தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

திங்கள் போற்றுதும்

ருத்ரா
திங்கள் போற்றுதும்.!!.!
------------------------------------------------!
நிலவின் களங்கத்தை மட்டுமே!
கவிதை பாடுபவர்கள் நாங்கள்.!
நிலவின்!
ஈர்ப்பு எனும் உயிர்ப்பு விஞ்ஞான‌த்தை!
உழுது பார்க்க‌ உய‌ரே கிள‌ம்பிய‌வ‌ர்கள் நீங்க‌ள்.!
ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌!
சிந்த‌னைக‌ள் இங்கே ஏராள‌ம்! ஏராள‌ம்!!
தின‌ம் தின‌ம் இந்த‌ நிலாவை!
காத‌லியின் க‌ன்ன‌மாக‌!
பிய்த்து தின்னும் பிக்காஸோக்க‌ள்!
நாங்க‌ள்.!
நாங்க‌ள் சிலுப்பிக்கொள்ளும்!
த‌லைம‌யிர்க்காடுக‌ள் எல்லாம்!
காத‌ல் எரிகின்ற ஓவிய‌த்தின்!
தூரிகைக்காடுக‌ள்.!
க‌ள்ளூறும் நில‌வில்!
நாங்க‌ள் க‌ண்ட‌தெல்லாம்!
வான‌த்தில் தொங்க‌விட்ட‌!
காத‌ல் எனும் டாஸ்மாக் கடைகள் தான்.!
காதல் காதல் காதல் எனும்!
கூச்சல்களின்!
கூவுதளமாய்கிடந்த நிலவில் ஒரு!
ஏவுத‌ள‌ம் ஆக்க‌வ‌ந்த‌!
ஏற்ற‌மிகு மேதையே!
ஏற்றுக்கொள்வீர்!
எங்க‌ள் இத‌ய‌ம் நெகிழ்ந்த‌ பாராட்டுக‌ளை!!
காதலியின்!
ப‌ரு ப‌ட‌ர்ந்த‌ ப‌ட்டுக்க‌ன்ன‌த்தை!
வ‌ருடுவ‌த‌ற்கு!
நியூட்ட‌னையும் ஐன்ஸ்டீனையும் அல்லவா!
விரல்கள் ஆக்கியிருக்கிறீர்க‌ள் !!
கோட‌ம்பாக்க‌த்து கோமான்க‌ளுக்கு!
அது போதை சொட்டும்!
கோப்பைதான்.!
காத‌லின்!
குத்துப்பாட்டுக‌ளுக்கு!
குத்த‌கை எடுத்திருக்கும்!
எங்க‌ள் நீச்ச‌ல் குள‌மும் அதுவே தான்.!
இந்தியத் தடம் பதிக்கும்!
அந்த மூவர்ணப் ப‌திப்பில்!
ஒரு தமிழனின் மூச்சுக்காற்றும்!
அச்சு கோர்த்திருக்கிற‌து!
என்ற‌ செய்தி!
எங்க‌ளுக்கு ப‌ளீர் என்னும்!
ஒரு மின்ன‌ல்வெட்டு.!
மின்வெட்டு அர‌சிய‌ல்க‌ளையும் மீறி!
எங்க‌ளுக்கு ஒரு ஆன‌ந்தக்க‌ளிப்பு.!
எங்கோ போய்க்கொண்டிருக்கும்!
இள‌ந்த‌மிழின் இளைய‌ யுக‌த்து!
இமைச்சாள‌ர‌ங்க‌ள் திற‌ந்து கொள்ள‌ட்டும்.!
விஞ்ஞான‌ சிற்பியே!
மௌன‌மாய் எப்ப‌டி!
இப்ப‌டி ஒரு சிற்ப‌த்தை!
எங்க‌ள் மீது செதுக்கினாய்?!
காணாம‌ல் போன எங்க‌ள்!
மைல்க‌ற்களை மீண்டும் காட்டிய‌!
ம‌யில்சாமி அண்ணாத்துரை அவ‌ர்க‌ளே!!
அண்ணா சாலையை இப்போது!
அண்ணாந்து தான் பார்க்கிறோம்!
வான‌த்தில்!!
சந்திராயன்....!
சந்து பொந்துகள் கூட‌!
சந்திராயன் என்பதே பேச்சு.!
சாலையோரத்து!
ஆயா சுட்டு விற்கும்!
இட்லியை மட்டுமே!
நினைவுபடுத்தும்!
நிலா என்னும் சந்திரன்!
விண்வெளி விஞ்ஞானத்தை!
விண்டு வைத்து விட்ட‌து இன்று.!
அன்று ஒரு இந்திய‌த்த‌மிழ‌ர்!
ச‌ந்திர‌சேக‌ர்!
ச‌ந்திர‌சேக‌ர் லிமிட் எனும்!
ச‌ந்திர‌சேக‌ர் எல்லையைக்கொண்டு!
இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தில் ப்ளாக் ஹோல்!
எனும் க‌ருங்குழிக்கே ஆழ‌ம்பார்த்து!
நோப‌ல்ப‌ரிசை வென்று காட்டிய‌வ‌ர்.!
அந்த‌ வ‌ரிசையில்!
உங்க‌ளுக்கும் ஒரு ம‌ணிம‌குட‌ம்!!
இந்த இளம்புயல்களின்!
தூக்கம் இனி கலையும்.!
மேன்மை மிகு அப்துல்கலாம்!
அவர்கள் சொன்ன!
கனவுகள்..இனி காதல் எனும்!
கனத்த பூட்டுகளில் தொங்குகின்ற‌!
பொற்கோட்டைகளை தேடி அலையாது.!
சினிமா கொடுக்கும் இனிமாவில்!
கலக்கல் ஆட்டங்கள் இனி இல்லை.!
நரம்புக்காட்டின் மண்டைக்காடுகளில்!
