தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இதற்குத்தானா?

மனுஷ்ய புத்திரன்
பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராததுபோல் போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னயல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு துரம் வந்தது?

உண்ணுதலின் துயரங்கள்

மனுஷ்ய புத்திரன்
ஒரு பட்டாம்பூச்சி விளையாட்டாக
ஒரு யானையை விழுங்க முயன்றது
எவ்வளவு விழுங்கிய பிறகும்
யானை அப்படியே வெளியே இருந்தது

ஒரு யானை பிடிவாதமாக
ஒரு பட்டாம்பூச்சியை
விழுங்க முயன்றது
விழுங்கிய பிறகு
தனக்குள் பட்டாம்பூச்சி
எங்கே இருக்கிறது என்று
யானையால் கண்டுபிடிக்கவே முடியவில்லை
பட்டாம்பூச்சியை விழுங்கினோமா இல்லையா
என்று யானை குழம்ப ஆரம்பித்தது

இந்த துயர நாடகத்திற்கு
முடிவு கட்ட
யானை தன்னைத் தானே விழுங்க முயன்றது
பட்டாம்பூச்சி தன்னையே தின்னத் தொடங்கியது

இன்னொருவரை
உண்பதைக் காட்டிலும்
தன்னைத் தானே உண்பது
எவ்வளவு பயங்கரமானது
என்பதை உணர்ந்துகொள்ள
அவற்றிற்கு அதிக நேரம் ஆகவில்லை

பிம்பங்களுக்கு அப்பால்

மனுஷ்ய புத்திரன்
மிகவும் களைத்துவிட்டீர்கள்
நீங்கள் வெறுக்கும் என் கசந்த பிம்பத்தை
என்னிடம் திருப்பிக் கொடுங்கள்

பதிலுக்கு நான்
என் நல்லுணர்ச்சிகளின்
இனிய பிம்பமொன்றை
மாற்றித் தருகிறேன்

பிம்பங்களுக்கு அப்பால்
உங்களுக்கு நானோ
எனக்கு நீங்களோ
யாருமே இல்லை

கொஞ்சம் அவகாசம் கொடு

மனுஷ்ய புத்திரன்
கொஞ்சம் அவகாசம் கொடு

வெய்யில் சற்றே தணியட்டும்
என் குழந்தைகள் வீடு திரும்பவேண்டும்
நான் என் காலணிகளை உரிய இடத்தில் வைத்துவிடுகிறேன்
இந்த அறை இவ்வளவு ஒழுங்கற்று இருக்கலாகாது
நான் ஒரு பழைய கடித்தை படிக்கவேண்டும்
ஒரு பழைய புகைப்படத்தை பாதுகாப்பாக ஒப்படைக்கவேண்டும்
என் நாயின் கண்களில் படரும் சந்தேகத்தைப்போக்கவேண்டும்
இறுதியாக எல்லாத் தடயங்களையும் அழித்துவிடவேண்டும்

கொஞ்சம் அவகாசம் கொடு.

குப்பத்துக் காதல்!

ஆர்.எஸ்.கலா, இலங்கை
கண்டாங்கி கட்டி!
வந்த பொண்ணு!
நான் உற்று!
நோக்கினேன்!
அவள் கண்ணை!
ஏறியது போதையடா!
இறங்கவே இல்லையடா!
மயங்கியே சாந்தேன்!
அவள் மடியினிலே..!
கூடை சுமக்கும்!
கூடாரப் பெண் தானே!
என்று இழக்காரமாக!
நின்று நோக்கினேன்!
அன்று வழுக்கி விழுந்தேன்!
அவள் நினைவினிலே!
இன்று......!
கொட்டகை வாசி தானே!
தொட்டுப்புட்டு விட்டு!
விடலாம் என்று!
கிட்ட நெருங்கிச் சென்றேன்!
சுட்டெரிக்கும் அவள் !
மூச்சுக் காற்றில் சிக்கித்!
தவித்தேன்...!
சத்தம் இன்றி!
சமாதானக் கொடி!
ஏற்ற நினைத்தேன்!
காதல் என்னும்!
வசனம் பதிவு செய்து!
அவளிடம் கொடுத்தேன்...!
மறுப்புக் காட்ட வில்லை!
வெறுக்கவும் இல்லை!
முகம் சிவக்கக் கண்டேன்!
கோபமா..வெட்கமா நான்!
அறியேன் இப்போது!
நான் நிட்கவா ஓட வா!
ஒன்றுமே புரியலயே..!
வெட்டிக் கொடுக்கும்!
மண்ணைக் கொண்டு!
கொட்டும் குப்பத்து!
வாணியே .. நான் கொடுப்பேன்!
நெற்றிக் குங்குமம் உன்னை!
அழைப்பேன் என் இல்லத்து!
ராணியாவே...!
கூட்டத்தைக் கூட்டாதே!
குடும்பத்தை அழைக்காதே!
காட்டிக் கொடுக்காதே கட்டில்!
இடுவேன் நான் சத்தியமாய்!
பத்தினியாய் உன்னை !
மெச்சுவேன் பத்திரமாய்...!
வெட்டருவாள் தேடாதே!
வெட்கம் கொண்டு ஓடாதே!
வெந்துபோய் இருக்கேன்!
நான் உன்னாலே...!
பட பட என்று உன்!
இமையை மூடி திறக்காதே!
வெட வெட என்று !
நடுங்குகின்றேன் நான்!
என் உள்ளே....!
அட கல கலவென அவள்!
சிரித்து விட்டாள் இனி!
மள மள வென்று வளரப் !
கோகின்றது என் காதல் மரம்!
குளு குளு என்று இப்போது

