தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஏனோ இந்த வாழ்க்கை?

வித்யாசாகர்
மூணு வேளை சோறு!
ஒரு வேளை ஆனது,!
பத்து மணிநேர தூக்கம்!
ஐந்து மணிநேரமானது,!
மாதத்திற்கு ஒரு முறை !
வெட்டும் - முடி கொட்டி - மொட்டைதலையானது,!
ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் !
அவகாசமின்றி -!
தொப்பை வேறு சட்டி போலானது,!
இனிப்பு தின்பதோ!
காரம் விரும்பித் தின்பதோ!
சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம்,!
அச்சுமுறுக்கு, தட்டை, ஒட்டையடை சமாச்சாரமோ!
அறவே மறந்து போனது,!
ஸ்டைலுக்கு பிடித்த சிகரெட் அணைந்து!
ருசிக்க குடித்த பீரும் விஸ்கியும்!
பழக்கத்திலிருந்து தீர்ந்து போனது,!
சினிமா -!
எப்பொழுதாவது!
பொழுதை ஆக்கும் படங்கள் வந்தால்!
மட்டுமே என்றானது,!
ஊர் சுற்றும் அளவு நேரமோ!
அத்தனை அதிக பணமோ!
கையிருப்பில் - இருப்பதில்லை,!
எங்கு போய் எங்கு வந்தாலும்!
கணக்குப் பார்த்து பார்த்து!
வட்டிக்குக் கடன் வாங்கும் அளவிற்குக் கூட!
வாழ்தலின் நிம்மதியை!
வாங்க இயலா அன்றாட போக்கு,!
இதில் வேறு -!
அம்மா, அப்பா,!
உறவு, நட்பு, சுற்றத்தார் என!
இறப்பின் இழப்பு!
சொல்லி மீளா வலியும் அழுத்தமுமாய்!
தன் மரணம் வரை நீளும் கொடுமை -!
தாங்க முடியா ரண பாரம்; வேதனையின் உச்சம்,!
என்றோ பார்த்தவன்!
எங்கோ பழகியவனை கூட!
நினைத்து வருத்தப் படுமளவிற்கு!
பாதிக்கப் பட்ட ஒரு!
பண்பட இயலா பதட்டமான மனநிலை,!
வாழ்வின் தூரகால!
இடைவெளிக்குப் பின்!
திரும்பிப் பார்க்கையில் -!
எதையுமே!
பெற்றுக் கொண்டதாய் இல்லாமல்!
விட்டுசெல்லவே வந்ததாய் உறுத்தும்!
ஒரு பாவப் பட்ட பிறப்பு,!
ஆக, எத்தனையோ வலியினூடே !
பல போராட்டங்களை தாண்டியும் !
வாழ முற்படுகையில் -!
உள்ளே ஒரு மனசு!
கூட்டி கழித்துப் பார்த்து!
'ஏனோ' இந்த வாழ்வென!
நொந்துக் கொண்டு தானிருக்கிறது.!
முடிவாய்;!
நொந்து போகையிலும்!
சிந்திப்பது தான் -!
வாழ்க்கை போலும்

அடர் மழை வனாந்தர நேசம்

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட !
உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று !
கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன. !
அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை !
அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று. !
பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த !
கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம். !
உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம் !
அழியாது, என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று !
நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும் !
இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்

சாத்திய யன்னல்கள் !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை!
வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்!
உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.!
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்!
அறுதியான வாதம்.!
ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென!
தூங்குவதாயொரு பாவனை.!
நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்!
எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…!
நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்!
துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும்.!
அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்!
வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.!
அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு!
விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர… !

வாழ்தலை மறந்த கதை!

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
அவளிடம் சொன்னேன்!
அடுப்படி தாண்டு!
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக!
விஷயங்கள் இருக்கின்றன!
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்!
வித்தை சொல்லித் தருகிறேன் !
அவள் வந்தாள்.!
சுமக்க முடியாத சங்கிலிகளையும்!
முடிவற்ற சந்தேகங்களையும்!
சுமந்து கொண்டு !
மிகுந்த பிரயாசையோடு!
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்!
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்!
நீண்டு நெடித்தலைந்தன. !
இனி என்ன!
களைப்போடு கேட்டாள்.!
இனி நீ வாழத் துவங்கு !
வாழ்தல் என்றால்!
அயர்வோடு நோக்கினேன்.!
அவள்!
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன

கவிஞனின் மனைவி !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
அபூர்வமான சொற்களைப் பின்னும்!
பொன்னிற சிலந்தி அவன் !
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்!
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். !
திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்!
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்!
பார்த்தவாறே உறங்கிப்போவாள். !
அவன் எழுதும் எதையும்!
அவள் வாசித்ததில்லை!
அவனது விசாரங்களும் தனித்துவமான!
சிந்தனைகளும்!
அவளுக்குப் புரிந்ததேயில்லை.!
அதிகம் பேசுவது அவனை!
ஆத்திரமூட்டும்.!
அவள் மொழி மறந்தவள் ஆயினள். !
கிராமத்துக்கிளி மொழிகள்!
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்!
அடங்கியிருந்தாள். !
சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து !
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்!
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது. !
புழுங்கிய சமையலறையில்!
நெடுங்காலமாய் திறவாதிருந்த!
‘ஜன்னல்’ தான் அது !
அதனூடே அவள்!
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்!
வானவில் எழுதும் ஓவியங்களையும்!
வாசிக்கத் தொடங்கினாள். !