மியூசிக் இரைச்சல்களின் ஜிகினா மண்டலங்கள்!
இனி இல்லை.!
தூர‌த்து ஆழ்வெளியின்!
குவாஸ‌ர்க‌ளும் ப‌ல்ஸார்க‌ளுமே!
நாங்கள் தேடும் தேவ‌தைக‌ள்.!
பொது சார்புக் கோட்பாட்டில்!
ஐன்ஸ்டீன் விட்டு விட்டுப்போன‌!
லேம்ப்டா சூத்திர‌த்தின் வ‌ழியே!
அந்த‌ ஸ்பேஸ் டைம் எனும்!
கால‌வெளிக்க‌யிற்றின் ம‌றுமுனையை!
க‌ண்டிப்பாய் பிடிப்போம்.!
காத‌லியின் வான‌வில் வ‌ர்ண‌!
சுடிதாருக்குள்!
சுருண்டுகிட‌க்க‌ மாட்டோம் இனி.!
கிடார் ஸ்ட்ரிங்கில்!
கிற‌ங்கிக்கிட‌ந்த‌து போதும் இனி.!
அதிர்விழைக்கோட்பாடு எனும்!
ஸ்ட்ரிங் திய‌ரியின் ஆராய்ச்சிக்குள்ளும்!
அமிழ்ந்து கிட‌ப்போம்.!
காத‌ல் ப‌ற்றி!
புதுக்க‌விதைக‌ள்!
புற்றீச‌ல்க‌ளாய் புற‌ப்ப‌ட்டு வ‌ந்து எங்க‌ளை!
புண்ணாக்கிய‌து எல்லாம் போதும் இனி.!
வாத்சாய‌ன‌ர் சூத்திரங்களுக்கு இனி!
வசப்பட மாட்டோம்.!
இயற்பியல் சூத்திரங்களில்!
விய‌க்க‌வைப்போம்!
இந்த பிரபஞ்சத்தையே அதில்!
இயக்க வைப்போம்.!
அப்போகீ எனும் நெடுந்தூரத்தையும்!
பெரிகீ எனும் குறுந்தூரத்தையும்!
செயற்கைக் கோள் எனும்!
மயிற்பீலி கொண்டு!
தங்க நிலவை தடவிக்கொடுத்து!
தங்கவைத்துவிட்டீர்கள் உங்கள்!
ஆய்வக முற்றத்தில்.!
பிரபஞ்ச ஈர்ப்பு!
பூமியை கொஞ்சம் பிட்டுத்தின்ற!
பசியில் விழுந்தது!
பசிபிக் கடல் பெரும்பள்ளம்.!
விண்டு போன‌தே!
ச‌ந்திர‌ன் என்றால்!
ந‌ம் உயிர்ப்ப‌சை அங்கே!
ஒட்டியிருக்குமே.!
பிர‌ப‌ஞ்ச‌ம் ஒரு பாழ்வ‌ன‌ம் அல்ல‌.!
ம‌னித‌ம் முட்டிய‌ விண்வெளி இது.!
ஆந்த்ரோபிக் யுனிவெர்ஸ் இது!
அத‌னால் உயிர்விதை தேடி!
விண்ணை வேட்டையாடுவோம்.!
அண்ணாத்துரை அவ‌ர்க‌ளே உங்க‌ள்!
அம்புக்கூட்டில் அடுக்கியிருக்கும்!
அறிவுக்க‌ணைக‌ளே எங்க‌ளுக்கு!
நூல‌க‌ம்...இனி சாதி ம‌த‌!
நூலாம்ப‌டைக‌ளை துடைத்தொழிப்போம்.!
ச‌ட்டை செய்ய‌வேண்டாம்!
ச‌ட்ட‌க்க‌ல்லூரிக‌ளை.!
ப‌ட்டாக்க‌த்திக‌ளைக்கொண்டா இந்த‌!
ப‌ட்டாம்ப்பூச்சிக‌ள்!
ப‌ட்ட‌ம் வாங்க‌ வ‌ந்த‌ன‌?!
விஞ்ஞான‌த்த‌மிழ‌னே!!
ர‌த்த‌ம் சொட்டிக்கொண்டிருக்கும் இந்த‌!
அஞ்ஞான‌த்த‌மிழ‌னின்!
புற‌நானூறுக‌ள்!
ப‌ண்பின் க‌திரிய‌க்க‌ம்பெற்ற‌!
அக‌நானூறுக‌ள் ஆவதற்கு!
த‌மிழ்விஞ்ஞான‌த்து!
வேள்வித்தீ!
ஓங்க‌ட்டும்!உய‌ர‌ட்டும்! ந‌ம்!
செம்மொழி புதிதாய் ம‌ல‌ர‌ட்டும்!!
திங்கள் போற்றுதும்! திங்கள் போற்றுதும்!!
திங்களைப் பிடிக்கப்போகும்!
மயில்சாமி அண்ணாத்துரையையும்!
போற்றுதும் போற்றுதும்!
என்று இளங்கோ அடிகளின் அடிகளுக்கு!
உரையாசிரியர்கள் இனி இப்படித்தான் எழுதுவார்கள்!
இந்த‌ புதிய!
அண்ணாத்துரையே எங்க‌ள்!
அண்ணாம‌லைத்தீப‌ம்!!
விஞ்ஞானி அண்ணாத்துரை அவ‌ர்க‌ளே!
நீங்க‌ள் கூட‌ புதிதாய் ஒரு!
தி.மு.க‌ ஆர‌ம்பிதிருக்கிறீர்க‌ளே!!
ஆம் அது தான் உங்க‌ள்!
திங்க‌ள் முற்றுகைக் க‌ழ‌க‌ம்!
அதிலே நாங்க‌ள் இனி!
ஆயுள் கால‌த்தொண்ட‌ர்க‌ள்!!
-ருத்ரா!
-------------------------------------------!
ச‌ந்திராய‌ன் சாத‌னையில் ப‌ங்கேற்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கும்!
த‌மிழ் விஞ்ஞானி மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு ஒரு பாராட்டு மடல்

