கவிதை
கவிதைகள்
ஆதலினால் காதல் செய்வீர்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014 10:19
- எழுத்தாளர்: ருத்ரா
- படிப்புகள்: 1407

- ருத்ரா
Add a commentபோய் வா தோழி
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 05 நவம்பர் 2014 09:53
- எழுத்தாளர்: பாஷா
- படிப்புகள்: 1730
என்னுள் நீ
உடைந்து நொறுங்கிய தருணத்தில்
உனக்கான என் உணர்வுகள்
கற்பிழந்துவிட்டிருந்தது
என் தன்மானத்தில் தலையிலேறி
குத்தி கிழித்து குதறி
கோரதாண்டவமாடியிருந்தாய்
உனக்காய் செலவழிந்த நொடிகள்
கழிவுப் பொருள்களாய்
காற்றில் இரையப்பட்டிருந்தது
நீ விட்டுப்போன இதயத்தின்
வெறுமை பக்கங்களில்
வெறுப்பு வந்தடைத்திருக்க
இறந்துபோயிருந்தேன்!
- பாஷா
Add a commentவட்டத்துக்குள் வாழ்க்கை
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014 14:53
- எழுத்தாளர்: ப. மதியழகன்
- படிப்புகள்: 1485
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது போலும்
ஒன்றுமே இல்லாதது போலும்
தோன்றுகிறது
தூரத்தில் கயிறுதானேயென்று
அலட்சியமாக வந்தால்
கிட்டத்தில் பாம்பாகிறது
துரோகக் கழுகு
என்னை வட்டமிடுகிறது
எங்கு போயினும்
மரண சர்ப்பம்
என்னைத் துரத்துகிறது
வாழ்க்கை வட்டம்
நிறைவுறும் போது
எனக்காக எதுவும்
மிச்சமிருக்காது
மாம்சம் சாம்பலாகும்
நினைவுகள் சூன்யமாகும்
இன்னார் இருந்தாரென்பதை
இவ்வுலகம்
சீக்கிரத்தில் மறந்து போகும்.
- ப. மதியழகன்
Add a commentமாயத்தோற்றம்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014 12:22
- எழுத்தாளர்: பாவண்ணன்
- படிப்புகள்: 1933
தாள்களுக்கிடையே வைத்து மூடிய
மைதோய்ந்த நூல்
விதம்விதமாக இழுபடும்போது
உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள்
ஒரு தாளில் தென்படுகிறது
ஊமத்தம்பூ
இன்னொன்றில் சுடர்விடுகிறது
குத்துவிளக்கு
அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது
அலை உயர்த்திய கடல்
அதற்கடுத்து படபடக்கிறது
முகமற்ற பெண்ணின் விரிகுழல்
பிறிதொரு பக்கத்தில்
உடலைத் தளர்த்தி
தலையை உயர்த்தி
செங்குத்தாய் விரிந்த
பாம்பின் படம்
- பாவண்ணன்
Add a commentவருவதும் போவதும்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 05 நவம்பர் 2014 12:23
- எழுத்தாளர்: பாவண்ணன்
- படிப்புகள்: 1311
பேருந்து கிளம்பிச் சென்றதும்
கரும்புகையில் நடுங்குகிறது காற்று
வழியும் வேர்வையை
துப்பட்டாவால் துடைத்தபடி
புத்தகம் சுமந்த இளம்பெண்கள்
அணிஅணியாக வந்து நிற்கிறார்கள்
மனபாரத்துடன்
தவித்து நிற்கிறான் சில்லறை வியாபாரி
ஏற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன
விற்காத போர்வைக்கட்டுகள்
மின்னல் வேகத்தில் தென்பட்டு
நிற்பதைப்போல போக்குக்காட்டி
தாண்டிப் பறக்கிறது நிறுத்தங்களற்ற வாகனம்
கடற்கரை கடைத்தெரு தனிப்பாடல் பள்ளி
நண்பர்கள் வீடு திரைப்படம்
மதுச்சாலை இசைக்கச்சேரி செல்ல
வந்து நிற்கிறார்கள் தனித்தனியாக
கணிக்கமுடியாத மழையை நினைத்து
தற்காப்புக்கு சிலரிடம் உள்ளன குடைகள்
தொலைவில் தென்படும்
பேருந்துத் தடத்தை உய்த்தறிந்து
பரபரப்புக் கொள்கிறார்கள் இடம்பிடிக்க
நேரத்துக்குள் செல்லும் பதற்றத்தால்
நிற்கும் மனநிலையுடன் ஏறுகிறார்கள் பலர்
வாய்ப்பின்மைக்கு வருத்தம் சுமந்து
- பாவண்ணன்
Add a commentஎது கவிதை ?
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014 09:32
- எழுத்தாளர்: நிர்வாணி
- படிப்புகள்: 1592
கவிதை !
எது கவிதை ?
நீயும் நானும் பேசிக்கொள்வது ?
பேசிக் கொண்டதை நீயும் நானும்
புரிந்துகொள்வது ?
எது கவிதை ?
நீயும் நானும் பேசிக்கொள்வது ?
பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே
புரிந்தது ?
எது கவிதை ?
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
என்னை உறுத்திக் கொண்டால்
அது கவிதை ?
எது கவிதை ?
சொல்லத் தெரியவில்லை
சொல்ல அனுபவமில்லை
இதுதான் கவிதையென்று தெரியும் நேரம்
நீயும் நானும் இன்றைய இன்பமான
பொழுதுகளை இரைமீட்போம்
- நிர்வாணி
Add a comment