தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சின்ன செம்பருத்தி

சிதம்பரம் நித்யபாரதி
சின்ன செம்பருத்தியின்!
ஐங்கர அழைப்பு!
கையில் எடுத்தவுடன்!
குஞ்ச நாக்கைத் துருத்தும்!
ஜிமிக்கியில் பேத்தி நினைவுடன்!
என் குழந்தை பருவமும் ஆடும்!!
குடலை நிறைய நிறைய!
கொல்லையில் பறித்து!
சிறு செறுமலுடன்!
அடுப்பங்கரை அருகே வைத்து!
விரைந்திடும் தாத்தா.!
வளைந்த முதுகினில்!
மோதிக் கீழ் விழும்!
பாட்டியின் முணுமுணுப்பு!
கனத்த சூழல் தலைமுறை கடந்து!
கையில் கனக்கும்!!
--சிதம்பரம் நித்யபாரதி

விதி... நீ... சுவை... பிரிவு

தென்றல்.இரா.சம்பத்
1. விதி!
விதியால்......!
என்று சொல்வதைத் தவிர!
வேறு என்ன சொல்லி!
எழுதிடமுடியும்!
உன் பிரிவை..!
இந்த காகிதங்களில்.!
2. நீ!
நின்று பார்க்கையில்!
நடந்து போகையில்!
படுத்துக் கிடக்கையில்!
படித்துச் சுவைக்கையில்!
சுகப்படும் வேளையில்!
சோகப்படும் நாழியில்!
நீ வேண்டும் என்னருகில்....!
வேறெப்படிச் சொல்ல!
என் காதலை உன்னிடம்.!
3. சுவை!
உன் இதழ்களை!
சுவைத்த போதுதான்!
எச்சிலுக்கும்!
சுவையிருப்பதை உணர்ந்துகொண்டேன்.!
4. பிரிவு!
தவிர்க்கவே முடியாத!
நம் பிரிவில்!
நீ விட்டு வைத்துப்போன!
உன் நாற்காலியிலும்!
மேசையிலுமே!
மாறி மாறி அமர்ந்து-நான்!
அமைதியாகிறேன்!!
வேறுயாரும் அமராதபடி....!
- தென்றல்.இரா.சம்பத்

