தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிவனொளிபாத மலை

அவதானி கஜன்
மாதமது மார்கழியில் மதியின் வட்டம் !
. . வானத்தில் தோன்றிடவும் மக்கள் கூட்டம் !
பேதங்கள் இல்லாது பெரிய தூரம் !
. . பேசாமல் பிதற்றாமல் கடந்து வந்து !
நாதங்கள் இசைத்துநன்றே உயர்ந்து நிற்கும் !
. . நானவித மரங்களின் நடுவே அங்கு !
பாதங்கள் நடைபோடும் உச்சி நோக்கி !
. . படியளத்தோன் இட்டுவைத்த பாதம் பார்க்க !
தயவுசெய்யும் நோக்கத்தில் படிகள் கட்டி !
. . சங்கடத்தில் ஏறுவோர்க்கு வேலி போட்டு !
பயணிக்கும் போதினிலே உரசும் காற்றும் !
. . பயமில்லா இருட்டுமந்தச் சூழல் தன்னில் !
உயரமில்லா செயற்கையில் இட்டு வைத்த !
. . ஒளிக்கோடு மேல்நோக்கி உயர்ந்து செல்ல !
வயதுவந்தோர் வெள்ளாடை தரித்துக் கொண்டு !
. . மனம்மகிழ பக்திஇசை பாடிச் செல்வார் !
விடிகின்ற நேரத்தில் உச்சி எட்ட !
. . மெல்லிசைத்து வரவுசொல்லும் புள்ளினங்கள் !
கொடிகளிலே பூத்துவிட்ட மலர்களாலே !
. . கூடிவரும் நறுமணமும் மயக்கம் செய்யும் !
அடியதனைக் காணுகின்ற எண்ணத்தாலே !
. . ஆட்டுவிக்கும் களைப்பெல்லாம் ஓடிச் செல்லும்!
துடிதுடிக்கும் மனிதனது உள்ளம் அங்கே !
. . தூயவனின் அடையாளம் எண்ணுற்றாலே !
ஒளிபடர்ந்த உச்சியினை அடைந்த போது !
. . ஒப்பில்லா உவகைவந்து உடலில் ஒட்ட !
நௌ¤வில்லா நீண்டதொரு வரிசை நின்று !
. . நீசமில்லா இறைவனவன் இட்டு விட்ட !
தௌ¤வான பாதஅடை யாளம் கண்டு !
. . சிறப்பான அருளத்னைப் பெற்ற வேளை !
களிக்கின்ற மனதைத்தான் எடுத்துச் சொல்ல !
. . காணவில்லை சொற்களென்று நொந்து கொள்ளும் !
ஆண்டவனின் அருளதனைக் கண்ணுற் றுப்பின் !
. . அங்குதிக்கும் கதிரவனின் உதயம் காண !
வேண்டாத குளிரதையும் தாங்கிக் கொண்டு !
. . விடியலுக்குத் கூடுகளும் காத்து நிற்கும் !
தீண்டுகின்ற ஒளிக்கீற்று கிழக்கில் எட்ட !
. . தீயாத எழிலங்கு தோன்றி நிற்க !
*கூண்டிற்கு முழுவட்டம் ஒளியைக் காட்ட !
. . கூச்சத்தில் கண்களெல்லாம் மூடிக் கொள்ளும் !
பகலவனின் பாச்சுமது வெளிச்ச வெள்ளம் !
. . பரிணாமக் காட்டலிலே கடலும் ஆறும் !
அகலமான பொருப்புகளில் எழில் *தே தோட்டம் !
. . அதையடுத்துப் பாய்கின்ற நீண்ட ஆறு !
நிகழ்கால சரித்திரத்தில் எழில் கொஞ்சும் !
. . நீங்காத நினைவுகளாய் ஊன்றி நிற்கும் !
நுகவோர்கள் நொடியினிலே கூடிச் செல்லும் !
. . நொடியாத அருளுடனே அழகுச் செல்வம் !
இறைநோக்கும் இயற்கையும் வதனம் செய்ய !
. . ஏறுவோர் யாவரையும் ஈர்த்து நிற்க !
நிறைவான எழிலங்கு வண்ணம் காட்டும் !
. . நேரத்தில் உணர்வுகளும் ஒத்துப் பாடும் !
குறைவில்லாப் பயணமங்கு இறங்கி னாலும் !
. . கூடிவிட்ட எழிற்கொள்ளை இன்னும் கூட்டும் !
மறைந்திருந்த மலைக்காட்சி கண்ணில் பட்டு !
. . மயக்கத்தில் தம்மையே இழக்கச் செய்யும் !
குறிப்புகள் !
------------------------ !
சிவனொளிபாத மலை - எல்லா மதத்தினரும் தங்கள் இறைவன் பாதம் பட்ட இடமாகப் போற்றும் சிறப்புப் பெற்ற மலை இங்கு குறித்த தினங்களில் நள்ளிரவில் மலையேறி உச்சியில் அமைந்த ஆண்டவன் பாதமும் கதிரவன் உதயமும் காண்போர் எண்ணில் அடங்கா ( ஏறுவோரில் உள்நட்டார் , வெளிநாட்டார் என எல்லா மதத்தினரும் அடங்கும் )!
கூண்டு - பூமிக் கூண்டு !
பொருப்பு - மலை !
தே - தேயிலைத் தோட்டம் !
!
அன்புடன் !
அவதானி கஜன்

எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து

எம் . ஜெயராமசர்மா
எமைப்பார்த்து நகைத்துவிடும்!...நிற்கிறார் நிலைத்து என்றும் !!
01.!
எமைப்பார்த்து நகைத்துவிடும் !!
-----------------------------------------!
இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்!
தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்!
இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே!
இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !!
பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு!
துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்!
பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்!
காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !!
பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்!
கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்!
கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்!
பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !!
படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்!
பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை!
மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்!
நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !!
கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்!
போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்!
காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்!
மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !!
கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்!
கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்!
கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு!
காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !!
!
02.!
நிற்கிறார் நிலைத்து என்றும் !!
--------------------------------------!
சமயத்தின் சாறாய்நின்று சரித்திரம் படைத்த வள்ளல் !
இமயத்தின் உயரமாகி இகத்துளோர் மதிக்க நின்றார்!
சமயத்தை மட்டுமின்றி சமூகத்தை மனதிற் கொண்டு!
சன்மார்க்கம் உணர்த்திநின்ற சங்கரர் தாழ்கள் போற்றி !!
மாசறு மனத்தனாகி மாண்புறு செயல்கள் ஆற்றி!
பூசைகள் தாமுமாற்றி பூதலம் சிறக்கச் செய்தார்!
வாசனை பரப்பிநிற்கும் மறுவற்ற மலராய் நின்ற !
ஈசனின் தோற்றமிக்க எந்தையின் நாமம் வாழ்க !!
தெய்வத்தின் குரலைத்தந்து தீமைகள் அகன்றே போக!
வையத்தில் வாழ்ந்துநின்ற மாமணி அவரே ஆவர் !
சொல்லிலே சுவைகள் சேர்த்து சுருதியின் கருத்தும்சேர்த்து!
நல்லதைச் சொல்லிச் சென்ற நாயகன் நாமம்வாழ்க !!
நீண்டதோர் காலம்வாழ்ந்தார் நிமலனை மனதிற் கொண்டார்!
பூண்டநல் விரதத்தாலே புவியிலே புனிதர் ஆனார்!
ஆண்டவன் அவரேயென்று அனைவரும் தொழுது ஏற்ற !
அருங்குணங் கொண்டுநின்ற அவர்நாமம் என்றும் வாழ்க !!
இல்லறம் துறந்தயெந்தை ஏகினார் இறை தொண்டாற்ற !
நல்லறம் ஆற்றி நிற்க நயமுடன் பலதைச் சொன்னார்!
சொல்லறம் காத்து நிற்க தூய்மையைய மனதில் கொண்ட!
தொல்லறம் மிக்க எங்கள் தூயவர் நாமம் வாழ்க !!
ஊரெலாம் எந்தை சென்றார் உபதேசம் ஆற்றிநின்றார்!
பாரெலாம் பண்பு ஓங்கப் பாதங்கள் பதியச்சென்றார்!
வாரங்கள் மாதங்களாக மக்களின் இடத்தே சென்று !
வேதங்கள் சாரம்தன்னை விளக்கிய வள்ளல் வாழ்க !!
ஆற்றிய உரைகள் யாவும் அனைத்துமே வேதமாகும் !
சாற்றிய மேற்கோள் யாவும் தத்துவக் குவியலாகும்!
சேற்றிலே கிடந்த மக்கள் செழுமையாய் வாழவெண்ணி!
நாற்றென நின்ற ஆசான் நாமத்தைப் போற்றிநிற்போம் !!
ஆசியநாட்டில் தோன்றி அனைவரும் போற்ற நின்றார்!
பேசிய வார்த்தை எல்லாம் பெரும்பயன் பெற்றதாகும்!
காசினி உள்ளார்மீது கருணையைப் பொழிந்த வள்ளல்!
ஆசியை வேண்டிப் பல்லோர் அவரடிபணிந்தே நின்றார் !!
புத்தராம் யேசுகாந்தி புனிதராம் நபிகள் தோன்றி!
தத்துவம் உரைத்த நாட்டில் சங்கரர் தோன்றிநின்றார்!
அத்தனை பேர்க்கும் மேலாய் அவர்பணி ஓங்கிற்றென்று!
நித்தமும் நினைப்பதாலே நிற்கிறார் நிலைத்து என்றும் !!
எளிமையைச் சொந்தமாக்கி இனிமையை மனதில் தேக்கி!
தனிமையில் இறையைநாடித் தவநிலை கொண்ட வள்ளல்!
அழிவுடை எண்ணம்போக அறிவினை ஊட்டி எங்கும்!
நிறைவுடை மனத்தைநாட நின்றவர் நாமம் வாழ்க !!
இரா.சி.சுந்தரமயில்ரூபவ் கோவை

