அவள் - சத்தி சக்திதாசன்

Photo by Pramod Tiwari on Unsplash

மனந்தனிலே காதலாய் மலா¢ந்தாள் !
மலர்களிலே முல்லையாய் மணந்தாள் !
நினைவினிலே தேன்சுவையாய் இனித்தாள் !
நீங்காமல் உள்ளமெல்லாம் நிறைந்தாள் !
கனவினிலே கலா¢ கலராய் பறந்தாள் !
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள !
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள் !
செவ்விதழை தாமரையாய் விரித்தாள் !
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள் !
முத்தமிழால் கவிமழை பொழிந்தாள் !
எனக்கெனவே இவ்வுலகில் உதித்தாள் !
என்னுயிரில் சரிபாதி எடுத்தாள் !
அவனியிலே மறுபிறவி இருந்தால் !
அவளுடனே வாழும் வரம் அளித்தாள் !
உள்ளத்திலே அவளெண்ணம் அளித்த !
சுகத்தால் !
உலைக்கும் துயரமெல்லாம் மனதினின்றும் !
கழித்தாள் !
வாழ்வினிலே நானென்றும் மணந்தால் !
வஞ்சியன்றி வேறோருத்தி கிடையாள்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.