மரணம்.. ஓய்வில்லாவேலை..வீடு

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
மரணம்.. ஓய்வில்லா வேலைக்காரன்.. வீடு !
01.!
மரணம் !
--------------!
ஜீவித வாசலின் !
கதவடைப்பு.!
சுவாச தொழிற்சாலையின் !
மூடு விழா.!
வயதெல்லை இன்றி !
யாவருக்கும் கிடைக்கும்!
சமவுரிமை .!
வாழ்க்கைத் !
திரைப்படத்தின் !
வணக்கம்.!
இலஞ்சம் கொடுத்து !
தப்பிக்க இயலா !
உறுதியான தண்டனை !
பின் போட முடியா !
கட்டாய பரீட்சை .!
துப்பாக்கிகளும் !
குண்டுகளும் !
அறுவடை செய்யும் !
சமகால பயிர்.!
கடவுள் விளையாடும் !
கிரிக்கெட் விளையாட்டில் !
எடுக்கப்படும் !
உயிர் விக்கெட். !
நீதிபதிகளுக்கும் !
வழக்கறிஞர்களும் !
வாதாடி வெல்ல முடியாத !
முடிவான வழக்கு.!
வழித்துணைகளையும் !
வாழ்க்கைத் துணைகளையும் !
விழித்துணைகளையும் !
விட்டு விட்டு !
விதித்துணையோடு !
போகின்ற தனிப் பயணம் !
!
02.!
ஓய்வில்லா வேலைக்காரன்!
----------------------------------!
என் மௌனம் உடைக்காமல்!
செவிகளின் சவ்வுகள் கிழியும்!
சத்தங்களோடு!
நீங்கிக்கொண்டிருந்தன இரயில்கள் !
நீண்டநேரமாய் !
எனக்கான இரயில வாராத !
துக்கங்களுக்குள் முடங்கிக் கிடந்தது!
எனது பயணம் !
மின்சார இரயில்கள் !
மலிந்து விட்ட காலகட்டத்தில் !
புகை கக்கி நடந்து வந்த!
அநாகரீகம் பார்த்து!
பிரகாசமாகின !
எனது விழிச்சூரியன்கள்!
எதிரே அவசர அவசரமாய்!
துப்பட்டாவில்!
வியர்வை ஒத்தி !
ஓடோடி வந்தது நிலவு !
!
நிலவுக்காக காத்திருந்த !
நிமிஷங்களின் வேதனைகள்!
மறைத்து!
பனிபோல் குளிர்ந்த முகத்தோடு !
நிலவை வரவேற்று!
நாகரீகமாய் !
கைகுலுக்கிக் கொண்டு!
நடந்தபோதுதான்!
நடந்தது அது.!
குருதி குளித்த நிலவு !
உயிரை இரயிலேற்றி!
பிணமாய் கிடந்த வேளை!
காக்கிகளும் கரும்பச்சைகளும் !
கழுகளாய் வட்டமிட்டு!
சூத்திரதாரிக்கு வலைவிரிக்க!
எல்லோரின் கண்களிலும்!
மண்ணை தூவிவிட்டு!
அடுத்ததர்கான வலைவிரித்து !
சேவையில் மும்முரமாகியிருந்தான் எமன்.!
03.!
வீடு !
--------!
மழை பெய்யும்!
போதெல்லாம் !
ஒழுகும் கூரையின் கீழ்!
பாத்திர பண்டங்களை !
பரப்பி வைத்து!
முணுமுணுத்த போதும்!
அடை மழை !
அடிக்கும் போதெல்லாம்!
ஊடுரும் வெள்ளத்தால் !
பரண் மேல்!
வீட்டுச் சாமான்களை!
நனையாமல் !
பத்திர படுத்தி!
நாற்காலிகளிலும்!
கட்டில்களிலும் !
உட்கார்ந்தது உட்கார்ந்தது!
வெள்ளம் வடிய!
காத்திருந்த நாட்களிலும் !
காற்றடிக்கும்!
காலமெல்லாம்!
மடார் மடாரென்று !
சேர்த்தடிக்கும்!
கூரைத்தகடு !
மனசை கிழித்த !
வேளைகளிலும்!
திறந்து வைத்தாலும்!
மூடிக் கிடந்தாலும் !
காற்றுக்கு தடைபோடும்!
ஜன்னல்களை!
திட்டித்தீர்த்த!
கோடைக்காலங்களிலும் !
எந்தப்பக்கம் !
அடைத்தாலும்!
ஊடுருவி உள்வந்து!
உடல்நடுங்க செய்யும்!
குளிர்வாட்டும் மார்கழியில்!
தாழ்பாள் இல்லாமல்!
தள்ளாடும் கதவுக்கு!
அணையாக கல்வைத்து!
அழுதிருந்த நாட்களிலும் !
இந்தவீட்டில் !
குடியிருப்பதைவிட !
மாட்டுப்பட்டியில்!
இருக்கலாம் என்று !
அப்பாவை!
சினந்துகொண்ட நாட்களிலும் !
மின்சாரமிலாமல் !
குப்பி விளக்கில் !
கண்விழித்து படித்து !
முகம் கழுவும் வேளை!
மூக்கில் வரும் கரிபார்த்து!
கலங்கிய நாட்களிலும்!
அடுபெரிக்கும்போது!
ஈரவிறகின் புகை மண்டலம்!
வீட்டை விட்டு!
வெளியேற மறுத்து !
அடம்பிடித்து !
கண்ணீர் வரவழைத்த!
நாட்களிலும்!
எனக்குள் அப்போது!
நரகமான என்வீடு....,!
ஒரு கோர யுத்தத்தில் !
குண்டு வீழ்ந்து!
சிதைந்துபோனதன் பின்னர்!
குடியிருக்க வந்த!
வாடகை வீட்டில்....!
சுவரில் சிறு ஆணி அடிக்கவும்!
முற்றத்து பூச்செடியில்!
ஒரு பூப்பறிக்கவும்!
நுளம்புக்கு வேப்பம்!
புகை பிடிக்கவும் !
ஒரு நாள் தாமதித்தாலும்!
வாடகை பணத்திற்காய் !
கடி நாய் கவனமென்று !
வாயில் பலகையில்!
எழுதியிருப்பதை !
ஞாபகமூட்டும் வீட்டுக்காரனிடம்!
கடிபடாமால் தப்பிக்கும் !
வேளைகளில்!
சொர்க்கமாக தெரிகிறது இப்போது

