தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

புரட்சி!

நடராஜா முரளிதரன், கனடா
மக்களுக்கு வேண்டியதை!
நான் தீர்மானிக்க வேண்டும்!
பகடைகளை உருட்டுகின்றேன்!
உன்னுடைய தகமையையும்!
நானே தீர்மானிப்பதாக உள்ளேன்!
துரும்புச் சீட்டால் வெட்டுகின்றேன்!
மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்!
கிளித்தட்டு மறிக்கின்றேன்!
நான் எதைக் கொள்ள விரும்புவேனோ!
அதையே அவர்களும் விரும்புவார்கள்!
காயா பழமா!
அதற்காக அவர்கள் எத்தகைய!
அர்ப்பணிப்புக்களையும் தியாகத்தையும் புரிவார்கள்!
மற்றவர்கள் எல்லோரையும்!
எம் எதிரிகளாய் பிரகடனப்படுத்துவோம்!
நான் தத்துவவாதி!
எனவேதான் புரட்சியை வழி நடத்துகின்றேன்

காணாமற்போனவனின் புன்னகை!

கருணாகரன்
ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்!
காணாமற்போனவனின் புன்னகையை!
கடந்துபோகமுடியாதபடி!
கொதித்துக்கொண்டிருந்தது தீத்துண்டாக!
அந்தப்புன்னகை!
அதில் காயாமலே இருந்தன!
இரண்டு கண்ணீர்த்துளிகளும்!
அவனுடைய குருதியும்!
திரும்பிச்செல்லவும் முடியவில்லை!
காணாமற்போனவனின் புன்னகையை விட்டு!
அங்கிருக்கவும் முடியாது!
காயமறுக்கும்!
கண்ணீர்த்துளிகளின் முன்னாலும் !
குருதியின் அருகாமையிலும்

வெறுப்புமிழ்ந்த கல்!

கருணாகரன்
ஒலிவற்றிக் காய்ந்த குருட்டு இரவில் !
பழித்தன எல்லா நட்சத்திரங்களும்!
சாட்சி சொல்வதற்கும் அஞ்சிய நிலவை !
எந்த வசைச் சொல்லாற் திட்டுவேன்?!
ஒரு வழிகேட்டு அலைகிறேன்!
காவற்காரரிடம் கெஞ்சி, !
படைகொண்டு போக அல்ல!
பொருள்சேர்த்துப்போகவும் அல்ல!
வளர்த்த நாயைக்கொண்டு செல்லவும் அல்ல!
வேதனை நிரம்பி!
வலியின் வேரோடிய !
என்னுடலில் வளரும் நோயைக் கொண்டு தொலைக்க!
பிணியெல்லாம் பரவிய ஊரில்!
மருந்துமில்லை மருத்துவரும் இல்லை!
பாழடைந்த மருத்துவமனைகளின்!
முனகலொலி உடலையூடுருவி!
நெருப்பையள்ளிக் கொண்டலைகிறது!
சிதைதேடி.!
குலுங்கும் மார்பிலிருந்து!
கொட்டுண்டன துயர்ப்பாசி படர்ந்து வழுவழுப்பான !
ஈரமூறிய வார்த்தைகள்.!
அவற்றை நான் சேகரித்து வைத்திருந்தேன்!
காய்ந்து வரண்ட கோடைக்குள்ளும்!
தோலையுரித்துச் சோதனையிடும் படைவீரரிடமிருந்தும்!
நானே எரிந்த பல நாட்களிலும்!
அவற்றில் தீபடாமலே.!
அவமதிப்புகளின் கீழான !
நிலப்பரப்பில் !
இறுகிப்படிந்திருக்கும் மௌனத்திற்கிடையில்!
ஒரு சொட்டுத் துளி!
உடற்சாறு தேங்கிக் கிடந்தது!
வனப்பு மிக்கதொரு !
கடற்கரையும் !
காகங்கள் கரையும் நாட்களும் இருந்தன!
எனவும்!
ஒற்றையடிப்பாதைகளில்!
எறும்புகள் தம்பாட்டிலும் மனிதர்கள் தம்பாட்டிலும்!
போய்வரக்கூடிய காலமொன்று !
இருந்ததாயும்!
சொல்லிக்கொண்டு.!
இன்றோ!
தெருமுனையில் !
பெருமரத்தின் கீழே இருந்தது கோயில்!
நாயுறங்க.!
நாயினடியில் ஓலமிட்டவாறு!
என்னுடலும் !
அதன் வால் நீண்ட !
குருத்தெலும்பும்!
வழியற்றுச் செத்தான் ஒரு மனிதனென்று சொல்ல

