இரவினில் பேசுகிறேன் - மன்னார் அமுதன்

Photo by Jan Huber on Unsplash

ஒன்றாய் நூறாய்ப்!
பல்கிப் பெருகி!
புதிய கட்டுரையாய்!
எனக்கே எதிரொலிக்கும்!
பகலில் பேசிய !
ஓரிரு வார்த்தைகளும்!
மானிட அரிதார !
மாக்களின் சர்ச்சையில்!
மெளன விரதமாய்க் !
கழியுமென் பகல்கள்!
தோழிக்கும், தோழனுக்கும்!
துரோகிக்கும், காதலிக்குமாய்!
எத்தனைமுறை உரைத்துக் காட்டுவேன்!
நான் அவனே தானென!
பகல்களில் செத்து!
உறக்கத்தில் உயிப்பதற்கே!
இரவினை நாடுகின்றேன்!
எண்ணச் சிதறல்கள்!
ஒலியாய் வெடிக்க !
விழித்துக் கொள்கின்றன!
என் இரவுகள்!
எங்கோ பார்த்த முகத்தோடும்!
அதே கனிவோடும்!
அதட்டல் தொனியோடும்!
வெளிச்சத்தில் வீசிய!
வார்த்தைகள் எல்லாம்!
இருட்டில் மோதி!
அவளிதழில் எதிரொலிக்க!
ஏகாந்தத்தில் சுற்றித் திரிகிறேன்!
உணர்ந்த ஸ்பரிசமாய்!
அவளணைக்கையில் !
இராக்கோழியை சேவல் எழுப்பும்
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.