தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அபலைகள்!

முல்லைக்கேசன்
சிந்து கின்ற குருதியும் சிதறிப் போன!
வாழ்க்கையும்!
அஞ்சும் அவலமும்!
அலறும் உறவுகளும்!
அடிவயிற்றைப் பிடித்து!
கெஞ்சுகின்ற ஓலம்!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...!!
அவலைக் குரல்களெலாம் ரணங்களை!
இழந்து!
யுகங்களைக் கடந்து!
அந்தி அந்தியாய்!
சிந்திக் கொண்ட பிரளயத்!
துன்பங்களும்!
அடிமந்தில் ஓங்கி அலறுகிறதே!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...!!
ஆழப் பதிந்த ஆற்றொணாத்!
துன்பத்தை!
அள்ளி எறிந்து எறிந்தே -எம்!
கைகளின் மூட்டுக்கள் தேய்ந்து!
விட்ட வலுவிழந்த!
அங்கவீனர்கள் நாம்!
ஜயோ!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...! !
வரலாற்று ஏடுகளில் கடும் இரத்தினச்!
சுருக்கங்களாய்!
பதிந்து விட்ட - எம்!
இரத்த சரித்திரங்களை!
அழிப்பத்ற்காய்!
கண்ணீரை அள்ளி இறைத்து இறைத்தே!
உவர் நீரில்!
மூழ்கிவிட்ட!
கண்கணிகள் நாம்!
ஜயோ!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...!!

காற்றுக்கு ஒரு விண்ணப்பம்

யுவ அதிதி
காற்றே, என்னை தழுவிவிட்டு செல்வாயாக
சுக நித்திரையில் என்னை ஆழ்த்தி விடுவாயாக
உயிர் கலையாமலிருக்க, எண்ணங்கள் சிதறாமலிருக்க
மண்வாசனையில் மனதை கலந்து செல்வாயாக
இன்ப செப்பனங்களின் வழியே போவாயாக
கருத்த மேகங்களின் இடையிலே பயனித்து
என்னை மீண்டும் உயிர்ப்பித்து தருவாயாக
பச்சை இலைகளுக்கு நடுவே சலசலத்து வந்து
பின் தென்றலோசையில் நீ எனக்கு தாலாட்டு பாடி
நானுறங்க சாய்ந்தாடும் தொட்டிலாய் இருப்பாயாக.

செவிலியர்

செ.சுகுமார்
வெண்ணிறாடை அணிந்த
விதவைக்கு திருமணம்..
மணமகன் மனிதாபிமானம்
கொண்டவன் என்றென்னினேன்..
பிறகே தெரிந்தது
அவள் அரசு
செவிலியர் என்று..!

காவேரி

செ.சுகுமார்
தவழ்ந்து கொண்டு ஓடினேன்..
தமிழகத்தை காண..
கட்டுண்டேன் கர்நாடகத்தில்..!

தண்ணீர்

செ.சுகுமார்
அடிக்க..அடிக்க..
வரவேயில்லை கண்ணீர்..
அடி பம்பில்(குழாயில்)..!

இயற்கையுடன் கூடி இருப்போம்..!!

எசேக்கியல் காளியப்பன்
{கும்மிடிப்பூண்டியில் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்க ரூ,330 கோடி அனுமதி-செய்தி}!
!
நீர்வருமப் பாதைகளைத் தூர்வாரி,!
நிலம்பிடித்த பேதைகளை உடன்வாரிப்!
பேரளவில் வீணாகும் மழைநீரைப்!
பிடிப்பதற்கு நீர்த்தேக்கம் உருவாக்கி!
ஊர்பிழைக்க வழிசெய்தால் உதவிடுவீர்!!
ஒழுங்காக அதைக்காக்க முன்வருவீர்!!
தேரிழுக்க வருபவர்போல் திட்டமுடன்!
தேர்நிலைக்கு வருவதற்கே உதவிடுவீர்!!
சீருடன்நாம் வாழ்வதற்கு நீர்வேண்டும்;!
சீறிவரும் மழைநீர்க்கும் புகல்வேண்டும்!!
தூரெடுக்கும் பணியினையே இலவசமாய்த்!
தொடங்கிடவா யாருமுமை அழைக்கிறர்கள்!!
ஏரிகளைக் காப்பதற்கே எழுந்திடுவீர்!!
ஏரிகளில் வீடெடுக்க மறுத்திடுவீர்!!
மாறிவருங் காலத்தை உணர்ந்திடுவீர்!!
மக்களது நலமெண்ணி மாறிடுவீர்!!
!
(வேறு)!
சாக்கடைநீர் சுத்தமாக்கப் பட்ட பின்பே!
சார்ந்துள்ள ஏரிகளில் கலக்க வேண்டும்!!
ஊர்க்கடையில் இச்சுத்தம் செய்தல் வேண்டி!
ஒழுங்கான நிலையங்கள் அமைய வேண்டும்!!
போர்க்கொடிகொண் டேரிகளைப் புதுக்க வேண்டும்!!
பொன்னான நீர்தேக்கிப் பொலிய வேண்டும்!!
நீர்க்குறையால் அண்டைமா நிலங்கள் பக்கம்!
நின்றுகை ஏந்தாதே நிமிர வேண்டும்!!
(வேறு)!
குப்பைகொட்டும் இடமல்ல ஏரி!!
குடிவாழும் ஆதாரம் ஏரி!!
‘கப்’படிக்கும் சாக்கடையா ஏரி!!
கழிவுகளின் சேரிடமா ஏரி!!
துப்புரவின் அடையாளம் ஏரி!!
தூரெடுக்க உதவுவதும் நீதி!!
இப்பொழுதே இயற்கையுடன் கூடி!
இருப்பதற்குத் தொடங்கிடுவோம், நாடி

பிறப்பித்தாள் தனையென்றும் மறக்காதே..!

