மரணம்.. ஓய்வில்லாவேலை..வீடு - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Photo by FLY:D on Unsplash

மரணம்.. ஓய்வில்லா வேலைக்காரன்.. வீடு !
01.!
மரணம் !
--------------!
ஜீவித வாசலின் !
கதவடைப்பு.!
சுவாச தொழிற்சாலையின் !
மூடு விழா.!
வயதெல்லை இன்றி !
யாவருக்கும் கிடைக்கும்!
சமவுரிமை .!
வாழ்க்கைத் !
திரைப்படத்தின் !
வணக்கம்.!
இலஞ்சம் கொடுத்து !
தப்பிக்க இயலா !
உறுதியான தண்டனை !
பின் போட முடியா !
கட்டாய பரீட்சை .!
துப்பாக்கிகளும் !
குண்டுகளும் !
அறுவடை செய்யும் !
சமகால பயிர்.!
கடவுள் விளையாடும் !
கிரிக்கெட் விளையாட்டில் !
எடுக்கப்படும் !
உயிர் விக்கெட். !
நீதிபதிகளுக்கும் !
வழக்கறிஞர்களும் !
வாதாடி வெல்ல முடியாத !
முடிவான வழக்கு.!
வழித்துணைகளையும் !
வாழ்க்கைத் துணைகளையும் !
விழித்துணைகளையும் !
விட்டு விட்டு !
விதித்துணையோடு !
போகின்ற தனிப் பயணம் !
!
02.!
ஓய்வில்லா வேலைக்காரன்!
----------------------------------!
என் மௌனம் உடைக்காமல்!
செவிகளின் சவ்வுகள் கிழியும்!
சத்தங்களோடு!
நீங்கிக்கொண்டிருந்தன இரயில்கள் !
நீண்டநேரமாய் !
எனக்கான இரயில வாராத !
துக்கங்களுக்குள் முடங்கிக் கிடந்தது!
எனது பயணம் !
மின்சார இரயில்கள் !
மலிந்து விட்ட காலகட்டத்தில் !
புகை கக்கி நடந்து வந்த!
அநாகரீகம் பார்த்து!
பிரகாசமாகின !
எனது விழிச்சூரியன்கள்!
எதிரே அவசர அவசரமாய்!
துப்பட்டாவில்!
வியர்வை ஒத்தி !
ஓடோடி வந்தது நிலவு !
!
நிலவுக்காக காத்திருந்த !
நிமிஷங்களின் வேதனைகள்!
மறைத்து!
பனிபோல் குளிர்ந்த முகத்தோடு !
நிலவை வரவேற்று!
நாகரீகமாய் !
கைகுலுக்கிக் கொண்டு!
நடந்தபோதுதான்!
நடந்தது அது.!
குருதி குளித்த நிலவு !
உயிரை இரயிலேற்றி!
பிணமாய் கிடந்த வேளை!
காக்கிகளும் கரும்பச்சைகளும் !
கழுகளாய் வட்டமிட்டு!
சூத்திரதாரிக்கு வலைவிரிக்க!
எல்லோரின் கண்களிலும்!
மண்ணை தூவிவிட்டு!
அடுத்ததர்கான வலைவிரித்து !
சேவையில் மும்முரமாகியிருந்தான் எமன்.!
03.!
வீடு !
--------!
மழை பெய்யும்!
போதெல்லாம் !
ஒழுகும் கூரையின் கீழ்!
பாத்திர பண்டங்களை !
பரப்பி வைத்து!
முணுமுணுத்த போதும்!
அடை மழை !
அடிக்கும் போதெல்லாம்!
ஊடுரும் வெள்ளத்தால் !
பரண் மேல்!
வீட்டுச் சாமான்களை!
நனையாமல் !
பத்திர படுத்தி!
நாற்காலிகளிலும்!
கட்டில்களிலும் !
உட்கார்ந்தது உட்கார்ந்தது!
வெள்ளம் வடிய!
காத்திருந்த நாட்களிலும் !
காற்றடிக்கும்!
காலமெல்லாம்!
மடார் மடாரென்று !
சேர்த்தடிக்கும்!
கூரைத்தகடு !
மனசை கிழித்த !
வேளைகளிலும்!
திறந்து வைத்தாலும்!
மூடிக் கிடந்தாலும் !
காற்றுக்கு தடைபோடும்!
ஜன்னல்களை!
திட்டித்தீர்த்த!
கோடைக்காலங்களிலும் !
எந்தப்பக்கம் !
அடைத்தாலும்!
ஊடுருவி உள்வந்து!
உடல்நடுங்க செய்யும்!
குளிர்வாட்டும் மார்கழியில்!
தாழ்பாள் இல்லாமல்!
தள்ளாடும் கதவுக்கு!
அணையாக கல்வைத்து!
அழுதிருந்த நாட்களிலும் !
இந்தவீட்டில் !
குடியிருப்பதைவிட !
மாட்டுப்பட்டியில்!
இருக்கலாம் என்று !
அப்பாவை!
சினந்துகொண்ட நாட்களிலும் !
மின்சாரமிலாமல் !
குப்பி விளக்கில் !
கண்விழித்து படித்து !
முகம் கழுவும் வேளை!
மூக்கில் வரும் கரிபார்த்து!
கலங்கிய நாட்களிலும்!
அடுபெரிக்கும்போது!
ஈரவிறகின் புகை மண்டலம்!
வீட்டை விட்டு!
வெளியேற மறுத்து !
அடம்பிடித்து !
கண்ணீர் வரவழைத்த!
நாட்களிலும்!
எனக்குள் அப்போது!
நரகமான என்வீடு....,!
ஒரு கோர யுத்தத்தில் !
குண்டு வீழ்ந்து!
சிதைந்துபோனதன் பின்னர்!
குடியிருக்க வந்த!
வாடகை வீட்டில்....!
சுவரில் சிறு ஆணி அடிக்கவும்!
முற்றத்து பூச்செடியில்!
ஒரு பூப்பறிக்கவும்!
நுளம்புக்கு வேப்பம்!
புகை பிடிக்கவும் !
ஒரு நாள் தாமதித்தாலும்!
வாடகை பணத்திற்காய் !
கடி நாய் கவனமென்று !
வாயில் பலகையில்!
எழுதியிருப்பதை !
ஞாபகமூட்டும் வீட்டுக்காரனிடம்!
கடிபடாமால் தப்பிக்கும் !
வேளைகளில்!
சொர்க்கமாக தெரிகிறது இப்போது
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.