிவுயிர் ஆயினும் அன்போடு அணைப்பான்! !
தமிழ்வாழ வேண்டும்மெனத் தினம்தினம் நிணைத்தான் - இவன் !
தான்வாழ நிணையாதத் தூயவனாய்த் திகழ்ந்தான்! !
அமிழ்தினும் இனியதமிழில் அரும்கவிகள் குவித்தான் - இவன் !
அச்சமது மடமையென அஞ்சாமை விதைத்தான்! !
ஒப்பில்லா உலககவி யெனவேதான் உயர்ந்தான் - நம் !
ஒருமைப்பாடு ஓங்கிடவே ஓய்வின்றி உழைத்தான்! !
செப்பும்கவி யாவும்நம் சிந்தணையை ஏற்றும் - இவன் !
செத்தான் என்பதில்லை சிரஞ்சீவி தான்நாளும்! !
!
பாண்டூ ... !
சிவகாசி.
+91 98421-42192

அப்பா என் குழந்தை

ரசிகவ் ஞானியார்
கந்தசார்..!
கந்தன் அய்யா..!
கந்தகுமார்..!
ஒவ்வொரு இடத்திலும்!
உனக்கு பெயர்கள் வித்தியாசப்பட்டாலும்!
எனக்கு பிடித்த பெயர்!
அப்பா மட்டும்தான்!!
அப்பா…!
அப்பா…!
அப்பா…!
இப்படி!
காற்றில்தான் சப்தமிடமுடிகிறதே - தவிர !
கண்ணெதிரே நீ இல்லையேயப்பா?!
என்னுடைய!
உச்சரிப்பு அகராதியிலிருந்து!
உதிர்ந்துவிட்டது!
அப்பா என்ற சொல்!!
!
நீ!
இருக்கிறாயா இல்லையா?!
இல்லையா இருக்கிறாயா? !
அடிக்கடி!
கிள்ளிபார்த்துதான் உணர்ந்துகொள்கிறேன் !
நீ இல்லையென்பதை!!
!
நான் செய்கின்ற!
ஒவ்வொரு நிகழ்வுகளிலும்!
நீ வந்து போகின்றாய்!
நீ இருந்து!
நிகழக்கூடிய நிகழ்வுகள் எல்லாம்!
நீ இல்லாமலும்!
நிகழ்கின்றது எனினும்!
நீ இருப்பது போல இல்லையப்பா!!
நீ தொட்டுப்படித்தப் புத்தகம்..!
எட்டிப்பிடித்த குழந்தைகள்..!
கத்தி நடத்திய பாடங்கள்..!
தட்டிக்கொடுத்த முதுகுகள்..!
பொட்டிக்கடை சிகரெட்கள்..!
பூட்டிவைத்த சீக்ரெட்கள்.. !
எல்லாம் அப்படி அப்படியே கிடக்க.. !
உன் பயணம் தீர்மானிக்கப்பட்டது!!
வணக்கம் சொல்வதற்கு!
வாத்தியார் இல்லாமல்..!
காற்றில்!
கையசைத்துக்கொண்டிருக்கின்றது!
நம் தெருக்குழந்தைகள்!!
நீ எதிரில் வந்தால்!
புன்சிரிப்போடு கடந்த மனிதர்கள்..!
யதேச்சையாய் !
நம் வீட்டைக் கடக்கும்பொழுது!
புன்முறுவல் செய்கின்றார்கள்!!
நீ இருப்பதாய் நினைத்து..!
உன் பெயரை அழைத்தபடியே!
பள்ளிக்கூடத்திற்கு வருகிறவர்களுக்கு..!
எப்படி புரியவைப்பது? !
உன் இல்லாமையை!!
நீ அமர்ந்த இருக்கை.. !
நடந்து வந்த பாதை..!
நீ ஓட்டிய வாகனம்..!
இவைகள்!
நீ பூமியில் உலவியதை..!
எனக்குள்!
மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது!!
மரணம் இயற்கைதான் எனினும்!
நீ மரணிப்பாய் என்று!
நான் எதிர்பார்க்கவேயில்லை அப்பா!
உனக்கு மட்டும்!
விதிவிலக்காகியிருக்க கூடாதா?!
எல்லாருக்கும்!
நீ!
பாடம் எடுத்தாய்!
உன் மரணத்தில்!
எங்களுக்கு ஓர் பாடம் ...!
ஆம்!!
உன் மரணத்தில்…!
தொப்பி – விபூதி – சிலுவைகள் எல்லாம்!
சுற்றி நின்று அழுத கண்ணீரிலே…!
இந்திய வேற்றுமையே!
இருண்டு போனதப்பா!!
நம்பிக்கையிருக்கிறது!
தண்ணீரில் கலந்த உன் அஸ்தி.. !
எந்த விளைநிலத்தில்!
நீந்திக்கொண்டிருக்கின்றதோ?!
அங்கே அமோக விளைச்சல்!!
ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்க்கின்றேன்..!
நீ என்னைப்பார்த்து சிரித்த..!
கடைசி சிரிப்பு எது?!
நீ என்னிடம் பேசிய..!
கடைசி வார்த்தை எது? !
நீ என்னைப் பார்த்த..!
கடைசி பார்வை எது?!
நீ என்னைத் தொட்ட..!
கடைசி தொடுதல் எது?!
நினைத்துப்பார்க்கின்ற எல்லாமே!
துக்கத்தை தருவதால்…!
உன் நினைவுகளுக்குப் பிறகு!