தேடல்

வெண்ணிலாப்ரியன்
குளிரில் பற்கள் நடுங்குகின்றன.!
இரவின் திகில்!
என்னையும் சிதிலமாக்க!
அசாதாரண நிசப்தக்காட்டில்!
மஞ்சள் பல்பின்!
அப்பிய சோகத்தில்!
துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய்!
என் சுவாசமிருக்க!
தேடிக்கொண்டிருக்கிறேன்.!
என்!
மனைவியின் மெட்டியை...!
பிணவறையில்.!
- வெண்ணிலாப்ரியன்

சிதறிய உறவுகள்

ப. கரிகாலன்
மழலைகளின் அழுகுரல் இன்னும்!
ஓயவில்லை!!
குருதி பாய்ந்த மண் இன்னும்!
காயவில்லை!!
ஐயோ! என்னை காப்பாற்று!
என்றோர் எத்தனையோ!
விழலுக்கு இறைத்த் நீராக!
பாய்ந்தனவே அத்தனையும்!!
கொடுமையிலும் கொடுமை - எம்!
தேசத்தில் அரங்கேறியதே!!
பாடை தூக்க நால்வரில்லை!
பறைந்தோர் பக்கத்தில்லை!
செல்லினிலே சிதறினரே!!
எல்லை காத்தோர்!
முல்லை பூத்த முள்ளிவாய்க்காலில்!
களமாடி மௌனத்தினரே!!
சுடுகாடாய் சோபையிழந்த -எம்மண்!
மீண்டும் எழும்!!
எம்தேசம் விடியும் வரை!
மீண்டும் எழுவோம்!!
எவ்விடர்வரினும் அடிபணியோம்

