தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கண்ணீர்ப் பனித்துளி நான்!

ரொஷான் தேல பண்டார
மயிர் கூச்செரியும் கடுங்குளிரில்!
நிலவுமறியாது!
பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும்!
கண்ணீர்ப் பனித்துளி நான்!
ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும்!
ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று!
சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும்!
கண்ணீர்ப் பனித்துளி நான் !
நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில்!
உனது வெளிச்சத்தை முத்தமிட்டு!
அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும்!
கண்ணீர்ப் பனித்துளி நான்

சுமையா?

அடியார்க்கு அடியான்
ஆண்டாய்த் தவம்செய்து அடைந்த மணிமகவு!
அன்னை அவளுக்கு அருஞ்சுமை யாகிடுமோ?!
விண்மீனாய் உள்ளே விளையாடும் கண்மணிகள்!
விழித்திரைக் கென்றும் வேண்டாச் சுமையாமோ?!
அடிவயிறு உடையும்வரை அகலா நீர்க்குடங்கள்!
அம்மழை மேகத்திற் கடங்காச் சுமையாமோ?!
கொடியினில் தவழும் குறுமலரும் கிளையிலையும்!
கொண்டதன் கொடிக்கே கூடாச் சுமையாமோ?!
நேற்றா? இன்றா? நாளையா? நினைவேயிலா!
நெடிய காலமுதல் நீள்வா?னக் கூரையதில்!
காற்றாடி போலுலவும் கண்கவர் ஆதவனைக்!
குளிர்நிலவை வானமது கூறுமோ சுமையெனவே?!
வேரெண்ணக் கூடுமோ வெறுமைச் சுமையாக!
வானுயரத் தன்முடியில் வளரும் ஆலதனை!
நாரதுவும் சுமையாக நினைக்குமோ தான்தாங்கும்!
நன்மாலை யாகிநிற்கும் நறுமணப் பூக்களையே?!
எண்ணங்கள் எல்லா மிதயத்தே சுமையானால்!
எதிர்காலம் என்னுமொளி என்றுமே தோன்றுமோ?!
கண்ணிற் குயிர்தரும் காட்சியே சுமையாயின்!
கலைபலக் கற்பினும் கடுகளவும் பயனாமோ?!
சொல்லுக்குப் பொருளே சுமையாயி?ன் கவிதையும்!
சுவையு மிணைநீங்கிச் செத்துடன் மடியாதோ?!
வில்லினை நாணே வெறுத்திடில் சுமையெறு!
விளையுமோ பாரதத்தில் வெற்றி அறத்திற்கே?!
அடியாரைச் சுமையாக ஆண்டவனே எண்ணிடின்!
அமைதியாம் புகலிடம் அடியார்க்கு எங்கே?!
முடியாத சுமையாக முயற்சியே மாறிடின்!
முயல்கின்ற வீரர்க்கு முன்னேற்றம் எங்கே?!
வாரியே வழங்கிடும் வள்ளலே சுமையாய்!
வறியோரை நோக்கிடும் விதியும் வந்திடி?ன்!
பாரினில் பாட்டிசைப் புலவரின் வாழ்க்கை!
பஞ்சாய்த் தீய்ந்திடும் பசியெனும் தீயிலே?!
நிலவும் குளிர்நீரும் நீண்ட வான்வெளியும்!
நிலைபெறா உலகில் நிற்காதே இடம்மாறி!
உலவும் காற்றும் உறவில்லாத் தீப்பொறியும்!
உலகிற் கென்றும் உண்மையில் சுமையாமோ?!
நிற்குமோ நிலைத்தே நொடிப்பொழுது மிவ்வுலகு!
நிலத்தாய் அனைத்தையும் நினைத்தால் சுமையாக?!
கற்கவே முய?ன்றால் கடலாய விப்பொருளை!
காணலாம் புவியினிலே கண்ணெதிரே நற்பயனை!!

எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?

நிர்வாணி
எங்களின் தாய்நிலத்தை!
அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது!
காலங்கள் எத்தனை கடந்தாலும்!
இந்த உடல்!
கோலங்கள் எத்தனை கண்டாலும்!
சொந்த மண்ணை மறந்திடமுடியாது!
மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி!
கனடாவில் குடியேறிவிட்டோம்!
கனடியனாய் வாழ்ந்திடுவோம்!
வா என்கிறாள்!
எனதருமைக் காதலியே!
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?!
தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?!
அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ?!
கோயில் திருவிழாவில் அழகான!
பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற!
நாட்களையா?!
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?!
சொல்லடி பெண்ணே!
எத்தனை காலமடி ?!
இன்று நினைத்தாலும் !
நெஞ்சம் இனிக்குதடி!
எப்படி மறப்பேன்!
என் தாய் நிலத்தை ?