சிலேடை வெண்பாக்கள்! - (II)

அகரம் அமுதா
சிலேடை வெண்பாக்கள்!- (II)!
----------------------------------!
பானையும், பலகாரமும்!!
தட்டித் தழலிடலால் ஆவென்னும் வாயுளதால்!
சுட்டிடப்பொன் வண்ணமாய் தோன்றுதலால் -அட்டியின்றி!
மண்பானை வாசப் பலகாரம் நேராக்கிப்!
பண்பாய் தமிழில் படி!!
பனியாரமும், புத்தகமும்!!
புரட்டுதலால் பல்சுவை காணுதலால் போய்ஓர்!
திறண்டநூல கத்துள் சேர்ந்தும் -இருத்தலால்!
உண்ணும் பனியாரம் புத்தகத்தை ஒக்குமெனப்!
பண்பாய் தமிழில் படி!!
விண்ணும், கிணறும்!!
சந்திர சூரியர் தோன்றுதலால்@ தண்ணீரைத்!
தந்தேநம் தாகம் தணித்தலால் -சிந்தித்தே!
விண்ணும்நீர் ஊற்றுக் கிணறும்நேர் என்றாய்ந்தே!
பண்பாய் தமிழில் படி!!
-அகரம்.அமுதா

நீண்ட ஒரு நாவலும் நீளும் ரணங்களும்

நிந்தவூர் ஷிப்லி
அது ஒரு நீண்ட நாவல்!
இரண்டு தசாப்தங்கள் தாண்டியும்!
இன்னும் முடிவதாயில்லை!
பாதியில்தான் நான் படிக்கத்துவங்கினேன்!
முழுக்கதையும் தொடர்ந்து படிப்பவர்கட்கே!
சரி வர புரிவதாயில்லை!
நாவலின் ஒவ்வொரு வரியிலும்!
உயிர் துளைக்கும் உண்மை வலிகளின்!
தத்ருபம் நிரம்பி வழிகிறது...!
துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய!
தம்மாத்துண்டு கதை அது...!
ஒரு சிறுவனை ஒரு பெரியவன்!
அடக்கத்துவங்கும்போது நேரும்!
படிமுறைச்சிக்கல்கள் ஒவ்வொரு பக்கத்திலும்!
பயங்கர விஞ்ஞாபனமாய் விரிந்து செல்கிறது..!
இடையில் இன்னொரு சிறுவன்!
வேண்டுமென்றே சீண்டப்படுகிறான்..!
சிறுவன் சிறுவர்களாக!
பெரியவன் பெரியவர்களாக!
உரிமைக்கான போராட்டமொன்று பீறிடத்தொடங்குகிறது!
இடையில்!
பேச்சுவார்த்தை!
வன்முறை நிறுத்தம்!
உடன்படிக்கை என்று!
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை..!
சீணடப்பட்ட மற்றைய சிறுவர் கூட்டம்!
காரணிமின்றி!
கொல்லப்படுகிறது!
கொளுத்தப்படுகிறது!
அடக்கப்படுகிறது!
முடக்கப்படுகிறது!
இந்த நாவலை சிலர்!
அவ்வப்போது படிக்கிறார்கள்!
சிலர் படிப்பதேயில்லை!
வாசகர் வட்டம் பற்றிய எந்தக்கரிசனையுமின்றி!
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது நாவல்!
ஆயுதங்களே பிரதான பாத்திரங்கள்!
எல்லாப்பக்கத்திலும்!
கொலைச்செய்தியும்!
இரத்த வாடையும் விரவிக்கொண்டேயிரக்கின்றன..!
மர்ம நாவல் என்று சிலர் சொல்வதை!
ஏற்க முடியவில்லை!
முதலில் சிறுகதையாகத்தான் துவங்கியிருக்கும்!
வலுக்கட்டாயமாக நாவலானதா!
என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது..!
உடன்பாடுகளின்றி முரண்பாடுகளில்!
வளர்ந்து செல்லும் அந்நாவலை!
ஒற்றுமையாக்கி யாராவது சுபம் போடுங்களேன்..!
இன்னும் இதன் பயணம் நீண்டால்!
நாவலை படிக்கக்கூட யாருமிலர்!
இவ்வளவு சொல்லிவிட்டேன்!
நாவலின் பெயரைச்சொல்லவும் வேண்டுமா...???!
!
-நிந்தவூர் ஷிப்லி