காவிக்காட்டுமிராண்டி!

ஆர்.எஸ்.கலா, இலங்கை
அகங்காரக் காரன் இவன்!
அவையடக்கம் நாவடக்கம்!
அறியாத மிருகம் இவன்...!
அன்பின் இலக்கணமாக!
வந்த புத்தர் வழி வந்த!
வம்புக் காரன் இவன்..!
மரியாதை தெரியாத!
மனிதன் இவன்!
பல இன மகத்துவம்!
புரியாத பிக்கு இவன்..!
உலக மக்கள் !
உன்னதமாக!
உணரும் ஒரு!
மகானை எழுந்து!
வரவேற்கவும்!
உற்று நோக்கி !
உரையாடவும்!
வேண்டும் என்பதே!
புரியாத மடையன் இவன்..!
பரம்பரை திமிரும்!
மதப் பிரிவினையும்!
மறைந்தே இருக்குது!
காவி உடைக்குள்ளே..!
கருணை நிறைந்த!
உள்ளம் தேடி வந்து!
இன் முகத்துடன்!
உரையாடுகின்றதே!
கருணையே இல்லாத!
சைத்தான் கடு கடுப்பாக!
அமர்ந்திருக்கின்றதே..!
மூன்று மதமும்!
முக் கடல் போல்!
சங்கமித்த இடத்தில்!
இவன் மட்டும்!
மூதேவி போல்!
திரும்பி இருப்பதும் ஏனோ..!
இன வெறி பிடித்த!
இவனுக்கு இணை அடி!
கொடுக்கத்தேவை !
ஒரு கரம்..!
ஆட்டுக் கூட்டத்தின்!
மத்தியிலே அமர்ந்து!
இருக்கின்றது ஒரு!
குள்ள நரி காட்டுப்!
பன்றியாட்டம்!
கபட எண்ணத்தைப்!
பூட்டி வைத்தபடியே!
இவன் உள்ளத்திலே...!
அடங்கா மாட்டை!
அடித்து அடக்குவது போல்!
சாட்டையோடு வர வேண்டும்!
நெஞ்சை நிமிர்த்தி!
சேவகன் ஒருவன்...!
சேட்டு இல்லா இந்தச்!
சிடுமூஞ்சிக்குசொடுக்கும்!
நொடியில் கொடுக்க!
வேண்டும் பல அடிகள்..!
நீ அடங்கும் காலம் வரும்!
வரும் வேளையிலே!
நடுங்கும் உன் கால்களடா..!
ஏற்ற இறக்கம்!
தெரியாத ஏமாளியே!
போற்றப்பட வேண்டிய!
ஒரு மனிதனை அவமதித்த!
கோமாளியே....!
காலியாகப் போகும்!
நாழிகை எப்போ எப்போ!
என்று நினைத்த படியே!
கலியுகக்கடவுளாய்!
ஆட்சி செய்யடா...!
வெல்லப் போவது!
ஒரு காலம் நல்ல!
உள்ளமடா கள்ளன்!
உன்னை தள்ளப் போகிறது!
கம்பி அறைக்குள்ளேயடா...!