கலவரப்படும் மனது

மு. பழனியப்பன்
மரணம்!
சம்பவிக்கும் நேரத்தைத் தவிர!
வேறு ஒன்றும் முன்னேற்பாடு!
இல்லாதது!
கடிதங்கள்!
இதனைத் தெரிவிக்கின்றன!
தாமதமாக!
அழுகைகள்!
விளம்பரப் படுத்துகின்றன!
இதனை!
சுமக்கின்ற!
வண்டிகள்!
அடையாளங்களாகின்றன!
வருபவர்களுக்கு!
இழப்பின் வலி!
மரணத்தின் அடுத்த நிமிடத்தில்!
மறந்து போகிறது!
ஏற்பாடுகளுக்கு!
பணத்தை எண்ணிப் பார்க்கிறது!
சுற்றம்!
நாள் போனால் நாற்றம் வீசும்!
பக்கத்து வீட்டுக்காரர்களின்!
மனிதாபிமானம்!
அமெரிக்க பாசம்!
வரும் வரை காத்திருக்கிறது கூட்டம்!
எதுவும் இல்லாமல் போகப் போகிறது!
வாழ்க்கை!
கழுவி விட்டார்கள்!
வீட்டையும் மரணத்தையும் சேர்த்து!
அடுத்த மரணத்தின்போது!
கலவரப்படும் மனது

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா
1.!
பறவைகளை பிடிக்காது உனக்கு!
பூக்களை கசக்கி முகர்வாய் நீ!
மழையை திட்டித் தீர்த்திருக்கிறாய்!
வீட்டைச் சுற்றிய எல்லா மிருகமும்!
உதைப் பட்டிருக்கு உன்னிடம்!
அலறல் சங்கீதத்தை!
அப்படி ரசிப்பாய்!
எப்படி அழைக்கிறாய்!
'டேய்! செல்லம்! என.!
4.!
நான் தனிமையில்!
இருக்க வேண்டும்!
முதலாளியின் கட்டளைகள்!
பீயைப் போல்!
துடைத்து விடு!
நண்பர்களின் நினைவுகள்!
இறகு போல்!
பிடுங்கி விடு!
குடும்பத்தாரின் பரிவுகள்!
மலர்களைப் போல்!
கிள்ளிவிடு!
உடல் துவாரங்கள்!
வழியாய் என்னுள்!
ஊற்றி நிறை!
நான் தனிமையில்!
இருக்க வேண்டும்!
உன்னில் மிதந்தபடி.!
5.!
இதுவரை!
நான் பெற்ற!
முத்தச்சுகங்களை!
மொத்தமாய்!
ஓர் நாள் உன்னிடம்!
ஒப்புவிக்கையில்!
வெளியில் அரித்து!
உள்ளுக்குள்!
அழுதிருப்பாய்.!
6.!
நான்கடி விலகி நின்று!
பேசிய போது!
தோளில் கைப் போட்டபடி!
நடந்த போது!
கெஞ்சிக் கேட்டு!
முத்தம்!
கொடுத்த போது!
பெற்ற போது!
சந்திப்புகளில் பரிசுகளை!
திணித்த போது!
மணிக் கணக்கில்!
காத்திருந்த போது!
பல நிலைகளில்!
மௌனமாய் இருந்து விட்டு!
உடல் பிசைந்து!
உச்சம் கண்ட!
ஒரு பொழுதில் கேட்டாய்!
'இதுதான் காதலா? என .!
!

