ஒன்று சொல்வேன் - சத்தி சக்திதாசன்

Photo by Sajad Nori on Unsplash

சக்தி சக்திதாசன் !
!
நெஞ்சினில் உனக்கு !
கனப்பது என்ன ? !
அன்புச்சுமையோ ? !
நேசத்தைக் கொடுத்து !
பாசத்தில் திளைத்து !
பாவம் ! !
பாவி என பெயர் கேட்டு !
பரிதவிக்கும் தோழனே ! !
ஒன்று சொல்வேன் கேளாய் ! !
ரணமான உள்ளத்தில் இன்றும் பாச !
ரதம் ஓட்டும் உன்னெஞ்சம் !
நானறிவேன் கலங்காதே ! !
உண்மையைத் தான் சொன்னாய் !
உறவைத்தான் மதித்தாய் ! !
கேட்பவன் மனதை !
சந்தேகத் திரை கொண்டு !
மூடி விட்டான் ! !
தவறு உன்னதல்ல !
குருட்டுக் கண்களால் !
ரசிக்கப்படாத ஓவியம் நீ ! !
தோழா ! !
ஒன்று சொல்வேன் கேளாய் ! !
ஓசையற்ற உன் இதய !
ஓலத்தை நானறிவேன் !
சிலநேரம் உன் காலம் முடிந்து விடும் !
சந்தேகம் அந்நேரம் விலகி விடும் !
சதிகாரன் நீயல்ல என !
சத்தியமாய் யாபேர்க்கும் புரிந்துவிடும் !
அப்போது வீசும் தென்றலிலே !
அன்புள்ளம் கொண்டவன் உன் !
அழியாத நினைவுகள் கலந்திருக்கும் !
அது வரை நண்பா ! !
ஒன்று சொல்வேன் கேளாய் ! !
உனை அறிந்த !
ஒருவனாய் நானுண்டு கலங்காதே
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.