வானம் வரைக்கும் - எழிலி

Photo by Paweł Czerwiński on Unsplash

ஓலமிட்டுக் கொண்டே
ஒருவாரம் மழை!

யாரோ அடித்த
குழந்தை போலே
உரக்க அழுகிறது !
யதார்த்தமாய்ச்
சொல்லிப் போனாள்
அம்மா!

ஓயாத உன்
திட்டு போலே
சத்தம் போடுது
அதிரடியாய்ச்
சொன்னது குழந்தை!

ஆராய்ந்ததில்
ஒரு உண்மை!

கோவையில் இறந்த
குழந்தைகளுக்காக-
தன் வருத்தத்தைக்
கொட்டித் தீர்த்தது
ஆகாயம்!

வானத்தையும்
எட்டியது சோகம்
எழிலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.