அவளுக்கு விடியல்

ரஞ்சினிமைந்தன், திருப்பூர்
உயிரணு இரண்டும் உறவாடி உருவான!
உன்னத அன்பின் உண்மை பொக்கிசமாய்!
அன்னை வயிற்றில் அனுதினம் வளர்ந்து!
அவளின் முகம் காண ஆயத்தம் ஆனவள்...!
கருவறைக்கோவில் தரிசனம் முடித்து !
கல்லறை வாயில் தன்னடி பதித்து...!
அன்னை ஊட்டிய காரணம் ஒன்றுக்காய்!
கல்லிப்பாளினை களித்திடும் குலமகள்!!
உயிர்ப்பிண்டமாய் உருகிடும் அவளும்!
உன்னைப்போன்ற பெண்ணே அன்றோ...!
ஆண் பெண் சமத்துவம் பேசிடும் இன்றோ!
பெண் சிசுவினை கொன்றிடல் நன்றோ?!!
ஆண் போல் பெண்ணை பேநிடல் வேண்டும்!!
அதை எற்காரை அழித்திடல் வேண்டும்!!!
கன்னிப்பெண்ணின் கற்ப்பைக்கூட!
காசாய் ஆக்கும் கயவர் கூட்டம்...!
கற்பின் கண்ணகி எதிரில் வரிணும்!
அவளைக்கூட விலைக்குக் கேட்கும்!!!
உயிர்ப்பிண்டமாய் உருகிடும் அவளும் !
உன்னைப்போன்ற பெண்ணே அன்றோ?...!
ஆண் பெண் சமத்துவம் பேசிடும் இன்றோ!
பெண் சிசுவினை கொன்றிடல் நன்றோ?!!
கள்ளும் கொலையும் களவும் கற்று!
கடமையை எல்லாம் காற்றில் விற்று...!
காசு கொடுத்தால் கடவுளைக்கூட!
பேரம் பேசி விற்கும் கூட்டம்!!
நட்பு கசிந்த அவரின் நெஞ்சம்!
பகைமை கொண்டு நசிந்து போக...!
சமத்துவம் என்னும் சொல்லின் சுவடோ!
சுடுகாட்டின் கண் பாதை காட்ட...!
தலைகள் எல்லாம் தரையில் உருள...!
தாண்டவம் ஆடுது தீவிரவாதம்!!
உரிமை உரிமை உரிமை என்று!
உரக்கப்பேசிடும் உன்னத நண்பா...!!
மண் பொன் ஆசையை நீயே கொள்வாய்!!
கொஞ்சம்...!
இப்பெண்ணவள் ஆசைக்கு விடியல் தருவாய்...!!!!

இரவினில் பேசுகிறேன்

மன்னார் அமுதன்
ஒன்றாய் நூறாய்ப்!
பல்கிப் பெருகி!
புதிய கட்டுரையாய்!
எனக்கே எதிரொலிக்கும்!
பகலில் பேசிய !
ஓரிரு வார்த்தைகளும்!
மானிட அரிதார !
மாக்களின் சர்ச்சையில்!
மெளன விரதமாய்க் !
கழியுமென் பகல்கள்!
தோழிக்கும், தோழனுக்கும்!
துரோகிக்கும், காதலிக்குமாய்!
எத்தனைமுறை உரைத்துக் காட்டுவேன்!
நான் அவனே தானென!
பகல்களில் செத்து!
உறக்கத்தில் உயிப்பதற்கே!
இரவினை நாடுகின்றேன்!
எண்ணச் சிதறல்கள்!
ஒலியாய் வெடிக்க !
விழித்துக் கொள்கின்றன!
என் இரவுகள்!
எங்கோ பார்த்த முகத்தோடும்!
அதே கனிவோடும்!
அதட்டல் தொனியோடும்!
வெளிச்சத்தில் வீசிய!
வார்த்தைகள் எல்லாம்!
இருட்டில் மோதி!
அவளிதழில் எதிரொலிக்க!
ஏகாந்தத்தில் சுற்றித் திரிகிறேன்!
உணர்ந்த ஸ்பரிசமாய்!
அவளணைக்கையில் !
இராக்கோழியை சேவல் எழுப்பும்

முகவரி

அகில்
மனிதா !
நீ வாழும் போது உனகென்றொரு !
முகவரி தேடிக்கொள் !
வாழ்ந்தோம் மடிந்தோம் என்று !
இல்லாமல் !
மனிதா !
நீ வாழும்போதே உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
நீ வாழும் காலம் மட்டுமல்ல !
இனிவரும் காலமும் !
உனது பெயர் !
உச்சரிக்கப்பட வேண்டும் என்றால் !
உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
முகவரியில்லாத மனிதன் - நல்ல !
அவயங்கள் இருந்தும் ஊனமானவனே! !
கம்பனுக்கு இராமாயணம் !
கவிபாரதிக்கு குயில் பாட்டு !
வள்ளுவனுக்கு திருக்குறள் !
இளங்கோவுக்கு சிலப்பதிகாரம் !
இரவிவர்மனுக்கு ஒவியம் !
சேக்ஸ்பியருக்கு நாடகங்கள் !
சாண்டில்யனுக்கு நாவல்கள் !
மனிதா !
நீ வாழும் போது உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
மானிடப் பிறவி நீ - இந்த !
மண்ணுலகிற்கு என்ன செய்தாய் !
உனக்கு ஒரு முகவரி தேடு !
உன் வாழ்விற்கு அர்த்தம் கொடு !
பட்டை தீட்டினால் மட்டுமே - கல் !
பளபளக்கும் இரத்தினமாகும். !
உலக அனுபவம் கொண்டு !
உன்னை நீயே புடம்போடு !
புது உலகம் சமை !
மண்ணை விட்டு நீ மறைந்தாலும் !
மனங்களில் அழியா இடம் பெற !
உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
மனிதா !
நீ வாழும் போதே உனகென்று ஒரு !
முகவரி தேடிக்கொள்