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்

ரசிகவ் ஞானியார்
[அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.]!
எனக்கு!
அ..ஆ.. போட கற்றுக்கொடுத்த - நான்!
ஆய் போட்டதை கையிலெடுத்த!
அந்த ஆசிரியர்கள்!
ஞாபகம் வந்து போகிறார்கள்...!
தூரத்தில்!
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற!
வாகனங்களைப்போல..!
*****!
ஒரு!
காலைநேரத்து கண்மூடிய!
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....!
நானும் காதரும்!
சாக்பீஸை திருட!
குனிந்து வந்ததைக் கண்டு..!
டவுசரில் தூசி கிளம்ப அடித்த!
பெயர் மறந்து போன!
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி!
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!!
*****!
எப்பொழுதும்!
பிரம்பை வைத்திருப்பார்!
ஆனால்!
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்!
பெரும்பாலும்!
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!!
எப்பொழுதாவது வந்து போகும்!
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...!
நினைவில் வந்து போகின்ற!
ஆறாம் வகுப்பு ஜோதிகா மிஸ்!!
!
*****!
கையை மறந்தாலும்..!
குடையை மறக்காமல் வருகின்ற!
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்!
விரட்டாமல் வைத்திருக்கும் ...!
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!!
*****!
பேசாதீங்கடா!
பேசாதீங்கடா என்று!
உயிர் கொடுத்து கத்தி!
கண்ணாடியை தூக்கி!
எறிஞ்சிறுவேன்!
பேசாதீங்கடா !
நாலணா தரேண்டா!
பேசாதீங்கடா!
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்!
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!!
*****!
கொட்டாவி விட்டால்!
கோபப்படுவார் எனத்தெரிந்தே..!
கொட்டாவி விட்டுக்கொண்டே!
நாங்கள் பாடம் கவனிக்க...!
கொட்டாவி ஒரு கெட்ட ஆவி என!
தத்துவம் உதிர்த்தபடியே...!
பொறுமையாய் பாடம் நடத்திய!
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!!
*****!
நான்!
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து!
இடைத்தேர்வில் நான்!
பூஜ்யம் எடுத்து..!
தெண்டமாய் போய்விட்டதை!
தாங்கமுடியாமல் தனியே அழைத்து!
யாரையாவது லவ் பண்றியா!
என்று உரிமையாய் கேட்ட!
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!!
*****!
தத்து பித்து என்று!
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..!
இது கவிதை இல்லடா..!
இதுதான் கவிதை என்று!
கம்பன் - பாரதி!
இளங்கோவடிகள் கவிதைகளை!
இலக்கிநயத்தோடு விவரித்த!
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!!
*****!
வேதிச்சமன்பாடு என்றால் என்ன?!
என்று கேள்விகள் கேட்டபடி!
தனது கைக்குட்டையால்!
உதடு துடைத்தபடி..!
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்,!
இரண்டு மாணவர்களை!
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்!
அந்த!
பன்னிரெண்டாம் வகுப்பு!
பிர்லா ஜெயந்தி மிஸ்!!
*****!
இப்படி!
எல்லோருமே ..!
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!!
ஆசிரியர்களின்!
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்!
நான்!
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!!
பலசரக்கு கடையில்...!
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!!
என் கவிதைகளில்!
ஒவ்வொரு வரிகளிலும்..!
ஒரு ஆசிரியர்!
ஒளிந்திருக்கிறார்!!
அவர்கள் மட்டும்!
அ போட கற்றுத்தராவிட்டால்...!
எல்லோரும் என்னை!
சீ போட்டிருப்பார்கள்!!
அவர்கள் இல்லையென்றால்..!
நான்!
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்!
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!!
!
இருந்தாலும்!
மனசுக்குள்!
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....!
!
நாங்கள்!
உலகமெல்லாம் சுற்றி!
பயணித்து வந்தாலும்!
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ!
இன்னமும் அந்த!
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...!
ஒரு இரண்டு இரண்டு!
இரு ரெண்டு நாலு!
மூவிரண்டு ஆறு!
நாலிரண்டு எட்டு!
என்று!
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்!
!
எம் பையனுக்கு!
ஏதாவது!
வேலை வாங்கி கொடுப்பா!!
என்று!
எங்களிடமே கெஞ்சும்போதும்!
சாலையில் எங்கேனும்!
சந்தித்துக்கொள்ளும் போது!
பைக்கில் இருந்துகொண்டே!
நாங்கள் சொல்கின்ற!
அலட்சியமான வணக்கத்திற்கும்!
பதறிப்போய்!
தனது சைக்கிள் விட்டு இறங்கி!
பதில் சொல்லும் மரியாதையை!
நினைக்கும்போதும்...!
மனசுக்குள்!
நெருடத்தான் செய்கிறது!!
பால்கார பையனை!
ஏக்கத்தோடு பார்க்கின்ற...!
முதியோர் இல்லவாசிகள் போல...!
*****!
-ரசிகவ் ஞானியார்