இரு உலகங்கள்

த.சு.மணியம்
தொட்டிலில் வாழ்வைக் காணா தோளிலே தூங்கும் பிள்ளை!
வட்டிலில் பால் கொடுக்க வழியுமோ அறியா அன்னை!
கொட்டிலும் இவர்க்கு உண்டா பட்ட அம் மரமே சாட்சி!
தட்டியும் அவரும் கேட்க தமக்கென எவர்தாம் சொந்தம்.!
பாட்டியும் பல நாமத்தில் பானமோ பலதாய் ஓடும்!
பாட்டிக்கும் பிறந்த நாளாம் பதறுறாள் கேக்கும் வெட்ட!
கூட்டியே சொந்தம் சேர்ந்து குடும்பமாய் படமும் இங்கு!
காட்டும் இக் கோலம் கண்டு கலங்குகிறார் அகதி ஏற்றோர்.!
கிடுகுகள் கிழிந்த சேலை குளிக்கும் பெண் மானம் காக்கும்!
படுத்திட அவளோ எண்ணில் ஓலையோ சுவராய் மாறும் !
எடுத்தொரு அவளம் உண்ண எண்ணிடில் ஏது தேறும்!
இடுக்கணே பலவைக் கண்டும் இவள் ஒரு மானப் பெண்ணே.!
குளிக்கவே போனால் இங்கு குவியுது வாசப் போத்தல்!
மழித்துமே வெட்டிக்கூந்தல் வலம் வரும் ஆச்சி இங்கு!
பசிக்குமாய் உணவும் உண்ண பத்துமே ரகத்தில் கோப்பை!
ருசிக்குமாய் நாளும் உண்டு நெருக்குதே நோய்கள் இன்று.!
வெட்டியே விறகும் விற்று வேகிற வயிற்றைக் காக்க!
தட்டியே பொறுக்கி அள்ளும் அரிசியே அவர்க்குத் தஞ்சம்!
கட்டிய சேலை சேதம் கண்டிடின் அதனைத் தைக்க!
முட்டியில் சல்லி உண்டா வாங்கிட ஊசிதானும்.!
அன்னவள் நகைகள் மாற அதற்கென உடுப்பும் மாறும்!
யன்னலில் தொங்கும் அந்த துணிகளும் கிழமை மாறும் !
தன்னது அழகை மாற்ற தாயுமோ அவஸ்தை நாளும்!
என்னது வசதி சேர்ந்தும் இவள் மகள் இரவில் றோட்டில்.!
-த.சு.மணியம்

முதிர்கன்னி

யசோதா காந்த்
ஏழை வீட்டு மூத்த பெண்ணாய்!
அழகே இல்லாத துர்பாக்கியவதியாய் நானும்!
அழகாய் நான்கு தங்கைகளும் ..!
என்னை பெண்பார்க்க வந்தவர்களுக்கோ!
தங்கைகளை மணமுடிக்க ஆசை!
உள்ளுக்குள் அழுதும் ..புறம் சிரித்தும்!
சம்மதம் சொன்னேன் தங்கைகள் வாழ்விற்கு!
என் வயது தோழிகளுக்கோ ....!
பள்ளியிலும் இடுப்பிலும் வயிற்றிலும் குழந்தைகள்!
இரண்டாம் மூன்றாம் தாரமாய் கூட!
என்னை மணமுடிக்க வருவாரில்லையே!
யாரை குத்தம்சொல்லுவது!
என்னை பெத்த தாய் தந்தையினயோ!
அழகாய் என்னை படைக்க மறந்த இறைவனையோ!
ஆசைகளையும் ஏக்கங்களையும்!
எனக்குள் புதைத்து!
இரவெல்லாம் கண்ணீரால் என் தலையணையை நனைத்து!
மௌனமாய் அழுகிறேனே!
முதிர் கன்னி நான்

நவீனள்

ராம்ப்ரசாத், சென்னை
தன்னில் தொலைந்த!
ஆணைப் பற்றி!
அவள் அறிந்தே இருக்கிறாள்...!
தொலையாத பெண்ணின்!
குறிப்புக்களை அவள்!
வாசித்தபடியே இருக்கிறாள்...!
வார்த்தைக‌ளின் பின்வாசல்களை!
அடைத்தே இருக்கிறாள்...!
தொலையாததைக் கொண்டு!
தொலைந்ததைத் தேட‌!
அவள் என்றுமே!
முயன்றதில்லை...!
ஈர்ப்பு விசை விதிகளை!
அவள் ச‌ரிபார்த்த‌தில்லை...!
ஊராரின் முன் ந‌ட‌க்கையில்!
செவிக‌ளை அடைக்க‌!
அவள் என்றுமே ம‌ற‌ப்ப‌தில்லை..!

