விரிகின்ற தாமரையோ! - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

நித்தமொரு மாலையிலே!
முத்தமிடும் வேளையிலே!
சத்தமின்றித் தென்றலது!
யுத்தமொன்று புரியுதன்றோ!
மலரொன்றின் ஏக்கத்திலே!
புலர்கின்ற மாலையிலே!
துலர்கின்ற இன்பத்தினை!
உணர்கின்ற தாக்கமது!
இயற்கையின் கானத்தில்!
கேட்கின்ற ராகத்தில்!
பிறக்கின்ற சாரத்தில்!
சுரக்கின்ற நாதமழை!
நினக்கின்ற வேளையிலே!
நனைக்கின்ற நினவுமழை!
கனக்கின்ற சுமைகளெல்லாம்!
மறக்கின்ற கோலமது!
சிதறுமந்த எண்ணத்துளிகள்!
சேர்ந்து ஒரு குட்டையாகி!
மலர்கின்ற கவிதையது அதிலே!
விரிகின்ற தாமரையோ !
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.