பாரதீ ஓர் ஜோதி .. சில நேரங்களில்

வைரபாரதி
பாரதீ ஓர் ஜோதி.. சில நேரங்களில் சில மனிதர்கள்..!
01.!
பாரதீ ஓர் ஜோதி!
------------------- !
பாட்டுக்குள் தீ வளர்த்த பாவலனே - நம்!
பாருக்குள் மா மீசை கொண்ட காவலனே !!
ஏட்டுக்குள் அன்றெழுதிய கவி மந்திரமே - இஃது!
எந்நாளும் எங்களுக்குள் சக்தி தந்திடுமே !!
!
செல்லம்மா துணை கொண்ட செந்தமிழா - எங்கள்!
செங்குரதி சேற்றுக்குள் நீ செந்தாமரை ! - நீர்!
இல்லா பிறப்பென்றொன்று உண்டாவெனில்!
இனியொரு பிறவியெனக்கு வேண்டாமென்பேன் !!
!
விடுதலைக்கு முன்னே நான் விளைந்திருக்கக்கூடாதா?!
வீரபாரதியே உன்னோடு திhpந்திருக்கக்கூடாதா?!
'சுடு வெள்ளையனேயென மாய்ந்திருக்கக்கூடாதா? - இச்!
சுதேசியின் மடிமீது வீழ்ந்திருக்கக் கூடாதா?!
!
மனமெங்கும் உனை நிரப்பி வாழ்கிறேன்.!
மண்ணில் உன் பேரொன்றே வாசிக்கிறேன் ! - உன்!
இனமது நானென்று நம்புகிறேன் - உன்!
இளமை வரிகளில் இன்பம் பொங்குகிறேன்.!!
!
கார் மழை கைம்மாறு காணாது - உன்!
கவி வரி பலநூறு இது போலாகும்...!
பாரதி எனும் பேர் சொன்னால் போதும் - என்!
பார்வைக்குள் ஒளி ஒன்பது கோளாகும் !!
!
02. !
சில நேரங்களில் சில மனிதர்கள்!
-------------------------- !
புறங்கூறுவோர்:!
புறரையே பேசும் 'பீழையோர்; மனம்!
பிய்த்தெறியப்படவேண்டிய மாமிச இனம்!
புறங்கூறியே வாழ்வில் மடியூம் - அவ்வுடல்!
புறங்காட்டில் நாய் நரி வாயில் திணியும்....!!
!
விதியை நம்புகிறவர்கள் :!
விதியினை நம்பும் வீணார்கள் - பத்து!
விரல்களையிழந்த முடவர்கள் - ஆறாம்!
மதியினை பெற்றிருப்பதேன்? - இவர்கள்!
மண்ணில் மனிதராய்ப் பிறந்ததேன்?!
!
வேலையற்ற வீணர்கள் :!
தேநீல் விழுந்த 'ஈ யை விட - இங்கு !
தினத்தந்தியில் விழுந்த விழிகளோ கோடி - நம் !
காசினியை வீண் பேசுமிவர்கள் - என்!
காலணி கூட தீண்டா குப்பைக்கூல சாதி !!
!
முதலைக் கண்ணீர் !
