தூரமும் பக்கம்தான் - சத்தி சக்திதாசன்

Photo by Jayden Collier on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
தூரம் கொஞ்சம்தான் !
கூட வா நண்பனே ! !
காலங்கள் பல நாம் இணைந்தே வந்தோம் !
கண்டது பாதையில் கற்களும் , முட்களுமே ! !
அதோ பார் ! !
பசுந்தரையன்று பச்சையாய் நம்முன்னே !
தூரம் கொஞ்சம்தான் கூட வா நண்பனே ! !
துன்பத்திலே பங்கெடுத்தாய் !
இன்பம் னரம் ஆதிகமில்லை !
இப்போது ஏன் பாதை மாற்றம் !
தூரம் கொஞ்சம்தான் !
கூட வா நண்பனே ! !
வாடிநின்றவேளை பசியால் , நாம் !
புசித்திருந்தது நமது நட்பையே !
வயிறார உண்ணும் ஓர் வசதி !
வரும் வேளை ஏன் தோழா !
வழிமாறப்போகிறேன் என்கிறாய் ? !
எதிர்காலம் ஒன்று வெளிச்சமாய் தெரிகிறதே !
தூரம் அதிகமில்லை என்னோடு கூட வா ! !
பாசம் எனும் விலங்கினால் பிணைத்து !
வாசம் அற்ற !
வாழ்க்கையில் காலம் எனைத் தள்ளி விட்ட போது !
வழித்துணையாய் வந்தவனே !
விடுதலை எனும் ஊரை நெருங்கி விட்டோம் !
விரக்தியோடு ஏன் இன்று !
விடைபெற்றுப் போகின்றாய் னரம் !
கொஞ்சம்தான் கூட வா ! !
நட்புக்கோர் இலக்கணமானவனே !
நன்றியை நான் செலுத்தும் முன்னே !
நெஞ்சத்திரையில் ஏன் உந்தன் காட்சியை !
நிறைவு செய்ய துடிக்கின்றாய் ? !
தொடர்ந்து செல்வோம் வா தோழனே !
விடுதலைக் காற்றை சுவாசித்துக் கொள்வோம் !
வேதனைகளை விற்று கொஞ்சம் சாதனைகளை !
வாங்கிக் கொள்வோம். !
நட்பெனும் தோணியில் ஆழ்கடலைத் !
தளும்பாது தாண்டி விட்டோம் !
தயங்காமல் தரை மட்டும் கூட வா
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.