உன் தனிமை

றஞ்சினி
நான் தனிய இருப்பதைப் !
பற்றி நீ !
கவலைப்படுவதாய் !
எனக்கு உன்துணை கட்டாயம் !
தேவையாக இருப்பதாய் !
ஏன்மேல் நிறையவே !
அனுதாபம் இருப்பதாய் அதை !
நான் அறியாமல் இருப்பதாய் !
இப்படி நிறையவே பேசினாய் !
இவை எனக்கு புதியவை இல்லை !
நண்பனே !
நான் சுதந்திரமாக இருப்பதற்கு காரணமே !
உன்துணை இல்லலாமல் இருப்பதுதான் !
இதை நீ அறிந்திருக்க ஞாயமில்லை !
இனியாவது !
உன் தனிமைபற்றிபப் பேசு !
பயப்படாமல் மனம் திறந்து . !

என் காதலர்

இர.விஷ்ணு
என் காதலர் கண்ணிலேயே
இருந்து கொண்டிருப்பதால்
நான் கண்ணுக்கு மை
தீட்டுவதைக் கூட
விட்டு விட்டேன் .....

என் என்றால்
மை தீட்டும் போது அவர்
மறைந்து விடுவாரோ
என எண்ணி .........

கையூட்டு!

ப.மதியழகன்
அரசு அலுவலகங்களில்!
கோப்புகள் இடம் மாறுவதற்குள்!
குதிரைக்கு கொம்பு முளைத்துவிடும்!
ஒரு ரப்பர் ஸ்டாம்புக்காக!
குடிமகனின் பாக்கெட்டில் உள்ளதை!
மொத்தமாக கறந்து கொண்டு!
தான் விடுவார்கள்!
உடைகளெல்லாம் பைகளாக!
இல்லாவிடில்!
குடிமக்கள் கொண்டுவந்து!
கொட்டுவதை!
அள்ளிப்போக முடியாது!
அரசு கருவூலம் கொடுக்கும்!
சம்பளம் போதாதென்று!
பொது மக்களின் வயிற்றெரிச்சலை!
கொட்டிக் கொள்வார்கள்!
தரகரின்றி நேரில்!
அணுக முடியாத!
அரசு அதிகாரிகளும்!
இருக்கத்தான் செய்கிறார்கள்!
லஞ்சம் கொடுத்து அரசு பணிக்கு!
வரும் போது கைகள் பரபரக்கும்

இலக்கு

ப.மதியழகன்
மரணமே இன்று வராதே!
முடிக்கப்பட வேண்டிய வேலைகள்!
நிறைய இருக்கின்றன!
சம்பளத் தேதியில் இறக்க!
யாராவது சம்மதிப்பார்களா!
கட்டப்பட்ட வீட்டில் குடிபுக!
ஆசையிருக்காதா!
தவழும் குழந்தை!
தத்தி நடப்பதை காணாமல்!
போய்விடத் தோன்றுமா!
மனிதனின் சராசரி வயதின்!
பாதியைக் கூட இன்னும் கடக்கவில்லை!
நரைமுடி கூட ஆங்காங்கே!
இன்னும் தோன்றவில்லை!
உறுப்புக்கள் எதுவும் செயலிழக்கவில்லை!
பார்வைத்திறனும் குறையவில்லை!
அன்பிற்கினியவர்கள் ஒவ்வொருவராய்!
காலனின் அம்பு பாய்ந்து!
வீழ்ந்த போது!
தெரிந்து கொண்டேன்!
எனக்குத் தான்!
குறி வைக்கிறார்களென்று.!

அவளுக்கென்று ஓர் மனம் !