புளித்தாலும் அத்திராட்சையைப் புசிக்க நினைப்பர் !
புலம்பியழுதே தம் காரியம் முடிப்பர் !
களிப்பேயில்லா புதிய படைப்புகள் - இவர்கள்!
காரியக்கார கண் துடைப்புகள்!
!
வாழ்க்கையறியா வயதில் சிலர்!
அரும்பு வயதிலே 'அவ்வன்பில் தியூம் !
அறிவையிழந்த சிறகுகள் - இந்தியா!
இருக்கும் நிலை மறந்து!
இவர்கள் கொடுந்தீயில் வளரும் விறகுகள் !!
சில நேரங்களில் சில மனிதர்கள் !
சேற்று மணலில் செய்த ஈரபொம்மைகள்

உயிர்க் காரணி

ரா. சொர்ண குமார்
ரா.சொர்ண குமார்.!
மாசு இல்லா இதயத்திலே!
தூசு போல உன் நினைவு!!
தட்ட தட்ட மேலும்!
ஒட்டிக் கொண்டே இருக்கிறது!!
பிரித்து விடலாம் என முயன்றால்!
மனம் எச்சரிக்கின்றது!
மரித்துவிடுவாய் என்று...!
மரிப்பதற்கும் மனமின்றி,!
நினைவை எரிப்பதற்கும் வழியின்றி,!
மனது வலித்துக்கொண்டே இருக்கிறது!!
எப்போதோ நேசிப்பதாய்!
நீ சொன்ன வார்த்தைகளில்தான்!
இதயம் இன்னும்...!
துடித்துக்கொண்டே இருக்கிறது

நினைவு... காதல்

தென்றல்.இரா.சம்பத்
நினைவு.!
---------!
சகியே.....!
புதைத்துவிடச் சொன்னாய்!
நானும் செய்தேன்!
ஆழமாய்தான் புதைத்தேன்-ஆனால்!
விதைத்து விட்டதாய் எண்ணி!
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது!
என் இதயப்பரப்பு பூராவும்!
உன் நினைவு.!
!
காதல்!
----------!
சகியே...!
பக்கத்தில் நீயில்லை!
பந்தயக்குதிரையாய்!
விடாமல் துரத்தும்!
உன் நினைவுகள்!
என் ஒவ்வொரு நாழியையும்!
வார்த்தைகளுக்குள்!
வளைக்கமுடியாத வலியோடு!
நகர்த்துகிறதடி....!
எப்படியோ!
நடந்ததைச் சொன்னேன் உன்னிடம்!
சரியாகிவிடுமென்கிறாய் சாதாரணமாக!
நானும் திரும்பக்கேட்டேன்!
நீ மௌனிக்கிறாய்....!
எனைப்போலத்தானே !
உனக்குமிருக்கும் அவஷ்தைகள்!
இருக்கவேண்டுமென்கிறது!
என் மனமென்றேன்!
ஒருவருக்கு வலித்தால்!
காதலில்லையென்கிறாய்!
நான் மௌனிக்கிறேன்!
என் அறியாமையையும்!
உன் காதலையும் நினைத்து.!
!
தென்றல் இரா.சம்பத்!
ஈரோடு-2