இருப்பும் இறப்பும்

காருண்யன்
அந்த மரம் வெகு அமைதியாக !
நெடுங்காலமங்கே நின்றுகொண்டிருந்தது !
தளிர்த்தும் துளிர்த்தும் ஓங்கிய வளர்ந்து !
கனிந்து நின்றது !
பின்னர் யார்யாருக்கோ குறிவைத்த !
குண்டுகள் ஷெல்கள் அதன் !
உடலைத்துளைக்கத் தொடங்கின !
தினமும் காயம் பல பட்டு !
வலி சுமந்தாயினும் உயிர் !
பிழைத்து நின்றது அம்மாமரம் !
பின்னர் வாழ்வு என்பது தினமும் !
காயம் கண்டல் நோவு !
குருதி குமுறல் என்றாச்சு !
பழைய ரணங்கள் ஆறமுன்னே !
மீண்டும் புதிய புதிய ரணங்கள் !
தலைமைக் கிளையும் !
சிறுகிளைகளும் மடிந்து கருகி !
பட்டுப்போக மூலவேரில் !
கொஞ்சம் உயிரைத்தாங்கி !
நொந்து முனகிக் கொண்டே !
கோமாவில் வாழ்ந்தது பலகாலம் !
பின்னர் ஒருநாள் காலை !
அதன் மரணம் அறிவிக்கப்பட்டது !
அதன் உறவுகள் பல கோடி !
அம் மாமரத்தின் பெயர் !
மனிதம். !
30.10.2000

பிறந்த நாட்பரிசு.. ஒரு நிறுவல்

ஜே.ஜுனைட், இலங்கை
01.!
பிறந்த நாட்பரிசு !
--------------------- !
நான் அல்லாத!
எனக்காகவும்!
நீ அல்லாத!
உனக்காகவும்!
இது… !
இன்று!
பூவின்!
பிறந்த நாள் -!
அதனால் தான்!
எங்கும்!
வாசம் !!
உன்!
சோகங்களெல்லாம்!
மறைய வேண்டும்.!
ஆனந்தம் உன்!
சொந்தமாக வேண்டும்.!
உனது!
ஆசைகள்!
நிறைவேற வேண்டும்!
நிறைவாக!
நீ!
வாழ வேண்டும்.!
இன்று!
பூவின்!
பிறந்த நாள் -!
எங்கும் வாசம்!!
நீ நடந்து போகும்!
சாலை எங்கும்!
பூஞ்சோலை!
உருவாகும்.!
நீ –!
வாசம் வீசும் மாலை!
பாசம் காட்டும் பாவை!
வண்ண வண்ண!
வன்னங்களில்!
ஓர் ஓவியம்!
உனக்காய் !!
!
உன்!
கருணைக் கடலில்!
மூழ்கினேன் -!
என்னை நான்!
கண்டு பிடித்தேன்.!
இறுதி வரைக்கும்!
அழியாத அன்பு –!
இது உனக்கான!
எனது பரிசு. !
!
02.!
ஒரு நிறுவல் !
--------------------!
புனிதஸ்தளத்தில்!
நீ நிற்கின்றாயென்றால்!
நிச்சயமாக நீயொரு!
பரிசுத்தவானே!
ஆனால் யாரோ உன்னை!
பாவியாக்கும் பொழுது!
நீ எவ்வாறு!
பரிசுத்தவானாவாய்..?!
ஆகவே!
நீ நிற்குமிடம்!
புனிதஸ்தளமே அல்ல

