துயர்ப் பயணக்குறிப்புகள் - சித்தாந்தன்

Photo by Chris Barbalis on Unsplash

நகரத்திற்கு வந்தவனின் இரண்டு!
கவிதைகள்!
!
துயர்ப் பயணக்குறிப்புகள் 1!
---------------------------------!
நான் யுகங்களின் முடிவிலிருந்து!
திரும்பி வந்திருக்கிறேன்!
எறும்பூரும் பாதைகளும்!
வனாந்திரங்களின் ஒலிகளுமற்றதில்லை!
எனது வழித்தடங்கள்!
இறுகிய முகங்களின் சர்வகாலத்தினதும்!
புகைமண்டிய புன்னகைகளை!
எனக்காக விட்டுச்சென்ற!
எல்லோரையும் நானறிவேன்!
இடியதிர்வின் மின்னல் ஒளியில்!
பாதியான என் பாலிய பிராயத்தை!
காடுகளின் இலையுறுமல்களுக்கிடையில்!
தவற விட்டுவிட்டேன்!
குறிகளும் முகங்களுமில்லாத!
ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில்!
நான் திரும்பி வருவேனென!
யாரும் நினைத்திருக்க முடியாது!
நான் வந்தேன்!
மௌனகாலத்தில் மிதந்த கடல்!
முதல் முறை அலையெழுப்பிற்று!
வானத்திற்கு அப்பாலான வெளியிலும்!
நான் அதைக்கேட்டேன்!
கிரகங்களின் ஒளிமுகங்களிலும்!
எனது புன்னகை ஒட்டிக்கிடந்தது!
தூக்கு மேடைகளும் கயிறுகளும்!
நிறைந்த பொழுதுகளில்!
ஒரு அந்நியனின் பார்வையழிந்து!
இன்னொரு அந்நியன்!
தெருக்களில் உலாவந்த நாட்களில்!
நான் தெருக்களில் வதைபட்டேன்!
உங்களில் எவருமே தெருவுக்கு வரவில்லை!
இன்று நான் வந்தேன்!
பிரபஞ்சத்தின் கடைசியிரண்டு!
கண்ணீர்த்துளிகளும் காய்ந்துபோன பிறகு!
நான் வந்தேன்!
தெருவில் சயணித்த மனிதர்களின்!
ஆழ்ந்த உறக்கத்தின் அலறல்களில்!
நான் கழுத்தைத் திருகியெறிந்த!
கனவுகளுடன் வந்தேன்!
ஆனால்!
இன்னும் நீங்கள் தெருக்களுக்கு வரவில்லை!
இலைச்சஞ்சாரம்!
காற்றில் இல்லாமலே போய்விட்டது!
நானே தெருக்களில் அலைகிறேன்!
நான் மட்டும் ஒருவனாக!
தனி ஒருவனாக!
துயர்ப் பயணக்குறிப்புகள் 2!
-------------------------------------!
நண்பனே!
சர்வசாதாரணமாக வார்த்தைகளை!
உதிர்க்கப்பழகிவிட்டாய்!
மொழி தெரியாத ஒரு நகரத்தில்!
நான் ஒரு பித்தனாய்த் திரிந்தேன்!
வாகனங்களின் நெரிசலுள்ளும்!
மனித இடிபாடுகளிலுள்ளும்!
வெறும் அலங்கார ஒளிர்வுகளிலுள்ளும்!
எனது குரலை மறைத்தபடி திரிந்தேன்!
உனது வார்த்தைகளை!
இயல்பானதென நீ வாதாடுகிறாய்!
நான் வார்த்தைகளை காற்றிலே விட்டெறியாமல்!
மிக அவதானமாக உன்னைப் பார்த்தேன்!
எந்த இயல்பும் நிரந்தரமானதில்லை!
இயல்பில்லாமலும் போய்விடும்!
நீ அவதானமாக இருக்க வேண்டும்!
உன் இயல்புகளை!
இந்த நகரம் பிடுங்கி எடுத்துவிடும்!
இந்த வீதிகளில் இயல்பில்லை!
கணங்கள் தோறும் இதன் இயல்புகள்!
உடைந்து நொருங்குகின்றன!
இதனையும்!
நீ இயல்பெனக்கருதலாம்!
அது நல்லது!
ஒரு சிறிய இடைவெளி கொடு!
நான் வெளியேறி விடுகிறேன்!
தேநீர்க் கடைகளையும்!
புத்தகக் கடைகளையும்!
நினைவில் வைத்துக்கொள்கிறேன்!
என்னைப்போலவே!
இன்னும் சில மனிதர்களும்!
இங்கு அலைவுறலாம்!
பஸ் இலக்கங்களை மறந்துபோய்!
அவர்களுக்குத் தெரிந்த!
தொலைபேசி இலக்கஙகளைத் தவறவிட்டு!
அலையலாம்!
இங்கு வாழப்பழகிவிட்ட!
வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட!
எல்லா மனிதர்களுக்கும்!
எனது அனுதாபங்கள்!
நண்பனே!
எந்த இயல்பும் நிரந்தரமில்லை!
இயல்பில்லாமலும் போய்விடும்!
!
-சித்தாந்தன்
சித்தாந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.