எங்களின் தேசம்

நிர்வாணி
1.!
எனக்கென்றவொரு பாதையில் சென்றுகொண்டிருந்தேன்!
அதே வழியில் என் தம்பியும்!
அவனைத்தொடர்ந்து அவனது நண்பர்களும்!
பாதையில் ஏதோ தடக்கி விழுந்துவிட்டேன்!
உதவிக்காக கரமேதும் வரவில்லை!
என்ன மனிதர்களென்று வெறுத்துக்கொண்டு!
தலை து£க்கிய என் தலைக்குப்பின்னால்!
அத்தனை தலைகளும் இரத்த வெள்ளத்தில்!
என் தம்பி உட்பட.!
!
2.!
எங்களின் தேசத்தில் உழுது பயி£¤ட்டு!
பச்சையைப் பார்த்து பசியாறியவர்கள்!
நாங்கள்!
இன்று எம் தேசத்தில்!
குண்டுகள் வீழ்ந்து பலியாவதும்!
நாங்கள்!
ஒரு நீண்ட பயணத்தில்!
மீண்டும் எம் தேசத்தில்!
வாழ்க்கையை வளமாய்!
வாழ்ந்துகொள்வோம்

மீன்குஞ்சுகள்

துவாரகன்
கண்ணாடித் தொட்டியில் இருந்த!
மீன்குஞ்சுகள்!
ஒருநாள் துள்ளி விழுந்தன!
மாடுகள் தின்னும்!
வைக்கோல் கற்றைக்குள்!
ஒளிந்து விளையாடின!
வேப்பங் குச்சிகளைப்!
பொறுக்கியெடுத்து!
கரும்பெனச் சப்பித் துப்பின!
வயலில் சூடடித்து நீக்கிய!
‘பதர்’ எல்லாம்!
பாற்கஞ்சிக்கென!
தலையிற் சுமந்து!
நிலத்தில் நீந்தி வந்தன!
வீதியிற் போனவர்க்கு!
கொல்லைப்புறச் சாமானெல்லாம்!
விற்றுப் பிழைத்தன!
திருவிழா மேடையில் ஏறி!
ஆழ்கடல் பற்றியும்!
அதன் அற்புதங்கள் பற்றியும்!
நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும்!
அளந்து கொட்டின!
இப்படித்தான்!
வைக்கோலைச் சப்பித் தின்னும்!
மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன!
தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த!
மீன்குஞ்சுகள்.!
04/2011

வெள்ளிக்கூடல்

இ.இசாக்
மத்தியானப் பொழுதில் !
நிறுவனத்தின் ஊர்திகளில் !
திணிக்கப்படுகிறதெங்கள் !
எதிர்பார்ப்பு !
சாலையின் அசுரநகர்வில் !
வேகமாக பயணிக்கிறதெங்கள் !
ஆர்வம் !
நெரிசலுக்கிடையேயான நிறுத்தமொன்றில் !
திபுதிபுவென வெளியேறுகிறதெங்கள் !
உற்சாகம் !
காற்று திணரும் !
மனிதக்காடுகளில் !
நுழைந்து !
நகர்ந்து !
முட்டிமோதி வெளியேறுகையில் !
இல்லாமலாகிறதெங்கள் !
ஏக்கம் !
மின்கம்பம் !
கண்விழிக்கும் பொழுதில் !
நிறுவன ஊர்திகள் !
மீண்டும் அள்ளிச்செல்கிறன !
எங்கள் கூடுகளை

