தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

மௌனித்ததாலே

பாண்டித்துரை

மௌனமான நானும்!
மௌனமான நீயும் !
மௌனித்ததாலே...!
உனதான திருமணமும் !
எனதான திருமணமும்!
சொல்லிக் கொள்ளாமல் !
நடந்தேறியது !

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

நான்

சாந்தி

போகும் வழியில் ஒரு பைத்தியக்காரன் !
பொறுமையாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான் !
சாய்ந்திருக்கும் சுவர்..அவன் முன்னே !
குவிந்திருக்கும் குப்பைகள் தவிற !
வேறொன்றுமில்லை அவனைச்சுற்றி !
இருந்தும் அவன் !
பொறுமையாக ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்... !
சிரிப்புத்தான் வந்தது !
காகிதங்களுடன் போராடும் என்னை அவன் !
ஞாபகப்படுத்தியபோதும்..ஏனோ !
எனக்கு சிரிப்புத்தான் வந்தது... !
-சாந்தி