கானல் பூக்கள்

வல்வை சுஜேன்
ஒட்டிய வயிறும் கந்தல் உடையும்!
தெருநடை ஓரத்தில் பிச்சை தட்டுடன் நான் !
கானல் வீதியில் சருகாகும் பூக்களில் !
என்னைபோல் ஏராளம் சிறார்கள் இங்கே !
இனப் படுகொலை அரசின் மயானத்தில்!
என் குடும்பத்தில் எஞ்சிய எச்சம் நான்!
எச்சில் சோறேனும் தருவாரா என!
சுற்றத்தை பார்க்கிறேன்!
விழியில் வீழ்ந்து வளியும் வேர்வைத் துளி!
எரிவை தந்து காய்கிறது!
என் தாகத்தை தணிக்கவில்லை !
எனக்காகத்தான் கனிந்ததோ தெரியவில்லை !
தெருவோர கால்வாய்க்குள் ஒரு தோடம்பழம் !
நிறம் மாறினாலும் முக்குளித் தெழுந்து !
என் முகத்தை பார்க்கிறது !
விடுவேனா அதை துடைத்தெடுத்து !
சுளை உரித்துண்டு !
களைப்பை போக்கிக்கொள்கிறேன்!
எங்கிருந்தோ வந்த ஓர் நல்லிதயம்!
ஒத்தை ரூபாயை என் தட்டில் !
இட்டுச் செல்கிறது!
தேனீருக்கும் அது போதாத காசு !
யாம் இருக்க பயம் ஏன் ! விளம்பர பலகையோடு!
என் எதிரே ஓர் தேனீர் கடை!
அதன் கண்ணாடி பெட்டிக்குள் சீனிபணிஸ்!
கண்ணுக் கெட்டியது வாய்க்கெட்டுமா!
காத்திருக்கிறேன் இன்னு ஒரு ஒத்தை ரூபாவிற்காக.!

சின்ன காஷ்மீர்

துர்ரத் புஷ்ரா
தூரத்து விண்மீன் கண் சிமிட்ட,!
நிலா வந்து காதினுள்ளே ஏதோ சொல்கிறது.!
தோட்டத்து மல்லிகையும் பூத்திருக்கும் அவ்வெளை,!
ராணியாம் 'நைட் குவினும்'!
விசுறுகிறது சுகந்தத்தை...........!
நித்திரையில் ஆழ்ந்திருந்த பிஞ்சிவளின் அமைதிதனை!
கொஞ்சம் குழப்பிடுவோம் என்றவைகள் நினைத்தனவோ........!
இல்லை,!
ராப்பொழுதின் ஜீவிகளாம் எம்மோடு விளையாட!
சுட்டிப் பெண் இவளேதான் பொறுத்தமென கருதியதோ.........!
கானல் நீராய் தொலைவினிலே!
காரிகைகளின் சிரிப்பொலியோ கலகலவென.........!
துள்ளியெழுந்து ஜன்னலூடே அண்ணாந்து பார்க்கின்றேன்,!
காணவில்லை?!
யாரும் அங்கே கண்ணாமூச்சி விளையாடியதோ?!
இல்லை,!
விடுதி வாழ்க்கையின் நினைவலைகள் என்னை வாட்டுகிறதோ?!
மறக்கத்தான் முடியுமா!
சிநேகமான நாட்கள் தனை-!
அறிவுப்பசியால் எமை இணைத்த காஷ்மீர் விடுதி தனை.!
பரந்து விரிந்த வீரமரங்கள் தாளம் போட,!
சீனியாஸ் செடிகள் பூத்துக்குழுங்க,!
விதவிதமாய் குருவிகளும் கானம் பாட......!
அன்று நாம் ரசித்துப் பழகிய சூழல் அது தானே?!
நாம் காணா பௌர்ணமியும் அங்கில்லை-!
அதுபோல, மழை ஓய்ந்து எமை காணா வானவில்லும் இல்லை........!
வண்ணதுப்பூச்சிகளின் ஆரவாரம்,!
சின்னஞ்சிறு வண்டுகளின் ரீங்காரம்!
கேட்காத நாளும் இல்லை அப்போ-!
அதை கேட்காமல் தூக்கம் இல்லை இப்போ.......!
நகரத்து சுடும் வெயிலுக்கு 'டாடா' காட்டி,!
இனிய குளிர் பொழுதுகளை 'வெல்கம்' பண்ணி!
எம் வாலிப வயதுக்கு ஒத்துப்போக!
படிக்கும் நேரத்தில் எமை உற்சாகமூட்டி!
எம்மோடு ஒன்றாய்!
பின்னிப்பிணைந்த நீ தான் நம் சின்ன காஷ்மீர்!! !