விடியல் - நித்ய ஜெய ஜோதி

விடியல் - Tamil Poem (தமிழ் கவிதை) by நித்ய ஜெய ஜோதி

Photo by Henrique Hanemann on Unsplash

விடியல்

நீல வானில் உலா வந்த நிலவு
அழைத்துப் பேசியது பூங்காற்றை.
விசுக்கென்று கிளம்பியது காற்று
பசும் மரக்கிளைகளில்
ரகசியப் பேச்சு.
சருகுகள் பறந்தன
ஆற்றுநீர் விழித்துக்கொண்டாட்டம்
மலையருவி வீழ்ந்த இடமெல்லாம்
முத்துப் பரல்களாய்
நிலாத்துண்டுகள்
பூக்கள் எல்லாம் சோம்பல் முறித்தன.
விடியப் போகும் செய்தியை
இப்படிச் சொல்லி அனுப்பியது
குறும்பு நிலா.
சூரியனின் வருகையை-
'தாமரைக்கு'
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.