அழுகையின் பேச்சு

கீ.பீ.நிதுன், முல்லைத்தீவு ஈழம்
வாருங்கள்!
எங்கள் அழுகைகளை!
அள்ளிக்கொண்டு போங்கள்!
புகைப்படக்கருவிக்குள் அதை பதிவுசெய்து!
உங்கள் தேசத்தில்!
அதை விற்று பணம் சம்பாதியுங்கள்.!
தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில்!
அதை காட்சிப்படுத்துங்கள்!
அழுகைகளுடன் சேர்ந்து வரும்!
கண்ணீரில் ஏதோவொன்று கலந்திருக்கிறது!
அதை உங்கள் ஆராட்சிக்கூடங்களில்!
வைத்து பகுப்பாய்வு செய்யுங்கள்.!
அழுகைகள் சுவாரஸ்யமானவை,!
பாரமானவை, கோபமானவை,!
சிரிப்பானவை.!
எங்கள் அழுகை மட்டும்!
வலிநிறைந்தவை.!
உங்கள் பார்வைக்கு அவையெல்லாம்!
பொதுவானவை.!
இங்கு மழலைமுதல் முதுமைவரை!
அழுகை பரந்துகிடக்கிறது!
விரும்பியவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்!
அதற்குத் தடையில்லை.!
ஆரவாரித்தழுகிறோம்!
வாய்பொத்தியழுகிறோம்!
தேவையாயின்!
நீங்கள் விரும்பியவரை!
அழுகின்றோம், ஏனெனில்!
இது அழுகைக்கான பூமியே!
நாங்கள் அதற்காகவே!
படைக்கப்பட்டிருக்கிறோம்

யாவர்க்கும் பொதுவாம் நீதி

ப.மதியழகன்
உச்சி முதல்!
உள்ளங்கால் வரை!
எங்கே குடியிருக்கிறது!
இந்த உயிர்!
கூட்டிலுள்ள பறவையினைப் போல்!
சிட்டெனப் பறந்து விடுகிறதே!
இந்த உயிர்!
சாமானியனுக்கும்!
சக்கரவர்த்திக்கும்!
சமமாய் ஆகிப்போனது!
இந்த உயிர்!
கூட்டை விட்டு!
இந்த உயிர்!
ஓடவில்லையென்றால்!
துயரச் சுமை தாங்காமல்!
மரணத்தை யாசகமாய்!
கையேந்தி கேட்கும்!
இந்த உடல்!
உயிர் பயத்தினாலே தான்!
சிறிதனவேனும் அறம்!
நிலைத்திருக்கிறது!
இந்த பூவுலகில்!
மயானத்தில் தாண்டவமாடும்!
ஆடல்வல்லானை பார்த்ததும்!
புரிந்து போகும்!
யாவர்க்கும் பொதுவாம் நீதியென்று!
வியாதியாலே சாக்காடு!
செல்லும் பாதையெங்கும் பூக்காடு!
இடுகாட்டில் தீக்காடு!
இது தான் சைவ நீதி என்று!
விளங்காமல் விளங்கிப்போகும். !
காண்பனவெல்லாம் மாயை !
விழுகின்ற மழைத்துளிகளனைத்தும்!
முத்துக்களாவதில்லை!
பெற்ற பிள்ளைகளனைத்தும்!
மச்சு வீடு கட்டுவதில்லை!
ஒன்றிரண்டு குறைகளில்லாதவர்!
வாழ்க்கையில் எவருமில்லை!
எல்லோரும் சந்நியாசம் கோலம் பூண்டு!
திருவண்ணாமலையில் பண்டாரமாய்!
அலைவதில்லை!
திருவோடு கூட சுமையென்று!
எண்ணுபவர் ஊரில் ஆங்காங்கே!
திரியத்தான் செய்கிறார்கள்!
கொண்டைச் சேவலுக்கு கர்வம்!
கோழி கூவி பொழுதுகள் விடிவதில்லை என!
ஆண்மகவு என்றாலும்,!
பெண்மகவு என்றாலும்!
பெற்றோருக்கு எல்லாமே!
ஒரே உதிரம் தான்!
மறுபடியும் மறுபடியும்!
அலையாய் எழுந்து!
கரையோடு முயங்குவது!
கடலுக்கு சலிப்பதில்லை!
அணை கட்டி தடுத்தாலும்!
நதியின் பயணம் கடல் நோக்கியே!
ஸ்படிகம் போன்றதாயினும்!
விழும் இடத்தைப் பொறுத்தே!
மழைக்கு முகவரி!
நேற்றிருந்தவன் இன்றில்லை!
என அறிந்தும்!
மார்தட்டி நிற்பவனை!
மண்மகள் பார்த்துச் சிரிக்கின்றாள்!
நகைப்புக்கு என்ன பொருள்!
மற்றவர்கள் காலில் மிதிபடும்!
மண்ணாக!
ஒரு நாள் என்னோடு கலப்பாய் என்றா?