ப.மதியழகன்
உனது புகைப்படத்தைக் காண்பித்து!
பிடித்திருக்கிறதா என்றார்கள்!
உனது குடும்பத்தைக் காண்பித்து!
ஒத்துவருமா என்றார்கள்!
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து!
பரவாயில்லையே என்றார்கள்!
உனது அழகை காண்பித்து!
கொடுத்து வைத்தவன் என்றார்கள்!
உனது பணிவைக் காண்பித்து!
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்!
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து!
போதுமா என்றார்கள்!
இவ்வளவு கேள்விகள்!
என்னைக் கேட்டார்களே!
என்னைப் பிடித்திருக்கிறதா என்று!
உன்னை கேட்டார்களா

அன்னை இட்ட தீ !

ப.மதியழகன்
மதத்தின் பெயரால் நடந்த சமர்களில்!
மண்ணில் உதிரம் சிந்தி!
மாண்டவர்கள் எத்தனை கோடி !
கிணற்றுத் தவளையாய்!
தாங்கள் சார்ந்துள்ள மதமெனும் கேணியே!
சமுத்திரத்தைவிடப் பெரியது - எனச் சவடால்பேசி!
உண்மைக் கடலைக் காணாது!
காணாமல் போனவர்கள்!
எத்தனை கோடி !
சத்தியத்தின் பொருட்டு!
பல இன்னல்களை அனுபவித்து!
உத்தமராய் ஒருவர் வாழ்ந்தாரென்று!
அவரைப் புகழ்ந்து!
அன்றாடம் பாக்கள் பாடிக்கொண்டிருப்பதை விட!
அந்த நேரத்தில்!
அவ்வாய்மையின் வழியே!
நம் வாழ்க்கைப் பாதையை!
அமைத்துக் கொண்டிருக்கின்றோமா-என!
எண்ணுபவர் எத்தனை பேர் !
நியாயத்தராசில் நிறுத்தால்!
தயை சிறிதுமின்றி!
சொர்க்கத்தை அடையும் பொருட்டு!
வெளிப்பூச்சாக செய்யப்படும் நற்காரியங்கள்,!
பகுத்தறிவால் விழிப்புணர்வை பரப்புவர்!
மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கு!
மனித நேயத்தோடு செய்யும் காரியம்!
சிறிதெனினும்!
அதற்கு ஈடாகுமா !
இன்னும் உங்களுக்கு!
மனிதர்கள்பால் பாகுபாடு தென்படுகிறதா!
அப்படியென்றால்!
மதமெனும் மூக்குக்கண்ணாடியை!
கழட்டிவைத்துவிட்டுப் பாருங்கள்!
உண்மையில் ஒரு தெய்வம்!
உன்னைப் பற்றிய நினைப்பிலேயே!
உறங்காமல் வீட்டில்!
தினம் உனது புகைப்படத்தை!
உச்சிமுகர்ந்து கொண்டிருக்க!
உயிர் தந்து, உண்டி கொடுத்து வளர்த்த!
உன் தாயைவிடவா!
உயர்ந்த தெய்வம் இத்தரணியிலிருக்கு?!

உன்னின் அறிமுகம்

பொன்னியின் செல்வன்
உதிரும் சருகுகள்!
சத்தமின்றி!
காற்றின் போக்கில்..!
விருட்சத்தின் வரலாற்றை சுமந்த படி..!
வார்த்தைகள் செதுக்கும்!
மனதிற்கு தெரியும்!
காற்றின் திசையில்!
பயணித்தல் .. வாழ்க்கையென...!
என்னின் வேர்களின்!
முடிச்சுகளில்!
இன்னும் மூச்சுவிடா..!
விருட்சங்கள்!
தூங்கிகொண்டிருகின்றன...!
பிரபஞ்ச வெளியில்!
முகவரி சொல்லா!
பயணம் ..!
விதைகளும் தூசிகளாகும்போது ....!
ஆயின், தூசிகள் இடம் சேர்ந்தால்!
தூண்களாகும்..!
அதுவரை!
எனது பயணத்தின்!
படிமானங்களாய்!
பயணம் செய்கிறேன்..!
காற்றின் திசையில்..!
காற்றின் வலு குறையின்!
விழுந்த இடத்தில்தான்!
உன்னின் அறிமுகம்