வலி!

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி!
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்!
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.!
ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க!
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.!
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் !
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்!
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.!
வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது!
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்!
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து!
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்!
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு

வாழ்க்கை பயங்கள்

பாலசுப்ரமணியன்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!

அன்பைக் கண்டு
பயந்தேன்!!
அது என்
இதயத்தில் இருள்
போன்ற கருமையை
நீக்கி,
நிகரில்லா
வெளிச்சத்தை வீசும் வரை!!

வெறுப்பைக் கண்டு
பயந்தேன்!!
அது
அறியாமை என்று
அறியும் வரை!!

ஏளனங்களைக் கண்டு
பயந்தேன்!!
எனக்குள்
சிரிக்கத் தெரியாதவரை!!

தனிமையைக் கண்டு
பயந்தேன்!
நான் தனியாக
இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

தோல்விகளை கண்டு
பயந்தேன்!!
தோல்வியே
வெற்றிக்கு அறிகுறி என்று
உணரும் வரை!!


வெற்றிகளை கண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின் சந்தோஷம்
என்று அறியும் வரை!!

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்
என்னைப் பற்றிய கருத்துக்கள்
இருக்கும் என்று உணரும் வரை!!

ஒதுக்கப்படுவதைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கை வரும் வரை!!

வலிகளை கண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்கு தேவை
என்று அறியும் வரை!!

உண்மையைக் கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
முகங்களை பார்க்கும் வரை!!

வயதானதை அறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டு விட்டேன் என்று
உணரும் வரை!!

நடந்ததை நினைத்து
பயந்தேன்!! அது இனி
நடக்காது என்று
நம்பும் வரை!!


நடக்கப் போவதை
நினைத்து பயந்தேன்!!
நடந்தது எல்லாம்
நன்றாகவே நடந்தது,
நடக்கப் போவதெல்லாம்
நன்றாகவே நடக்கும்
என்று உணரும் வரை!!!

மரணத்தைக் கண்டு
பயந்தேன்!! அது முடிவல்ல
புதிய ஆரம்பத்தின் தொடக்கமே
என்று உணரும் வரை!!!

எது?

அனாமிகா பிரித்திமா
முக்குக்கண்ணாடி ...!
வெளியே தெறிக்கும்...!
அந்த காந்த கண்களா?...!
அதன் மேலிருக்கும் ...!
வளர்ந்தும்-வளராத...!
அந்த புருவமா?!
கோபம் பளிசிடும் நாசியா?!
அதன் கிழ் இருக்கும்...!
கற்றை மீசையா?!
கவிதையை நேர்த்தியாய்...!
படிக்கும் உதடுகளா?!
அதன் உள் இருக்கும்...!
சற்றே உடைந்த முன் பல்லா?!
கவர்ந்திழுக்கும்...!
அந்த அழகிய காதா?!
சங்கிலி அலங்கரிக்கும்...!
சங்கு கழுத்தா?!
சற்றே வளைந்திறுக்கும்...!
அந்த ஒற்றை விரல் நகமா?!
பரந்து விரிந்த அந்த மார்பா?!
முதுகில் இருக்கும்...!
அந்த முடிமுளைத்த மச்சமா?!
கேந்தி...!
நடக்கும் அந்த காலா?!
எது ஈர்த்து என்னை தங்களின் !
நிரந்தர கைதி ஆக்கிவிட்டது?!
...........எது?

உயிரிசை

வினோத்குமார் கோபால்
ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் கண்ட துண்டோ!
கருத்த அறை அதனில்!
தாயவள் உடல் உரிஞ்சி!
செங்காந்தற் மலர் மேலே!
செந்தேன் தடவியது போல்!
தன் உடல் தரித்து!
தானறிந்த அழுகை யெனும்!
நாதம் முழுங்கி உலகிற்கு!
தன் வருகையை யறிவிக்கும்!
இசை நிகழ்வை யுணர்ந்து!
மனமகிழும் தாய் அவளின்!
உணர்வுகளை உணர்ந்த துண்டோ!
ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் கண்ட துண்டோ!

அனாதை

வினோத்குமார் கோபால்
இருவகை குழந்தையாம்!
மலர்ந்த வாடை!
சிறிதும் இழக்காது!
பிறவி கண்டிருக்கும்!
சிறு துளிரையும்!
உயிர் துறக்கக்!
காத்து கிடக்கும்!
உடலுருகிய தொன்றையும்!
வீதியோடு வாழவிட்ட!
விழியழிந்த மூடர்கள்!
இங்கே வேண்டாமே!
நரகுல நாயகர்கள்!
செழித்து வாழும்!
வேற்றுலகம் கண்டெடுத்து!
குழந்தை செல்வத்தை!
துறந்து வாழும்!
ஐயறிவு கொண்டு!
அனாதை நாய்களாய்த்!
திரியும் பேய்களைத்!
துரத்துவோம் வருங்களேன்!