காணும் கடவுள்கள்

வி. பிச்சுமணி
தொட்டில் சேலையை விலக்கி!
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்!
மகளை பார்த்து கொண்டிருந்தேன்!
தூங்கிற பிள்ளையை பார்க்காதே!
என்றாள் அம்மா !
திடீரென தூக்கத்தில் சிரித்தாள்!
கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார்!
என்றாள் அம்மா !
திடுக்கென்று அழுது தூங்கினாள்!
காத்து கருப்பு பயம் காட்டுகிதென!
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை !
வைத்தாள் அம்மா !
மீண்டும் என் மகள் அழ!
அடுக்களையிலிருந்து ஓடிவந்து!
கச்சை பால் கொடுத்தாள்!
என் மகளின் அம்மா!

க‌லியுக‌ போராட்ட‌ம்

த.எலிசபெத், இலங்கை
குட்டைப்பா வாடையும் குதறிய தலைமுடியும்!
கட்டுக்கடங்கா அலங்காரமும் கவர்ச்சியின் வனப்பும்!
ஆண்களினா டைக்குள் அடைக்கலமான பெண்மையும்!
வீதிகளின் வழியே விகாரமாய்த் தெரிகிறதே...!
சேலையும் தாவணியும் சேராமலே யுடம்பில்!
பாதியாடையும் பறந்திடு நிலையில்!
பண்பாட்டை யுமெம் பண்புகளைத் தெருவில்!
பார்க்கும் கண்களெல்லாம் ப‌ழிக்கிறதே...!
நாகரிக மென்றெதை நாளும் வளர்க்கிறாய்!
நாமெலாம் பெண்ணென்பதை நிமிடத்தில் மறக்கிறாய்!
அச்ச மடமென்பதை ஆதிகால பெண்ணுக்கென்கிறாய்!
அடக்கமென்தை அடக்குமுறையென அழுதார்ப்பரிக்கிறாய்...!
பூவுக்கும் புய‌லுக்கும் புவிய‌ரின் வ‌ரைய‌ரை!
பெண்ணுக்குமா ணுக்கும் பூர்வீக‌ வ‌ரைமுறை!
வ‌குத்திட்ட‌து குற்ற‌ம‌ன்று விள‌ங்கிட்ட‌தில் த‌வ‌றுண்டு...!
அழுகையால் க‌ண்ணீரால‌ல்ல‌ அன்பும‌ட‌க்க‌த்தினில்!
ஆளுமையினா திக்க‌த்தில் ஆத‌ரைமீதினில்!
க‌லியுக‌ போர‌ட்ட‌ம் க‌ரையெட் டிட‌ட்டும்!
க‌ய‌வ‌ரின் க‌ண்க‌ளும் கைதொழ‌ துணிய‌ட்டும்