ஆற்றாமைச் சீற்றப்பா ஐந்து

தமிழ்நம்பி
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !!
நேரதற்கு நீதுணையாய் நின்றாய் ! – பூரியனே !!
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனென!
பேருனக்கேன் சீச்சீ பிழை !!
எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின்!
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! – நல்லார்!
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி!
அமிழா திருக்கும் அமர்.!
ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !!
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! – ஏய்த்திடுவாய் !!
சீச்சீ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !!
தீச்செயலில் தில்லி திளைத்து.!
கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட!
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! – திட்டமுடன்!
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப்!
பங்கேற்றார் தில்லியுடன் பார் !!
ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில்!
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! – ஈடு!
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே!
உலகிலறம் ஓயந்ததென ஓது

மகுடங்களுக்கு ஆறறிவு

முஹம்மட் மஜிஸ்
நிசப்த்ம் கக்கிய!
இரவுப்பொழுதொன்றில்!
அவனை சந்திக்க நேரிட்டது!
தோல்விகளால் நிரப்பிய இதயத்தோடு!
அவனால் பேசிய வார்த்தைகளை!
நிஜங்களால் முடியாவிட்டாலும்!
கனவுகளால் சிகரம் தொடும்!
என்னால் புரிந்து கொள்வது!
கஸ்டமாகவே இருந்தது !
அவன்!
அத்தி பூப்பதை அவர்களின்!
வரவோடு ஒப்பிட்டான்!
நான்!
புதுமையாக ஏதாவது சொல்லென்றேன்!
அவன்!
அன்று அவர்கள்!
எமக்கு மலர்களை!
மட்டும் காட்டி விட்டு!
எம்மை வேறோடு பிடுங்கிச்சென்ற!
பழய கதையை ஞாபகமூட்டினான்!
நான்!
கடந்தவை திரும்பாதென்று!
அறிவுரை சொன்னேன்!
அவன்!
நாம் அன்று!
சிறகுகள் வாங்க கால்!
நடையாய் போன!
கதையை வெட்கத்தோடு!
விபரித்தான்!
நான்!
அனுபவமெல்லாம் ஒரு பாடமென்று!
போதனை செய்தேன் !
இறுதியில்!
அவன் தன்னுள்ளத்தில்!
நெடு நாள் மறைத்து!
வைத்திருந்த ஒரு காதலை!
சொல்வதப்போல அச் செய்தியை!
சொன்னான்!
அவனுக்கும் அழைப்பு!
வந்திருக்கிறதாம் நாளை!
கொழும்பிலிருந்து தலைவரின்!
போஸ்டர்!
வருகிறதாம்

ஏமாற்றம்.. வருத்தம்

ப.குணசுந்தரி தர்மலிங்கம்
01.!
ஏமாற்றம்!
----------------!
சமாதானமாகாத உறவுக்குள்!
நினைவுகளைப் பதியவைப்பதில்!
அர்த்தமில்லை!
அவசியமுமில்லை.!
கண்ணிலிருந்து கரிக்கும் நீரை!
துடைத்தெறிகிறேன்.!
வலிக்கும்!
முதுகுத் தண்டின்!
சில்லிட்டப்பகுதியில்!
எண்ணெய் தேத்தது போல்!
இருக்கிறது.!
எனக்குள் தோன்றும் எவையும்!
புருவ முடிச்சுகளுள்!
ரணத்தை ஏற்படுத்துகின்றன.!
நேந்து போன!
உறுப்புகள் இழந்ததை!
சுவாசம் அழுக்காக்கியுள்ளது.!
தேய்மானங்களின் எச்சங்களை!
பெருமூச்சு நிராகரிக்கிறது.!
உங்களை!
என்னைப் போலவே வெறுக்கிறேன்.!
!
02.!
வருத்தம்!
-----------------!
உன் வார்த்தைகளில்!
என் வாழ்க்கை!
புதைக்கப்பட்டிருப்பதாக நினைப்பு.!
வடிவும் பொருளும் மாறுவதற்குள்!
எத்தனை முகங்களைப் !
பார்க்க வேண்டுமோ.!
மேகங்களின்!
வெள்ளாடையினால்!
நிலங்கள் வண்ணம் பூசிக்கொள்வது!
வழக்கமாகிவிட்டது.!
நீ!
வெள்ளை மேகங்களில்!
நீரைச் சேமிக்க!
பொருள் குவித்துக் கொண்டிருக்கிறாய்.!
என் நன்னிலத்தைப் !
பத்திரப்படுத்தியுள்ளேன்!
மழைத்துளிகள் விழாதவாறு