துயர்ப் பயணக்குறிப்புகள்

சித்தாந்தன்
நகரத்திற்கு வந்தவனின் இரண்டு!
கவிதைகள்!
!
துயர்ப் பயணக்குறிப்புகள் 1!
---------------------------------!
நான் யுகங்களின் முடிவிலிருந்து!
திரும்பி வந்திருக்கிறேன்!
எறும்பூரும் பாதைகளும்!
வனாந்திரங்களின் ஒலிகளுமற்றதில்லை!
எனது வழித்தடங்கள்!
இறுகிய முகங்களின் சர்வகாலத்தினதும்!
புகைமண்டிய புன்னகைகளை!
எனக்காக விட்டுச்சென்ற!
எல்லோரையும் நானறிவேன்!
இடியதிர்வின் மின்னல் ஒளியில்!
பாதியான என் பாலிய பிராயத்தை!
காடுகளின் இலையுறுமல்களுக்கிடையில்!
தவற விட்டுவிட்டேன்!
குறிகளும் முகங்களுமில்லாத!
ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில்!
நான் திரும்பி வருவேனென!
யாரும் நினைத்திருக்க முடியாது!
நான் வந்தேன்!
மௌனகாலத்தில் மிதந்த கடல்!
முதல் முறை அலையெழுப்பிற்று!
வானத்திற்கு அப்பாலான வெளியிலும்!
நான் அதைக்கேட்டேன்!
கிரகங்களின் ஒளிமுகங்களிலும்!
எனது புன்னகை ஒட்டிக்கிடந்தது!
தூக்கு மேடைகளும் கயிறுகளும்!
நிறைந்த பொழுதுகளில்!
ஒரு அந்நியனின் பார்வையழிந்து!
இன்னொரு அந்நியன்!
தெருக்களில் உலாவந்த நாட்களில்!
நான் தெருக்களில் வதைபட்டேன்!
உங்களில் எவருமே தெருவுக்கு வரவில்லை!
இன்று நான் வந்தேன்!
பிரபஞ்சத்தின் கடைசியிரண்டு!
கண்ணீர்த்துளிகளும் காய்ந்துபோன பிறகு!
நான் வந்தேன்!
தெருவில் சயணித்த மனிதர்களின்!
ஆழ்ந்த உறக்கத்தின் அலறல்களில்!
நான் கழுத்தைத் திருகியெறிந்த!
கனவுகளுடன் வந்தேன்!
ஆனால்!
இன்னும் நீங்கள் தெருக்களுக்கு வரவில்லை!
இலைச்சஞ்சாரம்!
காற்றில் இல்லாமலே போய்விட்டது!
நானே தெருக்களில் அலைகிறேன்!
நான் மட்டும் ஒருவனாக!
தனி ஒருவனாக!
துயர்ப் பயணக்குறிப்புகள் 2!
-------------------------------------!
நண்பனே!
சர்வசாதாரணமாக வார்த்தைகளை!
உதிர்க்கப்பழகிவிட்டாய்!
மொழி தெரியாத ஒரு நகரத்தில்!
நான் ஒரு பித்தனாய்த் திரிந்தேன்!
வாகனங்களின் நெரிசலுள்ளும்!
மனித இடிபாடுகளிலுள்ளும்!
வெறும் அலங்கார ஒளிர்வுகளிலுள்ளும்!
எனது குரலை மறைத்தபடி திரிந்தேன்!
உனது வார்த்தைகளை!
இயல்பானதென நீ வாதாடுகிறாய்!
நான் வார்த்தைகளை காற்றிலே விட்டெறியாமல்!
மிக அவதானமாக உன்னைப் பார்த்தேன்!
எந்த இயல்பும் நிரந்தரமானதில்லை!
இயல்பில்லாமலும் போய்விடும்!
நீ அவதானமாக இருக்க வேண்டும்!
உன் இயல்புகளை!
இந்த நகரம் பிடுங்கி எடுத்துவிடும்!
இந்த வீதிகளில் இயல்பில்லை!
கணங்கள் தோறும் இதன் இயல்புகள்!
உடைந்து நொருங்குகின்றன!
இதனையும்!
நீ இயல்பெனக்கருதலாம்!
அது நல்லது!
ஒரு சிறிய இடைவெளி கொடு!
நான் வெளியேறி விடுகிறேன்!
தேநீர்க் கடைகளையும்!
புத்தகக் கடைகளையும்!
நினைவில் வைத்துக்கொள்கிறேன்!
என்னைப்போலவே!
இன்னும் சில மனிதர்களும்!
இங்கு அலைவுறலாம்!
பஸ் இலக்கங்களை மறந்துபோய்!
அவர்களுக்குத் தெரிந்த!
தொலைபேசி இலக்கஙகளைத் தவறவிட்டு!
அலையலாம்!
இங்கு வாழப்பழகிவிட்ட!
வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட!
எல்லா மனிதர்களுக்கும்!
எனது அனுதாபங்கள்!
நண்பனே!
எந்த இயல்பும் நிரந்தரமில்லை!
இயல்பில்லாமலும் போய்விடும்!
!
-சித்தாந்தன்