அகங்களும் முகங்களும் - வல்வை சுஜேன்

Photo by Paweł Czerwiński on Unsplash

பேச்சில் ஒன்று மூச்சில் ஒன்று!
அகத்தில் ஒன்று முகத்தில் ஒன்று!
வாழ்வின் உயர்வினை அறுத்து!
வளைந்து கடிக்கிறது விச நாகங்கள் !
கடித்த பின்பே விழி திறந்தேன்!
பயனேதும் இல்லை !
புலன்கள் அடைக்கப்பட்டுவிட்டன!
ஜீவன் அற்ற உடலை சுட்டெரித்து !
சுற்றத்தை சுத்தம் செய்யும் தீயே !
உடல் பட்டளிந்து போகும் முன்பே!
நேர் கெட்ட அகங்களையும் சீர் படுத்து!
பாதகரை பரமபிதாவின் பக்கம் !
செல்ல விடாதே!
பாவத்தின் சம்பளத்தை !
நீயே கொடுத்துவிடு !
பருத்த பலாவில் முகத்தில் முள்ளிருந்தும்!
அகத்தில் தருகிறது அது இனிய சுளைகளை!
மனிதம் கொல்பவர் மனிதரல்ல!
புனித மதங்களின் பிள்ளைகளும் அல்ல!
இருளை அழிக்கும் விடிவான் விளக்கைபோல்!
இவர்களை நீ அழித்துவிடு!
முள் வளர்க்கும் அகங்கள் !
இனியாவது இனிய சுளையாகட்டும் !
உள்ளக் கதவை மெல்லத் திறந்து!
புனிதர் ஆவார் எல்லோரும். !
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.