எசேக்கியல் காளியப்பன்
மறக்காதே இமைப்பொழுதும்!
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;!
இறப்புள்ளும் உனைநினைத்தே!
இருப்பவளைத் தவிப்பவளைச்!
சிறப்புடனே வைப்பதுதான்!
சீருனக்கு மறவாதே!!
வான்தாங்கு மழைபோல!
வயிற்றுக்குள் வளர்த்தவளைத்!
தான் தாங்கி நிற்கையிலே!
தனைஉதைக்கச் சிரித்தவளை!
நீதூங்க விழித்தவளை,!
நீஏங்க அழுதவளை ,!
உன்,உயர்வில் மகிழ்ந்தவளை!
உன்,தாழ்வில் அணைத்தவளை!
உச்சிதனை முகந்தவளை!
உன்,ஊக்கம் வளர்த்தவளை!
எத்தனைதான் துயர்வரினும்!
ஏற்றவளாய், அரசுகளின்!
தொட்டிலிலே உனைக்கொண்டு!
இட்டுவிடாக் கையவளை,!
மறக்காதே இமைப்பொழுதும்!
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;!
விண்காட்டி மதிகாட்டி!
வெறுஞ்சோறு தந்தவளைக்!
கண்ணீரில் மூழ்கவிட்டுக்!
கையாட்டிச் செல்வாயோ?!
கடல்கடந்து போயுமவள்!
கண்கடந்து போவாயோ?!
காசுபணம் பெரிதாமோ?!
ஆசிரமம் அவளிடமோ?!
இறந்தவளைக் காண்பதற்குப்!
பறந்துவரல் ஆகாதோ?!
மணமென்று பூதனக்குள்!
மறைத்துவைத்துக் காத்தவளைப்!
பிணம்என்றும் ஒதுக்கிடவோ?!
பணமனுப்பி மறந்திடவோ?!
இறப்புள்ளும் உனைநினைத்தே!
இருந்தவளைத் தவித்தவளை!
மறக்காதே இமைப்பொழுதும்!!
சிறப்புனக்கு எதுவென்று!
சிந்திக்க மறவாதே

சரித்திரத்தின் முதலெழுத்து!

எசேக்கியல் காளியப்பன்
ஆதிரையில் வந்தவளே!!
ஆண்டவனின் மறுவுருவே!!
மார்கழியில் பிறந்தவளே!!
மார்கொடுத்து வளர்த்தவளே!!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!!
தேவனவன் திருக்கொடையே!!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!!
பேறெனவே நெகிழ்ந்தவளே!!
சோர்வுடனே தானிருந்தும்!
சுகமெனக்கு விழைந்தவளே!!
நீர்குடித்துப் பாற்சோறு!
நிதமெனக்குத் தந்தவளே!!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்!
செய்தபிழை மறந்தவளே!!
யார்கழித்துப் பேசிடினும்!
எனைஉயர்த்தி நின்றவளே!!
வேர்எனவே எனைப்பிடித்து!
வெளித்தெரியா திருப்பவளே!!
ஊர்தெரியச் சண்முகமாய்!
உள்ளழுது வாழ்பவளே!!
சார்ந்திருக்க மறுத்தவனின்!
சரித்திரத்தின் முதலெழுத்தே!!
தீர்ந்தெனது நாள்முடிந்து!
தேவனிடம் சேருகையில்!
நேர்ந்திடப்போம் தண்டனையை!
நீகுறைக்க வேண்டம்மா

சிரிக்கும் சிலை

கலாதர்.அ
உம் சினத்தை
பலத்தினால் செதுக்கினாய்..
யாமோ சிரிக்கும் சிலையானோம்.

தொடரும் உரையாடல்

இரா. பி
மறுபடியும் உயிர்த்தெழுந்து!
உணர்வுகளின் ஒரு பகுதியில், உறவுகளுடன்!
ஒரு உரையாடல் கொண்ட!
கண நேரத்தில்!
காலன் தவறை உணர!
பலியான கனவு !
தொலைந்தது எதுவோ!
தொலைத்தவர் எவ்வழியோ!
வாழ்க்கையை தொலைக்க முயன்று!
தொலைந்த நிழல் !
தொலைந்த தோற்றம் தேடி!
தொடர்ச்சி, தோல்வி அல்ல!
தொடரும் பயணமே முடிவு !
உண்மை தெளிய, எதுவும் அன்றி பொய்யாக!
விழிப்பின் விளிம்பில் ஒரு உரையாடல்!
எவரிடமோ என்பதல்லாமல், பயணங்கள் தெளிவற்று!
வெளிச்சத்தில் நிலையற்று, இருட்டின் தேடலில்!
மறந்து போன, மறைக்க நினைத்த!
வாழ்வின் முடிவில் மரணம்