ஆன்மீகம் - கிளியனூர் இஸ்மத் துபாய்

Photo by laura adai on Unsplash

இரண்டு என்பதை!
ஓன்றெனக் கூறுவது!
ஏகத்துவம்!
தன்னையும்!
படைத்தவனையும்!
தன்னிலிருந்து!
வேறுபடுத்தி மாறுபடுவது!
துவைதம்!
இவர்களால் மட்டும்!
இறைவனுக்கு!
இணைவைக்க முடியும்!
தன்னிலே சர்வத்தையும்!
அல்லது!
சர்வத்தில் தன்னையும்!
காண்பதே அத்துவைதம்!
அத்துவைத அறிவு!
இல்லையெனில்!
ஆண்டவனை!
தரிசிக்க முடியாது!
இதை சொல்வதற்கு!
உருவத்தில் வேஷங்களோ!
உடையில் காட்சிகளோ!
தேவையில்லை!
அப்படி சொல்பவர்கள்!
ஞானியோ!
அவர்கள் சொல்வது!
ஞானமோ அல்ல!
ஆன்மீகத்திற்கு ஆடையென்பது!
எளிமையான எண்ணமும்!
தெளிந்தமனமும்!
அறிந்துக்கொள்ளும் ஆர்வமும்!
விளக்கமான அறிவும்!
இருந்தாலே!
ஞானமும் சமாதானமும்!
நம்மிலே விளையும்…
கிளியனூர் இஸ்மத் துபாய்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.