எனக்கு!
தூக்கத்தை தரட்டும் இறைவன்!!
நீ!
இறந்துவிட்டதாக!
இவ்வுலகமே பிதற்றினாலும்..!
எனக்கு மட்டும்!
நீ!
வாழ்ந்து கொண்டிருக்கின்றாயப்பா!!
கறுப்புக் கண்ணாடிக்கு!
பின்புறம் அமர்ந்து பார்ப்பவர்கள் போல!
எனக்குத் தெரியாமலையே!
எங்கிருந்தோ என்னை!
நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்!!
!
உன்!
இருக்கையை கடக்கும்பொழுதெல்லாம்!
என் இரு கைகளிலும்..!
வித்தியாசமான ஸ்பரிசம்!
நீ தொடுகிறாயோ அப்பா?!
முயற்சிகள் சிலநேரம்!
முடக்கிவைக்கப்படும்பொழுது !
தன்னம்பிக்கையாய் இதயத்தில்…!
துளிர்த்து வருகிறாய் நீ!!
கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்!
உணரமுடிகின்ற காற்றைப்போல!
நீ வந்துகொண்டே இரு!!
தென்றல் வீசி!
வீட்டுக் கதவு லேசாய் அசைந்தால்கூட!
நீ வாசல் வந்துவிட்டதாய் உணர்கிறேன்! !
!
நீ இருந்தால்..!
இப்படி இருந்திருக்குமோ?!
அப்படி இருந்திருக்குமோ?!
என்று நினைத்து நினைத்தே!
உன் நினைவுகள்!
என்னுடன் இருக்கின்றன!!
உன்!
குழந்தையாகிய என்னிடம் நீ!
கோவப்பட்டதில்லை!!
ஆனால்!
உன் குழந்தைச் சேட்டைகளைக் கண்டு!
நான் கோவப்பட்டிருக்கின்றேன்!!
நான் வீட்டுக்கு வர!
தாமதமாகும்!
தற்காலிக பிரிவிக்கே…!
தவித்துக்கொண்டிருப்பாயே அப்பா?!
இந்த!
நிரந்தரப் பிரிவின் நிஜத்தை ..!
இன்னமும் நம்பவில்லை நான்! !
உன்னைப்பிரிந்து..!
இத்தனை நாட்கள் ஆகிவிட்டதே!
என்னை தேடவில்லையா உனக்கு?!
நடக்கப்போவதில்லை என்றாலும்..!
நப்பாசையில் கேட்கின்றேன்!!
எல்லாமே கனவாகிவிட..!
நாளைய அதிகாலையில்!
கண்ணா எழுந்திரு !
கண்ணா எழுந்திரு என்று!
என்னை எழுப்பிவிட வருவாயா?!
நீ குழந்தைகளுக்கு…!
பாடம் சொல்லிக்கொடுக்கும் சப்தம்!
என்!
காதுகளில் வந்து கேட்காதா?!
மறுநாள் காலை!
நான் வேலைக்குப் போகும்பொழுது!
உன் அறையில்... !
நீ ஏதாவது!
எழுதிக்கொண்டிருக்கமாட்டாயா?!
மறுபடியும் இறைவன்!
காலத்தை சுழற்றி!
நீ இறந்த நாளின்!
முந்தின நாளிலிருந்து..!
எல்லாவற்றையும் அழித்திடமாட்டானா?!
நடக்கப்போவதில்லை என்றாலும்!
நப்பாசையில் கேட்கின்றேன் !
அப்பா!!
நீ இல்லாத பொழுதுகள்!
மின்சாரம் இல்லாத வீடாய்..!
மனிதர்களே இல்லாத காடாய்..!
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..!
காட்சியளிக்கின்றது!!
ஒருவனுக்கு!
யாருமே இல்லையென்றால்.. !
அநாதை என்போம!;!
ஆனால்!
எங்கள் எல்லோருக்கும்!
நீ ஒருவன் இல்லையெனினும்..!
நாங்கள் அநாதைதான்!!
நீ இப்பொழுது!
இறந்திருக்க கூடாதோ என்று தோன்றுகிறது!!
காலம்சென்று நீ இறந்தாலும்!
அப்போதும்!
இப்படித்தான் நினைத்திருப்பேன்!!
இன்னமும் நான் நம்பிக்கொண்டிருக்கின்றேன்!
நீ இறக்கவில்லை!
எங்கோ ஓர் இடத்தில் !
நீண்ட தூக்கம்…!
தூங்கிகொண்டிருக்கின்றாய்!
மறுபடியும் நீ விழித்துப்பார்க்கும்பொழுது!
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்..!
உன் குழந்தையாய் நானானதுபோல்!
என் குழந்தையாய் நீயாவாயா?!
நீ!
உலகப்பயணம் முடித்துச் சென்ற!
அந்த அதிகாலை.. !
முன்பே தெரிந்திருந்தால்!
முந்தைய இரவில்!
நிறைய பேசியிருப்பேனே அப்பா?!
யாராவது திருப்பிக்கொடுங்களேன்!
அப்பா இறந்தநாளின்!
முந்தைய இரவினை!!
கொஞ்சூண்டு…!
பேசவேண்டும்!
- ரசிகவ் ஞானியார் !
!
-- !
K.Gnaniyar!
Dubai

