தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அணையா தீபம் - கேணல் கிட்டு

வித்யாசாகர்
உயிரின் அடிநாதத்தில் எழுகிறது!
உனக்கான கூக்குரல் -!
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை!
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;!
தோல்வி நெருங்கிடாத உன் !
ராஜா பாட்டையில் -!
ஒரு வெற்றி குறுக்கிட்டு!
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;!
எதிரியின் உறக்கத்திலும் -!
உயிர் தைக்கும் மரணபயத்தை !
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் - அதை!
காலம் தின்று வரலாறு பேசுகிறதே - வருத்தமில்லையா;!
இரண்டில் ஒரு கால் இழந்தும் !
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி!
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை!
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???!
இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு!
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;!
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் -!
உன் நினைவுகளால் உன்னை -!
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!!
கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்!
வரலாற்றில் இருக்கட்டும்;!
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்!
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;!
ஒரு சபதம் புரி;!
என்று வரை ஈழ காற்று வீசுமோ!
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ!
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ!
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ!
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே!
உயிர் பூண்டிருக்கும்;!
உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்!
சொட்டிக் கொண்டே இருக்கும்

சராஜிவோவில் கொல்லப்பட்ட

நிர்வாணி
“சராஜிவோ“ வில் கொல்லப்பட்ட !
காதலர்களுக்காக இவர் அழுகிறார் !
கவிதை எழுதுகிறார் !
இவர் வாழுகின்ற இதே தளத்தில் !
என் மக்கள் கொல்லப் படும்போது !
ஆனந்தமாய் ”பெரேரா” கொண்டாடுகிறார் !
ஏன் ? !
இறந்து போனவரெல்லாம் மனிதராகத் !
தெரியவில்லையா ? !
தமிழரென்பதால் மனிதரில்லையா ? !
இன்று புரிகிறது !
எப்போதோ எங்களின் பழசுகள் சொன்னது !
இக்கரையில் ஏதோவொன்றுக்கு !
அக்கரை பச்சையாம்

பறந்து போவதில்லை

நட்சத்ரவாசி
அடித்து துவைக்கும்!
பெண்களை!
எதிரொலி!
எழுப்பி!
நகைக்கிறாயே!
உன் சப்தத்தின்!
கூடு எங்கே!
திறந்து காட்டு!
**!
பூக்களைக் கொய்யும்!
சிறுமிகளை கவனியுங்கள்!
அவர்களின் கொய்தலுக்கும்!
சேகரிப்பிற்க்கும் இடையே!
எத்தனை சிரிப்புகள்!
யாராவது சொல்லியிருக்கவேண்டும்!
மறு நாளும் சிரிப்பொலிக்காகவே!
பூத்து குலுங்கும்!
மரத்தின் காத்திருப்பை!
**!
மழை பெய்து ஓய்ந்தாலும்!
வெள்ளம் கட்டி கிடக்கும்!
முற்றம் மாத்திரம்!
மழையை தானோ!
ஞாபக படுத்துகிறது!
வெறுங்கல்லோ!
மழையில் அடித்து!
வரப்பட்டதோ!
பூமியிழகி மேலெழுந்ததோ!
முற்றத்தை பெருக்காத!
போதும்!
முற்றத்தை யன்றோ!
பார்க்க தோன்றுகிறது!
**!
எழுதி எழுதி களைத்தாயோ!
என்று கேட்குமட்டும்!
ஆன உனக்கு!
நீண்ட நெடிய!
ஒரு இருப்பு!
ஆகவே ஆகாதடி!
கிளியே!
**!
பழைய கல்மண்டபத்தின்!
தூணிலிருக்கும்!
நாட்டிய மங்கை!
தீராத நடனத்தை!
முடிக்க கூடாதோ!
காலம் முடித்து!
வைக்கும்!
என்றொரு!
யோசனையோ?

இன்னும் எத்தனை காலம்

நிர்வாணி
தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில்!
என் மனமும் உறைந்ததுவோ!
அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த!
சிறுவனுக்குள் பூத்திருந்த வண்ணமலர்கள்!
இந்திய நாட்டின் கோரவெயிலில்!
கருகியதோ!
மாறுகின்ற சூழலில்!
மாறுபட்ட மனிதனாய்!
இன்னும் எத்தனைகாலம்!
எனக்குள் நானாக நான்

இந்த ஜென்மம்

விஷ்ணு
பதில்கள்!
பல இருந்தும் !
மொழிகளின்றி!
ஊனமாகிவிட்ட!
கேள்விகள் !
மீட்ட துடித்த!
விரல்களையே!
காயமாக்கிவிட்டு!
கண்ணீர்விடும்!
வீணை நரம்புகள் !
இதயத்தில் தங்கி!
வெளிவரா!
ஆசைகளின் !
அன்றாட அவலங்கள் !
தோல்வி என!
தெரியாமல்!
தொடர்ந்து!
தீக்கிரையாகும் !
விட்டில் பூச்சியின்!
விளக்கு காதலாய் !
இந்த ஜென்மமும் !
நகர்கின்ற!
பரிதாப நாட்களும் !
!
- விஷ்ணு !
!
நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன்

கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்

வித்யாசாகர்
கடவுளை கைவிடுங்கள்!
வெறும் பூசைக்கும்!
பண்டிகைக்குமானக் கடவுளை!
கொஞ்சமேனும் கைவிடுங்கள்;!
கேட்டுத் தராத!
கண்டும் காணாத!
காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள்!
நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்;!
தீயோர் குற்றம்!
தெருவெல்லாம் இருக்க!
நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க!
நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள்!
நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்;!
கோவிலில் கற்பழிப்பு!
தேவாலையத்தில் கொலை!
மசூதியில் மதச்சண்டை!
உள்ளே சாமி வெளியே பிச்சை!
மரணமெங்கும் அநீதி!
மாசு அறுக்காதக் கடவுளிங்கே யாருக்கு வேண்டும்?!
வேண்டாம் கைவிடுங்கள்;!
காசு தேவை!
வீடு தேவை!
சொத்து தேவை!
வேலை தேவை!
வசதி தேவை!
பொண்ணு தேவை!
ஏன், அடுத்தவன் பொண்டாட்டியை காதலிச்சாக் கூட!
அதுக்கும் கடவுள்தான் தேவைன்னா!
பிறகெகெதற்கு கடவுள் - கண்மூடி விட்டுவிடுங்கள்;!
நீங்கள் உண்டியலில் பணம் போடவும்!
தலைக்கு மொட்டை இடவும்!
நிம்மதிக்கு ஆடு வெட்டவும்!
தன்னம்பிக்கையில் நெருப்பு மிதிக்கவும்!
சீலர்கள் வணங்கும் கடவுளை!
சொந்தக்காலில் மிதிப்பதைவிட - பாவம் போகட்டும்!
கைவிட்டுவிடுங்கள் அந்த!
சுயநலக் கடவுளை;!
உங்களுக்கு முதலில்!
கடவுள் புரியட்டும்,!
கடவுளை காட்சியாக்கிய படி!
வாழப் புரியட்டும்,!
கடவுளைக் காட்டும் மதத்தின் சாரமும்!
மதவழி காணத்தகும் கடவுளின் சாராம்சங்களும்!
ஏதேதென்றும்!
எதற்கென்றும் புரியட்டும்,!
கைதொழும் மனதிற்குள்!
கடவுள் யாதுமாய்!
எங்கும் நிறைந்த சத்தியமாய் உள்ளதை!
விருப்புவெறுப்பின்றி அறியும் வரை!
கடவுளை!
கைவிட்டுவிடுங்கள்;!
கையேந்தியதும்!
பிச்சைப்போடுவது கடவுளின்!
வேலையல்ல,!
பிச்சை விடுபட இச்சை அறுபட!
ஒருமுகப்பட்டு உயிர்மூச்சு வழியே!
உள்நின்றுப் பார்ப்பதில் -!
கடவுள் ஏதென்றுப் புரியும்,!
அது சமதர்மமாகப் புரியாதவரை!
கைவிட்டுவுடுங்கள்!
நீங்கள் சண்டைக்கும் சாட்சிக்கும்!
வெறும் -!
கற்களாக மட்டும் வைத்திருக்கும்!
கடவுள்களை!!!

ஊர் கூடி... வாய்ப்பு

ஜெ.நம்பிராஜன்
01.!
ஊர் கூடி...!
--------------!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!
உறுப்புக்கள் சிதறிக் கிடக்க!
கேட்பார் எவருமின்றி!
கடற்கரையோரம்!
அனாதைப் பிணமாய்!
பிள்ளையார்...!
விநாயகர் சதுர்த்தி!
கொண்டாட்டங்களுக்குப் பிறகு!
02.!
வாய்ப்பு!
---------!
தயாராகி விட்டார்கள்!
சிறுவர்கள் பிச்சையெடுப்பதற்கும்!
இளைஞர்கள் வசூல் வேட்டைக்கும்!
அரசியல்வாதிகள் சர்ச்சைகளுக்கும்...!
விநாயகர் சதுர்த்தி நெருங்குகிறது!
-ஜெ.நம்பிராஜன்