உடையும் உறவு கண்ணாடி

ச.முருகன்
அழகை காட்டிய கண்ணாடி
இன்று அழுகை தருகிறது!!!!
அன்பை காட்டிய என் பிம்பங்கள்
இன்று அனலை கக்குகின்றது...
விடியலை நோக்கிய விரல்கள்
இன்று விரிசலை நோக்கி...
உடைக்க மனமில்லை ..!!!
ஒட்ட வைக்க ஒன்றுமில்லை...
சிலந்தி வலையில் சிக்கிய
சிற்றெறும்பாய் நிற்கின்றனர்!!!!

கவிஞன்

செ.இராமதனவந்தினி
ஒரு கவிஞன் தனக்காக மட்டும்
யோசிப்பதில்லை
சக இதயத்தின் குமுறல்களுக்கும்
நிறைவேறா ஆசைகளுக்கும்
தன்‌ கவிதை தீணியாகிப் போகட்டும்
என்பதற்கும் சேர்த்து தான்
யோசிக்கிறான்..
சில சமயம் அவனுக்காகவும்
வாழ்ந்தும் போகிறான்
இருப்பினும் அவன் ஒருமையிலே
விமர்சிக்கப் படுகிறான்
ஒருமையிலே ஆரதிக்கப்படுகிறான்
ஒருமையில் சில நேரம் நசுக்கவும் படுகிறான்...

பாதி

செ.இராமதனவந்தினி
என்னில் உன்னை நான்
பாதியாக தறித்ததால் தான் என்னவோ
நீ என்னை நீங்கும் போது
பாதியாக கிழிக்கப்பட்டு
ஊசியின் முனையில்
ஒரு தையலை எதிர்ப்பார்த்து
நின்று கொண்டிருக்கிறேன் போலும்

ஓட்டைக் கூரைகள்!

முல்லைக்கேசன்
நேற்று என் வீட்டிற்கு திடீரென!
வந்த உன்னை!
சாவகாசமாய் உபசரிக்க!
கூச்சப்பட்ட நான்!
என்னை மண் சுவருக்கு பின்னும்!
வந்த உன்னை!
மனச்சுவருக்கு முன்னும்!
மறைந்து கொண்டு புழுங்கித்!
தவித்தேன்!
நீ வரும் போதே!
துணைக்கு இன்னொன்றையும்!
அழைத்து வந்து விட்டாய்!
உன் கருங்கூந்தல் லயிப்பிற்காய்!
கவர்ந்து விட்ட கார்!
மேகங்கள்!
தன்னினமென்று கூடி வந்ததால்....!!
உன்னையும் தன்னையும்!
ஒப்புக்கு வைத்து!
பெற்ற பெறு பேறு வந்ததால்!
அழகில் தோற்றுவிட்ட!
அத்தனையும் அல்லோல கல்லோலப் பட்டதால்!
காருக்கு வேர்க்கத் தொடங்கி!
அழுகையில்!
முடிந்தது!
அவள் என் கையில், என் வாழ்க்கையில்!
முடிந்தது!
சூரியக் கதிர்களுக்காய்!
கூரைக் கிடுகுகளின் வரிகளும், மேய்ச்சலின்!
இடைவெளிகளும்!
விலக்கி விடப் பட்டு!
தினம்!
அவ் ஒளியிலேயே ஜீவனத்திற்கு!
தீனி போட்டுக்!
கொண்டிருந்தது!
என் ஓலை வீட்டுக் கூரைகள் என்று!
உனக்குத் தெரியாது தானே !!
நானும் உனக்குச்!
சொன்னதில்லை!
மண்சுவர்களின் பின் மனங்களைப்!
புதைத்துக் மழுங்கிய!
சிரிப்புடன் - நான்!
தளம்பியது இதற்காக அல்ல!
கால போகத்திற்கு!
வீசிய கச்சான் காற்று கட்டி!
இழுத்து வந்த!
சோளக் காதிர்களைப் போல் என்!
மனைக்கு திடீர் அனுமதியை!
திருடிக் கொண்ட!
உன்னை பாங்காய் உபசரிப்பதா? இல்லை!
சிந்தும் மழையில்!
சிதைந்து கொண்டிருக்கும்!
மண் சுவர்களுக்கு!
மாங்கல்யம் அறுத்துக் கொண்டிருக்கும்!
ஓட்டைக் கூரைகளுக்கு!
அலுமினியப் பானைகளை அங்காங்கே!
அடுக்குவதா?!
என்பதுதான்