இறந்தவளின் புகைப்படம்

நிந்தவூர் ஷிப்லி
ஒரு இறந்தவளின் புகைப்படம் பற்றி சொல்வதற்கு!
எவ்வளவோ இருக்கிறது..!
சிரித்த முகத்துடன் எப்போதோ எடுக்கப்பட்ட!
அப்புகைப்படத்தை நம் கைகள் ஏந்துகையில்!
பூமியதிர்வை ஒத்த மன நடுக்கத்துடன் தடுமாறுகிறோம்..!
பூமி விழுங்கிய அவள் கண்கள் நம்மை உற்றுப்பார்ப்பது!
அத்தனை எளிதில் விளக்கக்கூடிய உணர்வு அன்று!
அது ஒரு சிறு பெண்ணின் புகைப்படமாயின்!
பரிதாபத்துடன் உற்று நோக்குகிறோம்!
அது ஒரு இளம்பெண்ணின் புகைப்படமாயின்!
இரண்டாம் முறையும் பார்க்கிறோம்!
அது ஒரு வயதானவளாய்!
சலனமேயின்றி நகர்கிறோம்..!
இறந்தவளின் புகைப்படம்!
நமக்குள் தோற்றுவிக்கும் ஏகாந்தம்!
ஓரிரு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்..!
எல்லாம் இருக்க!
நாம் இறந்த பிறகு!
நமது புகைப்படத்தை பார்க்கும் மனநிலை பற்றி!
எப்போதாவது நீங்கள் சிந்திக்கிறீர்களா?

முகமூடி

இரா. பி
மனிதனைத் தேடி ஒரு பயணம்!
அவன் முகமறியாது!
முகவரி தெரியாது!
அவன் யார் என யாரும் கேட்டால்!
பதில் சொல்ல முடியாது !
ஒரு முறை கண்ட சுவடு!
மனதில் குழம்பிய பிம்பமாய்!
மனிதன் யார்?!
மாசற்ற மனதுடன் இருப்பானா?!
மறுபடியும் அவனைக் காண்பேனா? !
வாழ்க்கைப் பயணத்தில் வழிப்போக்கன் குறுக்கிட்டு!
மனிதன் முகமூடி அணிந்திருப்பான் என்றான்!
எதற்காக என்ற கேள்விக்கு விடையில்லை !
ஒரு வேளை, மனிதன் தன்னை மாற்றிக்கொண்டானோ!
மற்றவருடன் சேர்ந்து வாழ?!
தனிமை விரும்பாதவன்!
தனித்துவம் இழந்துவிட்டான்…!