மரணங்கள்.. அம்மாயெனும்

வித்யாசாகர்
மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக.. அம்மாயெனும் தூரிகையே!
!
01.!
மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக!
----------------------------------------------------------!
குருதி வடிக்கும் கண்களின்!
வருத்தம் புரியா உலகமிது;!
நின்று யோசித்து நிமிர்கையில் – காலம்!
அதோ எங்கோ போகிறதே….!!!
சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு!
ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா?!
சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்!
பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ?!
சொல்லி அடித்த பரம்பரைதான்!
புது ரத்தம் தேடி – அலைகிறதோ;!
உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்!
சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!!!
ஐயோ; மரம் கூட ஆயுதமானது!
இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,!
கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்!
எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!!!
இறையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய்!
நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்!
உனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்!
உன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;!
கருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்!
செஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை!
மாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்!
எத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்??!!!
உலகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி!
இத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது!
இப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே!
இத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா????!
இல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை!
அநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,!
கடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்!
கண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்!!!
02.!
அம்மாயெனும் தூரிகையே!
--------------------------------------!
என் வாழ்வின் ஓவியத்தை!
வரையும் தூரிகையே -!
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்!
அழகுடன் மின்னுபவன் நான்;!
பாட்டின் ஜதிபோல!
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே - உன்!
அசைவில் மட்டுமே அசைந்து -!
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;!
நடைபாதையின் முட்களை மிதித்து - என்!
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன - அர்ப்பணமே!
உன் அன்பிற்கு - அன்றும் இன்றும்!
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!!
உண்மையில், காற்றின் சப்தத்தை!
இசையாக்கிக் கொடுத்த ஒரு!
யாழின் பெருமை -!
உன்னையே சாரும் அம்மா!!
இனியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்!
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்!
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு!
நான் - உனக்கு மட்டுமே பிள்ளையாக - பிறப்பேனம்மா

எதைச் சொல்ல

ஆ.மணவழகன்
புளிக் குழம்போடு..!
அரைத்த கேழ்வரகின்!
ஆவிபறக்கும் உருண்டை!!
இளம் முருங்கைக்கீரை!
கூட்டோடு..!
இடித்த கம்பஞ் சோறு!!
புளிச்சக்கீரையோடு..!
புதுச் சோளச் சோற்றுக்!
கவளம்!!
இம்முறையேனும்!
ஆக்கச்சொல்லி!
அம்மாவிடம் கேட்க வேண்டும்!!
ஊர் கிளம்பும்!
ஒருவாரம் முன்பே - என்!
ஏளனப் பார்வைக்கு இலக்காகும்..!
உயிர்க்கொல்லிப் பொடிகளால்!
உருவாகும் சாம்பாரும்!!
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட!
கடையரிசி சோறும்!!
'புள்ளைங்க வந்தா மட்டுந்தான்!
நல்ல சோறு சாப்பிட முடியுது'!!
அப்பா சான்றிதழ் தருவார்...!
பார்த்துப் பார்த்து!
அம்மா சமைத்த!
அரிசி சோற்றுக்கும்!!
ஆறேழு பொடிப்போட்ட!
குழம்புக்கும்!!
இரைப்பைத் தொடாமலே!
செரிக்கும்!
தொண்டைக் குழியில்!
உருட்டி வைத்த - என்!
களி, கம்பஞ்சோற்று ஆசை!!
***!
- ஆ.மணவழகன்

எமது தேசம்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
ஏழைகளின் இல்லங்கள்!
எரியும் நெருப்பில் - அதில்!
ஏனோ குளிர்காய்கிறது!
எமது இத்தேசம்.!
குழந்தைகளின் கூக்குரலும்!
குமர்களின் கூப்பாடும்!
முதியோரின் முனகல்களும்!
மூப்படைந்த நோவினையும்!
கண்டும் கலங்காதது!
எமது இத்தேசம்.!
இரட்டைக் குழலின்!
இடி ஓசையையும்!
இரவைப் பகலாக்கும்!
இடைவிடா ஷசெல்வீச்சையும்!
பார்த்தும் கேட்டும்!
பயப்படவில்லையே இத்தேசம்.!
அகப்பட்ட அங்கங்களின்!
அவதிப் படுகையும்!
பிசிரிக்கிடக்கும் உடலின்!
பிண வாடையும்!
பழகிப்போன தொன்றாயிற்று!
பாழாய்ப்போன இத்தேசத்திற்கு.!
இனத்தையினம் சுத்திகரிக்கும்!
இழிநிலையும் இங்குதான்!
இருப்பிடம் இழந்து!
இடம்பெயர்வதும் இங்குதான்.!
தவறிப் படுகுழிக்குள்!
தாழப் போவதற்குள்!
எச்சரிக்கை செய்வது!
ஏகனின் கடமையல்லவா?!
சுனாமியின் எச்சரிக்கையாவது!
சுரணையை ஏற்படுத்தவில்லையே!!
இன்றோ நாளையோ!
ஆழிக்குள் அடங்கிவிடும்!
இத்தேசம் - தேசம்மட்டுமல்ல!
இங்கிருக்கும் நாமும்தான்.!
-மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்